இந்த வலையில் தேடவும்

Saturday, October 23, 2010

மஹிதர் நீ மறைந்து விடு!(திகில்)-8


கோவணத்தாண்டி சொல்வது:

ஊரிருந்தென்ன ? நல்லோர் இருந்தென்ன உபகாரமுள்ள

பேரிருந்தென்ன ? பெற்ற தாய் இருந்தென்ன மடப்பெண்கொடியாள்
சீரிருந்தென்ன ? சிறப்பிருந் தென்ன இத்தேயததினில்
ஏரிருந்தென்ன ? வல்லாய் இறைவா கச்சியேகம்பனே.


உடனே விக்ரமிற்கு போன் செய்தேன் ...

"சார் ஒரு அர்ஜன்டான விஷயம்" என்று ஆரம்பித்து விஷயத்தை சொன்னேன்...என் குரல் படபடத்தது

"பதட்டப்படாதீங்க மஹிதர், என்ற விக்ரம் "அந்த பேப்பர்ல என்ன எழுதியிருக்குன்னு படிங்க" என்றார்...

நான் டேபிள் லாம்ப்பை இயக்கி அதில் என்ன எழுதியிருந்தது என்று பார்த்தேன்...

பென்சிலால் எழுதியிருந்தார்கள்....சுமாரான கையெழுத்து...

"கழுகொன்று தின்பதற்காய் நின் காயம் வீழவோ
கலுகீசன் பதம் நாடி களிப்பினில் வாழவோ
காலம் இனியில்லை கடிதினில் வந்திடுவாய்
காலன் பயம் இல்லை கடிதினில் வந்திடுவாய்!"


"சார் எனக்கு எதுவுமே புரியலை" என்றேன்....எனக்கு வியர்த்து விட்டிருந்தது....

"மஹிதர் அந்த கழுகு மலைக்கு இது இன்னொரு இன்விடேஷன்னு நினைக்கிறேன்" என்றார் விக்ரம்..

"இப்ப என்ன பண்றது சார்?" என்றேன்...எனக்கு பயத்தை விட குழப்பம் அதிகமாக இருந்தது....

"நாளைக்கு இங்க வாங்க..பேசலாம்...சிவாவையும் வரச் சொல்றேன் , எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க" என்றார்...


நான் அப்படியே படுக்கையில் சாய்ந்தேன்....யார் அவர்கள்? என் மூலம் அவர்களுக்கு என்ன ஆக வேண்டியிருக்கிறது? எதிரிகள் என்று எனக்கு யாரும் கிடையாது...சிறு வயதிலிருந்தே வம்பு தும்பு என்றால் ஒதுங்கக்கூடிய சாதுவான ஆள் நான்...அப்புறம் புக் ஸ்டால் வைக்கும் போது ஒரு அரசியல் ஆசாமி கொஞ்சம் தகராறு செய்தான்....அவ்வளவு தான்...காதல் விவகாரத்தில் யாராவது எதிரிகளா என்று பார்த்தால் அப்படியும் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை...நிமிஷாவின் அண்ணனுக்கும் இந்த விஷயம் தெரியும்..அவனும் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை....பிறகு யார்? கழுகு மலை, அது இதுவரைக்கும் கேள்விப்பட்டதில்லை....அங்கே நான் எதற்காகப் போக வேண்டும்?

குழப்பமான இந்த புதிர்களால் மிகவும் குழம்பிப் போனேன்...நிமிக்கு செய்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று தோன்றியது ...

"ஹாய் மஹி! how are யூ டா? என்ன ரெண்டு நாளா கால் இல்லை, மெசேஜ் இல்லை?" என்று செல்லமாக கடிந்து கொண்டாள்..

"சாரிம்மா..பிசியா இருந்தேன்...அப்பறம் ஒரு முக்கியமான மேட்டர்" என்று ஆரம்பித்து நடந்ததை சொன்னேன்...

நிமிஷா கொஞ்சம் கவலையான குரலில் "மஹி, என் சஜஷன் என்னன்னா நீ சென்னையை விட்டு வேறே எங்காவது போய் ஒரு மாசம் தங்கிட்டு வா..." என்றாள்...

"எதுவுமே புரியலை நிமி....நாளைக்கு விக்ரம் வர சொல்லியிருக்கார்...வரையா?"என்றேன்

"கண்டிப்பா,,,இது உன் பிரச்சனை இல்லை மஹி, நம் பிரச்சனை " என்ற நிமி "சரி இதையெல்லாம் மறந்துட்டு கொஞ்சம் ரொமான்ஸ் பேசுவோமா?" என்றாள்


"இல்லை நிமி, மூடே சரியில்லை" என்றேன்.....

"அந்த கழுகு உன்னை ரொம்பவே மாத்திருச்சு மஹி" என்று அலுத்துக் கொண்டாள்..

அந்த இரவு எப்படியோ விடிந்தது,,, தூக்கத்துக்கு இடையில் கனவா இல்லை கனவுகளுக்கு இடையில் தூக்கமா என்று புரியாமல் ......

மறுநாள் விக்ரமின் சென்டருக்கு நிமிஷாவும் கூட வந்திருந்தாள்...

விக்ரம் கொஞ்சம் பிசியாக இருந்ததால் அரை மணி நேரம் வெளியே காக்க வேண்டியிருந்தது....

உள்ளே சென்றதும் "வாங்க மஹிதர்.....வெல்கம் நிமிஷா" என்று வரவேற்றார் விக்ரம்.....சிவா ஏற்கனவே வந்திருந்தார்....

"என்ன மஹிதர் மறுபடியும் ஏதோ செய்யுள் வந்துதாமே? கன்க்ராட்ஸ் " என்றாள் தரங்கிணி....

"மஹிதர் , உங்களை யாராவது ஃபாலோ செய்யற மாதிரி தெரியுதா" என்று கேட்ட சிவா "ஏன்னா நீங்க கோவிலுக்கு போனதை யாரோ ஃபாலோ பண்ணியிருக்கணும் " என்றார்

"ஐ டோன்ட் தினக் சோ " என்றேன்....

"அப்ப ஃபாலோ பண்ணலைன்னா நீங்க கோவிலுக்கு போறீங்கன்னு அந்த மிஸ்டர். எக்ஸுக்கு எப்படி தெரியும்? நீங்க ரெகுலரா போவீங்களா"என்றார்

"கோவிலுக்கா, மஹியா? என்ன சிவா சார், ஜோக் பண்ணாதீங்க, ஆனா அன்னைக்கு மட்டும் ஏன் திடீர்னு போனான்னு தெரியலை....." என்றாள்


விக்ரம் கேட்டார்..."சொல்லுங்க மஹிதர்,,, அன்னிக்கு மட்டும் ஏன் போனீங்க? ,வாட் மேட் யூ கோ தேர்? "

"என்னமோ தெரியலை , போகணும்னு தோணுச்சு" என்றேன் ....நான் ஏன் போனேன் என்று இன்னும் எனக்குத் தெரியவில்லை.....

விக்ரம் தொடர்ந்தார்...."அந்த குங்குமப் பொட்டலம் கோவில்ல தான் உங்க கிட்ட வந்துதுன்னு எப்படித் தெரியும்?" என்று கேட்டார்....

"அங்கே தான் வந்திருக்கணும் சார், தீபாராதனைக்கு சில்லறை போட்டப்ப கூட என் பாக்கெட்ல அது இல்லை" என்றேன்....

"அப்படீன்னா நீங்க சாமியை தூக்கினதா சொன்னீங்களே அப்ப தான் யாரோ இதை உங்க பாக்கெட்ல போட்டிருக்கணும் "
என்றார்

"பாஸ் ஒரு வேலை சாமியே போட்டிருக்குமோ ?" என்று கேட்டாள் தரங்கிணி...அவள் ஜோக் அடிப்பது அந்த சூழ்நிலைக்கு கொஞ்சம் odd -ஆக இருந்தது....


ஏதோ சிந்தனையில் இருந்த சிவா கேட்டார்...."விக்ரம் எனக்கு புரியலை....யாருமே மஹிதரை ஃபாலோ பண்ணலைன்னா மஹிதர் கோவிலுக்கு வரணும்னு யாரோ முன்னாடியே நிர்ணயிச்ச மாதிரி தெரியுது"என்றார்


"அன்னிக்கு புக் ஸ்டால்லயும் அப்படிதானே நடந்தது?" என்ற விக்ரம் "சிவா சில சமயம் சில விஷயங்கள் நம்மை இழுக்கும்.... சந்தர்ப்பம் சூழ்நிலை எல்லாம் சில சமயம் நம்மை ஒரு இடத்துக்கு கொண்டு போய் சேர்க்கும்....இதை ஆன்மிகம் விதின்னு சொல்லுது ...அறிவியல் ஜஸ்ட் co -incidence னு சொல்லுது ...ஒரு சின்ன கதை சொல்றேன்...ஒரு ராஜா இருந்தானாம்.... ஒரு நாள் ஒரு கருப்பு உருவம் அவன் முன்னால வந்து நாளைக்கு உனக்கு மரணம் ....தப்பிக்க முடிஞ்சா தப்பிச்சுக்க " என்று சொல்லி மறைந்ததாம் ....அன்னிக்கி ராத்திரியே அந்த ராஜா தன்னிடம் இருந்த குதிரைகளிலேயே வேகமா ஓடக் கூடிய ஒரு குதிரைல ஏறி விடாம பயணம்செஞ்சு ரொம்ப ரொம்ப தூரமா போயிட்டானாம் ....சரி இனிமேல் பயமில்லைன்னு குதிரையில் இருந்து இறங்கி ஒரு மரத்தடியில் ஓயவா உட்கார்ந்தானாம்... அப்ப அந்த கருப்பு உருவம் மீண்டும்தோன்றி நான் தான் உன் மரணம்..இன்னிக்கு நீ இந்த இடத்துல தான் சாகனும்னு விதி....எப்படி உன்னை இவ்வளவு தூரம் வரவழைக்கிறது என்று கவலைப்பட்டேன்...ஆனால் உன் குதிரை எனக்கு உதவி புரிந்ததுன்னு சொல்லிச்சாம்"

தரங்கிணி குறுக்கிட்டு "பாஸ்...கதையெல்லாம் ஓகே...ஆனா தம்மா துண்டு பொட்டலம் மஹிதரை கோவிலுக்கு இழுத்திருக்குமா"? என்றாள்

"தம்மாதுண்டு அணு தானே ரெண்டு பெரிய நகரங்களையே அழிச்சுது " என்றார் விக்ரம்...

"மஹிதர் அந்த பேப்பரை கொஞ்சம் காட்டுங்க " என்று கேட்டார் சிவா..காட்டினேன்...

"ப்ளைன் பேப்பர்....பென்சில்ல எழுதியிருக்காங்க"....விக்ரம் கையெழுத்தை வைத்து ஆளை கணிக்கும் வித்தை உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்....

"I can try" ...என்ற விக்ரம் அதை வாங்கி கொஞ்ச நேரம் ஆராய்ந்து "இதை ஒரு பெண் எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது" என்றார்...

"பாஸ், என்னைப் பார்க்காதீங்க " என்று சிரித்தாள் தரங்கிணி....

எனிவே "வி ஆர் கோயிங் தேர்...நாளைக்கே " என்றார் விக்ரம் உறுதியுடன்....

காகிதத்தை திருப்பித் தந்து "அந்த ஒலையையும் இதையும் பத்திரமாக வெச்சுக்கங்க மஹிதர்....இவையெல்லாம் எவிடன்ஸ் ....தி கேம் இஸ் ஆன் " என்றார்...

நான் அதைப் பார்த்த போது அதில் எழுதியிருந்த ஒவ்வொரு எழுத்தும் ஒரு குட்டிக் கழுகாக மாறி அசைவது போல் தோன்றியது...

~தொடரும்


முந்தைய அத்தியாயங்கள்

1 2 3 4 5 6 7





3 comments:

Anonymous said...

Good come back. Waiting for next episode.

adhvaithan said...

i am waiting fingers crossed..

Benlpiq said...

Good come back. Waiting for next episode.