இந்த வலையில் தேடவும்

Friday, October 29, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-14



முல்லா நசுருதீன் ஒரு நாள் தன் நண்பர்களுடன் சுற்றுலா சென்றார்....

அவர்கள் ஓர் அழகான பரந்த புல்வெளியைத் தேர்ந்தெடுத்து இளைப்பாறச் சென்றனர்...

ஒரு மரத்தின் அடியில் இருந்த பெஞ்சில் சென்று படுத்துக் கொண்ட முல்லா, தன் நண்பர்களைப் பார்த்து கூறினார்....

"இப்போது யாராவது எனக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் நான் இந்த இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்"

அங்கிருந்த நண்பர்களில் ஒருவர் கேட்டார்...

"ஐந்து லட்சம் கொடுத்தால்"?

"சான்சே இல்லை" என்றார் முல்லா..

."சரி பத்து லட்சம் கொடுத்தால் ?" என்று கேட்டார் இன்னொருவர்..

."இல்லவே இல்லை...." என்றார் முல்லா...

"சரி பத்து ரூபாய் கொடுத்தால் அந்த இடத்தை விட்டு எந்திரிப்பாயா?" என்றார் இன்னொருவர்...

முல்லா அந்த பெஞ்சை விட்டு துள்ளி எழுந்து அவரிடம் ஓடி வந்து "சரி பத்து ரூபா கொடுப்பா" என்றார்...

((()))

டாம் ஒரு நாள் தாமதமாக வீடு திரும்பினான்...

.பெட் ரூமில் அவன் மனைவி உடையேதும் அணியாமல் படுத்திருப்பதைக் கண்டு

"அன்பே, என்ன ஆச்சு? ஏன் இப்படி படுத்திருக்கிறாய்?" என்றான்

"எனக்கு உடுத்திக் கொள்ள நல்ல துணிகளே இல்லை" என்றாள் அவள் அழுது கொண்டே ...

.வியப்படைந்த டாம் வேகமாக கப்-போர்டின் அருகே சென்று அதைத் திறந்தான்...

."என்ன சொல்கிறாய் டார்லிங், உடைகள் இல்லையா? இதோ பார் போன மாசம் நான் வாங்கித் தந்த பிங்க் கவுன், அடுத்து மூணு மாசம் முன்னாடி வாங்கித் தந்த நீலக் கலர் டாப்ஸ், இங்கே நாம் போன வாரம் வாங்கிய மஞ்சள் ஸ்கர்ட், ஹலோ ஜோசப், ப்ளாக் ஜீன்ஸ், இங்கே வெள்ளை நைட் கவுன்............."

~சமுத்ரா


Thursday, October 28, 2010

சில சமயங்களில்.......

சில சமயங்களில்
விமானப் பயணங்களை விட
சைக்கிளின் பின் சீட்டுப் பயணங்கள்
அழகாக உள்ளன....

சில சமயங்களில்
படுக்கைகளின் மென்மையை விட
தரையின்
ஸ்பரிசங்கள் சுகமாக
உள்ளன.....

சில சமயங்களில்
நட்சத்திர உணவகங்களின் கை படாத
உணவுகளை விட
கோவில்களின்
புளியோதரைகள்
சுவையாக உள்ளன...

சில சமயங்களில்
ஆயிரம் மனிதர்களின்
கை குலுக்கல்களை விட
குழந்தையின் ஒற்றை முத்தங்கள்
சுகமாக உள்ளன...

சில சமயங்களில்
ஐ- போனை விட
ஆகாயப் பறவைகளின்
குக்கூக்கள்
இனிமையாக இருக்கின்றன....

சில சமயங்களில்
'டியூ' க்களின் நெடிகளை விட
மனைவியின்
ஒற்றை மல்லிகைகள்
மணமாக இருக்கின்றன...

சில சமயங்களில்
கலவிகளை விட
களிம்பு தடவல்கள்
இதமாக
இருக்கின்றன....

சில சமயங்களில்
ஈ மெயில்களை விட
இன்லான்ட் கடிதங்கள்
அர்த்தமுள்ளவையாக
இருக்கின்றன...

சில சமயங்களில்
ஆயிரம் ரூபாய்
நோட்டுக்களை விட
ஒரு ரூபாய் நாணயங்கள்
பயனுள்ளவையாக
இருக்கின்றன....

சில சமயங்களில்
புனிதத் தலங்களை விட
பாதையில் குறுக்கிடும்
பிள்ளையார் கோயில்கள்
தெய்வீகமாக இருக்கின்றன....

சில சமயங்களில்
ஓவியக் கண்காட்சிகளை விட
நடை பாதை ஓவியங்கள்
உயிர்மையாய் இருக்கின்றன....

சில சமயங்களில்
ரேமன்ட் சூட்டிங்குகளை விட
பிளாட்பார சட்டைகள்
பாந்தமாய் இருக்கின்றன...

சில சமயங்களில்
நிரந்தர சொந்தங்களை விட
ரயில் சிநேகிதங்கள்
ஆழமாய் இருக்கின்றன

சில சமயங்களில்
மருத்துவரின்
மாத்திரைகளை விட
பாட்டியின்
கஷாயங்கள்
வலிமையாய் இருக்கின்றன....

சில சமயங்களில்
வங்கிகளின் சேமிப்புகளை விட
மனைவியின் உண்டியல்கள்
பயனுள்ளவையாக இருக்கின்றன

சில சமயங்களில்
வாழ்த்து மடல்களை விட
நண்பனின்
குறும்செய்திகள்
குதூகலமாய் இருக்கின்றன....

சில சமயங்களில்
பீசாக்களை விட
அம்மா செய்த
தோசாக்கள்
அமிர்தமாக இருக்கின்றன.....



~சமுத்ரா



நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-13

பாதிரியார் ஹோலி-கோகனட் ஒரு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்....

நடு வழியில் துணை பைலட் வந்து " இந்த விமானத்தின் நான்கு இஞ்சின்களில் ஒன்று பழுதாகி விட்டது....ஆனால் கவலைப்பட ஒன்றும் இல்லை....அதிக பட்சமாக நாம் மூன்று மணி நேரம் தாமதமாகச் செல்வோம் அவ்வளவுதான்" என்றார்

சிறிது நேரம் சென்றதும் அவர் மறுபடியும் வந்து "மன்னிக்கவும்...இரண்டாவது இன்ஜினும் செயலிழந்து விட்டது...ஆனால் கவலைப்பட வேண்டாம்...அதிக பட்சம் ஆறு மணி நேரம் தாமதமாகும்" என்றார்...

கொஞ்ச நேரம் கழித்து வந்து "மூன்றாவது இன்ஜினும் போய் விட்டது....ஆனாலும் பயப்பட ஒன்றும் இல்லை...என்ன அதிக பட்சம் ஒன்பது மணி நேரம் லேட் ஆகும்" என்றார்...

சிறிது நேரம் கழித்து அவர் மறுபடியும் வந்து "சாரி...நான்காவது இன்ஜினும் நின்று விட்டது...இனி எல்லாரும் அவரவர் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்ள வேண்டியதுதான் " என்றார்....

ஹோலி-கோகநட்டின் அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி இதைக் கேட்டு "ஐயோ, கடவுளே, இப்படி ஆயிருச்சே,,எல்லாம் போச்சே" என்று கதறி அழுது அலப்பறை செய்தாள்....

பாதிரியார் அவளிடம் திரும்பி "ஏன் இப்படி அழுகிறாய்....மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பன்னிரண்டு மணி நேரம் லேட்டாகப் போவோம், அவ்வளவு தானே" என்றார்......

%%%%%%%


ப்ரொபசர் பான்டா ஒரு நாள் பயணம் செய்து கொண்டிருந்தார்....

ஒரு கிராமத்தின் வழியாகப் போய்க்கொண்டிருந்த போது அந்தி சாய்ந்து விட்டிருந்தது...

அப்போது தான் அவருக்கு அந்த கிராமத்தில் தங்கள் தூரத்து சொந்தமான ஒரு குடும்பம் இருப்பது நினைவில் வந்தது... அங்கே சென்று இரவைக் கழிக்கலாம் என்று எண்ணி எப்படியோ வீட்டைக் கண்டுபிடித்து கதவைத் தட்டினார்..

.டீன் ஏஜ் பையன் ஒருவன் வந்து கதவைத் திறந்தான்....

"ஹே, உன் பெயர் டாமி தானே, சரி உங்க அப்பா எங்கே"

அவன் "அப்பா ட்ராக்டர்ல அடிபட்டு செத்துட்டாருங்க" என்றான்"

ஐயோ, பாவமே....அனுதாபங்கள்....சரி உங்க அம்மாவைக் கூப்பிடு" என்றார்"

அம்மா இல்லை...அவங்க ட்ராக்டர்ல அடிபட்டு செத்துட்டாங்க" என்றான்

"ஐயோ, அப்படியா....சரி உங்க மாமா ஒருத்தர் இருந்தாரே..."

அதற்கு அவன் "அவரும் ட்ராக்டர்ல அடிபட்டு செத்துட்டாரு "

அவர் அதற்கு "இது மிகப் பெரிய இழப்பு தாம்ப்பா உனக்கு...சரி நீ இந்த கிராமத்துல தனியா இருந்துட்டு என்னப்பா செய்யற" என்று கேட்டார்....

"அதுங்களா.... ட்ராக்டர் ஓட்டிட்டு இருக்கேன்" என்றான் ...

~சமுத்ரா

Tuesday, October 26, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-12

ஒரு பெண்மணி ,கலைந்த தலையுடனும் ,சிவப்பேறிய கண்களுடனும் மேக்-அப் எதுவும் இன்றியும் ஒரு பழைய கிழிந்து போன நைட்டியையும் தேய்ந்து போன செருப்புகளையும் அணிந்து கொண்டு தன் வீட்டு குப்பைகளை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாகத் தெருவில் ஓடி வந்தாள்....

குப்பை வண்டி கிட்டத் தட்ட புறப்பட்டு விட்டிருந்தது....

டிரைவர் அவள் ஓடி வருவதைப் பார்த்து விட்டு வண்டியை நிறுத்தினான்...

"மன்னிச்சுக்குங்க....கொஞ்சம் லேட் ஆயிருச்சு" என்றாள் மூச்சு வாங்க....

டிரைவர் "பரவாயில்லை மேடம் .....அப்படியே பின்னாடி ஏறிக்கங்க" என்றான்

%%%%

ஏழு வயது பீட்டரும் ஆறு வயது லாராவும் கல்யாணம் செய்து கொள்வதாக தீர்மானித்தனர்...

பீட்டர் தன் அப்பாவிடம் சென்று "நாங்கள் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறோம்" என்றான்..

அதற்கு அவர் " சரி..ஆனால் நீங்கள் எங்கே தங்குவீர்கள் ?" என்றார்

"ஒரு வாரம் இங்கேயும் இன்னொரு வாரம் லாரா வீட்டிலும்"

"சரி பணத்திற்கு என்ன செய்வீர்கள்" என்று கேட்டார் அவர்...

"எனக்கு வாரம் இரண்டு டாலரும் அவளுக்கு ஒரு டாலரும் கிடைக்க ஏற்பாடு செய்து விட்டோம்"

"சரி..இன்னொரு முக்கியமான விஷயம்....கல்யாணம் ஆனதும் குழந்தை பெற்றுக் கொள்வீர்களா?" என்றார் ...

"ஓ அதுக்கு கொஞ்சம் வெயிட் பண்ணலாம்னு இருக்கோம்...அதுக்கு முன்னாடி லாரா எங்காவது முட்டை போட்டால் அதை நான் காலால் மிதித்து விடுவேன் ஆமாம்"....

~சமுத்ரா

Saturday, October 23, 2010

மஹிதர் நீ மறைந்து விடு!(திகில்)-8


கோவணத்தாண்டி சொல்வது:

ஊரிருந்தென்ன ? நல்லோர் இருந்தென்ன உபகாரமுள்ள

பேரிருந்தென்ன ? பெற்ற தாய் இருந்தென்ன மடப்பெண்கொடியாள்
சீரிருந்தென்ன ? சிறப்பிருந் தென்ன இத்தேயததினில்
ஏரிருந்தென்ன ? வல்லாய் இறைவா கச்சியேகம்பனே.


உடனே விக்ரமிற்கு போன் செய்தேன் ...

"சார் ஒரு அர்ஜன்டான விஷயம்" என்று ஆரம்பித்து விஷயத்தை சொன்னேன்...என் குரல் படபடத்தது

"பதட்டப்படாதீங்க மஹிதர், என்ற விக்ரம் "அந்த பேப்பர்ல என்ன எழுதியிருக்குன்னு படிங்க" என்றார்...

நான் டேபிள் லாம்ப்பை இயக்கி அதில் என்ன எழுதியிருந்தது என்று பார்த்தேன்...

பென்சிலால் எழுதியிருந்தார்கள்....சுமாரான கையெழுத்து...

"கழுகொன்று தின்பதற்காய் நின் காயம் வீழவோ
கலுகீசன் பதம் நாடி களிப்பினில் வாழவோ
காலம் இனியில்லை கடிதினில் வந்திடுவாய்
காலன் பயம் இல்லை கடிதினில் வந்திடுவாய்!"


"சார் எனக்கு எதுவுமே புரியலை" என்றேன்....எனக்கு வியர்த்து விட்டிருந்தது....

"மஹிதர் அந்த கழுகு மலைக்கு இது இன்னொரு இன்விடேஷன்னு நினைக்கிறேன்" என்றார் விக்ரம்..

"இப்ப என்ன பண்றது சார்?" என்றேன்...எனக்கு பயத்தை விட குழப்பம் அதிகமாக இருந்தது....

"நாளைக்கு இங்க வாங்க..பேசலாம்...சிவாவையும் வரச் சொல்றேன் , எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க" என்றார்...


நான் அப்படியே படுக்கையில் சாய்ந்தேன்....யார் அவர்கள்? என் மூலம் அவர்களுக்கு என்ன ஆக வேண்டியிருக்கிறது? எதிரிகள் என்று எனக்கு யாரும் கிடையாது...சிறு வயதிலிருந்தே வம்பு தும்பு என்றால் ஒதுங்கக்கூடிய சாதுவான ஆள் நான்...அப்புறம் புக் ஸ்டால் வைக்கும் போது ஒரு அரசியல் ஆசாமி கொஞ்சம் தகராறு செய்தான்....அவ்வளவு தான்...காதல் விவகாரத்தில் யாராவது எதிரிகளா என்று பார்த்தால் அப்படியும் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை...நிமிஷாவின் அண்ணனுக்கும் இந்த விஷயம் தெரியும்..அவனும் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை....பிறகு யார்? கழுகு மலை, அது இதுவரைக்கும் கேள்விப்பட்டதில்லை....அங்கே நான் எதற்காகப் போக வேண்டும்?

குழப்பமான இந்த புதிர்களால் மிகவும் குழம்பிப் போனேன்...நிமிக்கு செய்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று தோன்றியது ...

"ஹாய் மஹி! how are யூ டா? என்ன ரெண்டு நாளா கால் இல்லை, மெசேஜ் இல்லை?" என்று செல்லமாக கடிந்து கொண்டாள்..

"சாரிம்மா..பிசியா இருந்தேன்...அப்பறம் ஒரு முக்கியமான மேட்டர்" என்று ஆரம்பித்து நடந்ததை சொன்னேன்...

நிமிஷா கொஞ்சம் கவலையான குரலில் "மஹி, என் சஜஷன் என்னன்னா நீ சென்னையை விட்டு வேறே எங்காவது போய் ஒரு மாசம் தங்கிட்டு வா..." என்றாள்...

"எதுவுமே புரியலை நிமி....நாளைக்கு விக்ரம் வர சொல்லியிருக்கார்...வரையா?"என்றேன்

"கண்டிப்பா,,,இது உன் பிரச்சனை இல்லை மஹி, நம் பிரச்சனை " என்ற நிமி "சரி இதையெல்லாம் மறந்துட்டு கொஞ்சம் ரொமான்ஸ் பேசுவோமா?" என்றாள்


"இல்லை நிமி, மூடே சரியில்லை" என்றேன்.....

"அந்த கழுகு உன்னை ரொம்பவே மாத்திருச்சு மஹி" என்று அலுத்துக் கொண்டாள்..

அந்த இரவு எப்படியோ விடிந்தது,,, தூக்கத்துக்கு இடையில் கனவா இல்லை கனவுகளுக்கு இடையில் தூக்கமா என்று புரியாமல் ......

மறுநாள் விக்ரமின் சென்டருக்கு நிமிஷாவும் கூட வந்திருந்தாள்...

விக்ரம் கொஞ்சம் பிசியாக இருந்ததால் அரை மணி நேரம் வெளியே காக்க வேண்டியிருந்தது....

உள்ளே சென்றதும் "வாங்க மஹிதர்.....வெல்கம் நிமிஷா" என்று வரவேற்றார் விக்ரம்.....சிவா ஏற்கனவே வந்திருந்தார்....

"என்ன மஹிதர் மறுபடியும் ஏதோ செய்யுள் வந்துதாமே? கன்க்ராட்ஸ் " என்றாள் தரங்கிணி....

"மஹிதர் , உங்களை யாராவது ஃபாலோ செய்யற மாதிரி தெரியுதா" என்று கேட்ட சிவா "ஏன்னா நீங்க கோவிலுக்கு போனதை யாரோ ஃபாலோ பண்ணியிருக்கணும் " என்றார்

"ஐ டோன்ட் தினக் சோ " என்றேன்....

"அப்ப ஃபாலோ பண்ணலைன்னா நீங்க கோவிலுக்கு போறீங்கன்னு அந்த மிஸ்டர். எக்ஸுக்கு எப்படி தெரியும்? நீங்க ரெகுலரா போவீங்களா"என்றார்

"கோவிலுக்கா, மஹியா? என்ன சிவா சார், ஜோக் பண்ணாதீங்க, ஆனா அன்னைக்கு மட்டும் ஏன் திடீர்னு போனான்னு தெரியலை....." என்றாள்


விக்ரம் கேட்டார்..."சொல்லுங்க மஹிதர்,,, அன்னிக்கு மட்டும் ஏன் போனீங்க? ,வாட் மேட் யூ கோ தேர்? "

"என்னமோ தெரியலை , போகணும்னு தோணுச்சு" என்றேன் ....நான் ஏன் போனேன் என்று இன்னும் எனக்குத் தெரியவில்லை.....

விக்ரம் தொடர்ந்தார்...."அந்த குங்குமப் பொட்டலம் கோவில்ல தான் உங்க கிட்ட வந்துதுன்னு எப்படித் தெரியும்?" என்று கேட்டார்....

"அங்கே தான் வந்திருக்கணும் சார், தீபாராதனைக்கு சில்லறை போட்டப்ப கூட என் பாக்கெட்ல அது இல்லை" என்றேன்....

"அப்படீன்னா நீங்க சாமியை தூக்கினதா சொன்னீங்களே அப்ப தான் யாரோ இதை உங்க பாக்கெட்ல போட்டிருக்கணும் "
என்றார்

"பாஸ் ஒரு வேலை சாமியே போட்டிருக்குமோ ?" என்று கேட்டாள் தரங்கிணி...அவள் ஜோக் அடிப்பது அந்த சூழ்நிலைக்கு கொஞ்சம் odd -ஆக இருந்தது....


ஏதோ சிந்தனையில் இருந்த சிவா கேட்டார்...."விக்ரம் எனக்கு புரியலை....யாருமே மஹிதரை ஃபாலோ பண்ணலைன்னா மஹிதர் கோவிலுக்கு வரணும்னு யாரோ முன்னாடியே நிர்ணயிச்ச மாதிரி தெரியுது"என்றார்


"அன்னிக்கு புக் ஸ்டால்லயும் அப்படிதானே நடந்தது?" என்ற விக்ரம் "சிவா சில சமயம் சில விஷயங்கள் நம்மை இழுக்கும்.... சந்தர்ப்பம் சூழ்நிலை எல்லாம் சில சமயம் நம்மை ஒரு இடத்துக்கு கொண்டு போய் சேர்க்கும்....இதை ஆன்மிகம் விதின்னு சொல்லுது ...அறிவியல் ஜஸ்ட் co -incidence னு சொல்லுது ...ஒரு சின்ன கதை சொல்றேன்...ஒரு ராஜா இருந்தானாம்.... ஒரு நாள் ஒரு கருப்பு உருவம் அவன் முன்னால வந்து நாளைக்கு உனக்கு மரணம் ....தப்பிக்க முடிஞ்சா தப்பிச்சுக்க " என்று சொல்லி மறைந்ததாம் ....அன்னிக்கி ராத்திரியே அந்த ராஜா தன்னிடம் இருந்த குதிரைகளிலேயே வேகமா ஓடக் கூடிய ஒரு குதிரைல ஏறி விடாம பயணம்செஞ்சு ரொம்ப ரொம்ப தூரமா போயிட்டானாம் ....சரி இனிமேல் பயமில்லைன்னு குதிரையில் இருந்து இறங்கி ஒரு மரத்தடியில் ஓயவா உட்கார்ந்தானாம்... அப்ப அந்த கருப்பு உருவம் மீண்டும்தோன்றி நான் தான் உன் மரணம்..இன்னிக்கு நீ இந்த இடத்துல தான் சாகனும்னு விதி....எப்படி உன்னை இவ்வளவு தூரம் வரவழைக்கிறது என்று கவலைப்பட்டேன்...ஆனால் உன் குதிரை எனக்கு உதவி புரிந்ததுன்னு சொல்லிச்சாம்"

தரங்கிணி குறுக்கிட்டு "பாஸ்...கதையெல்லாம் ஓகே...ஆனா தம்மா துண்டு பொட்டலம் மஹிதரை கோவிலுக்கு இழுத்திருக்குமா"? என்றாள்

"தம்மாதுண்டு அணு தானே ரெண்டு பெரிய நகரங்களையே அழிச்சுது " என்றார் விக்ரம்...

"மஹிதர் அந்த பேப்பரை கொஞ்சம் காட்டுங்க " என்று கேட்டார் சிவா..காட்டினேன்...

"ப்ளைன் பேப்பர்....பென்சில்ல எழுதியிருக்காங்க"....விக்ரம் கையெழுத்தை வைத்து ஆளை கணிக்கும் வித்தை உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்....

"I can try" ...என்ற விக்ரம் அதை வாங்கி கொஞ்ச நேரம் ஆராய்ந்து "இதை ஒரு பெண் எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது" என்றார்...

"பாஸ், என்னைப் பார்க்காதீங்க " என்று சிரித்தாள் தரங்கிணி....

எனிவே "வி ஆர் கோயிங் தேர்...நாளைக்கே " என்றார் விக்ரம் உறுதியுடன்....

காகிதத்தை திருப்பித் தந்து "அந்த ஒலையையும் இதையும் பத்திரமாக வெச்சுக்கங்க மஹிதர்....இவையெல்லாம் எவிடன்ஸ் ....தி கேம் இஸ் ஆன் " என்றார்...

நான் அதைப் பார்த்த போது அதில் எழுதியிருந்த ஒவ்வொரு எழுத்தும் ஒரு குட்டிக் கழுகாக மாறி அசைவது போல் தோன்றியது...

~தொடரும்


முந்தைய அத்தியாயங்கள்

1 2 3 4 5 6 7





Thursday, October 21, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-11

ஒரு நாள் அரசாங்க அலுவலகம் ஒன்றில் கண்காணிப்பாளர் பார்வையிட வந்தார்...

ஒரு டேபிளில் இரண்டு பேர் சும்மா உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்...

அதில் ஒருவனைப் பார்த்து " உனக்கு என்ன வேலை?" என்றார் ...

"ஜாயின் பண்ணி ஆறு மாசம் ஆச்சுங்க...இன்னும் சும்மா தான் உட்கார்ந்திருக்கேன் " என்றான்

இன்னொருவனைப் பார்த்து "உனக்கு என்ன வேலை?" என்றார்...

அவனும் "ஜாயின் பண்ணி ஆறு மாசம் ஆச்சுங்க...இன்னும் சும்மா தான் உட்கார்ந்திருக்கேன்" என்றான்...

அவர் மிகுந்த கோபத்துடன் " உங்க ரெண்டு பேர்ல ஒருத்தரை இப்பவே வேலையிலிருந்து தூக்கறேன்....யாருய்யா ஒரே வேலைக்காக ரெண்டு பேரைப் போட்டது?" என்று கத்தினார்...


%%%%%%%
அறிவு ஜீவிகள் மூன்று பேர் தங்கள் ஞாபக சக்தி பற்றி பேசிக் கொண்டிருந்தனர்...

ஒருவன் "நான் ஆறு மாசக் குழந்தையாக இருந்த போது யார் யார் என்னை எப்படிக் கொஞ்சினார்கள் என்று மிகச் சரியாகச் சொல்ல முடியும்" என்றான்.....

இன்னொருவன் "இதெல்லாம் பெரிய விஷயமா? நான் பிறந்த நாள் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது...என்னை டாக்டர் முதுகில் தட்டியது கூட நினைவிருக்கிறது " என்றான்


மூன்றாமவன் " ப்பூ, நீங்கெல்லாம் வேஸ்ட்...எனக்கு நான் ஒரு நாள் ராத்திரி எங்க அப்பா கூட போய் மறுநாள் காலைல எங்க அம்மா கூட திரும்பி வந்தது கூட ஞாபகம் இருக்கு" என்றான்....

~சமுத்ரா

Tuesday, October 19, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-10



டாம் தன் மானேஜரிடம் சென்று "சார் நாளைக்கு மத்தியானம் லீவு வேணும் ...பாட்டி இறந்துட்டாங்க..." என்றான்

"டாம் இதையே தான் மூணு மாசத்துக்கு முன்னாடியும் சொன்னாய்! லீவெல்லாம் கொடுக்க முடியாது" என்றார் மானேஜர்...



"ஆனால் சார் எங்க தாத்தா அதுக்கப்பறம் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டார்"

%%%%

சின்னப் பெண் ஒருத்தி ஒரு நாள் ஒரு பசுவை இழுத்துக் கொண்டு சென்றுகொண்டு இருந்தாள்...

அதைப் பார்த்த ஒரு பெண்மணி "என்னம்மா இவ்ளோ கஷ்டப்பட்டு இந்தப்பசுவை இழுத்துக்கிட்டு போறியே, என்ன சமாசாரம்?" என்றாள்..

"இது எங்க அப்பாவோட பசுங்க ...இதை அடுத்த தெருவில் உள்ள காளை மாட்டுக்கிட்ட கூட்டிப் போகிறேன்.... "

"என்னம்மா அநியாயம் இதை உங்க அப்பாவே செய்யக்கூடாதா? " என்றாள் அந்தப் பெண்மணி..

"இல்லைங்க ....காள மாடு தான் செய்யணும்"

~சமுத்ரா

Thursday, October 14, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-9

இரண்டு மனவியல் டாக்டர்கள் தங்கள் தொழில் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்...

ஒருவர் "உங்கள் வேலை எப்படி போகிறது?" என்றார்...

இன்னொருவர் "நன்றாகத் தான் போய்க் கொண்டு இருந்தது....ஒரு மனிதன் கவுன்சிலிங்கிற்காக வந்திருந்தான்....அவன் தான் எல்லோரையும் விட உருவத்தில் கொஞ்சம் சிறியதாக இருப்பதாக தாழ்வு மனப்பான்மையில் இருந்தான்,,,,,நான் அவனுக்கு "இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை...உலகத்தில் சாதனையாளர்கள் எல்லாம் பெரும்பாலும் உருவத்தில் சற்று சிறியவர்களே" என்றெல்லாம் கூறி கவுன்சிலிங் கொடுத்துக் கொண்டிருந்தேன்...பணமும் நிறைய கொடுத்தான்....என்னுடைய துரதிர்ஷ்டம் அவனை இழந்து விட்டேன்" என்றார்...


"ஓ அப்படியா...என்ன ஆயிற்று அவனுக்கு" என்று கேட்டார் இன்னொருவர்...

"ஒருநாள் என் வீட்டுப் பூனை அவனை தின்று விட்டது...."


@@@@

முல்லா நசுருதீன் ஒரு நாள் ஒரு வீட்டின் கதவை தட்டினார்...

"என்னங்க நேத்து இங்க நடந்த பார்ட்டிக்கு என் சிநேகிதன் வந்திருந்தானா?" என்றார்...

"ஆமாம்"

"குடித்து விட்டு எல்லாரையும் ரகளை செய்தானா?"

"ஆமாம்"

"பெண்கள் மீது இடித்தானா?"

"ஆமாம்"

"சத்தம் போட்டு சாமானெல்லாம் உடைத்தானா?"

"ஆமாம்"

"அப்புறம் கடைசி கேள்வி...அவன் கூட நானும் இருந்தேனா ?"

~சமுத்ரா

Wednesday, October 13, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-8

ஒரு நாள் விரக்தியடைந்த மனிதன் ஒருவன் ஒரு மன நல டாக்டரிடம் வந்து "டாக்டர்,,,யாருமே என்னைக் கண்டு கொள்வதில்லை...நான் என்னவோ அங்கே இல்லாதது போல் நடத்துகிறார்கள்....ஒரு காற்றைப் போல,,,என் இருப்பையே யாரும் பொருட்படுத்துவதில்லை....நான் மிகவும் புறக்கணிக்கப் பட்டது போல் உணர்கிறேன்...தயவு செய்து உதவுங்க" என்றான்...


டாக்டர் தன் உதவியாளரை அழைக்கும் மணியை அழுத்தி "அடுத்த பேஷண்ட் ப்ளீஸ்" என்றார்...


***

ஒரு நாள் ஒரு இளைஞன் ஒரு மனநல மருத்துவரிடம் வந்தான்...

"டாக்டர் நான் என் குதிரையை காதலிக்கிறேன்"

டாக்டர் "ஓ அப்படியா? இது சாதாரணம் தான்....எல்லோரும் தான் அவர்கள் செல்ல மிருகங்களை காதலிப்பார்கள்...நீங்கள் நார்மல் தான்"

"அது வந்து டாக்டர் ,நான் என் குதிரையால் உடலளவில் கூட கவரப்படுகிறேன்"

என்றான்

"சரி ,,அது ஆண் குதிரையா, பெண் குதிரையா?"

"டாக்டர்....கொஞ்சம் வார்த்தைகளை கவனிச்சுப் பேசுங்க...என்னை என்ன அந்த மாதிரி ஹோமோ கேசுன்னு நெனைச்சீங்களா?" என்றான்


சமுத்ரா

மஹிதர் நீ மறைந்து விடு!(திகில்)-7


கோவணத்தாண்டி சொல்வது:

காடோ? செடியோ? கடற்புறமோ? கனமே மிகுந்த
நாடோ நகரோ நகர் நடுவோ நலமே மிகுந்த
வீடோ புறத்திண்ணையோ? தமியேனுடல் வீழுமிடம்,
நீடோய் கழுக்குன்றிலீசா, உயிர்த்துணை நின்பதமே.

மஹிதர் சொல்வது:

ஓலை விஷயம் நடந்து சரியாக மூன்று நாட்களாகி விட்டிருந்தன....கனவு மறுபடியும் வரவில்லை....சரி இந்த விஷயம் இப்படியே சரியாகி விடும் என்று திடமாக நம்பினேன்.....அன்று கடையில் அதிகம் கூட்டம் இல்லை என்பதால் சீக்கிரமே பூட்டி விட்டு ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்குவந்தேன்....அன்று நிமிஷாவை சந்திப்பதாகச் சொன்னதையும் தள்ளி வைத்து விட்டேன்,,,,,,

சென்னை தன் வெப்பப் போர்வையை தற்காலிகமாக கழற்றி விட்டிருந்தது...சூழ்நிலை மனதிற்கு இதமாக இருந்தது...

வீட்டுக்கு வந்ததும் மாலை பேப்பர் படித்துக் கொண்டிருந்த அப்பா "என்னடா சீக்கிரமே வந்துட்ட? அதிசயம்" என்றார்...

"சும்மா தாம்பா" என்றேன்......

அம்மா சமையல் அறையில் பஜ்ஜி செய்து கொண்டிருந்தாள் போலிருந்தது .....சூடான பஜ்ஜியையும் காபியையும் கொண்டு வந்தாள்...

"இந்தா மஹி சாப்பிடு" ....

அம்மா ஒரு வெகுளியான ஆள்...தெய்வ பக்தி அதிகம் உள்ளவள்....கோவில் குளம் என்று போவதென்றால் உயிர்...அப்பாவும் ரிடையர் ஆகி விட்டதால் ரெண்டு பேருமாக அடுத்த மாதம் காசி டூரெல்லாம் போகிறார்கள்....அம்மாவுக்கு என் மீது கொஞ்சம் பாசம் அதிகம்...நான் நண்பர்கள் பார்ட்டி என்று ஊர் சுற்றுவது மட்டும் கொஞ்சம் பிடிக்காது....

"அம்மா இன்னிக்கு பெருமாள் கோவிலுக்கு போறியா? நானும் வரேனே? கார்லயே போலாம்" என்றேன் ...ஏனோ கோவிலுக்குப் போனால் கொஞ்சம் வேறுபட்ட மனநிலை கிடைக்கும் என்று தோன்றியது...
அம்மா "மஹி நீ தான் பேசறியா? பர்த் டே அன்னிக்கு கூட கோயிலுக்கு வராத நீ இன்னிக்கு என்னடான்னா நீயே கோயிலுக்கு போலாம்கற? கனவுல சாமி எதாச்சும் வந்து நல்ல வார்த்தை சொல்லுச்சா"

"கனவுல கழுகு தான் வருது" என்று சொல்ல வந்தவன் "அதல்லாம் ஒண்ணும் இல்லைம்மா ....சும்மா என்னவோ இன்னிக்கு போலாம்னு தோணுச்சு" என்றேன்,,,,,

"சரி ஒரு ஆறே முக்காலுக்கு கிளம்பலாம்.....மஹதியும் டான்ஸ் கிளாஸ் முடிச்சிட்டு வந்துருவா...அவளும் வரட்டும்"...என்றாள் அம்மா ...

மஹதி என் தங்கை...அழகான, அறிவான பெண்...B .E படித்து விட்டு ஒரு எம்.என்.சியில் வேலையில் சேருவதற்கு காத்திருக்கிறாள்....

பெருமாள் கோவிலுக்குப் போவதற்கு ஏழு மணி ஆனது....கோவிலில் கணிசமான கூட்டம் இருந்தது....அன்று ஏதோ ஏகாதசியாம்....பட்டை நாமம் அணிந்த ஒரு ஐயங்கார் மைக்கின் முன் அமர்ந்து ஏதோ பக்திக் கதைஒன்று சொல்லிக் கொண்டிருந்தார்.....

கடவுளுக்கு தீபாராதனை காட்டிய போது சில நொடிகள் மனம் ஒன்றினேன்....கனவு பற்றியெல்லாம் மறந்து போய் மனம் சுத்தமானது போன்ற ஓர் உணர்வு வந்தது....

கோவிலை வலம் வரும் போது மஹதி "என்னண்ணா யாராவது அய்யங்கார் வீட்டு அழகை லவ் பண்ணறியா? இன்னிக்கு உலக அதிசயமா கோயிலுக்கெல்லாம் வந்திருக்க ?" என்றாள்...

நான் ஒரு சென்டிமீட்டர் புன்னகை செய்தேன்...நிமிஷா விஷயத்தை இன்னும் வீட்டில் சொல்லவில்லை.....கூடிய சீக்கிரம் சொல்லி விட வேண்டும்...

அங்கே ஒரு ஓரத்தில் பெருமாள் கருட வாகனத்தில் வீதிவலம் புறப்படுவதற்குத் தயாராக இருந்தார்....சிலர் பெருமாள் வைக்கப் பட்டிருந்த பீடத்தை தூக்கினார்கள்.....

யாரோ ஒருவர் "ஒரு ஆள் குறையறது....யாராச்சும் வாங்களேன்" என்றார்...

நான் கேட்காதது போல நின்று கொண்டிருந்தேன்....

"மஹி போயேண்டா...அதிசயமா கோயிலுக்கு வந்திருக்க....புண்ணியம் கிடைக்கும் ...சீக்கிரம் கல்யாணம் ஆகும் போ" என்றாள்...

நான் போய் அதன் கழியைப் பிடித்து தோளில் ஏற்றினேன்..... இதெல்லாம் எனக்கு பழக்கமில்லாத விஷயங்கள்....எப்படியோ சமாளித்து பாலன்ஸ் செய்தேன்...அப்படியே கொஞ்சம் திரும்பிப் பார்த்ததில் பெருமாளை கம்பீரமாக சுமந்து கொண்டிருந்த கருடன் கொஞ்சம் பயமுறுத்தியது.....

கோவிலை சுற்றி ஒரு சிறிய வீதியில் வட்டம் அடித்துத் திரும்பினோம்....

அங்கிருந்து திரும்பி வரும் போது காரில் "இன்னைக்கு மஹி வந்தது அதிசயம்டி..அதுவும் அவன் அதிர்ஷ்டம் இன்னைக்கு சாமியையே சுமக்கற பாக்கியம் கிடைச்சிருக்கு " என்றாள் அம்மா மஹதியைப் பார்த்து....

"அம்மா சாமியை சுமக்குற கருடனையும் சேர்ந்து சுமக்கற பாக்கியம்னு சொல்லுங்க...."என்ற அவள் "ஆனாலும் சோழியன் குடுமி சும்மா ஆடுமா ஏதோ மேட்டர் இருக்கு" என்றாள்...

"அதல்லாம் ஒண்ணும் இல்லை...கோயிலுக்கு வராட்டியும் திட்டறீங்க...வந்தாலும் கலாய்கறீன்களே" என்றேன்....
வீட்டுக்கு வருவதற்கு எட்டரை மணி ஆகி விட்டிருந்தது...

"மஹா நீ எப்ப ஜாயின் பண்ணனும்" என்று கேட்டேன்....

வேலை கிடைத்து மூன்று மாதமாக சும்மா இருக்கிறாள்...

"இன்னும் டேட் கன்பார்ம் ஆகலைண்ணா..இன்னொரு தடவை மெயில் பண்ணி கேக்கறேன்" என்றாள்....

சாப்பிட்டு முடித்து என் அறைக்கு சென்றேன்...

டி.வியை ஆன் செய்தேன்...ஏதோ ஒரு திரைப்படத்தின் டிரைலர் எழுநூறாவது முறையாக ஸ்க்ரீனில் ஓடிக் கொண்டிருந்தது....

அணிந்திருந்த சட்டையைக் கழற்றும் போது சில நாணயங்கள் கீழே விழுந்தன....அதனுடன் ஏதோ ஒரு சிறிய பொட்டலமும் விழுந்தது.....பிரித்துப் பார்த்த போது அது ஒரு குங்குமப் பொட்டலம்....அது எப்படி என் பாக்கெட்டில் வந்தது என்று எவ்வளவு யோசித்துப் பார்த்தும் தெரியவில்லை....யாராவது போட்டார்களா? அந்தக் கோவிலில் குங்குமம் பொட்டலம் கட்டி எல்லாம் கொடுக்க மாட்டார்கள்....

மறுபடியும் மடித்து வைக்கும் போது தான் அதில் ஏதோ எழுதியிருப்பது போல தோன்றியது....எனக்கு மெல்ல வியர்க்கத் தொடங்கியது....

கோவிலில் பார்த்த கருட வாகனத்தின் முகம் ஒரு முறை மனத்தில் தோன்றி மறைந்தது....

~தொடரும்

முந்தைய அத்தியாயங்கள்:1 2 3 4 5 6

Tuesday, October 12, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்- 7


ஒரு அரசியல்வாதி தன் நாயை மிகவும் விரும்பினார்....
ஒரு நாள் தானே அதற்கு பிஸ்கட் வாங்க கடைக்குச் சென்றார்... கடைக்காரனைப் பார்த்து "ஏம்பா, இங்கே நாய் பிஸ்கட் கிடைக்குமா?" என்றார்....
"இருக்குங்க , இங்கயே சாப்பிடறீங்களா இல்ல பார்சல் பண்ணவா? "


No explanation : )



"அன்பே, இந்த ஒரு தரம்"
"ரொம்ப களைப்பாக இருக்கிறது"
"ப்ளீஸ், எனக்காக"
"என்னை விட்டு விடுங்கள்,,,தூங்கணும்"
"எனக்கு தூக்கம் வரவில்லையே"
"ப்ளீஸ்"
"பாதி ராத்திரியிலா?"
"தாங்க முடியவில்லை...எரிகிறது "
"என்னால் முடியாது"
"நீ என்னை விரும்பவில்லையா"
"நான் விரும்புகிறேன்"
"அப்படியானால் ஏன் மறுக்கிறாய்?"
"சரி ஓகே...."
"கைக்கு எட்டவே இல்லை....விளக்கு போடுகிறேன்"
"வேண்டாம்.... அப்படி தான்... இன்னும் கொஞ்சம் மேலே"
"ஓ நன்றி..."
"இன்று ஒரு நாள் தான் ...அடுத்த முறை அந்த பாழாப்போன ஜன்னலை நீங்களே எந்திருச்சுப் போய் திறந்துக்கங்க"

ஓஷோ: மனிதன் எதைப் பார்க்க விரும்புகிறானோ அதை மட்டும் தான் பார்ப்பான் ...மனிதன் எதை கேட்க விரும்புகிறானோ அதை மட்டும் தான் கேட்பான்....

மஹிதர் நீ மறைந்து விடு!(திகில்)-6


கோவணத்தாண்டி சொல்வது:

வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கிற்சென்று
சரிக்கோதுவேன் எழுத்தஞ்சுஞ் சொலேன், தமியேனுடலம்
நரிக்கோ? கழுகுபருந்தினுக்கோ? வெய்யநாய் தனக்கோ?
எரிக்கோ? இரையெதற்கோ? இறைவா, கச்சியேகம்பனே
...

நேற்று பேய்மழை கொட்டித் தீர்த்து விட்டிருந்தது....சென்னையின் ரோடுகளில் நீந்தி வருவதற்குள் லேட்டாகி விட்டது....

உள்ளே விக்ரம் ஒரு சிறுவனின் பெற்றோரிடம் பேசிக் கொண்டிருந்தார் " டாக்டர், இவன் விளையாடறதே இல்லை...எப்பவும் ஏதோ சிந்தனையிலேயே இருக்கான்" என்று சொல்லிக் கொண்டிருந்தனர்....

நான் உள்ளே நுழைந்ததும் "மார்னிங் தரங் " என்றார்...

நான் அந்த சிறுவனைப் பார்தேன்....அப்போதும் ஏதோ சிந்தனை வயப்பட்டிருந்தான்.....விக்ரம் அவர் அப்பாவிடம் திரும்பி "சார் எல்லா அப்பா அம்மாக்களும் தங்கள் பிள்ளை சச்சினாட்டம் வரணும், தோனியாட்டம் வரணும் னு எதிர்பார்த்தா எப்படிங்க? இப்ப நமக்கெல்லாம் ஒரு ரமண மகரிஷி, ஒரு விவேகானந்தர் போன்றவர்கள் கண்டிப்பா தேவைப்படுது...ஒவ்வொரு குழந்தையின் குணம் ஒவ்வொரு மாதிரி....நீங்க சொல்றதப் பார்த்தா அவன் நல்லா படிக்கறான்... பின்னாளில் ஜே .கே. மாதிரி ,தாகூர் மாதிரி பெருசா வரலாம்....கொஞ்சம் விட்டுப் புடிங்க....எதுக்கும் ஒரு வாரம் கவுன்சிலிங் வரட்டும்" என்றார்...

அவர்கள் சென்றதும் "மார்னிங் பாஸ், உள்ளே வந்தப்ப நீங்க சீரியசா முகத்தை வெச்சுகிட்டிருந்ததைப் பார்த்தப்போ அந்தப் பையனுக்கும் ஏதோ கனவில் ஆந்தை வந்திருச்சோன்னு நினைச்சேன்" என்றேன் ...

"தரங் கனமழை விட்டாலும் உன் கடிமழை விடலையே" என்றார் விக்ரம்...

"என்ன பண்றது பாஸ், இதெல்லாம் நம்ம ரத்தத்தில் ஊறிய பழக்கம் " என்ற நான் "ஆமாம் நேத்துலேருந்து ஒரு சந்தேகம்" என்றேன்...

"சொல்லு" என்றார் விக்ரம்..

"மஹிதரை அந்த கழுகு மலைக்கு வரவைப்பது தானே அந்த கண்ணுக்குத் தெரியாத எனிமீசோட திட்டம்?" என்றேன்

"அப்படிதான் தெரியுது"

"அப்படின்னா அந்த ஓலையை நாம பார்த்தது ஒரு தற்செயலான விஷயம் தானே? அவங்களுக்கு எப்படி நம்ம அந்த The Eagle
ங்கற புக்கைக் கண்டிப்பா பார்ப்போம்னு தெரியும்?மனுஷங்க நாம சாதாரணமா ஒரு லெட்டரை பாக்ஸ்ல போட்டுட்டு அது போயிருச்சான்னு உள்ள வரைக்கும் கை விட்டுப் பார்க்கறோம்...அதன் படி பார்த்தா, அவங்க அந்த ஓலையையோ இல்லை புக்கையோ மஹிதர் டேபிள் மேலயே கொண்டு வந்து வச்சிருக்கலாமே?did they believe in chance ? இதைப் பார்த்தா அவங்க அவங்களோட இன்டென்ஷன்ல ஒழுங்கா இல்லையோன்னு நினைக்கத் தோன்றது" என்றேன்.....

"நல்ல கேள்வி" என்ற விக்ரம் தொடர்ந்தார்...

"இதைப் பார்த்தா தான் எனக்கு அவங்க அவங்களோட
இன்டென்ஷன்ல ரொம்ப தீவிரமா இருக்கிறாங்கன்னு தோணுது"

"how ?" என்றேன்....


"நீ சொல்றது மாதிரி அவங்க அந்த ஓலையையோ புத்தகத்தையோ மஹிதர் டேபிள் மேல வச்சிருந்தா தான் நாம் அதைப் பார்க்கறதுக்கு வாய்ப்புகள் குறைவு....பக்கத்தில் இருக்கற எதையுமே நாம் சரியா கவனிக்க மாட்டோம்...மேலும் நம்ம மனசுல நினைக்கறதுக்கும் வெளியில் நடக்கும் events -
க்கும் ஒரு attraction இருக்கும்....சில சமயம் ஏதோ ஒரு பாட்டை நாமே அறியாம ஹம் பண்ணிக் கொண்டிருப்போம்.... டிவி யைப் போட்டா அந்த பாட்டு ஓடிக் கொண்டிருக்கும்.....எங்க தாத்தா ஒருத்தர் இருந்தார்...அவருக்கு மியூசிக் னா உயிரு....சாயங்காலங்களில் ஒரு ராகத்தை,for example , பந்துவராளி, சும்மா ஆலாபனை பண்ணி பண்ணி எங்களை கடுப்பேற்றிக் கொண்டிருப்பார்....பிறகு ரேடியோயைப் போட்டால் 98 % பந்துவராளி கேட்கும்...எப்படி தாத்தா என்று கேட்டால் என்னவோ தோணித்து " என்பார்...அதாவது வெளியில் நடக்கக் கூடிய விஷயங்கள் எப்படியோ அதற்கு முன்னரே நம் மனசுக்கு எட்டி விடும்...இது பொதுவாக எல்லா மனுசங்களுக்கும் இருக்கும்னாலும் ஒரு சிலரிடம் டாமினண்டா இருக்கும்....இன்னும் உனக்கு உதாரணம் வேணும்னால் ஐன்ஸ்டீன் ரிலேடிவிட்டி கண்டுபுடிச்சப்ப ஒரு ஏழெட்டு பேர் அதே ஆராச்சியில் ஈடுபட்டிருந்தாங்க...கிட்டத் தட்ட அதே முடிவுகளை கண்டுபிடிச்சிருந்தாங்க.....ஐன்ஸ்டீன் கொஞ்சம் முந்திக்கிட்டார்...அவ்ளோ தான் அதே மாரி மார்கோனி ரேடியோ கண்டுபுடிச்சப்ப கூட நாலஞ்சு பேர் அதே மாதிரி ஆராய்சிகளில் ஈடுபட்டு இருந்தாங்க...அவரோட நண்பர் ஒருத்தர் மார்கோனி ரேடியோ மாடலை அவருக்கே தெரியாமல் பேடன்ட் ஆபீசில் சென்று தக்க டைம்ல பதிவு செய்ததால் புகழ் அவருக்கு கிடைத்தது....
இதே மாதிரி தான் நம்ம எல்லார் மனசுலயும் இருந்த "கழுகு" நம்மை அந்த கழுகு புக்கை நோக்கி இழுத்துப் போனது....மஹிதரோட எதிரிகள் மனுஷ மனத்தைப் பத்தித் தெரிஞ்ச புத்திசாலிகள் போல் தெரிகிறது"...என்று கூறி முடித்தார்...

"பாஸ் கலக்கறீங்க" அடுத்த ஜென்மத்துல நம்ம ரோல்ஸ கொஞ்சம் மாத்திக்கலாமா? நான் எத்தனை நாள் தான் ஸ்டுபிட் தரங்கிணியாகவே இருக்கறது? என்றேன்...

"தரங்கிணி இன்னொன்னு தெரியுமா? மனுஷன் சாகறப்போ எதை நினைக்கிறானோ அடுத்த பிறவியில் அதுவாகத் தான் பிறப்பானாம்"

"அப்ப கண்டிப்பா மஹிதர் கழுகு தான்....இப்ப இருந்தே அவர் "எலி சாப்பிடுவது எப்படி"ன்னு ட்ரைனிங் எடுத்துக்கணும் என்றேன்...

"அதெல்லாம் சரி கூகுள்ல கழுகு மலை எங்க இருக்குன்னு தேடச் சொன்னனே, அது ஒண்ணையாச்சும் உருப்படியா பண்ணியா?" என்றார் விக்ரம்....

"என்ன பாஸ் என்னை என்ன ராத்திரி சீரியல் பாத்துட்டு தூங்குற பார்டின்னு நெனச்சீங்களா? பிரின்ட் அவுட் எல்லாம் கொண்டு வந்திருக்கேன்" என்றேன்....

"ஓகே எங்க இருக்கு சொல்லு " என்றார்

"அது திருநெல்வேலிக்கு பக்கத்துல சங்கரன் கோவிலுக்கும் கோவில்பட்டிக்கும் நடுவுல இருக்கு.....ச்சே சொன்னது தான் சொன்னான்...அமெரிக்கால கூட eagle - town னு ஒண்ணு இருக்காம்...அங்க வரச் சொல்லி இருக்கக் கூடாதா?உங்க தயவுல நான் U .S பார்த்திருக்கலாம்....பாஸ் லோக்கல் பார்டிங்க பாஸ்...."என்றேன்

"லோக்கல் பார்டியா பாரின் பார்டியான்னு போய் பார்த்தாதான் தெரியும்" என்றார்....

"சார் மஹிதர் கிட்டேருந்து அவங்க என்ன எதிர் பார்க்கறாங்க? பணமா?" என்றேன்

"their intentions are not yet clear " என்றார்

அப்போது அவர் செல்போன் ஒலித்தது ...."சிவா தான்" என்றார்

அவர் பேசியதும் "என்னவாம் பாஸ் ?" என்றேன்

"கழுகு மலைக்கெல்லாம் போக வேண்டாமாம்....இதை இப்படியே கொஞ்ச நாளைக்கு விட்டு விடுவோம்.....எதிரிகள் அடுத்த மூவ் எப்படி பண்றாங்கன்னு பார்க்கலாம்னான்" என்றார்...

ஓகே பாஸ் வேலையைப் பார்க்கலாம்....ஜுஜுபி ஓலைக்கு எல்லாம் பயந்துகிட்டு என்றேன்.....


திடீரென்று எங்கிருந்தோ ஒரு பலமான காற்று வீசியது.... நான் கொண்டு வந்திருந்த பேப்பர்கள் சில ஜன்னல் வழியே பறந்தன...மீதம் இருந்த பேப்பர்களைப் பொறுக்கி மேசை மீது வைத்தேன்,,,,அதில் இருந்த கழுகாசல மூர்த்தியின் படம் எங்களைப் பார்த்து சிரிப்பது போல் தோன்றியது....


~தொடரும்



முந்தைய அத்தியாயங்கள்

1
2
3
4
5








Monday, October 11, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-6


எழுபது வயதான முல்லா நசுருதீன் தன் தொண்ணூறு வயதான தந்தையை அழைத்துக் கொண்டு ஒரு மனநல டாக்டரிடம் வந்தார்....

"டாக்டர்....எங்க அப்பா தினமும் நிறைய நேரம் பாத் ரூமில் ஒரு வாத்து பொம்மையை வைத்துக் கொண்டு தண்ணீரில் விளையாடுகிறார்" என்றார்....

டாக்டர் " முல்லா..பாருங்கள் இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை....வயதானவர்கள் குழந்தை போல ஆகி விடுகிறார்கள்....அவர் பிறரை தொந்தரவு செய்யாத வரை இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை" என்றார்...

முல்லா "ஆனால் டாக்டர், அது என்னுடைய வாத்து பொம்மை" என்றார்....


ஓஷோ: மனிதன் எவ்வளவு வளர்ந்தாலும் மனதளவில் குழந்தையாகவே இருக்கிறான்....



ஒரு நாள் ஒரு இந்தியன், ஒரு ஆப்பிரிக்கன், ஒரு அமெரிக்கன் மூன்று பேரும் ஒரு பேருந்தில் ஏறினார்கள்....
பேருந்து புறப்பட்டதும் ஒரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..அவன் அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் போய் அமர்ந்தது....அவனும் அதைத் தட்டி விட அது ஆப்பிரிக்கன் மேல் போய் அமர்ந்தது...அதை அவன் அப்படியே பிடித்து சாப்பிட்டு விட்டான்....சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ உள்ளே வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..அவன் அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் போய் அமர்ந்தது....அவனும் தட்டி விட அது ஆப்பிரிக்கன் மேல் போய் அமர்ந்தது...இந்த முறையும் அவன் அதை பிடித்து அப்படியே சாப்பிட்டு விட்டான்...சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது...அதை அவன் தட்டி விட ,அது இந்தியன் மேல் வந்து அமர்ந்தது...

இந்த முறை அந்த ஈயை அவன் கையில் பிடித்து வைத்துக் கொண்டு ஆப்பிரிக்கனிடம் சென்று

"சார், சுவையான ஈ இருக்கு,,,வாங்கறீங்களா? பத்து ரூபாய் தான்" என்றான்..

ஓஷோ: இந்தியா எப்போதோ தன் ஆன்மீக வாழ்கையை இழந்து பணத்தின் மேல் குறியாகி விட்டது....

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-5


ஒரு நாள் முல்லா நசுருதீன் தன் கார் டிரைவரை அவசரமாக அழைத்தார்....

"இத பாருப்பா அந்த மலைப்பாதைல ஏறி ஃபுல் ஸ்பீடுல வண்டியைக் கீழே விடு....ச்சே வாழ்கையே வெறுத்துருச்சு...நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்...."

ஓஷோ: மனிதன் சுயநலம் பிடித்தவன்...பிறர் இருப்பதையே கவனிப்பதில்லை.....






ப்ரொபசர் பான்டா ஒரு நாள் சலூனுக்கு சென்றார்.....அங்கே ஏற்கனவே ஒரு நாயும் ஒரு பெரிய பூனையும் கட்டிங்குக்காக வெயிட் செய்து கொண்டிருந்தன.....
அந்த நாய் திடீரென்று "என்னப்பா இவ்வளவு நேரம்" என்றது...
பான்டா சலூன்காரனைப் பார்த்து "பாருப்பா உலக அதிசயம் நாய் பேசுது, நாய் பேசுது" என்றார்..

"உளறாதீங்க ப்ரொபசர்....நீங்க ஸ்டடியா தான் இருக்கீங்களா? நாய் எங்காவுது பேசுமா" என்றான்
"இல்லப்பா நான் கேட்டேனே" ....
"அப்ப அங்க உட்காந்திருக்கே அந்த குண்டுப் பூனை, கழுத அது தான் மிமிக்ரி பண்ணித் தொலச்சிருக்கும் "

ஓஷோ: மனிதன் பிரபஞ்சத்தைப் பார்த்து அதிசயிக்கும் விழிகளை இழந்து விட்டான்....Man has lost the capacity to wonder ...

சமுத்ரா

மஹிதர் நீ மறைந்து விடு!(திகில்)-5


கோவணத்தாண்டி சொல்வது:


உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை - வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை





புத்தகத்திலிருந்து எதோ ஒன்று கீழே விழுந்ததும் அதை சிவா கையில் எடுத்தார்....


"விக்ரம் இது பனை ஓலை , அந்தக் காலத்தில் எழுதுவார்களே" அது ....என்றார்...


"சிவா உள்ள ஏதாவது எழுதியிருக்கா பாருங்க" என்றார் விக்ரம்....


"படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு....வாங்க வெளில போலாம்"


"சார் ஒரு நிமிஷம்," என்ற மஹிதர் அந்த குழந்தையை நெருங்கி ,"பாப்பா இந்த புக்கை யார் கொடுத்தா சொல்றயா ? " என்றார்...


அந்த குழந்தை முகத்தை என்னவோ போல் செய்தது....


"வேண்டாம் விட்டுருங்க மஹிதர், அழுதுறப் போகுது" என்றேன்....அதற்குள் அந்தக் குழந்தை அங்கிருந்து 'மம்மி" என்று அழைத்துக் கொண்டு ஓடியே விட்டது....


வெளியே வந்து கூட்டம் இல்லாத ஒரு இடத்தில் நின்று கொண்டு வெளிச்சத்தில் ஓலையைப் பார்த்தோம்..."சிவா படிச்சுக் காண்பீங்க" என்றார் விக்ரம்..

சிவா படித்தார்...


"நிலையா தேகத்தில் நித்தியம் உணர

வைனதேயன் கிரிக்கு விரைந்தே வருக!

அலையும் வாழ்வில் நீ அலட்சியம் செய்தால்

மகிதரா நீயும் மறைந்தே போவாய்!"


"சார் நான் இந்த விளையாட்டுக்கு வரலை" என்று நான் மெதுவாக விலகினேன்....பக்கத்தில் நின்றிருந்த மஹிதரைப் பார்த்தேன்...உடம்பெல்லாம் வேர்த்து விட்டிருந்தது....முகம் பேயறைந்தது போல் இருந்தது....


"மஹிதர் , என்ன சப்ப மேட்டருக்கெல்லாம் டென்ஷன் ஆறீங்க" என்றேன்....


"உங்க கனவுல கழுகு நரியெல்லாம் வந்தா தான் தெரியும்" என்றார் மஹிதர்...


"தரங் உனக்கு எப்பவுமே விளையாட்டு தானா?" "சிவா, இது என்ன செய்யுள்?" என்றார் விக்ரம்...


"சிம்பிளா தானே இருக்கு புரியலையா?" என்றார் சிவா....


"சார் நாங்கல்லாம் டமில்ன்னாலே டென் கிலோ மீட்டர்ஸ் ஓடற பார்டிகள்... நீங்களே விளக்கம் சொல்லுங்க " என்றேன்....


நிலையில்லாத இந்த உடம்புக்குள்ள இருக்கற நிலையான ஒண்ணத் தெரிஞ்சுக்க நீ வைனதேயன் கிரிக்கு வா....அலட்சியம் செய்தா அழிஞ்சு போயிருவ"


"அது என்ன வைனதேயன் கிரி" என்றார் விக்ரம்...


"வைனதேயன்னா கருடன் ,சுருக்கமா கழுகு...." "கிரின்னா மலை"


"ஐயோ மறுபடியும் கழுகா" என்று கத்தினார் மஹிதர்....


அப்படின்னா "கழுகு மலைக்கு " வர சொல்றாங்களா?


"இருக்கலாம் " என்றார் சிவா..


"சார் நம்ம பேசாம போலிசுக்கு போயிரலாமா" என்றார் மஹிதர்...


சிவா "இப்ப வேண்டாம்....அந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் அல்லது நண்பர்கள் யார் என்று முதலில் நாமே கண்டுபிடிப்போம்....நம்ம கிட்ட போதிய evidence வேற இல்லை....இந்த ஓலையைஎல்லாம் காட்ட முடியாது....I think உங்க கிட்ட இருந்து அவங்க எதையோ எதிர் பார்க்கலாம்...."என்றார் யோசித்துக் கொண்டே....


"வாட் டிட் யு சே, நண்பர்களா?" என்று விக்ரம் கேட்டார்.... "ஆமாம் அங்க வந்தா என்னவோ வாழ்கையின் தத்துவத்தை சொல்றாங்களாமே" என்றார் சிவா...


நான் மஹிதரைப் பார்த்து சொன்னேன் "மஹிதர், சுவாமி மஹிதரானந்தா, வாழ்த்துக்கள் .,,, நீங்க சாமியாரானதும் இந்தக் கடையை மாத்திரம் என் பேருக்கு எழுதி வெச்சுருங்க...நீங்கள் சாமியானதும் இது மாதிரி நூறு மால்களை வாங்கலாம் " என்றேன்... மஹிதர் அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் இரண்டுக்கும் பொதுவான ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்தினார்...


விக்ரம் "ஓகே ஆக வேண்டியதைப் பார்க்கலாம்....மஹிதர் நீங்க ரிலேக்ஸ்டா இருங்க...நீங்க அந்த so called கழுகு மலைக்கு போற வரைக்கும் உங்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை" நாங்க போய் அந்த கழுகு மலை பற்றின தகவல்களை சேகரிச்சுட்டு வரோம்....முடிஞ்சா இந்த புதன் கிழமையே அங்கே போகலாம்...." என்றார் மஹிதரைப் பார்த்து....



"இந்த விசயத்தை உங்க அப்பா அம்மா கிட்ட சொன்னீங்களா?" என்று கேட்டார் சிவா...


"இல்லை சார்....எங்க அப்பா ஒரு ஹார்ட் பேஷன்ட்...நான் ஒரே பையன் வேற....இந்த விசயத்தை அவர்கள் எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலை" என்றார் மஹிதர்....


"அதுவும் சரிதான்.....தரங்கிணி சொல்றது போல இது ஒரு சப்பை மேட்டராகக் கூட இருக்கலாம்....உங்க நண்பர்கள் யாராவது உங்க கூட விளையாடலாம்"


"ஓகே சிவா..இந்த ஓலை எப்படி அந்த புக்குல வந்திருக்கும்?" "அப்படின்னா அந்த எதிரி அல்லது நண்பன் இங்க வந்திருக்கணும்....இன்னைக்கு" என்ற விக்ரம் மஹிதரிடம் திரும்பி "மஹிதர் நீங்க அந்த பாப்பாவோட அம்மா கிட்ட விசாரிங்க அந்த புக்கை யார் கொடுத்தான்னு தெரியணும் , உடனே உள்ள போங்க, நாங்க கிளம்பறோம்" என்றார்...


நாங்கள் மூன்று பேரும் காரில் ஏறிக் கிளம்பினோம்.....வானம் இருண்டு பேய்மழை கொட்டும் போல தோன்றியது....நான்கைந்து மேகக் கூட்டங்கள் ஒன்று திரண்டு வானத்தில் ஒரு ராட்சஷ கழுகு உட்கார்ந்திருப்பது போல தோன்றியது....


~தொடரும்


முந்தைய அத்தியாயங்கள்:

1
2
3

4