இந்த வலையில் தேடவும்

Monday, January 30, 2012

கலைடாஸ்கோப்-52

லைடாஸ்கோப்-52 உங்களை வரவேற்கிறது

^


'ஆசை அறுபது நாள் ; மோகம் முப்பது நாள்' என்பது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ இந்த 'காலண்டர்' களுக்குப் பொருந்தும்.எல்லா வீடுகளிடும் இந்த காலண்டர்கள் வருடப் பிறப்பின் போது புதுப் பெண்டாட்டி போல கவனிக்கப்படும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கவனிப்பை இழந்து, yes , 31 -12 -xxxx வரை தேதி கிழிக்கும் சின்சியர்களை பெரும்பாலும் நான் பார்த்ததில்லை.காலண்டர்களில் தவறாமல் பெரும்பாலும் விநாயகரோ, வெங்கடாஜலபதியோ முருகனோ தான் இருக்கும். ஏ. பி.டி.பார்சல் சர்வீஸ் தான் புதுமையாக ஏரிகாத்த ராமர் என்றெல்லாம் காலண்டர் போடும்.(அதானே, கிங் பிஷர் கேலண்டரை எல்லாம் வீட்டில் மாட்டி வைக்க முடியுமா என்ன?)தாத்தா ஒரு காலண்டர் பைத்தியம். ஒரே பேங்க்கில் இருநூறு ரூபாய் போடாமல் இரண்டு பேங்குகளில் நூறு நூறு ரூபாய் போடுவார். கேட்டால் அப்போ தானே ரெண்டு காலண்டர் கிடைக்கும் என்பார்.தாத்தா கேலண்டரை சுருட்டிக் கொண்டு வரும்போதே உற்சாகம் கிளம்பி விடும்.உள்ளே என்ன இருக்கும் என்று! காலண்டரின் புதுவாசமும் நன்றாக இருக்கும்.சரி அது ஒரு (கனாக்) காலம் :-(

டைலி காலண்டர், மாத காலண்டர் என்று இரண்டு இருக்கிறது அல்லவா? ( மாத காலண்டர் ஊசி குத்தி வைப்பதற்கும் பால் கணக்கு எழுதுவதற்கும் Function overload ஆகும்!) நண்பர் ஒருவர் டைலி காலண்டரை பெண் என்றும் மாத காலண்டரை ஆண் என்றும் சொல்வார். ஏன் என்று கேட்டால் டைலி காலண்டரில் நிறைய விஷயம் பொதிந்திருக்கும். பக்கத்தில் போய்ப்பார்த்தால் தான் தெளிவாகத் தெரியும். தினமும் மாறிக் கொண்டே இருக்கும் என்று இரட்டுற மொழிதல் செய்வார். சரி, ஆனால் டைலி காலண்டர் கல்யாணத்துக்கு அப்புறம் (அதாவது ஜனவரி ஒன்று) ஒல்லியாகிக் கொண்டே வருகிறது? ஆனால்..

இன்று செல்போன் கம்ப்யூட்டர் கடிகாரம் இவையெல்லாம் தேதியைக் காட்டுவதால் காலண்டர்கள் சுவாரஸ்யம் குறைந்த ொருட்களாக மாறி விட்டன.ஆனாலும் டைலி காலண்டரில் தேதி கிழிக்கும் மகிழ்ச்சியே தனி. [நமக்கெல்லாம் கிழிப்பது உடைப்பது என்றால் அலாதி சந்தோஷம். ஆனாலும் ஒரு புத்தகத்தை தாறுமாறாகக் கிழித்துப் போட முடியாது. புது சுவர் கடிகாரத்தை அப்படியே கீழே போட்டு உடைக்க முடியாது. எனவே தான் தேதி கிழித்தும் பேக்கிங் கவரில் வரும் குமிழ்களை உடைத்தும் நாம் நம் வன்முறை உணர்ச்சிக்கு சில சமயங்களில் தீனி போடுகிறோம்!]ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் இன்று கும்பத்துக்கு என்ன போட்டிருக்கான் என்று பார்க்கும் ஒரு Curiosity ! கும்பம் -அலைச்சல் மகரம் -வரவு மீனம்-பெருமை என்று ஒருவரிக்குள் வாழ்க்கையை அடக்கி விட முடியாது தான். ஸ்டில்!மேலும் டைலி காலண்டர்கள் சொல்லும் பொன்மொழிகளும் நன்றாக இருக்கும்."நோயின் தந்தை யார் என்று தெரியாது; ஆனால் தவறான உணவு தான் அதன் தாய்' 'கடவுள் காட்டிக் கொடுப்பாரே தவிர ஊட்டிக் கொடுக்க மாட்டார்' -இது மாதிரியெல்லாம்.

மேலும்,இன்று மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் சப்பரத்தில் பவனி, கல்லிடைக்குறிச்சி சிவபெருமான் திருவீதியுலா, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் அன்ன வாகனத்தில் உலா, ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தளுருளல் என்றெல்லாம் போட்டிருக்கும். 365 நாளும் மனிதன் எத்தனை விதமாக கடவுளை சேவை செய்து ஆராதிக்கிறான் பாருங்கள்!

^^
அணிகள் வரிசையில் இன்று ஏகதேச உருவக அணியைப் பார்க்கலாம்.

உருவகம் என்றால் ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிடுவது. மீன் போன்ற விழியாள் என்றால் அது உவமை.மீன் விழியாள் அல்லது விழிமீன் என்று சொன்னால் அது உருவகம் . சரி. கவி
ர் இப்படி ஒப்பீடு செய்யும் போது ஒன்றுக்கொன்று தொடர்புடைய பொருட்களில் ஒன்றை மட்டும் உருவகித்து இன்னொன்றை (சோம்பேறித்தனத்தால்) உருவகிக்காமல் விட்டுவிடுவது கவிதைக்கு ஒரு விதத்தில் அழகு.திருஷ்டிக்காக கட்டிடத்தை கொஞ்சம் முடிக்காமல் அப்படியே விட்டு விடுவது போல! அல்லது ஆண்கள் ஒரு காதில் மட்டும் கடுக்கண் அணிந்து கொள்கிறார்களே அதுமாதிரி.இது ஏ.தே.உ.அணி எனப்படும்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

-இந்தத் திருக்குறளில் பிறவியைப் பெருங்கடல் என்று உருவகம் செய்த நூல் ஆசிரியர் , இறைவன் அடியை (அதைக் கடக்க உதவும்) படகாக உருவகிக்காமல் விட்டு விட்டதால் (அல்லது மடப்பசங்களா எல்லாம் நானே சொல்லணுமா நீங்களும் மூளையை உபயோகிங்க என்று சொல்லாமல் சொல்வதால்) இது
ஏ.தே.உ.அணி ஆயிற்று.

சரி இப்போது சினிமாப் பாடல்களில் சில உதாரணங்கள்.

நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா - வானத்தை ஓடையாக உருவகித்து வெண்ணிலாவை படகாக சொல்லாமல் விட்டதால்

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகிறான் - கண்ணனை கன்றாக உவமை சொல்லி அவன் தாயை பசுவாக சொல்லாதது.

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் -காதலை தேர்வாக உவமை சொல்லி காதலியின் முடிவை தேர்வுமுடிவுக்கு உவமை சொல்லாதது.

மௌனம் என்றொரு சாவியைப் போட்டு மனதைப் பூட்டாதே - மௌனம் சாவி என்றால் மனதை பூட்டு என்று வெளிப்படையாக சொல்லாமல் விட்டது.

^^^.^

ரசித்த கவிதை:

கூண்டுக் கிளியிடம் தன்
எதிர்காலம் கேட்கிறான்
சுதந்திர மனிதன்.

ரசித்த பொன்மொழி:

மனிதன்
இறக்கவே மாட்டோம்
என்பது போல வாழ்கிறான்.
வாழவே இல்லை என்பது போல இறந்து போகிறான்.


^^^.^^

சமீபத்தில் வெளிநாடு ஒன்றில் No pant Day என்று ஒருநாளை கொண்டாடி (?) இருக்கிறார்கள். அதாவது ஆபீசுக்கு பேன்ட் அணியாமல் உள்ளாடையுடன் , சும்மா ஒரு சேஞ்சுக்காக செல்வது. ! நாமும் தான் இருக்கிறோம். இப்படி புதுமையாக(?) ஏதாவது செய்கிறோமா? அதே ஆபீஸ், அதே ஃபார்மல்ஸ்,அதே மானேஜர் ! ஆபீசில் சில பேர் வெள்ளிக்கிழமை தவறாமல் காஷுவல்ஸ் அணிந்து வந்து இப்பவும் நாங்கள் அடிமைகள் தான் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்! ஹ்ம்ம்.. கூடியவிரைவில் No Dress Day என்று ஒன்று (அங்கே) வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

^^^^


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் -இதை சொன்னதும் புரந்தரதாசரின் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

நம்
உடலை படகாகவும்,மனதை படகு செலுத்துபவனாகவும் பிறவியை பெருங்கடலாகவும் முக்தியை கரையாகவும் உருவகித்து பிறவிக்கடலில் என்னை முழுகடித்து விடாமல் விடலனின் முக்தி என்னும் கரைக்கு என்னை பத்திரமாக கரைசேர் என்று சொல்லும் பாடல். தமிழாக்கம் கீழே:

மனமென்னும் படகோட்டி-உன்னை
முழுவதும் நம்பினேன்

ஒன்பது ஓட்டைகள் வழியே- படகில்
உள்ளே புகுது பார் தண்ணீர்
ஓட்டுவாய் படகை விரைவாய்
உள்ளமென்னும் படகோட்டி!

காமமென்னும் புயல்- வந்து
கவிழ்க்கப் பார்க்குதே படகை
கடிதினில் நீ கரைசேர்த்திடு
மனமென்னும் படகோட்டி!

கோபமென்னும் முதலை பார்
காத்திருக்குது கடலில்
கடித்துக் குதறும் முன்னே நீ
கரைசேர்த்திடு படகோட்டி!

ஆசை என்னும் சுழிகள் உண்டு
அகப்பட்டுக் கொள்ளாதே
அமைதியாய் செலுத்திடு நீ
அகமென்னும் படகோட்டி!

துடுப்புகள் ஐந்துண்டு
தவறாக செலுத்திடாதே
பிடிப்பினை விடாமல்
போவாய்நீ படகோட்டி

பக்திஎன்னும் பகலவனின்
பிரகாசம் இருக்கையிலே
முக்தன் புரந்தர விடலனின்
முக்திமண்டபம் சேர்த்திடு

^^^^^

சமீபத்தில் ஒரு வார இதழின் கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்வி.

கே: இப்போதெல்லாம் மக்கள் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று தெருவில் இறங்கி விடுகிறார்களே?
: மக்கள் கண்களுக்கு தங்கள் உரிமைகள் தெரியும் அளவு கடமைகள் தெரிவதில்லை.

இது உண்மைதான். உரிமையை நிலைநாட்ட ஆ ஊ என்றால் தெருவில் இறங்கும் நமக்கு ப்ளாஸ்டிக் குடங்களை ஏந்திக் கொண்டு, தக்காளியை சாலையில் கொட்டி,பஸ் ரயிலை மறித்து, கடையை அடைத்து போராட்டம் நடத்தும் நமக்கு உரிமைகள் பெரிதாகத் தெரிகின்றனவே தவிர கடமைகள்..உஹும்ம்:( கடமைகள் என்றால் எல்லையில் ராணுவத்தில் சேர்ந்து துப்பாக்கி தூக்க சொல்லவில்லை. எளிய இது போன்ற சிறிய ஜனநாயகக் கடமைகள்:-)

* காசு தருகிறார்கள் என்று பொறுக்கிகளுக்கு ஓட்டு போடாமல் இருப்பதிலேயே நல்லவர்களுக்கு (?) ஒட்டு போடுவது.

* ஒன்றுக்கு மேல், கண்டிப்பாக இரண்டுக்கு மேல் பெற்றுக் கொள்ளாமல் இருப்பது.

* சாலையில் செல்லும் போது பொளிச் பொளிச் என்று கண்டதைத் துப்பாமல் நடப்பது. குட்டிச் சுவர்களுக்கு அபிஷேகம் செய்யாமல் பொதுக் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவது.

* கூடுமானவரை லஞ்சம் கொடுக்காமல் இருப்பது.

* குண்டு பல்புகளைத் தவிர்ப்பது. காசு இருக்கிறதே என்று நான்கைந்து டூ வீலர் 4 வீலர் வாங்கிக் குவித்து ஷோ காட்டாமல் இருப்பது (காற்றை மாசுபடுத்தாமல் இருப்பது). மின்சாரத்தை, தண்ணீரை சிக்கனமாக உபயோகிப்பது. பிரிஜ் வாங்கித்தாங்க என்று கணவனை நச்சரிக்காமல் இருப்பது.கூடுமானவரை பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் உபயோகிப்பது.

* காசு தான் இருக்கிறதே, எதையும் 'ப்ளாக்கில்' வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தைக் கை விடுவது.

* கடைக்கு செல்லும் போது துணிப்பை கொண்டு செல்வது. ப்ளாஸ்டிக் பைகளை கண்ட இடங்களில் வீசாமல் இருப்பது. வெளியே செல்லும் போது பழங்கால பாணியில் தண்ணீரை எவர்சில்வர் கூஜாவில் தூக்கி செல்வது.

* எப்படா படிப்பை முடிப்போம், எப்படா வெளிநாட்டுக்கு ஓடுவோம் என்ற கொலைவெறியை குறைத்துக் கொள்வது.

* தேசப்பற்று என்றாலே கிரிக்கெட்டில் இந்தியா ஜெயிக்கும் போது கைதட்டுவது என்ற முடிவை மாற்றிக்கொள்வது.

*அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பது. (நியாயமான திட்டங்களுக்கு) ;தகவல்களை கூடுமானவரை சரியாக அளிப்பது. முடிந்தவரை ஒரிஜினல்களை உபயோகிப்பது.

* வீட்டுக்கு ஒரு மரத்தை கண்டிப்பாக வளர்ப்பது. பூச்சி வருகிறது பூதம் வருகிறது என்று ஏற்கனவே இருக்கும் மரங்களையும் வெட்டாமல் இருப்பது.

* 49 தலைமுறைக்கு சொத்தை சுவிஸ் பேங்கில் பதுக்கி வைக்காமல் இருப்பது. முடிந்தவரை பணத்தை சுழற்சியில் விடுவது.

* சாலையில் கல் கிடந்தால் லோக்கல் கவுன்சிலரில் இருந்து மன்மோகன் சிங் வரை திட்டாமல் தானே முன் வந்து அதை அகற்றுவது.

* குடியரசு தினத்துக்கு குடும்பத்தோடு உட்கார்ந்து காஞ்சனா பார்க்காமல் குழந்தைகளுக்கு முடிந்தமட்டும் நம் நாடு அதன் பெருமை, கலாச்சாரம் இவற்றை சொல்லித்தருவது. தேசிய கீதம் ஒலித்தால் எங்கிருந்தாலும் எழுந்து நிற்க வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்துவது. பாரதியாரின் தேசபக்திப் பாடல்களை சொல்லித் தருவது. [ஏனென்றால் எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே; எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே போன்ற பாடல்களில் திளைத்த குழந்தைகள் பின்னாளில் ஒருபோதும் தேச விரோதியாக மாறமாட்டார்கள்]

* பையன் (பெண்) என்.சி.சி ராணுவம் இவற்றில் சேர விருப்பம் தெரிவித்தால் மறுக்காமல் ஒத்துக் கொள்வது.

LBNL,

* சே, இந்த இந்தியாவே படு மோசம், நானெல்லாம் லண்டன்ல பிறந்திருக்கணும், இதே அமெரிக்காவா இருந்தா என்ற பீலாக்களை குறைத்துக் கொள்வது.


சமீபத்தில் வந்த ஒரு இ-மெயில் இப்படி சொல்கிறது.

"சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.எனவே இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களையே கூடுமானவரை வாங்குங்கள். உதாரணமாக : கொக கோலா, பெப்சி என்று குடிக்காமல் அமுல் மோர் , இளநீர் இவற்றைக் குடிப்பது, லக்ஸ், டவ் இந்த சோப்புகளுக்கு பதில் மார்கோ, மைசூர் சாண்டல் உபயோகிப்பது. கோல்கேட், க்ளோசப் இவற்றுக்கு பதில் பபூல்,
மெஸ்வாக் போன்றவற்றை உபயோகிப்பது,ஆல் கிளியர், ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் இவற்றுக்கு பதில் லக்மே, மீரா உபயோகிப்பது, vodafone உபயோகிக்காமல் BSNL பயன்படுத்துவது. இப்படி நம்மால் முடிந்தவரை இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகப்படுத்துவது."

ஆம். இருட்டை குறை சொல்லிக் கொண்டு அமர்ந்திருப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுவதே சிறந்தது.

^^^^^^



ஓஷோ ஜோக்.

18 + மட்டும் (In Other Words , யார் வேண்டுமானாலும் படிக்கலாம்)

ஒரு பெரிய பணக்காரன் அவன் மனைவி இருவரும் ஒரு கண்காட்சிக்கு சென்றனர். உள்ளே சென்றதும் தனித்தனியாகப் பிரிந்து சென்றனர்.

மனைவி சென்ற ஒரு ஷாப்பில் ஒருவன் ஒரு வாட்டசாட்டமான காளையை காட்சிக்கு வைத்திருந்தான்.

'இதில் என்ன விசேஷம்' என்று கேட்டாள் மனைவி.

'இது வருடத்தில் 360 முறை பெண் பசுவுடன் சேரும், ரொம்ப பவர்புல் ' என்றான் அவன்.

'அப்படியா, இதை அப்படியே போய் அங்கே நிற்கிறார் பார் என் புருஷன், அவருக்கு உறைக்கும்படி சொல்லிவிட்டு வா' என்றாள் மனைவி. அவனும் அப்படியே செய்தான்.

இதைக்கேட்ட கணவன், 'சரி, 360 முறை சேரும். ஒவ்வொரு தடவையும் ஒரே பசுவோடு சேருமா?' என்று கேட்டான்.

'இல்லைங்க , ஒவ்வொரு தடவையும் வேற வேற'

'இதை அப்படியே போய் அந்த அம்மாவிடம் சொல்லு' என்றான் கணவன்.

சமுத்ரா






Monday, January 23, 2012

அணு அண்டம் அறிவியல் -59

அணு அண்டம் அறிவியல் -59 உங்களை வரவேற்கிறது.

The first principle is that you must not fool yourself, and you are the easiest person to fool.

"I used to be disgusted - now I try to be amused" - Elvis Costello



ரிச்சார்ட் ஃபெயின்மன் சுவாரஸ்யமான ஒரு வி
ஞ்ஞானி .குவாண்டம் இயற்பியலுக்கு அவர் அளித்த பங்கு கணிசமானது. மற்ற விஞ்ஞானிகளைப் போல 'மூடி'யாக இல்லாமல் இவர் கலகலப்பாக பேசக்கூடியவர். நல்ல பேச்சாளர். நல்ல ஆசிரியர். 'ஃபெயின்மனின் இயற்பியல் பேருரைகள் ' (Feynman Lectures on physics )இயற்பியல் உலகில் மிகவும் பிரபலம்.கொஞ்சம் 'தற்பெருமை' யும் இருந்திருக்கும் போலிருக்கிறது. தான் கண்டுபிடித்த ஃபெயின்மன் வரைபடங்களை தன் வேனில் வரைந்து வைத்துக் கொண்டு வளைய வந்தார். (அந்த படங்கள் ரோட்டில் யாருக்குமே புரியவில்லை!)



ஃபெயின்மனின் கண்டுபிடிப்புகள் புதுமையானவை. ஒரு(குவாண்டம்) துகள் ஒரே ஒரு குறிப்பிட்ட,வரையறுக்கப்பட்ட பாதையில் செல்லாமல் இடையே உள்ள சாத்தியமான எல்லாப்பாதைகளிலும் (ஒரே நேரத்தில்) செல்கிறது . நமக்கு ஒரே பாதையாகத் தெரிவது Sum over histories என்னும் மாயை. ஒரு துகளின் எதிர்த்துகள் (Anti particle )என்பது கடந்த காலத்தில்
பயணிக்கும் துகள்தான் போன்ற புரட்சிகரமான கண்டுபிடிப்புகள் இவருடையவை .இந்த கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு குவாண்டம் உலகம் என்பது அதிசயங்களுக்கும் ஆச்சரியங்களுக்கும் குறைவில்லாத ஒரு Eventful ஆன Wonderland ஆக மாறியது என்றால் மிகையாகாது!
விஞ்ஞானிகள் குவாண்டம் உலகை ஒரு ஆலிஸ் போல, ஹேரி பாட்டர் போல, அல்லது
பாண்டவர்களின் மாயமாளிகையில் நுழையும் துரியோதனன் போல வியப்புடன் அணுக ஆரம்பித்தார்கள்.



வியாதி வந்தால் மாத்திரையை முழுங்கலாம். டாக்டரையே முழுங்க முடியுமா? நானோ டெக்னாலாஜி மூலம் சாத்தியம் என்கிறார்
ஃபெயின்மன் (இதை வைத்து ஒரு திரைப்படம் கூட வந்ததாக ஞாபகம்.)இதன் படி, நோய் வந்தால் நாம் மாத்திரையை முழுங்க வேண்டும். அது வெறும் மாத்திரை அல்ல. அதனுள்ளே குட்டி குட்டி டாக்டர் ரோபோட் மெசின்கள்
நானோ தொழில்நுட்பத்தால் பதிக்கப்பட்டிருக்கும்.உள்ளே போனதும் விளம்பரங்களில் வருவது போல இந்த குட்டி வீரர்கள் உடனடியாக செயல்பட்டு நோயை குணப்படுத்துவார்கள்![
கிட்னியில் கல் ,இதயத்தில் அடைப்பு,கண்ணில் புரை இதற்கெல்லாம் மிகவும் உகந்த வழி இது.]

இது எப்படி என்றால் இப்போது நாம் உபயோகிக்கும் தொழில்நுட்பம் மில்லியன் கணக்கில் அணுக்களை ஒட்டுமொத்தமாக செயல்பட வைப்பது.(உதா: டிரான்சிஸ்டர் கேட்டுகள் ) ஒவ்வொரு அணுவையும் ஒரு தனி இயந்திரமாக செய்யமுடியுமா? ஒரு தனிப்பட்ட அணுவை (Of course ஹைசன்பர்கின் நிச்சயமின்மை அனுமதிக்கும் எல்லை வரை) நம்மால் கட்டுப்படுத்த முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். உதாரணம் தற்போது மிக்சியில் ப்ளேடு நான்கு இருக்கிறது. உணவு அரைபட நேரம் ஆகிறது. ஒவ்வொரு அணுவும் ஒரு ப்ளேடாக இருந்தால்?போட்ட மறுகணமே எல்லாம் சட்னி ஆகி விடும்.Atomic machines அப்படி செய்ய முடிந்தால் கம்ப்யூட்டர் மெமரி அபாரமாக வளரும். உலகம் முழுவதுமான இன்டர்நெட் டிராபிக் -இற்கு ஒரே ஒரு குட்டியூண்டு சர்வர் போதும்.தகவல் தொழில்நுட்பம்,தொலைத்தொடர்புத் துறைகள் அசுர வளர்ச்சி அடையும்.(மனிதன் இன்னும் சோம்பேறியாவான்)

இதில் இன்னொரு ஆச்சரியம் கூட இருக்கிறது. ஒரு தனி அணு என்பது விளம்பரங்களில் வரும் ஹார்லிக்ஸ் மருமகள் போல பல வேலைகளை
ஒரே நேரத்தில் செய்ய வல்லது.(பல நிலைகளில் இருக்க வல்லது) இதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இரண்டே இரண்டு ஹைட்ரஜன் அணுவை வைத்துக் கொண்டு உலகில் உள்ள புத்தகங்களை எல்லாம் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்து விடலாம். ஆனால் கொஞ்சம் பொறுமை.அணு ஒன்று தன் மீது எந்த DISTURBANCE உம் இல்லாத ஏகாந்த நிலையில் தான் இப்படி கமலஹாசன் போல ஒரே நேரத்தில் பல அவதாரங்களில் இருக்கும். தன்னை யாராவது கவனிக்கிறார்கள் , Use செய்ய நினைக்கிறார்கள் என்று மைல்ட் ஆக சந்தேகம் வந்தால் கூட ஆசை தோசை அப்பளம் வடை என்று சொல்லி விட்டு DE COHERENCE ஆகி விடும். anyway,நானோ டெக்னாலஜி பற்றி இன்னொரு அத்தியாயத்தில் பார்க்கலாம்.

சரி.

ஃபெயின்மனின் சில மேற்கோள்களை இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம். (விளக்கத்துடன்)

WHAT I CANNOT CREATE, I DO NOT UNDERSTAND
(என்னால் உருவாக்க முடியாததை என்னால் புரிந்துகொள்ள முடியாது)

-அப்படியானால் மனிதன் பிரபஞ்சத்தை புரிந்து கொள்ள செய்யும் முயற்சிகள் எல்லாம் வீண் தானா? அப்படித் தான் சில சமயங்களில் தோன்றுகிறது. உதாரணமாக ஒரு C ++ ஸோ ஜாவாவோ மனிதன் கண்டுபிடித்தது.அதைப்பற்றி தைரியமாக அக்குவேறு ஆணிவேறாக மணிக்கணக்கில் பாடம் நடத்த முடியும். ஆனால் பிரபஞ்சம் மனிதனின் படைப்பு அல்ல.
எனவே அதே தைரியத்துடன் யாராலும் மாணவர்களுக்கு இயற்பியலை , பிரபஞ்சவியலை விளக்கிச் சொல்ல முடியாது.நாம் சொல்வது சரியா என்ற சந்தேகம் பின்னணியில் இருந்து கொண்டு தான் இருக்கும். பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதலை நம்மால் ஆழப்படுத்த முடியும். Refine செய்ய முடியும் அவ்வளவு தான். அதன் மர்மத்தை அறிவது என்பது அசாத்தியம். மேலும் ஒரு
விஷயத்தை AS IT IS அப்படியே புரிந்து கொள்ள மூன்று விதமான வடிகட்டிகள் (FILTERS ) தடையாக இருக்கின்றன.



ஒன்று: பொருளின் அக எதிர்ப்பு (Internal opposition ) நம்மை யாராவது ஆராய்ச்சி செய்கிறேன் என்று கூட்டிப் போய், டிரஸ்ஸை எல்லாம் கழற்றி, ஒயரை எல்லாம் மாட்டி படுக்க வைத்தால் நாம் ஒப்புக் கொள்வோமா? நான் தான் கிடைத்தேனா என்று எகிறி சத்தம் போடுவோம் இல்லையா? அப்படியே வலுக்கட்டாயமாக ஆராய்ச்சி செய்தாலும் முழு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் அல்லவா? அது போல தான் எந்த ஒரு பொருளும் தன் மீது செய்யப்படும் ஆராய்ச்சியை வெறுக்கிறது;எதிர்க்கிறது. ஒரு குறிப்பிட்ட எல்லையில் அடைக்கப்படும் எலக்ட்ரான் கூண்டில் அடைபட்டசிங்கம் போல,நீரில் அழுத்திய பந்து போல சீறி , எகிறி,அதிர்ந்து அலை பாயும் என்று ஹைசன்பெர்கின் விதி கணிக்கிறது.(Greater the precision in location, lesser the precision in velocity)மலை, பாறை,மாடு போன்ற Macroscopic பொருட்கள் நீலப்பட நடிகர்கள் போல முழுதும் நனைந்த பின் முக்காடு எதற்கு என்று எல்லாத்தையும் பாத்துக்கோ என்று தாரளமாக நன்றாக ஒத்துழைக்கும்.ஆனால் குவாண்டம் உலகில் பெரும்பாலும் திரௌபதி போன்ற கற்புக்கரசிகள் ஜாஸ்தி. தன்னை முழுவதுமாக துகிலுரிய அனுமதி தராது. அப்படியே துச்சாதனன் லெவலுக்கு வில்லத்தனமாக செய்ய முயற்சித்தாலும் ஹைசன்பெர்க்கின் நிச்சயமின்மை கிருஷ்ணன் போல இடையில் வந்து நல்லருள் நல்கி காரியத்தைக் கெடுத்து விடும்.

இரண்டு: கருவியின் பிழை (Instrumental errors ) எடை பார்க்கும் மெஷினில் நாம் ஏறி நிற்கும் போது எண்பது கிலோ என்று காட்டுகிறது (ஹலோ, என்னைச் சொன்னேன்!) இறங்கியதும் ஜீரோ என்று காட்டுகிறது, ஜீரோ என்று காட்டினால்தான் அது நல்ல மெஷின். இதற்கு Calibration என்று பெயர். அதாவது ஒரு அம்மீட்டர் தன் வழியே மின்சாரம் செல்லாத போது
ஜீரோ ஆம்பியர் என்று ரீடிங் காட்ட வேண்டும். மறுபடியும், பெரிய பொருட்களுக்கு, நாம் இதை பெருமளவு நம்பலாம்.
எண்பது கிலோ என்று காட்டினால் மெஷின் சரியில்லை என்று சண்டை போடாமல் டயட்டை ஸ்டார்ட் செய்வதுதான் உசிதம்.ஆனால் குவாண்டம் தூரங்களில் இது பெரும் தலைவலி.ஒரு பண்பை (Property ) அளக்கப் பயன்படுத்தும் கருவி தான் அளந்து கொண்டிருக்கும் பண்பை கணிசமாக மாற்றி விடுகிறது. ஒரு துகளை வேவுபார்க்க நாம் அனுப்பும் ஒளி (போட்டான்) கட்டிக்கொண்டு வா என்றால் வெட்டிக்கொண்டு வந்து விடுகிறது! ஆளை Follow மட்டும் செய் என்று நாம் அனுப்பும் ரவுடி ஆளையே கொலை செய்து ஓவர் சின்சியராக திரும்புவது போல!

மூன்று : புலன்களின் எல்லைகள் (Limitations of the senses ) இதைப்பற்றி நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம். உண்மையான உலகிற்கும் மனிதனால் 'பார்க்கப்படும்' உலகிற்கும் என்ன வித்தியாசம் ? இரண்டும் ஒன்று தானா? பார்ப்பவன் மறையும் போது பார்க்கப்படுவதும் மறைந்து விடுமா? நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெலாம் அற்ப மாயைகளோ
? என்று பாரதியாரைப் புலம்பவைத்த விஷயம் இது. வானம் நமக்கு நீல நிறமாகத் தெரிகிறது. இதை அப்படியே நம்பி எத்தனை கவிதைகள்? பாடல்கள்.. நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா என்று ஏகதேச உருவக அணியில் பாட்டெல்லாம் பாடுகிறோம்.ஆனால் வானம் என்பது நிறமற்ற ஒரு வெறுமை. நாம் பார்ப்பது, நாம் உணர்வது உண்மையா அல்லது உண்மையின் புலன்களால் திரிக்கப்பட்ட பிம்பமா (பாம்பா கயிறா) என்பது யாருக்கும் தெரியாது.

மேலும், சில கேள்விகளுக்கு விடையே கிடையாது. [விடை இல்லை என்றால் கேள்வியே தப்பு என்று சொல்கிறார் ஓஷோ. அதாவது கேள்வி சரியாக இருந்தால் கேள்வியிலேயே விடை ஒளிந்திருக்குமாம்]

சில விடையற்ற கேள்விகள் :-



தத்துவம் : * பிரபஞ்சம் ஏன் இருக்கிறது? * கடவுள் இருக்கிறாரா? * நம் எதிர்காலம் நிர்ணயிக்கப்பட்டு விட்டதா? * காலம் என்றால் என்ன? *புலன்களுக்கு அப்பால் என்ன இருக்கிறது?

வேதாந்தம் : *இந்த பிரபஞ்சம் உண்மையா? மாயையா? *மரணத்துக்குப் பின் என்ன ஆகிறது? *ஆன்மா இருக்கிறதா? *கர்மத்தால் பிறப்பு நேர்கிறது என்றால் முதன்முதலில் எப்படி பிறப்பு நேர்ந்தது? *நான் யார்?

(எனக்கு இப்போது லைட்டாக பைத்தியம் பிடிப்பது போல இருக்கிறது!)

*வாழ்வின் பொருள் என்ன (நீ வந்த கதை என்ன என்று பின்னால் சேர்த்துக் கொண்டு ஜேசுதாஸ் குரலில் பாடவும்)

தர்க்கம்:* ' இந்த வாக்கியம் தவறானது' -இந்த வாக்கியம் சரியா தவறா? * ஒரு பொருள் இருப்பதற்கு வெளி வேண்டும் என்றால் 'வெளி' இருப்பதற்கு வெளி வேண்டாமா?

கணிதம் : *முடிவிலி கூட்டல் முடிவிலி எவ்வளவு? *பூஜ்ஜியத்தை பூஜ்ஜியத்தால் வகுத்தால் என்ன வரும்?*கற்பனை எண்கள் என்றால் என்ன? *பூஜ்ஜியத்துக்குக் கீழே என்ன?

இயற்பியல்: * ஏன் ஈர்ப்பு எப்போதும் ஈர்க்கிறது? *ஏன் காலம் முன்னோக்கியே நகர்கிறது? *கருந்துளைக்குள் என்ன இருக்கிறது? *வெப்பநிலையின் அதிகபட்ச வரம்பு என்ன?*ஒளி என்பது என்ன? *ஏன் நான்கே நான்கு பரிமாணங்கள்? *ஏன் கண்ணாடி இடவல மாற்றம் செய்கிறது? (என் தலைகீழாகக் காட்டுவதில்லை?)

உயிரியல் : *உயிர் எவ்வாறு தோன்றியது? *பரம்பரை செய்திகள் டி.என்.ஏ . வில் எவ்வாறு கடத்தப்படுகின்றன?

இந்த லிஸ்ட் இன்னும் பெரியது. கொஞ்சம் தான் சொல்ல முடிந்தது.


WHAT I CANNOT CREATE, I DO NOT UNDERSTAND என்பதை இன்னொரு முறை படிக்கவும்.


If I could explain it to the average person, I wouldn't have been worth the Nobel Prize.
(என்னால் ஒரு சாதாரணனுக்கு இதை சொல்ல முடிந்திருந்தால் என்னக்கு நோபல் பரிசு கிடைத்திருக்காது)

-இங்கே சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இயற்பியல் இப்போது எட்டாக்கனியாக மேலே மேலே போய்க் கொண்டே இருக்கிறது. இயற்பியலின் நோக்கம் விஷயங்களை எளிமைப்படுத்துவது தான். சிக்கலாக்குவது அல்ல என்கிறார் டென்ஷன் ஆன ஒரு
விஞ்ஞானி.புதிய புதிய அடிப்படைத் துகள்கள் கண்டுபிடிக்கப்படுவது அவருக்குப் பிடிக்கவில்லை போலும் .
'இந்த வருடம் யாரும் புதிதாக அடிப்படைத் துகளைக் கண்டுபிடிக்காமல் இருந்தால் அவருக்கு தான் நோபல் பரிசு தர வேண்டும்' என்று வருத்தப்பட்டார் அவர்.ஆனால் ஒரு நாவலை முழுவதும் படித்தால் தானே அதைப் பற்றி கதைச் சுருக்கம் எழுத முடியும் என்று கேட்கின்றனர் சில
விஞ்ஞானிகள். we complicate things only to ease it at a later stage ! ஒரு கோலம்
போடப்படும் போது கசமுசா என்று இருக்கிறது. போட்டு முடித்தபின் அழகாகி விடுவது போல.
விஞ்ஞானிகள் எப்போது இயற்பியல் கோலத்தை முடிப்பார்கள் என்றுதான் தெரியவில்லை.

கணித மாடல்களின் துணை இன்றி இயற்பியல் கொள்கைகளை விளக்குவது கடினம். இயற்பியலில் புதிய கண்டுபிடிப்புகள் வரும்போது அவற்றை துல்லியமாக விளக்க கூடவே கணித மாடல்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக, நியூட்டன் தன் மெக்கானிக்சை விளக்க, கால்குலஸ் என்னும் புதிய கணிதத்தை அவரே கண்டுபிடித்தார்.ஐன்ஸ்டீனின் சார்பியலை விளக்க மூன்று பரிமாணங்களுக்கான , வளைந்த வெளிக்கான வடிவியல் உருவாக்கப்பட்டது. டைராக்கின் கொள்கையை விளக்க TENSOR என்னும் கணிதம் தேவைப்பட்டது.இப்போது ஸ்ட்ரிங் தியரியை விளக்க ஒரு புதிய கணிதம் தயாராகி வருகிறது.


We can't define anything precisely.
எதையுமே துல்லியமாக வரையறை செய்ய முடியாது.

-துல்லியமாக வரையறை செய்ய முயன்றால் அது முடிவிலியாகப் போய்க்கொண்டே இருக்கும் அல்லது ஒரு வளையத்துக்குள் போகும். டிக்சனரியில் Man என்று தேடினால் Human being என்று வரும். Human being என்பதற்கு விளக்கம் பார்த்தால் Man என்று இருக்கும்! அதே போல ஆற்றல் என்றால் என்ன என்று எப்படி வரையறுக்க முடியும்?பெயின்மென் சொல்கிறார்: It is important to realize that in physics today, we have no knowledge what energy is !

A poet once said, "The whole universe is in a glass of wine." We will probably never know in what sense he meant that, for poets do not write to be understood. But it is true that if we look at a glass of wine closely enough we see the entire universe.

-எவ்வளவு அழகான ஒரு வாக்கியம்! இங்கே ஒரு விஷயம். நம் பிரபஞ்சமே ஏதோ ஒன்றின் ஒரு சின்ன அணுவாக இருக்கலாம். அல்லது ஒரு சின்ன அணுவுக்குள் இன்னொரு பிரபஞ்சம் விரியலாம் என்ற அதீதமான கற்பனையை இயற்பியலின் Scale law பொய்யாக்குகிறது. ஏழடி எட்டடி மனிதர்கள் உயிரியல் ரீதியாக மட்டும் அல்ல இயற்பியல் ரீதியாகவும் சாத்தியம் இல்லை என்கிறது ஸ்கேல் லா.பெயின்மென் அதை சொல்ல வரவில்லை. ஒயினைப் பார்த்தால் நமக்கெல்லாம் கிக்கு தான் வரும்.
ஆனால் அவருக்கு பிரபஞ்ச சிந்தனை வந்துள்ளது.ஒரு கிளாஸ் ஒயினை உருவாக்க உயிரியல் , வேதியியல், இயற்பியல், வரலாறு,சைக்காலஜி (?) இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ளவேண்டும் என்கிறார் பெயின்மென்.

இது என்னுடைய ஃபேவரட் :I think I can safely say that nobody understands quantum mechanics.

கடைசியாக
If, in some cataclysm, all scientific knowledge were to be destroyed, and only one sentence passed on to the next generation of creatures, what statement would contain the most information in the fewest words? I believe it is the atomic hypothesis (or atomic fact, or whatever you wish to call it) that all things are made of atoms — little particles that move around in perpetual motion, attracting each other when they are a little distance apart, but repelling upon being squeezed into one another.

ஒருவேளை நம்மிடம் இருக்கும் தகவல்கள் , நம் அறிவு இவையெல்லாம் ஒரேயடியாக அழிந்து போய், நம் அடுத்த தலைமுறைக்கு ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் நாம் சொல்லலாம் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும்: "எல்லாப் பொருட்களும் அணுக்களால் ஆனவை" -தொடர்ந்த இயக்கத்தில் நகரும் அணுக்கள். ஒரு குறிப்பிட்ட தூரத்தில் ஒன்றை ஒன்று ஈர்க்கும் , அமுக்கும் போது ஒன்றை ஒன்று விலக்கும் சிறிய அணுக்கள்!

பெயின்மெனின் அழகான கவிதை ஒன்று தமிழில்:





கணக்கிலடங்காத மூலக்கூறுகள்
ஒவ்வொன்றும் தனித்தனியானவை
எல்லாம் ஒன்று சேர்ந்து
எழுகிறது ஒருமித்த ஆழிப்பேரலை

யுகம் யுகமாய்
காலம் காலமாய்
இயற்கை ஓர் உயிரற்ற கிரகத்தை உலுக்குகிறது
யாருக்காக ? எதற்காக?
அங்கே வாழ்க்கை எங்கே இருக்கிறது?

ஓய்வே இல்லாமல்
ஆற்றல் அதை அலைக்கழிக்கிறது.
சூரியன் அதை
காய்த்துத் தள்ளுகிறது

ஆழக் கடலில் -அப்போது ஓர்
அற்புதம் நடக்கிறது
மூலக்கூறுகள் சில
மீண்டும் மீண்டும் தொடர்ந்து வரும்
அமைப்பை கற்றுக் கொள்கின்றன.
சிக்கலான உயிரிகள் முளைக்கின்றன.
தங்களைத் தாங்களே படியெடுத்து வளர்கின்றன
ஓர் அற்புதத் திருநடனம் தொடங்குகிறது!

கல்லறை கருவறையான அற்புதம் இது
இங்கே நிற்கிறது
விழிப்புணர்வு பெற்ற பொருள் !
இது பிரபஞ்சத்தை கண்டு வியக்கிறது
இது
அணுக்களின் பிரபஞ்சம்
பிரபஞ்சத்தின் அணு!

சமுத்ரா

Thursday, January 19, 2012

கலைடாஸ்கோப்-51

லைடாஸ்கோப்-51 உங்களை வரவேற்கிறது

!
=

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று: "சென்னையைச் சேர்ந்த, குழந்தைப்பேறு இல்லாத ஒரு தம்பதியர், தங்களுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க உதவ விந்தணுவை விலைக்குத் தர முன்வருவோரைக்கோரி விளம்பரம் செய்துள்ளனர்" - செய்தி சரி. ஆனால் அவர்கள் கொடுத்திருக்கும் கண்டிஷன்களைப் பார்த்தால் கொஞ்சம் புன்முறுவல் பூக்கத் தோன்றுகிறது.

தானம் செய்பவர்

* அழகாக இருக்கவேண்டும்
* உயரமாக இருக்கவேண்டும்
* எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாமல் இருக்க வேண்டும்.
* இந்தியத் தொழில்நுட்பக்கழகங்களில் படிப்பவராகவும் இருக்க வேண்டும் என்பது தான் கண்டிஷன்கள்.

அழகு உயரம் எல்லாம் சரி. அப்பா உயரமாக இருந்தால் பிள்ளையும் 90 % உயரமாக இருக்கும். அம்மா சிவப்பாக இருந்தால் பிள்ளை பெரும்பாலும் சிவப்பு.திரைப்படங்களில் வடிவேலு சொல்வது போல இதற்கு விதிவிலக்காக சில சமயங்களில் அப்பா அம்மா இருவருமே சிவப்பாக இருந்தாலும் குழந்தை அட்டக்கருப்பாக,தொட்டால் கையில் ஒட்டிக் கொள்ளும் கருப்பாக பிறக்கலாம்(பிறந்து தொலைக்கலாம்) எனவே உங்கள் துணையை தேவையில்லாமல் சந்தேகப்பட வேண்டாம்.இதெல்லாம் மரபியல் செய்யும் சின்னச் சின்ன சேஷ்டைகள்! மேலும் என்னை ஏம்மா கருப்பா பெத்தாய்? போன்ற செண்டிமெண்ட் எல்லாம் வேண்டாம். கிருஷ்ணா பரமாத்மாவே இந்தக் கேள்வியை தன் பெற்றோர்களிடம் கேட்கவில்லை.தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டாரும் கேட்டதாகத் தெரியவில்லை.சரி மனோரமா சொல்வது போல ஆம்பிளைக்கு கலரா முக்கியம்? ஸ்டைல் தானே முக்கியம்? படையப்பா!

குழந்தை பிறப்பது இன்றுவரை ஒரு CHANCE ஆக மட்டுமே இருந்து வருகிறது.CHOICE ஆக இல்லை.புதுவீட்டுக்கு இஞ்சினியருடன் உட்கார்ந்து நம் தேவைக்கேற்ப இப்படிப் பண்ணலாம் அப்படிப்பண்ணலாம் கிச்சனை இங்கே வைக்கலாம் இங்கே ஒரு சின்ன ரூம் வைத்து விடலாம் பக்கத்து பிளாட்டில் ஒரு அடி ஆட்டையைப் போட்டு விடலாம் என்றெல்லாம் suggestion சொல்வது போல குழந்தை விஷயத்தில் நம்மால் சொல்ல முடிவதில்லை. சொல்லும் அளவு மரபணு தொழில்நுட்பம் இன்னும் வளரவில்லை.வளராமல் இருப்பதே நல்லது என்று
சில சமயம் தோன்றுகிறது. ஒவ்வொரு குழந்தையும் உலகிற்கு அது எப்படி வருகிறதோ அப்படியே வரவேற்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.Originality உடன்! மேலும் எல்லாரும் அழகாக சிவப்பாக உயரமாக அபிஷேக் பச்சன் போல இருந்தால் பார்க்க நன்றாக இருக்காது. சினிமாக்களும் இருக்காது! LIFE NEEDS DIVERSITY ..

சரி இப்போது அறிவு விஷயத்துக்கு வருவோம். ஏழாம் அறிவெல்லாம் இல்லை சாதாரண அறிவு தான். ..டி.யில் படிப்பவருக்கு கண்டிப்பாக அறிவு (?) இருக்கும் என்று அந்தத் தம்பதி எப்படி முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதெல்லாம் பெரும்பாலும் ஏட்டுச் சுரைக்காய் ! சரி அப்படியே அறிவு இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் அவருக்குப் பிறக்கும் குழந்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனாக இருக்கும் என்று கற்பூரம் அணைத்து சொல்ல முடியாது. பெரும்பாலான சமயங்களில் இந்த அறிவு உல்டாவாகவே இருக்கிறது. வாத்தியார் பிள்ளை மக்கு என்பது போல. ஆனால் தாத்தாவின் அல்லது கொள்ளுத்தாத்தாவின் வித்தைகள் குழந்தைக்கு சுலபமாக வரும் என்கிறார்கள்.
சங்கிலியில் சில இணைப்புகள் தள்ளி! எனவே நீங்கள் ஏதாவது சாதித்தால் உங்கள் பையனும் அதேபோல சாதிப்பான் என்று எதிர்பார்த்து அவனை ஓவராக டார்ச்சர் செய்யாதீர்கள். பேரனை அல்லது கொள்ளுப்பேரனை டார்ச்சர் செய்யவும்.ஏனென்றால் தந்தையின் அதீத புகழே சில சமயங்களில் அவன் மகனை மந்தம் செய்து விடுகிறது என்றும் சைக்காலஜிகலாக சொல்லலாம் .பகல்நேர நிலா போல! பேரன் கொள்ளுப்பேரன் என்று வரும் போது புகழ் கிகள் எல்லாம் ஓரளவு செட்டில் ஆகி விடுகிறது.எனவே அழகு மகனுக்கும் அறிவு பேரனுக்கும் போகிறது என்று குத்துமதிப்பாக வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஆனாலும் இது முழுவதுமாக நிரூபிக்கப்படவில்லை. அறிவு என்பது Nature (பிறப்பு) அல்லது Nurture (வளர்ப்பு) எப்படி வருகிறது என்று தெரியவில்லை. நம் முன்னோர்கள் Nurture என்பதை விட Nature என்பதையே நம்பினார்கள் என்று தோன்றுகிறது. கீழே உள்ள பழமொழிகளே அதற்கு சாட்சி:-

* அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு
* தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
* புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
* விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா

@
==

போன வருடம் நடந்த ஒரு நிகழ்ச்சி. புராதனமான கோயில் ஒன்றுக்குப் போயிருந்த போது. நண்பர் ஒருவர் சற்று புரட்சிகரமான சிந்தனை உடையவர்.கோயிலில் நுழையும்போது சட்டையை கழற்ற சொன்னார்கள். அவர் டென்ஷன் ஆகி 'இது எல்லாம் என்ன முட்டாள்தனம்' 'ஏன் சட்டையோடு சென்றால் சாமி பார்க்காதா' என்றெல்லாம் சத்தம் போட்டு கடைசியில் உள்ளே வரவே இல்லை. சரி அர்னால்ட் பாடி என்றால் எங்கு வேண்டுமானாலும் கழற்றி சிக்ஸ் பேக் காட்டலாம். இன்று பெரும்பாலும் எல்லா ஆண்களும் சிங்கிள் போத்தீஸ் பேக்-உடன் தானே திரிகிறார்கள்?அதனால் இதுமாதிரி சமயங்களில் தொப்பை தொந்தியை எல்லாம் வெளியே காட்ட வெட்கப்படலாம்.சரி.

உடைகளுக்கும் மனோநிலைக்கும் தொடர்பு இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஆள் பாதி ஆடை பாதி!புது டிரஸ் போட்டுக் கொண்டு ஆபீஸ் போகும் போது ஒருவிதமான புத்துணர்ச்சி நம்மிடம் தொற்றிக் கொள்வதை நாம் கவனித்திருப்போம். ஆண்கள் போல ஆக வேண்டும் என்று விரும்பும் அடாவடிப் பெண்கள் முதலில் செய்யும் காரியமே ஆணின் உடையை எடுத்து
அணிந்து கொள்வது தான். ஆணின் உடையை அணிந்ததும் தன்னை ஆணாகவே அவள் பாவித்துக் கொள்கிறாள். எல்லா ஆண்களுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள்.அதனால் எல்லா ஆண்களுக்கும் சேலை கட்டிப் பார்க்கும் ரகசிய ஆசை இருக்கிறது என்று உளவியல் படித்த ஒருவர் சொன்னார்.

இதனால்தான் ஆபீஸுக்கு அணிந்து செல்லும் உடைகளை,மார்க்கெட்டுக்கு அணிந்து செல்லும் உடைகளை கோயிலுக்கு அணிந்து செல்லக் கூடாது என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆபீஸ் உடையை கோயிலுக்கு அணிந்து சென்றால்
ஆபீஸ் மனநிலை தான் வரும். யாரை ஏமாற்றலாம் யாரை ஏய்க்கலாம் (யாரை சைட் அடிக்கலாம்) என்ன பொய் சொல்லலாம் என்று தான் நினைத்துக் கொண்டிருப்போமே தவிர இறைவனிடம் கவனம் செல்லாது.மேலும் கோயிலில் உடலுக்கு நன்மை தரும் நிறைய விஷயங்கள் சூழ்ந்துள்ளன. கோபுரக்கலசங்கள் காஸ்மிக் கதிர்களை வாங்கி உள்ளே விடும் என்று சொல்கிறார்கள். அந்த அலைகள் மற்றும் ஹோமத்தின் மூலிகைகள் வெளியிடும் புகை, மந்திரங்களால் ஏற்படும் ஒலி அதிர்வுகள் .இது மாதிரி. உடம்பை முழுவதும் கவர் செய்து கொண்டு போனால் இவற்றையெல்லாம் நாம் இழந்து விடுவோம். இந்த நல்ல விஷயங்கள் கூடுமானவரை உடம்பிற்குள் போகட்டும் என்றுதான் ஆண்களை சட்டை இல்லாமல் வேட்டி கட்டிக் கொண்டு வரச் சொல்கிறார்கள். இது தெரியாமல் நான் ஜீன்ஸ் பேன்ட் டி ஷர்ட் அணிந்து கோயிலுக்கு செல்கிறோம்! பட்டுக்கும் மின்சாரத்துக்கும் தொடர்பு உண்டு என்று நமக்குத் தெரியும். அதனால் தான் ஆண்கள் பட்டு வேஷ்டியும் பெண்கள் பட்டுப் புடவையும் அணிந்து கோயிலுக்கு செல்வது உகந்தது என்று சில பேர் சொல்கிறார்கள் . பட்டு , மிக விரைவாக காஸ்மிக் கதிர்களை (அப்படி ஒன்று இருந்தால்..இந்தக் காலத்து கோயில்கள் ஒரு அபார்ட்மென்ட் போல கட்டப்படுவது வேதனைதான்) கிரகித்துக் கொண்டு தன்னிடம் Static electricity ஆக வைத்துக் கொள்ளுமாம். பிராமணர்கள் மடி என்று ஒரு பட்டு வஸ்த்திரம் வைத்திருப்பார்கள். அதை எத்தனை நாள் ஆனாலும் துவைக்கவே மாட்டார்கள். துவைத்தால் அதன் நிலை மின்சாரம் டிஸ்சார்ஜ் ஆகி விடும் என்று. சில சமயங்களில் அந்த துவைக்காத ,எண்ணெய் கறை படிந்த,வியர்வை நாற்றம் வீசும் 'மடி'யாலேயே உடலுக்கு நோய் வந்து விடும் என்று தோன்றும். ஆனால் அப்படி வராதாம். அந்த சார்ஜ் செய்யப்பட பட்டுத்துணியை அணிவது கிட்டத்தட்ட புல்லட் ஃப்ரூப் ஆடை அணிவது போலவாம். Interesting !

#
=


நண்பர் ஒருவர் ஒரு புகைப்படத்தை அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார். ஆபீசில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு கட்டிய பலூன்களில் சிவப்பு பலூன்கள் சீக்கிரமே காற்றுப்போய் சுருங்கி விட வெள்ளை பலூன்கள் அப்படியே இருப்பதாக. இது ஏன் என்று கேட்டு.

உண்மை சொல்வது என்றால் எனக்கு இதுமாதிரி விஷயங்களில் பெரிதாக ஆர்வம் இல்லை.வெங்காயம் உரிக்கும் போது ஏன் கண்ணீர் வருகிறது என்றால் ஒரு வேதிப்பொருளின் பெயரை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது மாதிரி விஷயங்களில் நாம் கடைசியாக குவாண்டம் இயற்பியலிடம் சரணடைய வேண்டும். வெங்காயத்தின் அணுக்கள் நம் கண்களின் அணுக்களுடன் எப்படி தொடர்பு கொண்டு நீர் மூலக்கூறுகளை உருவாக்குகின்றன என்று boil down செய்ய வேண்டும் .
சரி. படம் கீழே(oh மேலேயா சாரி). உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். சிவப்பு அடர்த்தி ஜாஸ்தி வெள்ளை அடர்த்தி கம்மி என்றெல்லாம் சொன்னால் அடி வாங்குவீர்கள்.

$
=
1 . சாட்டில் வந்த இன்னொரு நண்பர் , நன்றாக எழுதுகிறீர்கள்.. ஆனால் இன்னும் கொஞ்சம் FREE யாக எழுதுங்கள் என்று சொன்னார். ஆனால் நான் எப்போதும் ஒரு Golden Mean இல் இருக்கவே விரும்புகிறேன். ரொம்பவே சீரியஸாக எழுதி படிப்பவர்களை போரடிக்க விரும்பவில்லை. அதே சமயம் மிகவும் கீழிறங்கி வரிக்கு வரி காமெடி செய்து சப்பை பிகர், கரெட் செய்தல், நூல்விடுதல், பிக் அப் செய்தல் , அப்பீட்டு, மச்சி, மாப்ள, அப்பாடக்கர் என்றெல்லாம் எழுதவும் பிடிப்பதில்லை.ரப்பர் பேன்ட் விரியவில்லை என்றால் வேலைக்கு ஆகாது. ரொம்பவும் விரிந்தாலும் பிய்ந்து விடும். என் எழுத்து ஒரு ரப்பர் பேன்ட்!
(வேற உதாரணமே கிடைக்கலையா? :( )

2 . அந்தக் காலத்தில் (ஆண்கள்) காதில் கடுக்கண் போட்டால் கர்நாடகம்.இப்போதெல்லாம் காதில் கடுக்கண் அணியாமல் இருப்பதுதான் கர்நாடகம். ஆபீசில் பார்க்கும் பத்து பையன்களில் எட்டுபேர் ஒற்றைக் காதில் மின்னும் கடுக்கணுடன் வளைய வருகிறார்கள்.
இன்னும் கொஞ்ச நாளில், மூக்குத்தி, வளையல் மெட்டி இவை கூட ஃபேஷன் ஆகி விடுமோ என்று பயமாக இருக்கிறது.கோவணம் கட்டாத ஊரில் கட்டியவன் பைத்தியம் என்பது போல நானும் எங்கே கடுக்கண் அணிய எதாவது ஜுவல்லரி க்குப் போய் விடுவேனோ என்றும் பயமாய் இருக்கிறது.(கம் ஆன் அப்படியொன்றும் வயதாகி விடவில்லை. இன்னும் யூத்து தான் (என்று நினைக்கிறேன்) )



3 . சீரியல்களுக்கும் வெள்ளிக் கிழமைகளுக்கும் என்ன ஏழாம் பொருத்தமோ? நாதஸ்வரம் சீரியலில் Default ஆக ,யாராவது பேசவேண்டும் என்றால் முதலில் ஒரு பட்டம் அழுதுவிட்டு தான் பேசவே ஆரம்பிப்பார்கள். சும்மாவே மெல்லும் வாய்க்கு அவல் கிடைத்தால் கேட்க வேண்டுமா? சீரியலில் பாண்டி என்ற கதாபாத்திரம் தற்கொலை (அல்லது கொலை) செய்து கொண்டுவிட
எல்லாரும் பயங்கரமாக ஆஸ்கார் கொடுக்கும் அளவுக்கு ஒருவாரம் இடைவிடாமல் அழுது பிரித்து மேய்ந்து விட்டார்கள். ஒரே சீராக அழுவது, விக்கி விக்கி அழுவது, நினைத்து நினைத்து அழுவது, சத்தம் வராமல் அழுவது, சிரித்துக்கொண்டே அழுவது, மெளனமாக இருந்து விட்டு திடீரென்று ஓ என்று ஒப்பாரி வைப்பது என்று விதம் விதமாக
வெரைட்டி வெரைட்டியாக! சீரியல்களில் பிணத்தை எடுக்கும் மங்களகர சடங்குகள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை தான் அரங்கேறுகின்றன.இந்த வாரம் திருமதி செல்வத்தில் பிரியா என்ற அழுமூஞ்சி கதாபாத்திரம் மண்டையைப் போட்டுள்ளது. எத்தனை நாள் வைத்து அழுவார்கள் என்று பார்க்கலாம்.

%
==

ஒரு நல்ல விஷயம் இருந்தால் அதை கிண்டல் செய்வது நம் ரத்தத்தில் ஊறிய பழக்கம் ஆகி விட்டது.அது மாதிரி தான் இந்த விக்கி பீடியாவுக்குப் போட்டியாக வந்திருக்கும் அன்-சைக்லோபீடியா எல்லாவற்றையும் சலிக்காமல் கிண்டல் செய்கிறது . India என்று தேடிப்பாருங்கள்.அதில் ஒரு 'சி' ப்ரோக்ராம் எழுதி இந்தியாவின் வரலாற்றையே கிண்டல் செய்கிறது.
(உடனே கொதித்தெழ வேண்டாம். சும்மா ஜாலிக்கு!) இந்தியர்கள் மற்ற நாட்டவர்களுடன் ஒப்பிடும் போது கொஞ்சம் அதிகமாக காரம் சாப்பிடுவார்கள். அதற்காக
Indians eat spice, drink spice, smoke spice, sweat spice, fart spice, and even shit spice என்று சொல்வது கொஞ்சம் ஓவர். Fart என்றால் நம் பின்பக்கத்தில் இருந்து காற்று பிரிவது. ஜாலியானவர்கள் மட்டுமே போய்ப் பார்க்கவும். மூடு சரியில்லாத நேரங்களில் விட்டுவிடவும். ஏனென்றால் ஜோக் செய்கிறேன் பேர்வழி என்று பல இடங்களில் அம்மாவை மனைவியை எல்லாம் கெட்ட வார்த்தைகளில் வம்புக்கு இழுக்கிறார்
அன்-சைக்லோபீடியா ஓனர். ஐன்ஸ்டீனையும்
விட்டு வைக்கவில்லை. பாருங்கள்:-




^
==

ஒரு கவிதை. எழுதியவர் துளசி.

என்
டெஸ்க்டாப்
----------------

கொஞ்ச நாள் சேகுவேரா
அழகு தொப்பியும்
குறுந்தாடியும்
கொள்ளை கொண்ட நாள்கள் அவை
அப்புறம் மாவோ
கிறுகிறுக்க வைத்தவை
அழுக்குக் காக்கியும்
கூர்மைக் கண்ணும்
கீழை மார்க்சியமும்.
சிறிது நாள் மார்க்குவெஸ்
சில நாள்கள் குந்தர் க்ராஸ்
அப்புறம் சட்டென
ஒரு நாள் பாரதி
வீரக்கொம்பூன்றி
செல்லச் செல்லம்மாளோடு.
அன்னையும் அரவிந்தரும்
அலங்கரித்தது
பின்னொரு நாள்.
சில நாள் சாமி
சில நாள் கோயில்
சில நாள் குடும்பம்
அலங்கரித்த எவரும்
அதிக நாள் நீடித்ததில்லை.
எப்போதும்போல்
சுகமாய் இருக்கிறது
சுத்தமாய் இருக்கும்
டெஸ்க்டாப்.

&
==
ஓஷோ ஜோக்.

முல்லா ஒரு நகரத்துக்கு சுற்றுலா சென்றார். முதலில் அங்கு ஒரு ஹோட்டல் ரூம் எடுத்து தங்கினார்.

முன்பணத்தை வாங்கிக் கொண்ட ரிஷப்ஷனிஸ்ட், " சார், இங்கே காலை எட்டு மணியில் இருந்து பதினொரு மணி வரை டிபன் சாப்பிடலாம் , நண்பகல் பன்னண்டு மணியில் இருந்து மாலை நான்கு மணி வரை மதிய உணவு இருக்கும் . ஆறு மணியில் இருந்து பத்து மணிவரை டின்னர் உண்டு' என்றாள்.

முல்லா 'அடப் பாவமே, அப்ப நான் எப்பத்தான் ஊரை சுத்திப் பார்க்க போறது?' என்றார்

சமுத்ரா


Monday, January 16, 2012

கரப்பான்பூச்சி(சிறுகதை)

ஹலோ, ஒரு நிமிடம்..நான் தான் கரப்பான்பூச்சி பேசுகிறேன்.கரப்பான்பூச்சி எங்காவது பேசுமா என்று கேட்காதீர்கள். இந்த கரப்பான்பூச்சி பேசும்.ஏனென்றால் நானும் உங்களைப் போல ஒரு மனிதன் தான். நான் செய்த ஒரு சிறு தவறுக்கு தண்டைனையாக என் பாஸ் என்னை கரப்பான்பூச்சி ஆக்கி விட்டார்.மனிதனை எப்படி க.பூச்சியாக மாற்ற முடியும் என்று கேட்காதீர்கள். அதெல்லாம் எனக்குத் தெரியாது. அவர் ஏதோ உயிரியல் ஆராய்ச்சி செய்பவர். அவரால் முடியும்.என் வேலையெல்லாம் அவரது வேதியியல் துறை ஆய்வகத்தில் அவருக்கு அசிஸ்டன்ட்-அதாவது எடுபிடி. அவர் கேட்கும் திரவங்களை வாங்கி வருவது,அமிலங்களை டைல்யூட் செய்வது, டெஸ்ட்-டியூப்களை ரின்ஸ் செய்வது, ரீடிங்க்ஸ் எடுப்பது போன்ற சின்னச் சின்ன வேலை. அவர் என்ன ஆராய்ச்சி செய்கிறார் என்று சத்தியமாகத் தெரியாது. தெரிந்திருந்தால் சொல்வதற்கு என்ன? அப்புறம் ஒரு விஷயம். நிரந்தரமாக என்னை கரப்பான்பூச்சியாக மாற்றிவிடவில்லை. ஏதோ ஒரு ஆத்திரத்தில் நைட்ரிக் அமிலத்துக்கு பதில் சல்ப்யூரிக் அமிலம் போட்டு விட்டேன் என்று லேபில் ஓடிய க.பூச்சியை பார்த்து விட்டு ஒரு மாதம் நாம் அதாக மாறக்கடவது என்று வேதியியல் ரீதியாக சபித்து விட்டார்.I have been chemically cursed ! ஒரு மாதம் ஆனதும் மீண்டும் என்னை எடுபிடி வேலைக்கு மனிதனாக மாற்றம் செய்து விடுவார் போலும்!

சரி.

கரப்பான் பூச்சியாக மாறியதும் முதலில் எனக்கு உலகமே தலைகீழாக மாறி விட்டது போலத் தோன்றியது. மனிதர்கள் கிங் காங் குரங்கு சைசுக்கு அநியாமாக பெரிய சைசில் தெரிந்தார்கள். மேஜை நாற்காலிகள் எல்லாம் மலைகள் போல நின்றிருந்தன.நாம் அடிக்கடி கேவலமாகப் பேசும் தலைமயிர் ஒன்று பெரிய கயிறு போல இருந்தது.உலகமே ஒரு இருபது எக்ஸ்
லெவலுக்கு பெரிதுபடுத்தப்பட்டது போல இருந்தது. கரப்பான்பூச்சிகளுக்கு இது பெரிய விஷயம் இல்லை. நான் மனிதனாக இருந்து Step -down செய்யப்பட்டதால் எனக்கு இந்த வினோதமான அளவீடுகள் குழப்பமாக இருக்கின்றன.மேலும் மனிதனாக இருக்கும் போது பளபளப்பாக இருந்த தரை இப்போது மிகவும் கரடுமுரடாகத் தெரிகிறது. நாம் படுசுத்தம் என்று நினைத்த
உணவில் கூட ஆயிரக்கணக்கில் சின்னச் சின்ன கிருமிகள் இருப்பது இப்போது தான் தெரிந்தது. எறும்பு ஒன்று முயல் சைசுக்குத் தெரிகிறது.என்னை சுற்றிலும் கணக்கிலடங்காத விதம்விதமான வாசனைகள் சூழ்ந்துள்ளன.

ஒரு மணிநேரம் இப்படியே குழப்பத்தில் கழிந்தது. எனக்கு ஆறுகாலில் நடக்கத்தெரியாததால் அப்படியே நின்றிருந்தேன்.எனக்கு லேசாகப் பசித்தது. கரப்பான்பூச்சி என்ன சாப்பிடும் என்று எனக்கு சத்தியமாகத் தெரியாது. அதையெல்லாம் யோசிப்பதற்கு என்
கெமிஸ்ட்ரி படிப்பும் , மிடில் கிளாஸ் நகர வாழ்க்கையும் எப்போதும் இடம்கொடுக்கவே இல்லை. சரி நாயின் அவஸ்தை நாயாக மாறினால் தானே தெரியும்? இப்போது நான் சாப்பிட வேண்டும். எதை சாப்பிடுவது? முதலில் இந்த பாழாய்ப்போன கரப்பான் சைவமா அசைவமா? ஏதாவது எறும்பை அட்டாக் பண்ணி சாப்பிடலாமா?எறும்பு எப்போதும் படைபடையாக தான் வரும் என்று கேட்டிருக்கிறேன்.நான் பாட்டுக்கு ஒரு எறும்பை நசுக்கி சாப்பிட்டுவிட்டு பின்னர் ஓராயிரம் எறும்புகள் அணிவகுத்து வந்து விட்டால்?எதற்கு வம்பு? எறும்பு ப்ளான் கேன்சல்..மனுஷப்பயல் எதையாவது கொறித்துவிட்டு கீழே சிந்தி இருப்பானே? அதைப் போய் ஒரு வெட்டு வெட்டலாமா? ஆனால் பாருங்கள் மனுஷன் கண்ட விஷயங்களை எல்லாம் அறிவில்லாமல் சாப்பிடுகிறான்.பிளாஸ்டிக், பூச்சிக் கொல்லி, ரப்பர்,அஜினமோட்டோ எல்லாவற்றையும்! அந்த சமாச்சாரங்கள் க.பூச்சியை ஒன்றும் பண்ணாதா? யாருக்குத் தெரியும்?

ஆ. என்ன அங்கே? ஓ இன்னொரு கரப்பான்பூச்சி வருகிறது.முதன்முதலில் ஒரு பூச்சியாக இருந்துகொண்டு இன்னொரு பூச்சியைப் பார்க்கிறேன். மிகுந்த கவனமாக எங்கே மனுஷப்பயன் வந்துவிடுவானோ என்று பயந்து பம்மியபடியே அது வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து ஹலோ என்றேன். ஆனால் வார்த்தை ஹலோ என்று வரவில்லை. இதுவரை நான் கேட்டிராத வினோதமான ஓசை என் தொண்டையில் இருந்து எழுந்தது. என்னைப் பார்த்து ஏனோ அந்த கரப்பான் பயந்து வந்த வழியே ஓடிவிட்டது. வந்தது ஆணா பெண்ணா என்று எனக்குத் தெரியவில்லை.மனிதர்களில் முடியை வைத்தோ,அணிந்துள்ள உடைகளை வைத்தோ ,மீசையை வைத்தோ சொல்லிவிடலாம்.இங்கே எல்லாமே அம்மணமாகத் தான் இருக்கின்றன. பெண்களுக்கும் மீசை இருக்கும் போலத்தோன்றுகிறது.உம்ம்ம்ம்..முதன்முதலில் ஆடை இல்லாமல் அலைவது கொஞ்சம் சுகமாகத்தான் இருக்கிறது. மனிதனுக்கு ஆடை அணியாமல் பொது இடங்களில் நடக்கும் ஒரு மறைமுக ஆசை இருக்கிறது என்று உளவியல் சொல்கிறது.இதுமாதிரி நமக்கு கனவுகள் கூட வருமே? பொது இடங்களில் ஆடை இன்றி நிற்பது போல! பாழாய்ப் போன இந்த உடைகளால் தான் இன்று இன்டர்நெட்டில் ஃ போர்னோகிராபி சக்கைபோடு போடுகிறது.பூச்சிகள் பறவைகள் மிருகங்கள் ஆடை அணியாமல் தான் திரிகின்றன. ஆனால் 24 x 7 அதே நினைவில் அலைவதில்லை. ஆடை அணிந்த மனிதன் தான் அப்படி. உடை அவனை ஒரு செக்ஸ் maniac ஆக மாற்றி விட்டது.

உளவியல் பேசும் முதல் கரப்பான்பூச்சி நானாகத்தான் இருப்பேன். சரி முதலில் எனக்கு சாப்பிட
ஏதாவது வேண்டும். அல்ல.ஏதாவது சாப்பிட வேண்டும். அதற்கு முதலில் ஒரு கரப்பான்பூச்சியை பார்த்து அவை என்ன என்ன சாப்பிடும் என்று கேட்க வேண்டும். எனவே இப்போது தென்பட்ட அந்த பூச்சியை பின் தொடர்ந்து ஓடினேன். எனக்கு இந்த தட்டையான உடம்பையும் ஆறு சன்னமான மயிர் நிறைந்த கால்களையும் முன்னே நீட்டிக் கொண்டிருக்கும் இந்த ஆண்டெனாவையும் வைத்துக் கொண்டு ஓடுவது கஷ்டமாக இருக்கிறது.இருந்தும் ஓடினேன். பசி யாரை விட்டது? எப்படியோ அதை நான் பிடித்து விட்டேன். முதலில் பயந்த அது பின்னர் என்னிடம் நன்றாகப் பேச (?) ஆரம்பித்து விட்டது. வள வள என்று இடைவெளி விடாமல் பேசியதால் அது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். நான் என்ன பாஷை பேசுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனாலும் பேசினேன். அது பேசுவதும் புரிந்தது.

நீ ஆணா ? பெண்ணா?

பெண் (என்னை விட பெரியதாக இருந்தது!)

சரி.எனக்கு சாப்பாடு வேண்டும்.

ஏன் இப்படி அலைகிறாய்?கரப்பான்களால் ஒருமாதம் வரை உணவு இல்லாமல் இருக்க முடியும்.சரி நீ ஏன் வேறுமாதிரி இருக்கிறாய்? உன்னைப்பார்க்கும் போது எங்கள் இனம் என்று தோன்றவில்லை.

(நான் அனுபவித்த பசி உடலின் பசி அல்ல. மனம் உருவாக்கிய பசி என்று அப்போது தான் புரிந்தது. மனிதன் சும்மா தின்று கொண்டே இருப்பதால் அவன் மனமே ஒரு பொய்யான பசியை உண்டுபண்ணி விடுகிறது)

சரி,நாம் என்ன சாப்பிடுவோம்?
அது என்னை ஒரு மாதிரி பார்த்தது.

எல்லாமே தான். மனிதர்கள் ஸ்டாம்ப்பின் பின்னால் ஓட்டும் பசையைக் கூட.

நீ சாப்பிட்டாயா?

ஆயிற்று. கர்ப்பமாக இருப்பதால் இப்போது வேளாவேளைக்கு ஏதாவது சாப்பிட்டு விடுகிறேன்.

ஓ அப்படியா?உங்கள் தாம்பத்திய வாழ்வைப் பற்றி சொல்லேன். சாரி. எனக்கு ஒரு விபத்தில் நினைவெல்லாம் இழந்து விட்டது.
அது மீண்டும் என்னை ஒரு மாதிரி பார்த்தது.

என்ன பெருசா? மூடு வந்தா வாசனையை எடுத்து உடுவோம். அந்த ஆளு ஜொள்ளு விட்டுக்கிட்டே வருவான். மேட்டர் முடிந்ததும் அவ்ளோ தான். பிறகு வாழ்நாள் முழுவதும் நோ செக்ஸ்.அப்பாவோட விந்தை பத்திரமா எங்களுக்குள்ளேயே கெடாம சேமிச்சு வச்சுக்குவோம். அவரு குடுக்கறப்பவே ப்ரோடீன் உறை எல்லாம் போட்டு கிப்ட் பேக் பண்ணி தான் தருவார்.தேவையான போது ஒவ்வொண்ணா எடுத்து நாங்களே டெலிவரி பண்ணுவோம். இது எனக்கு இந்த வருசத்தில் நூத்தி முப்பதாவது டெலிவரி.

'பாவி மகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமா' என்ற சிவாஜி கணேசன் பாடல் நினைவுக்கு வந்தது.

'ஆபரேஷன் எதுவும் பண்ணிக்க மாட்டியா?'

'அப்படீன்னா'?

சரிதான் போ என்று நினைத்துக் கொண்டேன்.

கரப்பான் மூச்சை நிறுத்தி தம் கட்டுவதில் வல்லது என்றும் , எந்த விதமான Extreme வெப்பநிலையிலும் வாழும் என்றும் திருப்பிப்போட்டால் தானே திரும்ப முடியாமல் அப்படியே செத்துப்போகும் என்றும் அதனிடமிருந்து மேலும் அறிந்து கொண்டேன். நாம் உபயோகிக்கும் ட்யூப் லைட் அதற்கு அலர்ஜியாம். இருட்டு தான் பெரும்பாலும் பிடிக்கிறது. பகலில் பெரும்பாலும் எல்லாம் தூங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. மேலும் கரப்பான்பூச்சிகளின் எலும்புக்கூடு உடலுக்கு வெளியே தான் இருக்கிறதாம். இறைவன் இவைகளுக்கு சாரி எங்களுக்கு நரம்பு மண்டலத்தின் ஹெட் கோர்டர்ஸ் ஆக மூளையை வைக்காமல் கட்டுப்பாட்டு கேந்திரியங்களை உடல் முழுதும் ஆங்காங்கே பிரித்து வைத்திருக்கிறான்.எனவே தலை துண்டுபட்டாலும் ராகுகேது போல சிலநாள் உயிர்வாழ்கின்றன. இந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு முன்பு தெரிந்திருக்கவில்லை.உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். நான் படித்ததெல்லாம் கரப்பான்களின் ரத்தம் வெள்ளைக்கலர் என்றும்
அவை டைனோசர் காலத்தில் இருந்தே பூமியில் இருக்கின்றன என்றும் மனிதன் அழிந்து போனாலும் பல்லாயிரம் ஆண்டுகள் பூமியை ஆளும் என்றும் இதுமாதிரி விஷயங்கள் தான். பூமியில் மனுஷப்பயல் அணுகுண்டு வீசினால் கரப்பான்களையும் தேள்களையும் தவிர வேறு எல்லா உயிரினங்களும் பூண்டோடு அழிந்து விடுமாம்.

காலில் எதற்கு உறுத்தலாக இத்தனை முடிகள் என்று அதனிடம் கேட்டேன்.

அப்போது அது கூலாக அங்கே உன்னை யாரோ துரத்துகிறார்கள் பார். தப்பித்து ஓடு என்றது. ஏதோ ஒரு ஜந்து என்னை நெருங்கிக் கொண்டிருந்தது. எலி போல தோன்றியது. எலி கரப்பான் பூச்சியைத் துரத்துமா? என்ன கருமமோ யார் கண்டது? இப்போது துரத்துகிறது நான் தப்பிக்க வேண்டும். நான் ஓடத் தொடங்கினேன். எப்படி அவ்வளவு அழகாக ஓடுகிறேன் என்பது புரியவில்லை. வழியில் உள்ள தடைகளை மிக வேகமாக அறிந்து கொண்டு தமிழ் சினிமா கிளைமாக்ஸ் போல சந்து பொந்துகளில் அனாயாசமாகப் புகுந்து ஓடினேன். எப்படியோ ஒருவழியாக தப்பித்து ஒரு மறைவிடத்தில் போய் ஒளிந்து கொண்டேன்.அப்போது அந்த கரப்பான்பூச்சி மீண்டும் வந்து எனக்கு ஹாய் சொன்னது. அப்போதுதான் என் காலில் உள்ள குட்டிக்குட்டி முடிகள் ஆபத்து காலத்தில் சூழ்நிலையை உணர உதவும் சென்சார்கள் என்று அறிந்து கொண்டேன்.

அந்த பெண் கரப்பான்பூச்சி 'டொங்கு' வருகிறான். அவனுக்கு உன்னை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்றது. கரப்பான் பூச்சிகளும் பெயர் வைத்துக்கொள்ளும் போலிருக்கிறது.இந்த அழகியின் பெயர் க்ளாராவாம்.

எப்படி பார்க்காமலேயே டொங்கு வருகிறான் என்று சொன்னாய் என்றேன். எல்லாம் வாசத்தை வைத்துதான் என்றது. மனிதன் தான் தன் இயல்பான உயிரியல் வாசத்தை பெர்ப்யூம்-களைப் போட்டு லூசுத்தனமாக மறைத்துக் கொள்கிறான்!

எனக்கு டொங்கு அறிமுகமானான். மீசையில் நிறைய பாக்டீரியா சேர்ந்து விட்டது என்றும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொன்னான்.
டொங்குவைத் தொடர்ந்து லேபில் வசிக்கும் கரப்பான்பூச்சி படையே அறிமுகம் ஆகியது.எல்லாம் நல்ல பூச்சிகள். சமுதாய பிராணிகள்! அவைகளுக்கு தனியாக ஒரு உலகம் இருக்கிறது என்று அப்போதுதான் அறிந்து கொண்டேன். மனிதர்களைப் போல அவைகளும் பொதுக்கூட்டம் தேர்தல் எல்லாம் நடத்துகின்றன.சேமிப்புக் கிடங்குகளை வைத்துக் கொள்கின்றன.கேர்ள் பிரண்டை டேட்டிங் கூட்டிச் செல்கின்றன. சண்டை போடுகின்றன. டான்ஸ் ஆடுகின்றன.இரங்கல் கூட்டம் நடத்துகின்றன. பண்டிகை கொண்டாடுகின்றன என்றெல்லாம்.அங்குள்ள எல்லாப் பூச்சிகளுக்கும் என்னை மிகவும் பிடித்துப் போய் விட்டது. க.பூ.தலைவன் தேர்தலில் என்னை வேட்பாளராக நிற்கும் படி சில க.பூ கேட்டுக் கொண்டன என்றால் பாருங்களேன். எனக்கு பாலோ என்று பெயர் வேறு வைத்து விட்டன. அதற்கு என்ன அர்த்தமோ? கடவுளுக்கே வெளிச்சம்.

இப்படியே ஒரு வாரம் கழிந்தது. எனக்கு க.பூ உலகின் ரகசியங்கள், நடைமுறைகள் மெல்ல மெல்ல பிடிபட ஆரம்பித்தன.நான் ஒரு கரப்பானாக இருப்பதை விரும்ப ஆரம்பித்தேன். பிறகு எனக்கு டான்சியின் அறிமுகம் கிடைத்தது.ஒருநாள் தயங்கித்தயங்கி வெட்கத்துடன் என்னிடம் வந்து 'நீங்க தான் புதுசா வந்தவரா'? என்று கேட்டாள். அப்போதே எனக்கு கண்டதும் காதல் வந்துவிட்டது. இந்த காதல் கன்றாவி எல்லாம் மனிதர்களுக்கு தான் என்று நினைத்திருந்தேன். பிராணிகளுக்கும் இருக்கிறது போலும். அடுத்தநாளே பொறுக்கமுடியாமல் ஐ லவ் யூ சொல்லிவிட்டேன். அவளும் ஒரு சிறிய தயக்கத்துக்குப் பிறகு ஒத்துக் கொண்டாள். இருவரும் ஊர் சுற்றினோம். சாரி வீடு சுற்றினோம். டேட்டிங் சென்றோம். நான் தினமும் எங்கிருந்தோ ரொட்டி, பிஸ்கட்,முறுக்கு துகள்களை சேகரித்துக் கொண்டு வந்து அவளுக்குக் கொடுத்தேன்.என்ன, முத்தம் தான் கொடுக்க முடியவில்லை. மீசை இடித்தது. உன் Ultimate gift ஐ எப்போது கொடுக்கப்போகிறாய்? என்று கேட்டாள் டான்சி. கள்ளி!

இப்படிப்பட்ட ஒரு மன்மத மயக்கத்தில் எனக்கு கரப்பான்பூச்சியாக இருக்க ஒருமாதம் தான் அனுமதி என்ற கெடு சுத்தமாக மறந்தே விட்டிருந்தது. ஒருநாள் பட்டப்பகல் வேளையில், கண்ணயர்ந்து தூங்கும் போது திடீரென ஞாபகம் வந்தது. உடனே டான்சியை போய்ப் பார்த்து அவளை எழுப்பி 'என்னை மறந்து விடு' நான் என் சொந்த உலகிற்குப் போகவேண்டும். என்றேன். அவள் அழுதாள். என்னையும் கூட்டிப் போ என்றாள். தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கத்தினாள்.எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சொல்வதை சொல்லி விட்டேன். அப்புறம் உன் இஷ்டம் என்று சொல்லி விட்டு வந்தேன். மறுநாள் டான்சி எதையோ விழுங்கி விட்டு தலைகீழாக விழுந்து கிடந்ததைப் பார்க்கும் போது என் குட்டிக் கண்களில் நீர் துளிர்த்தது. ப்ரிட்ஜில் இருந்த கோகோ-கோலாவைப் போய்க் குடித்திருக்கிறாள் பாவம்.

நான் வந்து சேர்ந்த ஒரு வருடத்தை (நமக்கு ஒரு மாதம்) கொண்டாடும் முயற்சியில் என் சக கரப்பான்கள் மும்முரமாக ஈடுபட ஆரம்பித்தன.பெரிய டின்னருக்கு ஏற்பாடு செய்தன. எறும்புப் புற்றுக்கு படையெடுத்துப் போய் பண்டங்களைத் திருடலாம் என்றெல்லாம் பிளான் போட்டன. நான் கொஞ்சம் ஜாஸ்தி பேசுவேன் என்பதால் நான் தான் தலைவர் பதவிக்கு நிற்கவேண்டும் என்று முடிவே செய்து விட்டன.

இதோ அந்த நாள் நெருங்கி விட்டது. ஆனால் எனக்கு மீண்டும் மனிதனாக மாற விருப்பமே இல்லை சார். மனிதன் ஒரு கேவலமான மிருகம். இங்கே கரப்பான்பூச்சிகளின் உலகில் போட்டி இருக்கிறது.ஆனால் பொறாமை இல்லை.பகை இருக்கிறது ஆனால் துரோகம் இல்லை.கோபம் இருக்கிறது ஆனால் வன்மம் இல்லை. இங்கே ஒரு பூச்சி இன்னொன்றை அடிமை செய்வதில்லை. ஏமாற்றுவதில்லை. முதுகில் குத்துவதில்லை. உலகில் என் இனம் மட்டுமே வாழவேண்டும் என்று பேராசைப்படுவதில்லை. மனிதன் கல்நெஞ்சக்காரன் சார். சுயநலம் பிடித்தவன். இங்கே எந்த ஒரு பூச்சியும் உழைக்காமல் அடுத்தவன் சொத்தை தன் வீட்டில் குவித்து வைப்பதில்லை. ஸ்ப்ரே அடித்தால் சாவதற்கு முன் எல்லா கரப்பான்களுக்கும் ஆண்டெனா மூலம் ஆபத்து இங்கே வராதே என்று தகவல் சொல்லிவிட்டுதான் ஒரு கரப்பான் சாகிறது.மனுஷப்பயலோ தான் வாழ்வதற்கு ஆயிரம் பேரை வேண்டுமானாலும் கொலை செய்வான். இந்த பூச்சிகளின் வரலாற்றில் ஹிட்லர் ,முசோலினி,இடி அமீன் கள் இருந்ததில்லை பாருங்கள்.முதலில் நான் கரப்பான்பூச்சியாக மாறியதும் நான் மிகவும் வேதனைப்பட்டேன். மனிதபிறவியை இழந்து விட்டோமே என்று. ஆனால் இப்போது பணத்துக்காக பொய்வேஷம் போடும், பதவிக்காக பல்லை இளிக்கும் , புகழுக்காக பாசத்தை விற்கும் மனிதப்பிறவிக்கு கரப்பான் ஜென்மம் நூறுமடங்கு மேல் என்று தோன்றுகிறது. மேலும் ஆபத்துக்கு நடுவில் எங்கே எப்போது என்ன நடந்து விடுமோ என்ற நிலையில் நிச்சயமின்றி கணத்துக்கு கணம்உயிர்வாழ்வதில் ஒரு திரில் இருக்கிறது பாருங்கள்.அதை இந்த ஒருமாதம் முழுவதுமாக அனுபவித்தேன் சார்.

அய்யோ, அங்கே யார் வருவது? என் பாஸ் போல இருக்கிறது. மீண்டும் மனிதப் பிறவியா? மீண்டும் சிட்டி பஸ்சின் கூட்டத்தில் நசுங்கி சாகும் பயணமா?மீண்டும் பட்ஜெட் இடிக்கும் மாதக் கடைசிகளா?மீண்டும் கந்தக அமிலமா? மீண்டும் அந்த ராஜாராமனிடம் பணத்துக்காக இளிக்க வேண்டுமா? அய்யோ வேண்டாம் பாஸ் வேண்டாம். நான் இப்படியே இருக்கிறேன். நீங்கள் எனக்கு கொடுத்தது தண்டனை அல்ல .பரிசு. சாபம் அல்ல. வரம். ப்ளீஸ்.நான் இப்படியே இருக்கிறேன். கரப்பான்பூச்சியாக இன்னும் கொஞ்ச காலம் இருந்து விட்டு செத்துப்போகிறேன். என்னை மனிதனாக மாற்றாதீர்கள். ப்ளீஸ்...பாஸ்..டான்சி...டான்சி...ப்ளீஸ்...என் உயிர் டான்சி...






............................................................................






பஸ்சின் கொடூரமான ஹாரன் சத்தத்தில் விழித்துக் கொண்டேன். என்ன நடந்தது? ஏதோ ஒரு கனவு கண்டேனே? தலைவலி என்று லேபில் அரைநாள் லீவு சொல்லி விட்டு கடையில் சாமான் வாங்கி கொண்டு வந்திருக்கிறேன். மதியான பஸ்ஸில் கூட்டம் அவ்வளவாக் இல்லை.கண் அசந்து விட்டேன் போல இருக்கிறது. ஆனால் அது என்ன கனவு? கொஞ்சம் கூட ஞாபகம் இல்லையே?நல்ல கனவாகத்தான் இருக்க வேண்டும். மனம் லேசாக இருக்கிறதே. என்ன கொடுமை இது? கனவில் ஒரு துளி கூட ஞாபகம் இல்லை.ஏதோ மங்கலாக ஞாபகம் இருக்கிறது. பூச்சியா? சரி நிதானமாக யோசித்துப் பார்ப்போம்.

பஸ்ஸை விட்டு இறங்கி தெருவில் நடந்தேன். முதலிலேயே மனைவிக்கு போன் செய்து அரைநாள் லீவு என்று சொல்லிவிட்டேன். பையில் சாமான் எல்லாம் இருக்கிறதா என்று ஒருதரம் சரிபார்த்தேன். அந்த டப்பாவைப் பார்த்து என்னமோ செய்ய உடனே பக்கத்தில் இருந்த குப்பைத்தொட்டியில் வீசி விட்டேன். ஏன் அப்படி செய்தேன்?நான் இப்படியெல்லாம் செய்ய மாட்டேனே?

"இந்தாங்க காபி. சாமானை சரிபார்த்ததில் ஒண்ணு இடிக்குது. காக்ரோஜ் ஸ்ப்ரே பில்லுல இருக்கு. பையில இல்லையே? எம்பது ரூபாய் வெலையாச்சே!"

"பஸ்ஸில் தவறி விழுந்து விட்டது. இந்த மாதம் பட்ஜெட் ஓவர். அடுத்தமாசம் வாங்கிக்கலாம்" என்றேன்.மனைவி அர்ச்சனையை ஆரம்பிப்பதற்கு முன் பெட்ரூமுக்கு ஓடினேன்.

செல்லும் வழியில் ஒரு கரப்பான்பூச்சி குறுக்கே ஓடியது. ஏனோ இந்தமுறை 'இதுவேற சனியன்' என்று சொல்லவில்லை.

சமுத்ரா

Friday, January 13, 2012

அணு அண்டம் அறிவியல் -58

அணு அண்டம் அறிவியல் -58 உங்களை வரவேற்கிறது.

**********Even if Newton falls down, Gravity will hurt him*******************

I learned very early the difference between knowing the name of something and knowing something.-Richard Feynman

கீழே உள்ள படங்களை ஒரு நிமிடம் பாருங்கள்:





நன்றி.

Symmetry என்பது இயற்பியலில் மட்டும் இல்லாமல் மற்ற எல்லா துறைகளிலும் சுவாரஸ்யமான ஒரு கருத்து. மதங்களின் குறியீடுகள் symmetry எனப்படும் இந்த சமச்சீர்மையைக் கொண்டே பெரும்பாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மனித உடலை செங்குத்தாக இரண்டு பாகமாக வெட்டினால் ஒவ்வொரு பாகமும் இன்னொன்றுக்கு சமச்சீர்மையுடன் இருக்கிறது. அதாவது நம் வலது கண்ணுக்கும் இடது கண்ணுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. இசையில் பெரும்பாலும் இந்த symmetry இருக்கிறது. அதாவது ஸ்வரங்களின் இறங்கு வரிசை (அவரோகணம்) அவற்றின் ஏறு வரிசையோடு (ஆரோகணம்) சமச்சீர்மை கொண்டுள்ளது. மேலே உள்ள படங்கள் சிலவற்றில் இயற்கை தனது சமச் சீர்மையைக் காட்டி சிரிப்பதைப் பார்க்கலாம். மொழிகளில் சமச்சீர்மையை Palindrome என்று அழைக்கிறார்கள்.உதாரணம்: வானமானவா.

சரி.

பால் டைராக் என்பவர் பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள்கள் (அடிப்படைத் துகள்கள் என்றால் மேலும் பிளக்க முடியாத பிரபஞ்சத்தின் ஆதார கட்டுமான செங்கற்கள், உதாரணம் : எலக்ட்ரான் , குவார்க்.... இவை கூட மெல்லிய ஒரு நூலின் அதிர்வுகள் என்று இப்போது சொல்கிறார்கள். அதை இப்போது மறந்து விடுவோம்) அவற்றின் ஜோடியோடு வருகின்றன என்று கண்டுபிடித்தார். இது படைப்பின் அதிசயமானதொரு சமச்சீர்மையை காட்டுகிறது. கடைக்கு சென்றால் நம்மால்
சாக்ஸ்-சை தனியாக வாங்க முடியாது அல்லவா? ஜோடியாகத் தான் வாங்க வேண்டும். அது போல படைப்பின் அணிகளான ஆதாரத் துகள்கள் ஜோடி ஜோடியாகவே வருகின்றன.போட்டான் போன்ற சில ஆதாரத் துகள்களுக்கு மட்டும் ஜோடி கிடையாது .கடைக்கு சென்று பெல்ட்டைத் தனியாக வாங்குகிறோம் அல்லவா?அது போல! IOW, போட்டானின் எதிர்த்துகள் போட்டானே தான்! அலி என்றும் சொல்லலாம்.ஆண் பெண் இருமையைக் கடந்த கடவுள் என்றும் சொல்லலாம்!



கடவுளுக்கும் ஒளிக்கும் உள்ள ஆச்சரியமான ஒற்றுமைகளை அவ்வப்போது -- வில் சொல்லி வந்திருக்கிறோம்.அதில் ஒன்று :ஒளிக்கு எதிர் இருட்டு அல்ல! ஒளியே தான் :) அது போல கடவுளுக்கு எதிர் கடவுளே தான்! உலகில் உள்ள பெரும்பாலான மதங்கள் (கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற) கடவுளுக்கு எதிராக 'சாத்தான்' என்ற சக்தியை உருவகித்து வைத்துள்ளன.ஆனால் இப்படிப்பட்ட ஒரு (நிரந்தரமான) எதிர் சக்தியை உருவகம் செய்யாத ஒரே மதம் இந்து மதம் ( என்று நான் சொல்லவில்லை. 'ஓஷோ' சொல்கிறார்) (Ref:நான் விரும்பும் இந்தியா) கடவுளுக்கு எப்படி எதிர் சக்தி இருக்க முடியும்? அப்படியே இருந்தாலும் அதுவும் கடவுளாகத் தானே இருக்க முடியும்? [இந்து மதத்தில் அவ்வப்போது 'ராவணன்' போன்ற தற்காலிக வில்லன்கள் வருவார்களே தவிர கடவுளுக்கு எதிராக நிரந்தர வில்ல சக்தி கிடையாது]

பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்பட்டது என்பதை இயற்பியல் ஒத்துக்கொள்கிறதோ இல்லையோ பிரபஞ்சம் ஒளியால் படைக்கப்பட்டது என்பதை (ஓரளவு) ஒத்துக் கொள்கிறது.பிரபஞ்சம் வெடித்த போது (BIG BANG)அதில் அவ்வளவாக பொருள் (matter ) இல்லை. ஆனால் அதீதமான ஆற்றல் இருந்தது. ஆற்றல் துகள்கள் (போட்டான்கள்) ஒன்றுடன் ஒன்று
மோதிக்கொள்ளும் போது பொருளும் அதன் எதிர்ப்பொருளும் பிறக்கின்றன. இந்தப் பொருளும் எதிர்பொருளும் மீண்டும் சந்தித்து மறைந்து மீண்டும் தூய ஆற்றலை வெளியிடுகின்றன.பிரபஞ்சம் தோன்றிய போது அது மிகச் சிறியதாக இருந்ததால் இந்த ஆற்றல்-பொருள் குழப்பம் அதிகமாக இருந்தது. ஒரு நொடியில் ஆற்றலாக இருந்தது மறுநொடியில் பொருளாகவும்
ஒரு நொடியில் பொருளாக இருந்தது மறுநொடியில் ஆற்றலாகவும் மாறிக் குழம்பியது.இந்தக் குழப்பம் பிரபஞ்சம் தோன்றி சுமார் மூன்று லட்சம் வருடங்களுக்கு நீடித்தது என்கிறார்கள்.பிறகு பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட அளவு விரிவடைந்து விட்டதால் போட்டான்களின் ஆற்றல் பெருமளவு குறைந்து அவை மேலும் அதிக துகள்களை உருவாக்க இயலாது போயிற்று. இந்த சமயத்தில் ஆற்றல்(போட்டான்கள்) பொருளிடம் (ஹைட்ரஜன்) (தன் எதிர் இணையுடன் சேர்ந்து அழிந்து போகாத சில எலெக்ட்ரான்களும் ப்ரோடான்களும் இணைந்து சைக்கிள் கேப்பில் ஹைட்ரஜன் அணுக்களை அதாவது நாமெல்லாம் வருவதற்குத் தேவையான ஆதி உயிர் சூப்பை உருவாக்கி விட்டிருந்தன!) இருந்து பிரிந்து தன் போக்கில் விரியும் பிரபஞ்சத்துடன் பயணிக்க ஆரம்பித்தது. இந்த முக்கியமான நிகழ்வை PHOTON DECOUPLING என்கிறார்கள். இப்படி புறப்பட்ட ஆற்றல் கதிர் பிரபஞ்சம் விரிவடைய விரிவடைய ஆற்றல் குறைந்து இன்று நாம் காணும் (உணரும்) சொற்ப ஆற்றல் காஸ்மிக் மைக்ரோவேவ் பின்புலமாக (CMBR)மாறி உள்ளது.அதாவது நாமெல்லாம் வருவதற்குத் தேவையான மூலப்பொருட்களை உருவாக்கித் தந்த மூலகர்த்தாவான ஒளி இன்னும் நம்மிடையே மெளனமாக இருந்து கொண்டிருக்கிறது. நம் கொள்ளு கொள்ளு கொள்ளு ஆதித் தாத்தா சாகாமல் ஹீனமாக இன்னும் படுக்கையில் படுத்துக் கொண்டிருப்பது போல!

சரி

பிரபஞ்சம் பெரும்பாலும் பொருளால் ஆக்கப்பட்டிருப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் சற்றே வியப்படைகிறார்கள். சல்லடை போட்டுத் தேடினாலும் பிரபஞ்சத்தில் எதிர்பொருள் கிடைப்பதில்லை.[பமீலா என்ற செயற்கைக்கோள் இன்று வரை பிரபஞ்சத்தில் எதிர்பொருளைத் தேடி வருகிறது] செயற்கையாக , துகள் முடுக்கிகளில் அதிவேக மோதல்களின் போது எதிர்பொருள் மருந்தளவு கிடைக்கிறது. [எதிர்பொருளை செய்வது தான் இப்போதைக்கு உலகிலேயே காஸ்ட்லியான விஷயம் என்று சொல்லியிருந்தோம்] எதிர்பொருளை ஏன் இவ்வளவு மெனக்கெட்டு தேட வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்றால் அது நம் விண்மீன்களுக்கு இடையேயான பயணங்களுக்கு (Inter stellar travel)இனி வரும் காலங்களில் ஒரு சிறந்த எரிபொருளாக இருக்கும் என்கிறார்கள். எதிர்பொருள்(உதாரணம் :பாசிட்ரான்) என்ற ராஜ குமாரியை தனியாக ராக்கெட்டின் ஒரு கொள்கலனில் அடைத்து வைத்து விட்டு பொருள் என்ற வீரர்களை கட்டுப்படுத்தி (பெண்ணின் உடலில் நடக்கும் கருமுட்டை -விந்து அணுக்கள் ஓட்டப்பந்தயம் போல) சீராக உள்ளே அனுப்ப வேண்டியது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு அபாரமான ஆற்றல் வெளியீடு கிடைக்கும்.அதை வைத்து ராக்கெட்டை செலுத்தலாம்.இந்த எதிர்ப்பொருளை சேமித்து வைப்பது கதிரியக்கத் தனிமங்களை சேமித்து வைப்பதை விட ஆபத்தானது.(அக்கினிக் குஞ்சு!) இதற்கு பிரத்யேகமான Penning trap என்ற கொள்கலன் வேண்டும். (ராஜகுமாரிக்கு என்ன ஒரு பாதுகாப்பு!) இந்த கொள்கலன் ஒரு வலுவான காந்தப்புலத்தின் உதவியால் எதிர்ப்பொருள் பொருளுடன் (கொள்கலனின் சுவருடன்) சேராமல் தற்காலிகமாகத் தடுக்கும்.

இப்போது நாம் பயன்படுத்தும் ராக்கெட்டுகள் , தீபாவளி டைப்! வேதியியல் எரிபொருட்கள்! இதை ஒரு விறகு அடுப்புடன் ஒப்பிடலாம். அடுத்து அணுகுண்டை வெடித்து விண்கலங்களை இயக்குவது. இதை நம் காஸ் அடுப்புடன் ஒப்பிடலாம். இதில் பொருளின் ஒரு மிகச் சிறிய பகுதி மட்டுமே ஆற்றலாக மாறுகிறது. இந்த எதிர்ப்பொருள் ராக்கெட் என்பது மைக்ரோவேவ் ஓவன் போல மிகவும் ஆற்றல் வாய்ந்தது. முழுப் பொருளும் அழிந்து ஆற்றலாக மாறுவதால் நாலே நாலு மில்லி கிராம் பாசிட்ரானை வைத்துக் கொண்டு நம்மால் ஒரு சில தினங்களில் செவ்வாயை அடைந்து விட முடியுமாம்.ஆனால் இந்த அளவு கணிசமான எதிர்பொருள்கள் நம் துகள் முடுக்கிகளில் (PARTICLE ACCELERATOR)கிடைக்காது.(துகள் முடுக்கிகள் ஆராய்ச்சிக்காக மட்டும் தான்). எனவே பிரபஞ்சத்தில் இந்த அபூர்வ எ.பொ ராஜகுமாரி எங்கெல்லாம் இயற்கையாக கிடைக்கிறாள் என்று தேட வேண்டி இருக்கிறது. அவள் கிடைத்து விட்டால் போதும். வீரர்களுக்கா பஞ்சம்?

சரி

பிரபஞ்சம் படைப்பில் ஒரு சமச் சீர்மையை (symmetry ) கொண்டிருந்தது என்று பார்த்தோம். அப்படியென்றால் உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் அதன் எதிர்பொருளுடன் சேர்ந்தே படைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியென்றால் ஏன் பிரபஞ்சத்தில் எதிர்பொருள் சுலபமாக தட்டுப்படுவதில்லை? Sex -ratio மிக மிக அதிகமாக இருக்கிறதே? ஒரு மின்சாரம் பாயும் ஒயரை எடுத்துக் கொண்டால் சாதாரணமாக அதில் கோடி கோடி கோடி எலக்ட்ரான்கள் இருக்கும். ஆனால் ஒரு நாலு மில்லிக்ராம் பாசிட்ரானை (எலக்ட்ரானின் எதிர்) கண்ணால் பார்க்க நாம் நாலு தலைமுறைக்கான சொத்தை எழுதி வைக்க வேண்டும்!

வாழைப்பழ ஜோக் நினைவுக்கு வருகிறது.

ஒண்ணு இங்க இருக்கு? அப்ப இன்னொண்ணு எங்க? -அதான் இது என்று செந்தில் லெவலுக்கு பதில் சொல்ல முடியாது. 'அதான் இது' என்பது ஒரு வேதாந்தமான பதிலாக இருக்கலாம்.தத்வமஸி! இயற்பியலில் கூட இது இருக்கிறது. இயற்பியல் எந்த ஒரு சாத்தியக்கூறையும் விட்டு வைக்கவில்லை. அதாவது One electron Universe ! ஒற்றை எலக்ட்ரான் பிரபஞ்சம்.
பிரபஞ்சத்தில் ஒரே ஒரு எலக்ட்ரான் தான் இருக்கிறதாம்
( ரொம்ப போர் அடிக்காதா அதற்கு?).அது தான் நானாக நீயாக நாயாக நரியாக ஹைட்ரஜனாக நைட்ரஜனாக ஹீரோவாக வில்லனாக ஆணாக பெண்ணாக மாறி மாறி திருக்காட்சி அளிக்கிறதாம். அத்வைதத்தின் உச்ச நிலை!!

இதை விளக்க நாம் மீண்டும் குவாண்டம் இயற்பியலிலும் ஃபெயின்மென்னின் வரைபடங்களுக்குள்ளும் நுழைய வேண்டி இருக்கிறது. அதற்கு முன்பு ஒரு சின்ன தகவல்: 'வேறுபாடு' என்பது பெரிய பொருட்களில் அதிகமாக இருக்கிறது. கார் பாக்டரியில் இருந்து வெளிவரும் இரண்டு கார்கள் என்னதான் ஒரேமாதிரி உரித்துவைத்தது போல இருந்தாலும் இரண்டுக்கும் இடையே ஆறு வித்தியாசம் என்ன ஆயிரம் வித்தியாசம் கண்டுபிடிக்கலாம், இந்த வித்தியாசங்கள் உள்ளே செல்லச் செல்ல குறைகின்றன. கடைசியாக எலக்ட்ரான் லெவலுக்கு வரும்போது ஒரு எலெக்ட்ரான் இன்னொன்றை அப்படியே 3D ஜெராக்ஸ் எடுத்தது போல இருக்கிறது. இரண்டும் கிட்டத்தட்ட ஒன்று தான் என்று தாராளமாக சொல்லலாம்.

மேலும் பாசிட்ரான் என்பது கடந்த காலத்துக்குள் நுழையும் ஒரு எலெக்ட்ரான் என்று நம்பப்படுகிறது .அதாவது பொருள் ஒன்று கடந்த காலப்பயணம் செய்யும் போது அதன் எதிர்பொருள் தோன்றுகிறது.



ஃபெயின்மேனின் நோபல் பரிசு ஏற்புரையில் இருந்து:

"அன்று எனக்கு ஜான் வீலர் டெலிபோன் செய்திருந்தார். அப்போது தான் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னை உறுத்திக் கொண்டிருந்தது. டைராக்கின் சமன்பாடுகளில் துகளின் மின்சுமையையும் (charge ) காலத்தையும் (time ) ஒருசேர திருப்பிய போது சமன்பாடுகள் மாறாமல் அப்படியே இருந்தன.அதாவது இரண்டு மைனஸ்களும் கான்சல் செய்து கொண்டன. காலத்தில் முன்னோக்கிப் பயணிக்கும் பாசிட்ரானும் காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கும் எலக்ட்ரானும் ஒன்று தான் என்று தோன்றியது.வீலர் போனில் '
பெயின்மன் , எல்லா எலக்ட்ரான்களும் ஏன் ஒரே மாதிரி இருக்கின்றன என்று நான் கண்டுபிடித்துவிட்டேன்" என்றார். 'ஏன்?' என்று கேட்டதற்கு 'ஏன் என்றால் அவை எல்லாம் ஒரே எலக்ட்ரான் தான் (?!)' என்றார்"


அது எப்படி ஒரே எலக்ட்ரான் என்று பார்க்கலாம் காத்திருங்கள். அதற்கு முன்னர் ஃபெயின்மனின் மேற்கோள்கள் இயற்பியலில் மிகவும் பிரசித்தி பெற்றவை. அவற்றைப் பற்றி கொஞ்சம் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போமா?

சமுத்ரா.