இந்த வலையில் தேடவும்

Friday, October 8, 2010

மஹிதர் நீ மறைந்து விடு!-3 (திகில்)


கோவணத்தாண்டி சொல்வது:

ஊத்தை குழிதனிலே மண்ணை எடுத்தே
உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
வறையோட்டுக்கும் ஆகாது என்று ஆடுபாம்பே


மறு நாள் காலை பதினொரு மணிக்கு மஹி வருவதாக சொல்லியிருந்தான்.... பத்து மணிக்கு சுமாருக்கு ஒரு பெண் வந்து "சார் எனக்கு ஆம்பளைங்களைப் பார்த்தா அப்படியே கழுத்தை நெரித்து கொல்லனும்னு ஒரு உணர்வு வருகிறது...." என்றாள்....

தரங்கிணி என் பக்கம் குனிந்து "பாஸ் எதற்கும் போலிசுக்கு போன் பண்ணிடட்டா? நல்ல வேளை நான் ஆம்பளை இல்லை" என்று கிசுகிசுத்தாள்...

.அந்தப் பெண்ணிடம் சில ஃபார்மலான கேள்விகளைக் கேட்டு விட்டு இரண்டு வாரம் 'கவுன்சிலிங் ' வரும்படி கூறி அனுப்பினேன்...

தரங்கிணி " சார் இந்த வேலையை விட்டு நான் கூடிய சீக்ரம் எஸ் ஆகிடலாம்னு இருக்கேன்" என்றாள்...

அவள் ஒரு ஜாலி பேர்வழி என்று தெரிந்திருந்தும் நான் "ஏன் தரங்" என்றேன்...

"பின்ன என்ன சார்,,,, நட்டு போல்டு கழண்ட கேஸ் எல்லாம் வந்து கழுத்தருக்கறாங்க....என்னவோ ஆபீஸ் போனமா கம்ப்யூட்டர் முன்னாடி எட்டு மணி நேரம் உட்கார்ந்தமா மாசம் ஆனதும் ஐந்திலக்க சம்பளம் வாங்குனமான்னு இல்லாம இங்க உங்க கூட கழுகு, நரி, ஒட்டகம்னு கதை கேட்க யாரால ஆகும்?" நான் போறேன் என்றாள்

நான் புன்னைகைத்து விட்டு நிமிர்ந்ததும் மஹிதர் நின்றிருந்தான் , நிமிஷாவுடன்,,,,

,"குட் மார்னிங் , இது தான் நிமிஷா" என்றான்...

நிமிஷா ஐன்ஸ்டீன் சொன்னது போல் மணிகளை நிமிஷங்களாக்கும் வரம் பெற்றிருந்தாள்.....

"ஹாய் நிமிஷா,, ....ஐயம் விக்ரம் அப்புறம் சொல்லுங்க, உங்களைப் பற்றி" என்றேன்...

.தரங்கிணி குறுக்கிட்டு "சார் ப்ராப்ளம் மஹிதர்க்கு" என்றாள்...

அது வரை மஹியை மறந்து விட்டிருந்த நான் அவனிடம் திரும்பி ," அப்புறம் மஹி , என்ன நேற்று திரும்பவும் கழுகு வந்துச்சா" என்றேன்...

அவன் சோர்வாக "எஸ்" என்றான்....

நிமிஷா "அந்தக் கனவு வந்ததிலிருந்து மஹி இப்படி தான் சார், ஆளே மாறிட்டான்..... முதல்லே எல்லாம் ஜாலியா இருப்பான்..இப்ப அவன் கடைல 'human psychology ' செக்ஷன்லபோய் உட்காந்துட்டு குண்டு குண்டு புக்கெல்லாம் படிக்கறான்....ஒன்பது மணிக்கு மேல எங்கயும் வெளிய போறதே இல்லை....அன்னிக்கு இப்படி தான் சார், நாங்க ரெண்டு பெரும் சினிமாக்கு டிக்கெட் புக் பண்ணியிருந்தோம்....வெளியே புறப்படறப்ப மேல ஒரு கழுகைப் பாத்துட்டு நிமி இன்னிக்கி நம்ம ப்ரோக்ராம் கான்செல் அப்படின்னு சொல்லிட்டு உள்ள ஓடிட்டான் .....சார் மஹியை எப்படியாச்சும் cure பண்ணுங்க "

என்றாள்....மஹி அவளைப் பார்த்து "நிமி என்ன என்னவோ மெண்டல் கேஸ் மாதிரி சொல்றே" என்றான்

நான் நிமிஷாவிடம் திரும்பி " இது ஒரு சிக்கலான கேஸ் மிஸ் .நிமிஷா...அந்தக் கனவு எதனால் வருது என்று இன்றைக்கு அவரை ஹிப்னாடைஸ் பண்ணிப் பார்க்க வேண்டும்....உங்களுக்கு மஹிதரை எத்தனை நாளாகத் தெரியும்? என்றேன்...

"ரெண்டு வருசமா...இன்னும் ஒரு வருஷம் கழித்து மேரஜ் பண்ணிக்கலாம் னு இருந்தோம்".... இப்ப இந்த problem வேற...இவன் எங்க சாமியாராப் போயிருவானோன்னு பயமா இருக்கு என்றாள்...

கவலைப் படாதீங்க ,after all ஒரு கனவு தானே என்று சொல்லி தரங்கினியிடம் திரும்பி "தரங், ரூம் ரெடியா இருக்கா அந்த டேப்-ரெக்கார்டரை ரெடி பண்ணு" என்றேன்...

ஒரு மணி நேரம் மஹிதரை ஹிப்னோ செய்ததில் பெரிதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை....he seemed to be a typical youngster ...வாழ்க்கையின் கனவுகளுடன் வாழும் சாதாரண இளைஞன்...பணம் சம்பாதித்து கல்யாணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டு என்று சாதாரணமான கொண்டுகள்...


திரும்பி வந்ததும் நிமிஷாஎன்ன ஆச்சு?” என்றாள்...

."no go நிமிஷா..." எனக்கு என்னவோ இது ஒரு சைக்காலஜி கேஸ் மாதிரி தெரியவில்லை.... there should be something beyond

...நிமிஷா "what do you mean Mr. .Vikram ?" என்றாள் பதட்டமாக...

பயப்படாதீங்கமண்டைக்காடு பகவதியம்மன் கோவிலுக்கெல்லாம் போகச் சொல்ல மாட்டேன் ….என்னுடைய close friend சிவான்னு ஒருத்தன் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி நடத்துகிறான்....ரொம்ப அறிவுப்பழம்....அவனைப் பார்த்து மஹிதர் விஷயமாகப் பேசலாம் என்று இருக்கிறேன்என்றேன்....


நாளை மறுநாள் திரும்பவும் வரவும் என்றேன்...மஹிதர் உள்ளிருந்து வந்து சார் நீங்களும் தரங்கினியும் நாளைக்கு கடைக்கு வரணும்....சண்டே தானே? என்றான்

"why not ? sure என்றேன்...தரங்கிணி "மஹி அந்த psychology செக்சன் மாத்திரம் நாளைக்கு மூடிடுங்க...ஆள் உள்ள போனா ஐக்கியம் ஆயிடுவார்"...என்றாள்

அவர்கள் போனதும் தற்செயலாக வெளியே பார்த்தேன் ..வானத்தில் ஒரு ஒற்றைக் கழுகு எதற்கோ வட்டமிட்டுக் கொண்டிருந்தது....

தொடரும்....

முந்தைய அத்தியாயங்கள்

1
2

2 comments:

Anonymous said...

எல்ல கதைலயும், ஒரு கேரக்டர் அறிமுகம் செய்றப்போ அந்த கேரக்டர் பத்தி சொல்லுவாங்க, அதாவது அவங்களோட முகம், உடல், ஆடையை பத்தி சொல்ல்வாங்க, சரியா??

சமுத்ரா said...

i dont want to follow the traditional approach :)