இந்த வலையில் தேடவும்

Saturday, October 9, 2010

மஹிதர் நீ மறைந்து விடு!(திகில்)- 4


கோவணத்தாண்டி சொல்வது:


மாங்காய்ப் பால்உண்டு மலைமேல் இருப்போருக்குத்
தேங்காய்ப் பால் ஏதுக்கடி-குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி.


தரங்கிணி சொல்வது



அடுத்த நாள் சண்டே என்பதால் சென்டரை மூடி விட்டு, சிவா வீட்டுக்கு செல்வது, அப்புறம் சிவாவுடன் அங்கிருந்து மஹிதர் புக் பாரடைசுக்கு செல்வது என்று விக்ரம் பிளான் செய்திருந்தார் ....காலையிலேயே போன் செய்து வரச் சொல்லி விட்டார்...

சரியாக ஒன்பது மணிக்கு புறப்பட்டோம்.....வழியில் ஒரு ஹோட்டலில் மசாலா தோசை,காபி உள்ளே தள்ளினோம் ...காரில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நான் கேட்டேன் ...."என்ன பாஸ் கொடுமை? சண்டே கூட எனக்கு ரெஸ்ட் இல்லையா? எதோ ஒரு டப்பா கேசுக்காக திருவான்மியூர் வரை போக வேண்டுமா? இது வரை உங்களுக்கு சிவான்னு ஒரு friend இருக்கறதா சொல்லவே இல்லையே? தெரியாமல் தான் கேட்கறேன்..அந்த மஹிதர் மேல உங்களுக்கு என்ன இவ்ளோ அக்கறை? " என்றேன்....

"தரங்! எந்த ஒரு திரில்லுமே இல்லாம போய்கிட்டிருந்த நம்ம profession -ல ஒரு திரில்லான கேஸ் இப்ப கிடைச்சிருக்கு ...இதை எப்படி மனவியல்ரீதியாக நம்ம டீல் பண்றோம்கறதுல தான் நம் திறமையே அடங்கியிருக்கு....It 's a challenge to our job" என்றார்
விக்ரம்...

"என்னவோ புலி வாலைப் புடிச்சிட்டீங்க ...இனி நான் என்ன பேச முடியும் ?" என்றேன்..

நிமிடங்கள் மெல்ல கரைந்தன...கார் மெயின் ரோடிலிருந்து விலகி ஒரு ஒற்றையடிப் பாதையில் சென்றது....சிவா வீடு வந்தது,....காரை நிறுத்தி விட்டு இறங்கி நடந்தோம்......

சிவாவின் வீடு ஒரு தனிமையான பிரதேசத்தில் இருந்தது...பெரிய வீடு...சுற்றிலும் ஆளுயர வளர்ந்த மரங்கள்...பூத் பங்களா ரேஞ்சுக்கு ஒரு பெரிய கேட்....கேட்டிலிருந்து கதவு வரை நீண்ட நடைபாதை.....அதன் இரண்டு பக்கத்திலும் பூச்செடிகள்...புல்வெளியில் முயல்கள் சில விளையாடின...

"ஏன் சார் உங்கள் ஃபிரண்டு இந்த இடத்தை எப்படிப் பிடிச்சார்? ஆள் அரவமே இல்லையே? உங்க ஃபிரண்ட்ஸ் எல்லாம் இதே கேசுகள் தானா?" என்றேன்...

உம்..."அவன் ஒரு தனிமை விரும்பி.....அறிவியல், ஆன்மிகம், மனோதத்துவம் ,மருத்துவம் எல்லாம் கலந்த ஒரு கலவை....Ph D எல்லாம் பண்ணியிருக்கான்...ஐந்து தலைமுறைக்கு பூர்வீக சொத்து திருச்சி பக்கம் இருக்கு....ஆனாலும் அனுபவிக்காம இப்ப சென்னைக்கு வந்து ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தறான்....இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை....ஏஜென்சிக்கு p .A வா யாரோ ஒரு பையன் இருக்கான்....."

சார் சும்மா kidding ......உங்க ஃபிரண்ட் சிவா என்ன அந்த மாதிரி கேசா? என்றேன்..

அவன் எந்த மாதிரி கேசாக இருந்தால் என்ன? அவன் உதவி தான் நமக்கு தேவை...என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிவா உள்ளிருந்து கேட் அருகே வந்து "ஹாய் விக்ரம்..என்னடா இப்ப தான் இங்கே வர டைம் கிடச்சுதா? ரொம்ப பிசியாயிட்ட போல? சென்னைல மெண்டல்கள் ஜாஸ்தி ஆயிட்டாங்களா என்ன ? சரி இப்பவாச்சும் வந்தியே, ரெண்டு பெரும் உள்ள வாங்க" என்றார்...

"சிவா இது என் பி.எ. தரங்கிணி" என்று விக்ரம் அறிமுகம் செய்தார் ....சிவா கை குலுக்கி "nice to meet you " என்றார்...

சிவா நல்ல உயரமாக இருந்தார் ....பிரஞ் தாடியெல்லாம் வைத்திருந்தார்...சிவந்த நிறம்....மெல்லிய ஃபிரேமில் கண்ணாடி அணிந்திருந்தார்....ஒரு சைண்டிஸ்ட் மாதிரி இருந்தார்...ஏனோ பொருத்தமில்லாமல் தொள தொள என்று ஒரு மஞ்சள் கலர் டி- ஷர்டும் ஒரு பெர்முடாசும் அணிந்திருந்தார்...சைடிலிருந்து பார்த்த பொது கொஞ்சம் வயசானது போல் தோன்றியது.....

உள்ளே சென்றதும் "என்ன சாப்பிடறீங்க? காபி டீ?"என்றார்...

விக்ரம் பதில் சொல்வதற்குள் நான் முந்திக் கொண்டு "சார் எத்தனை நாள் தான் எல்லாரும் காபி டீயே கேப்பீங்க? இப்ப A ல இருந்து Z வரைக்கும் ட்ரிங்க்ஸ் எல்லாம் வந்தாச்சு" என்றேன்...

"தரங்கிணி, you are funny என்றார்"அவர்....

"அதல்லாம் வேண்டாம் வரும் வழியில் தான் ஹோட்டல்ல காபி போன்ற ஒரு திரவத்தை சாப்டோம்"
என்றார் விக்ரம்...

ஓகே ஒரு 15 minutes ...ரெடியாயிட்டு வரேன்....என்று சிவா உள்ளே சென்றார்....அவர் சென்றதும் அந்த அறையை கவனித்தேன்.....ஷெல்பில் எல்லா விதமான புத்தகங்களும் இருந்தன...a deep insight of human psychology , a briefer history of time , சீவக சிந்தாமணி பொருள் விளக்கம், புத்தரின் வைர சூத்திரம், human anatomy , என்றெல்லாம்....

"பாஸ், உங்க பிரண்ட் ஒரு நடமாடும் என்சயிக்லோபீடியா" போல தோணுது என்றேன்..

"நான் அப்பவே சொல்லலை?அதனால தான் சிவா கிட்ட discuss பண்ணினா மஹிதர் கேசுக்கு வேற ஏங்கிள்-லேர்ந்து ஏதாவது க்ளூ கெடைக்கும் னு நம்பறேன்"....என்றார்

அப்போது சிவா உள்ளிருந்து வந்தார்....இப்போது அழகாக ஜீன்ஸ் பாண்டும் full sleeve ஷர்டும் போட்டிருந்தார்....இரண்டு டம்ப்ளர்களில் பாண்டா நிரப்பிக் கொண்டு வந்திருந்தார்...."குடிங்க" என்றார்...

"தாங்க்ஸ்...ஒரு சில்லி கேள்வி...சிவா நீங்க ஏன் இன்னும் கல்யாணமே பண்ணிக்கலை" என்றேன்

சிவா விக்ரமை பார்த்தார்....

"இவ இப்படி தான் ரொம்ப ஓபன் டைப்...never mind it " என்ற விக்ரம் "அவனை மாதிரியே அறிவுள்ள ஒருத்தியை தேடறான் " என்றார்...

"அப்படின்னா காலம் பூராம் இவர் ஹனுமார் மாறி இருக்க வேண்டியது தான்..பொண்ணுங்க கிட்ட ஒரு அளவுக்கு மேல் எதிர்பார்க்க கூடாது மிஸ்டர்.சிவா" என்றேன்...

பாண்டா உள்ளே கடத்தப்பட்டதும் விக்ரம் "கெளம்பலாமா " என்றார்....Sure என்றார் சிவா...

காரில் சிவா ஆரம்பித்தார் "சொல்லுடா அந்த மஹிதர் கேஸ் பத்தி" என்றார்.. "தரங் நீ நல்லா டிரைவ் பண்ணுவே தானே? நீ டிரைவ் பண்ணு " நான் சொல்றேன் என்றார்...நான் டிரைவ் செய்தேன்...

விக்ரம் மஹிதர் பற்றி சிவாவிடம் விலாவாரியாகக் கூறி முடித்தார்...

"interesting ! ஆமாம் கனவில் கழுகு வந்தால் என்ன அர்த்தம்" என்றார் சிவா

நான் முந்திக் கொண்டு "அவர் பறக்க விரும்புகிறார் என்று அர்த்தம்" என்றேன்....

விக்ரம் "கொஞ்சம் சரி....கழுகு அவர் சுதந்திரமான மனிதராக இருக்க விரும்புகிறார் என்பதைக் குறிக்கலாம்" என்றார்.."ஆனால் கழுகு வந்து பயமுறுத்தினால்? "

"இதுக்குப் பின்ன யாரோ இருப்பார்கள் போலத் தெரிகிறது....அந்த மஹிதர் என்பவர் பெரிய ஆளா? எனிமீஸ் யாராவது? "என்று கேட்டார் சிவா...

"நோ..ஹி இஸ் ஏன் ஆர்டினரி மேன் ...யங் டூ "அப்படியே எனிமீஸ் இருந்தாலும் அவங்களால எப்படி மஹிதர் கனவில் கழுகைஎல்லாம் அனுப்ப முடியும்?

shopper 's paradise என்ற பெரிய மால் தென்பட்டது....

மாலுக்குள் சென்றதும் ஏதோ வெளிநாட்டுக்கு வந்து விட்ட ஒரு உணர்வு வந்தது....இரண்டு புறங்களிலும் துடைத்து விட்டாற்போல பள பள வென்று பலவிதமான ஷாப்புகள் ....

"IT காரங்க காசெல்லாம் இங்கே தான் வருது " என்றார் சிவா...

இரண்டாவது தளத்திற்கு நகரும் படிகளில் சென்ற பொது 'மஹிதர் புக் பாரடைஸ் " வந்தது....

கடை பிரம்மாண்டமாக இருந்தது....இன்டர்நெட் உலகிலும் புத்தகங்களுக்கு மவுசு குறையவில்லை என்று நினைக்கும் படி கூட்டம் அலைமோதியது....கம்ப்யூட்டர், சயின்ஸ், சயின்ஸ் பிக்சன், novels , தமிழ் இலக்கியம், travel guides , மருத்துவம், religion என்று ஏகப்பட்ட பிரிவுகளில்.....

மஹிதர் எதிரே வந்து வாங்க வாங்க , எனி ட்ரிங்க்ஸ்? என்றார்...

"
நோ தாங்க்ஸ் ...நிஜமாலுமே உங்க கடை பாரடைஸ் போல இருக்கு,,,...இவர் என் பிரண்ட் சிவா" என்று அறிமுகம் செய்தார் விக்ரம்...

சிவா மஹிதரிடம் அந்தக் கனவைப் பற்றி சிலபார்மலான கேள்விகளைக் கேட்டார்....சார் அந்தக் கனவு என் நிம்மதியையே கெடுத்துருச்சு" என்றார் மஹிதர்...ஆள் இன்றும் சோர்வாக இருந்தார்...

"dont worry Mr .mahidhar , lets investigate ...என்றார் சிவா...

கொஞ்ச நேரம் மஹிதரின் ஆபீஸ் அறையில் பேசிக் கொண்டிருந்து விட்டு புறப்பட்டோம்...கிளம்பும் போது வழியில் யாரோ
ஒரு பையன் தன் அப்பாவிடம் " டாடி டாம் அண்ட் ஜெர்ரி " என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தான்...

விக்ரம் ஏதோ நினைத்தவராக திரும்பி உள்ளே சென்று "மஹிதர் உங்கள் கடையின் காமிக்ஸ் செக்சனை கொஞ்சம் காட்டுங்களேன்" என்றார்...

"why not வாங்க" என்று அழைத்துத் சென்றார் மஹிதர்...

மூன்று பேரும் காமிக்ஸ் செக்சன் சென்றோம்....அங்கே நாலைந்து குழந்தைகள் உலகையே மறந்து காமிக்ஸ்களில் ஒன்றி விட்டிருந்தார்கள்.....சில குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன...

சிவா திடீரென்று "விக்ரம் அங்க பாருங்க" "அந்த பாப்பா கைல"..என்றார்...

அந்த குழந்தை ஒரு காமிக்ஸ் புத்தகத்தை அப்போது தான் எடுத்திருந்தது "The Eagle " என்ற தலைப்பில்....அட்டையில் ஒரு பயமுறுத்தும் கழுகு தெரிந்தது.... "விக்ரம் என்னவோ நெருடுகிறது.....அந்த புக்கை வாங்க முடியுமான்னு பாருங்க....." என்றார் சிவா..

"பாப்பா இந்தா சாக்லேட்...அந்த புக்கை கொஞ்சம் தர்றயா" என்று விக்ரம் அதை கேட்டு வாங்கினார்...

அப்போது அந்தப் புத்தகத்தில் இருந்து ஏதோ ஒன்று கீழே விழுந்தது...


~தொடரும்..

முந்தைய அத்தியாயங்கள்:

1
2
3


3 comments:

Anonymous said...

comment varalainrathukkaka oru nalla visayatha niruthurathu rema thppu. intha machunaga nalla visayatha vida udhavatha matterukkuthan akkarai eduthukkuvanga.

nalla visyangal eppovume late pickupthan agum.

முத்து said...

good one continue please

adhvaithan said...

please continue..

sila suggestions.. tapa edutukatheenga..

u r good writer

kathaila indra sowndarajan sayal neraya teritu.. konjam athai matum mathina super writernga neenga...

aprom oru req.. konjam adutha postlaentu ithuku munadi postoda html link podunga.. for the persons who r comin for first time it will be useful.. i found great difficulty in figuring out the first episode.. :(:(

Keep the good work going.