இந்த வலையில் தேடவும்

Monday, October 11, 2010

மஹிதர் நீ மறைந்து விடு!(திகில்)-5


கோவணத்தாண்டி சொல்வது:


உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை - வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை





புத்தகத்திலிருந்து எதோ ஒன்று கீழே விழுந்ததும் அதை சிவா கையில் எடுத்தார்....


"விக்ரம் இது பனை ஓலை , அந்தக் காலத்தில் எழுதுவார்களே" அது ....என்றார்...


"சிவா உள்ள ஏதாவது எழுதியிருக்கா பாருங்க" என்றார் விக்ரம்....


"படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு....வாங்க வெளில போலாம்"


"சார் ஒரு நிமிஷம்," என்ற மஹிதர் அந்த குழந்தையை நெருங்கி ,"பாப்பா இந்த புக்கை யார் கொடுத்தா சொல்றயா ? " என்றார்...


அந்த குழந்தை முகத்தை என்னவோ போல் செய்தது....


"வேண்டாம் விட்டுருங்க மஹிதர், அழுதுறப் போகுது" என்றேன்....அதற்குள் அந்தக் குழந்தை அங்கிருந்து 'மம்மி" என்று அழைத்துக் கொண்டு ஓடியே விட்டது....


வெளியே வந்து கூட்டம் இல்லாத ஒரு இடத்தில் நின்று கொண்டு வெளிச்சத்தில் ஓலையைப் பார்த்தோம்..."சிவா படிச்சுக் காண்பீங்க" என்றார் விக்ரம்..

சிவா படித்தார்...


"நிலையா தேகத்தில் நித்தியம் உணர

வைனதேயன் கிரிக்கு விரைந்தே வருக!

அலையும் வாழ்வில் நீ அலட்சியம் செய்தால்

மகிதரா நீயும் மறைந்தே போவாய்!"


"சார் நான் இந்த விளையாட்டுக்கு வரலை" என்று நான் மெதுவாக விலகினேன்....பக்கத்தில் நின்றிருந்த மஹிதரைப் பார்த்தேன்...உடம்பெல்லாம் வேர்த்து விட்டிருந்தது....முகம் பேயறைந்தது போல் இருந்தது....


"மஹிதர் , என்ன சப்ப மேட்டருக்கெல்லாம் டென்ஷன் ஆறீங்க" என்றேன்....


"உங்க கனவுல கழுகு நரியெல்லாம் வந்தா தான் தெரியும்" என்றார் மஹிதர்...


"தரங் உனக்கு எப்பவுமே விளையாட்டு தானா?" "சிவா, இது என்ன செய்யுள்?" என்றார் விக்ரம்...


"சிம்பிளா தானே இருக்கு புரியலையா?" என்றார் சிவா....


"சார் நாங்கல்லாம் டமில்ன்னாலே டென் கிலோ மீட்டர்ஸ் ஓடற பார்டிகள்... நீங்களே விளக்கம் சொல்லுங்க " என்றேன்....


நிலையில்லாத இந்த உடம்புக்குள்ள இருக்கற நிலையான ஒண்ணத் தெரிஞ்சுக்க நீ வைனதேயன் கிரிக்கு வா....அலட்சியம் செய்தா அழிஞ்சு போயிருவ"


"அது என்ன வைனதேயன் கிரி" என்றார் விக்ரம்...


"வைனதேயன்னா கருடன் ,சுருக்கமா கழுகு...." "கிரின்னா மலை"


"ஐயோ மறுபடியும் கழுகா" என்று கத்தினார் மஹிதர்....


அப்படின்னா "கழுகு மலைக்கு " வர சொல்றாங்களா?


"இருக்கலாம் " என்றார் சிவா..


"சார் நம்ம பேசாம போலிசுக்கு போயிரலாமா" என்றார் மஹிதர்...


சிவா "இப்ப வேண்டாம்....அந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் அல்லது நண்பர்கள் யார் என்று முதலில் நாமே கண்டுபிடிப்போம்....நம்ம கிட்ட போதிய evidence வேற இல்லை....இந்த ஓலையைஎல்லாம் காட்ட முடியாது....I think உங்க கிட்ட இருந்து அவங்க எதையோ எதிர் பார்க்கலாம்...."என்றார் யோசித்துக் கொண்டே....


"வாட் டிட் யு சே, நண்பர்களா?" என்று விக்ரம் கேட்டார்.... "ஆமாம் அங்க வந்தா என்னவோ வாழ்கையின் தத்துவத்தை சொல்றாங்களாமே" என்றார் சிவா...


நான் மஹிதரைப் பார்த்து சொன்னேன் "மஹிதர், சுவாமி மஹிதரானந்தா, வாழ்த்துக்கள் .,,, நீங்க சாமியாரானதும் இந்தக் கடையை மாத்திரம் என் பேருக்கு எழுதி வெச்சுருங்க...நீங்கள் சாமியானதும் இது மாதிரி நூறு மால்களை வாங்கலாம் " என்றேன்... மஹிதர் அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் இரண்டுக்கும் பொதுவான ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்தினார்...


விக்ரம் "ஓகே ஆக வேண்டியதைப் பார்க்கலாம்....மஹிதர் நீங்க ரிலேக்ஸ்டா இருங்க...நீங்க அந்த so called கழுகு மலைக்கு போற வரைக்கும் உங்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை" நாங்க போய் அந்த கழுகு மலை பற்றின தகவல்களை சேகரிச்சுட்டு வரோம்....முடிஞ்சா இந்த புதன் கிழமையே அங்கே போகலாம்...." என்றார் மஹிதரைப் பார்த்து....



"இந்த விசயத்தை உங்க அப்பா அம்மா கிட்ட சொன்னீங்களா?" என்று கேட்டார் சிவா...


"இல்லை சார்....எங்க அப்பா ஒரு ஹார்ட் பேஷன்ட்...நான் ஒரே பையன் வேற....இந்த விசயத்தை அவர்கள் எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலை" என்றார் மஹிதர்....


"அதுவும் சரிதான்.....தரங்கிணி சொல்றது போல இது ஒரு சப்பை மேட்டராகக் கூட இருக்கலாம்....உங்க நண்பர்கள் யாராவது உங்க கூட விளையாடலாம்"


"ஓகே சிவா..இந்த ஓலை எப்படி அந்த புக்குல வந்திருக்கும்?" "அப்படின்னா அந்த எதிரி அல்லது நண்பன் இங்க வந்திருக்கணும்....இன்னைக்கு" என்ற விக்ரம் மஹிதரிடம் திரும்பி "மஹிதர் நீங்க அந்த பாப்பாவோட அம்மா கிட்ட விசாரிங்க அந்த புக்கை யார் கொடுத்தான்னு தெரியணும் , உடனே உள்ள போங்க, நாங்க கிளம்பறோம்" என்றார்...


நாங்கள் மூன்று பேரும் காரில் ஏறிக் கிளம்பினோம்.....வானம் இருண்டு பேய்மழை கொட்டும் போல தோன்றியது....நான்கைந்து மேகக் கூட்டங்கள் ஒன்று திரண்டு வானத்தில் ஒரு ராட்சஷ கழுகு உட்கார்ந்திருப்பது போல தோன்றியது....


~தொடரும்


முந்தைய அத்தியாயங்கள்:

1
2
3

4



5 comments:

Anonymous said...

ennathu ituhu, periya periya kathaiellam eluthittu, commnetskku assai padarthu, chinnapullathanamala irukku.

சமுத்ரா said...

கமெண்டே வரலைன்னா யாருமே இல்லாத கடைல டீ ஆத்தற ஃபீலிங் வருது கோகுல் .... :(

சமுத்ரா

எல் கே said...

மன்னிக்கணும் முதல் பாகம் எழுதினப்ப வந்தேன் அப்புறம் வர டைம் இல்ல.. இனி வருவேன். ரொம்ப இன்டரஸ்டிங்க இருக்கு.... தொடர்ந்து எழுதுங்கள்

Anonymous said...

unga feelings puriyuthu.

adhvaithan said...

SAMUDRA.. great sir neenga... simply going fine.. enoda comment pona episodekum potruken.. konjam padinga.. naa thodarntu varuven.. comment panven :):) keep rocking boss