இந்த வலையில் தேடவும்

Friday, December 2, 2016

புலன்

அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது.


இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா? எந்த நிகழ்வு? எந்த உலகம்?

சொல்கிறேன்.

உலகம் என்றால் நம் உலகம் அல்ல. நம் தாய் பூமி அல்ல. நம் பூமி அல்ல. நாட் அவர் பேல் ப்ளூ டாட். இன்னொரு சோலார் சிஸ்டம். இன்னொரு பூமி-நிகர் உலகம். நம் பூமியில் இருந்து சில மில்லியன் ஒளி வருடங்கள் தொலைவில். ஆனால் பூமியின் டிட்டோ.


அங்கே இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள். H 1 மற்றும் H 2. கி.பி. 2300 இல் நம் பூமி மிகப்பெரிய அழிவை சந்தித்தது.  ஆஸ்டிராய்டு இம்பாக்ட் ஒன்றில் மனித குலம் கிட்டத்தட்ட அழிய இருந்த போது எங்கிருந்தோ வந்த மகானுபாவர்களான இவர்கள் தான், அதாவது H 1 மனிதர்கள் அழிவின் விளிம்பில் இருந்த   H 2 மனிதர்களை  காப்பாற்றினார்கள். ஒரு ஆயிரம் பேரை மட்டும் விண்கலத்தில் ஏற்றி தங்கள் சொந்த கிரகத்துக்கு அவசரமாகக் கொண்டு போனார்கள். அது நடந்து ஒரு 1000 வருடங்கள் 10 தலைமுறைகள் ஆகி விட்டன. எனிவே, பூமியைப் போன்றே வேறு கிரகங்களும் மனிதர்களை அச்சடித்து போல வேற்றுக் கிரக வாசிகளும் இருப்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ரீட் ஆன்.


 குடியேறிய மனிதர்கள்  இந்தப் புதிய பூமியின் பிரஜைகள் என்ற போதிலும் அவர்களுக்கு அங்கே இரண்டாம் அந்தஸ்து தான். சிலர் அவர்களை  உள்ளூர வெறுக்கக் கூட செய்தார்கள். வந்தேறிகள் என்பதாலோ என்னவோ. வந்தேறி  மனிதர்கள் இங்கே H2 என்று அழைக்கப் பட்டார்கள். H 2க்களுக்கு அங்கே உயர் பதவிகள் இன்னும் கிடைக்கவில்லை. ஓட்டுரிமை கூட இப்போது தான் சமீபத்தில் பெரும் போராட்டத்துக்கு அப்புறம் கிடைத்திருக்கிறது. H2 க்கள் இரண்டாம் தரமாக நடத்தப்பட்டதன் இன்னொரு காரணம் H 2 மனிதர்களுக்கு இல்லாத ஒரு எக்ஸ்ட்ரா புலன் ஒன்று H 1 மனிதர்களுக்கு இருந்தது. அல்லது இருப்பதாக நம்பப்பட்டது. அதாவது ஆறு புலன்கள்.


இதையெல்லாம் விட முக்கியமானதொரு காரணம் இந்த இரண்டு இனங்களும் ஒன்று சேர முடியாதது தான். H1 ஆணும் H2 பெண்ணும், H 1 பெண்ணும் H2 ஆணும் இணைந்து பாப்பாவாவை உருவாக்க முடியவில்லை.

சில சமயங்களில் அபூர்வமாக கரு உருவாகி இரண்டு மூன்று மாதங்களில் தானாகவே அபார்ட் ஆகியது. மனிதர்களும் சிம்பான்சி யும் இணைந்து ஹ்யூமான்சி வர முடிவதில்லை அல்லவா...அப்படி!



சரி. இப்போது  H 2 தம்பதிகளான பவன் மற்றும் பிருத்வி நியூஸ் ரிபோட்டர்கள். அவர்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்ப்போம்.



பவன் பாத்ரூமின் கதவை பொறுமை இன்றி இடித்தான்.


"எத்தனை நேரம், பிருத்வி?"

சோப்பின் நறுமணம் கதவை ஊடுருவிக் கொண்டு வெளி வந்த வண்ணம் இருந்தது.

"டன் !"

பிருத்வி கதவைத் திறந்து கொண்டே உடம்புக்குப் போதாத டவல் ஒன்றை தரித்துக் கொண்டு வெளி வந்தாள் .


"இரு, என்ன அவசரம், 12 மணிக்கு தானே ஹாஸ்பிடலுக்கு போகணும்?"


"ப்ருத் , இது ஒரு ஹிஸ்டரிகல்  ஈவென்ட்...இப்பவே ஹாஸ்பிடல் நிரம்பி வழியும் "


நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் பிருத்வி டவலை உடலினின்றும் உருவி எடுத்தாள் .பர்த் டே சூட்டில் கொஞ்ச நேரம் அங்கே இங்கே வளைய வந்தாள் .

"வொரி நாட், டார்லிங், ஹாஸ்பிடல் நர்ஸ் ஒருத்தி கிட்ட சொல்லி வைத்திருக்கிறேன்"

"கொஞ்சம் சதை போட்டுட்ட போல" என்று அவள் இடுப்பை கிள்ளினான்.

"ஓகே, ஓகே கெட் ரெடி"

"வி ஹாவ் ப்ளென்டி ஆப் டைம்..இன்னும் எங்கே எங்கே சதை போட்டிருக்கிறாய் என்று பார்ப்போமா..."
"நோ...ஓஒ.."

பிருத்வி அவசரமாகத் தன் ரிப்போர்ட்டர் சூட்டை மாட்டிக் கொண்டாள் .

வினவினாள்:

"ஆமாம் பவன், H 1 உண்மையிலேயே நம்மை விட உயர்ந்தவர்களா?"

"அப்படி தானே சொல்றாங்க!"


ஹாலில் ம்யூட் ஆக்கி வைக்கப்பட்டு ஓடிக் கொண்டிருந்த டி .வி யை பார்த்தபடி இருந்தான் பவன். எல்லா சானல்களை அதையே லைவ் ஆக ஒளிபரப்பிக்கொண்டிருந்தன.


[. H 1 மனிதர்களின் அந்த எக்ஸ்ட்ரா புலன் 'தமா ' என்று அழைக்கப்பட்டது. இந்தப் புலன் இருப்பதற்கு சாட்சியாக ஹெச்.1 மனிதர்களின் நெற்றியில் உதடு போன்ற ஒரு  சிறியதொரு உறுப்பு இருந்தது. இதைத் தமான் என்று அழைத்தார்கள். இந்த அதிகபட்ச புலன் அனுபவம் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பது கூட H 2 மனிதர்களுக்கு கஷ்டமாய் இருந்தது. H 1 களை பொறுத்தவரை H 2 க்கள் ஊனமுற்றவர்கள். ஒரு புலனின் அனுபவம் குறைந்தவர்கள். குருடர்கள், செவிடர்கள், ஊமைகள் நமக்கு எப்படியோ அப்படி. புலன்களின் அனுபவம் qualia என்பதால் அது எவ்வாறு இருக்கும் என்று H 2 மனிதர்களுக்கு விளக்க H 1கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். நான் பார்க்கிறேன், பார்வை என்றால் என்ன என்று ஒரு குருடனுக்கு எப்படி விளக்க முடியும்?


H 2 ஆட்கள் வேறு விதமாக சிந்தித்தார்கள்.இந்த சமாச்சாரத்தை கட்டுக்கதை என்றார்கள். உண்மையிலேயே H 1 மனிதர்களுக்கு எக்ஸ்ட்ரா புலன்கள் இல்லை என்றும் அவர்கள் நெற்றியில் ஒட்டிக் கொண்டிருக்கும் உறுப்பு வெறும் ஜெனெடிக் மியூட்டேஷன் என்றும் வாதிட்டார்கள். தம்மை ஏமாற்ற, காலம் காலமாக அடிமை செய்ய , தங்களை ஒருபடி தாழ்வாகக் காட்ட அவர்கள் ஒரு மரபுப் பிழையை எக்ஸ்ட்ரா சென்ஸ் என்று கதை கட்டி விட்டுவிட்டார்கள் என்று நம்பினார்கள். அந்த உறுப்பால் எந்த ஒரு பயனும் இல்லை . ஜஸ்ட் தேர் . ஆணின் நிப்பிள் போல.

தங்கள் புலனை objective ஆக நிரூபிக்க முயன்ற முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன H 1 களுக்கு. ]

"அவர்களின் எஸ்ட்ரா புலன் வழியே இந்த உலகம் எப்படி இருக்கும் பவன்?"

"இன்னும் இன்னும் ரிச் -ஆ "

"அப்போ அதை ஏன் பரிணாமம் நம் H 2 மனிதர்களுக்கு கொடுக்கலை"

"ஐ டோன்ட் நோ. வி  கேன் டூ வெல் வித்அவுட் இட் "

"அப்ப நாம் பார்ப்பது, உணர்வது எல்லாமே ரியாலிட்டி யின் ஒரு சிறிய பகுதி தானா?"

"கண்டிப்பாக" என்றான் பவன்.

"இப்போ H 1 பெண்ணுக்கும் H 2 ஆணுக்கும் பிறக்கப் போற குழந்தைக்கு அது , அந்த கூடுதல் புலன் இருக்குமா?"


"அது தானே இப்போது எல்லோரின் கேள்வியும்!"


பிருத்வி ஒரு சிறிய பெருமூச்சை விட்டபடி தொடர்ந்தாள் .


"ஹ்ம்ம்..இந்தக் குழந்தைக்கு தான் எத்தனை ஆராய்ச்சிகள், எத்தனை போராட்டங்கள், எத்தனை கேஸ்கள்..எத்தனை எதிர்ப்புகள்..finally they made it "!



[பிருத்வி சொல்வது உண்மை தான். H 1 க்கும் H 2 க்கும் இயற்கையிலேயே குழந்தை உருவாகவில்லை. க்ரோமசோம்-களின் எண்ணிக்கை சமமாகவே இருந்தாலும் கூட.  எக்ஸ்ட்ரா புலன் உள்ள ஒரு பெற்றோரிடம் இருந்தும் எக்ஸ்ட்ரா புலன் அற்ற இன்னொரு பெற்றோரிடம் இருந்தும் ஜீன்களை பெற்று குழந்தையை உருவாக்குவதில் சிக்கல் .இதையே தங்களின் எக்ஸ்ட்ரா சென்ஸை நிரூபிக்க H 1 கள் பயன்படுத்தினார்கள். H1-H2  கர்ப்பம் 99.999% கலைந்து விடும் என்பதால் இரண்டு இனமும் இணைவது இந்த பூமியில் சட்டப்படி குற்றம். அதுவும் H 2 ஆண் H 1 பெண்ணை அவள் சம்மதம் இன்றி  கூடி விட்டால் மரண தண்டனை தான்! பழைய பூமியில் இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் H1-H2 இணைதல் ஒரு ஹோமோசெக்ஷுவல் ரிலேஷன்ஷிப் போல. காதலிக்க முடியும்;இணைந்து வாழ முடியும். ஆனால் குழந்தை பெற முடியாது. ஆனாலும் இரண்டு இனங்களும் திரை மறைவில் இணைந்து கொண்டு தான் இருந்தார்கள். ஆங்காங்கே my love my right என்ற பதாகைகளைத் தாங்கிய போராட்டங்கள் நடந்தபடி தான் இருந்தன. பொதுவாக ஹெச்.1 கள் மீது ஹெச். 2க்களுக்கும்  ஹெச்.2 கள் மீது ஹெச். 1 க்களுக்கும் அதிகப்படியாக ஈர்ப்பு வரவில்லை.நெற்றியில் உறுத்திக் கொண்டிருந்த  உதடு போன்ற அந்த அறுவறுப்பான  தமானை H 2 க்கள் வெறுத்தார்கள். face pu *** என்று அதை வசை பாடினார்கள். அதே சமயம் பாழும் நெற்றியுடன் இருந்த H 2 க்கள் மீது H 1 கள் அதிக ஈடுபாடு காட்டவில்லை. நெற்றியில் உள்ள உதடு மூலம் இரண்டு H 1 கள் முத்தமிடுவதை ஆகா என்ன தேவானுபவம் என்று அவர்கள் சிலாகித்தார்கள். H 2க்கள் மூளி கள் என்றும் தங்கள் முன்னோர்கள் அவர்களை எங்கிருந்தோ இங்கே கொண்டு வந்து விட்டது மிகப்பெரிய தவறு என்றும் வருத்தப்பட்டார்கள்."கோ பேக் டு யுவர் ஓன் வேர்ல்ட் " என்று சில இன வெறியர்கள் போராட்டம் கூட நடத்தினார்கள்.


நல்லவர்கள் சிலர் , ஹ்யூமனிஸ்ட்ஸ், இரண்டு இனமும் இணைந்து சந்ததிகளை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இந்த இணைவு காலம் காலமாக நிலவி வரும் பகைமையை முடிவுக்குக் கொண்டு வரும் என்று நம்பினார்கள்.விஞ்ஞானிகளை டி .என். ஏ ஆராய்ச்சிக்கு தூண்டினார்கள். பல்வேறு சட்ட சிக்கல்கள் எழுந்தன. பிறக்கப் போகும் குழந்தையை எந்த இனத்தில் சேர்ப்பது என்றும் அதற்கு இன்னொரு குழந்தையை உருவாக்கும் fertility இருக்குமா என்றும் கேள்விகள் எழுந்தன.


பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆராய்ச்சி ரீதியாக மட்டும் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொள்ள கோர்ட் ஆதரவு கொடுத்தது...


மீண்டும் நாம் பவன், பிருத்வியை தொடர்வோம்.


பவனும் பிருத்வியும் ஹாஸ்பிடலுக்கு செல்லும் போது அங்கே வரலாற்று சிறப்பு மிக்க ,H 1 H 2 வின் முதல் இணைப்புப் பாலம் பிறந்திருந்தது. இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த அந்த சவலை ஆண் குழந்தையை ஆயிரக்கணக்கில் கேமராக்கள் மொய்த்தன.

டாக்டர்கள் வெயிட்  வெயிட் என்று இறைந்து கொண்டிருந்தார்கள் . H 1 பெண் வாசிகா பெருமையடன் படுக்கையில் படுத்திருந்தாள். அருகில் அவன் H 2 கணவன் தயாள்.



உலகமே எதிர்பார்த்த அந்த விஷயம்: ஆம் குழந்தைக்கு நெற்றியில் அழகாக ஒரு குட்டி தமான் இருந்தது.


H 1 கள் ஆரப்பரித்தார்கள். சந்தோஷத்தில் கோஷம் போட்டார்கள். H 2 க்களோ அவர்களின் ஜெனிட்டிக் குறைபாடு அந்த எஸ்ட்டிரா உறுப்பு குழந்தைக்கும் தொடர்வதாக வாதிட்டார்கள்.
குழந்தைக்கு இரண்டு இனங்களையும் இணைப்பவன் என்ற பொருளில்  சம்வர் என்று பெயர் சூட்டப்பட்டது.


சம்வர் பையன் ஆரவாரமாக வளர்ந்தான்.  அப்பா செல்லம் அவன்.


சம்வருக்கு 15 வயது ஆகும் வரை அவனுக்கு தமான் என்ற புலனின் அனுபவம் இருக்கிறதா என்று சோதனை செய்ய கோர்ட் தடை விதித்திருந்தது. அந்த வயதில் தான் சரியாக விவரம் வரும் என்று ஏனோ கோர்ட் நம்பியது.

வாசிகா மட்டும் அவனுக்கு புலன் இருப்பதாகவும் அந்தப் புலனின் வழியே அவனால் தன்னோடு தொடர்பு கொள்ள முடிவதாகவும் வாதிட்டுக் கொண்டிருந்தாள் .


சம்வரின் பத்தாம் வயதில் அந்த கொலை முயற்சி நடந்தது.



.


..


..


வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சம்வரை கார் ஏற்றிக் கொள்ள முயன்றார்கள். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான் சம்வர்.



H 1 கள் H 2க்கள் மீது பழி போட்டார்கள். சிம்பிள்.  H1 H2 கலவியில் பிறக்கும் குழந்தை கூட H 1 தான் என்று தெரிந்து விட்டது. இப்படியே போனால் ஒருநாள் H 2 இனம் கூண்டோடு அழிந்து விடும் என்று இப்போதே குழந்தையை தீர்த்துக் கட்டி விட H 2க்கள் முனைந்து விட்டதாக குற்றம் சாட்டினார்கள். H 2 க்கள் இதை மறுத்தார்கள். அன்றிலிருந்து சம்வரின் வீட்டுக்கு இரண்டடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஸ்கூலுக்கு போகவும் அவனை போலீஸ் எஸ்கார்ட் செய்தது.


ஒரு நாள். அழகிய மாலை நேரம். சம்பவர் வீட்டின் முன் பக்கம் இருக்கும் புல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். வாசிகா  அருகே இருந்த டைனிங் டேபிளில் உட்கார்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்தாள் . தயாள் மகனை முதுகில் யானை ஏற்றி விளையாடிக் கொண்டிருந்தான். வாருங்கள்.அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்போம்.


"என்னங்க இது, பையனுக்கு 11 வயசு ஆச்சு...இன்னும் யானை விளையாடிக்கிட்டு"


"இவனுக்கு எழுபது வயசு ஆனாலும் இவன் என் செல்ல மகன் தாண்டி...இல்லடா கண்ணா!"

"சரி சரி..அப்பா வும் மகனும் பாசத்தை காட்ட ஆரம்பிச்சா என்னைக் கூட மறந்துருவீங்க.."


"வாசிகா !"

"சொல்லுங்க"

"உன்னை ஒன்று கேட்பேன்"

"உண்மை சொல்லனுமா?"

"உள்ளதை சொல்லு!"

"கேளுங்க..."


"உங்களுக்கு, உங்கள் இனத்துக்கு  உண்மையிலேயே எக்ஸ்ட்ரா புலன் ஒண்ணு இருக்கா!?"


"ஐயோ, இதை நீங்க இதோட பத்தாயிரம் முறை கேட்டாச்சு!" என்றாள்  

."இருக்கு, இருக்கு, இருக்கு!"

"அப்ப எனக்கு நிரூபி!"

"இதைப் பாருங்க தயாள், உங்களுக்கு வாசனையை நுகர முடிகிறதா? அதை நுகர முடிகிறது என்று எப்படி நிரூபிப்பீர்கள்?"


"ஓகே...ஸோ இப்ப நான் உன்னைப் .பார்க்கிறேன்....பார்வை!"

"ஓகே..

"நீ பேசுவதைக் கேட்கிறேன்....சத்தம்!"


"..."


"உன் கூந்தல்ல இருக்கிற அந்த அழகான ரோஜாவின் வாசனை....நுகர்ச்சி!"
"இப்ப உன்னைத் தொடரின்.....ஸ்பரிசம்"

தயாள் , வாசிகாவின் அருகில் சென்று அவள் கன்னத்தை நக்கினான்.

"சீ என்ன இது , விடுங்க....பையன் முன்னாடி!"

"உன் கன்னம் லேசா உப்புக் கரிக்குது"

"ஹ்ம்ம்.."

"இந்த ஐந்தைத் தவிர வேறு என்ன புலன்? அதை நீ உணர்கிறாயா?"
"கண்டிப்பாக, அந்த அனுபவம் உலகம் எங்கும் பரவி இருக்கிறது..உங்களால் அதை உணர முடியவில்லையா? அங்கே பாருங்கள் நம் குழந்தை சம்வர் அவனை உங்களால் தாமானிக்க முடியவில்லையா?"

"தமானித்தல் என்றால்?"

"போச்சுடா...."

"அது எதற்கு அருகில் வருகிறது வாசிகா ? கேட்டல், நுகர்தல், தொடுதல்?"

"எதற்கு அருகிலும் இல்லை,,,இது முற்றிலும் வேறுபட்ட ஒரு புலன் "


"குழப்பாதே, வாசிகா !இதை ஏன் இயற்கை எங்களுக்குக் கொடுக்கவில்லை ?"

"நீங்கள் வேறொரு கிரகத்தில் தோன்றியவர்கள்"

"அந்த கிரகம் இதைப் போன்றது தானே?"


"இதைப் பாருங்கள் தயாள்...இயற்கை ஏன் ஐந்து புலன்களை கொடுத்தது? பார்வை ஒன்றே போதாதே? வேட்டையாடும் மிருகம் நம்மை நெருங்குகிறது என்று பார்வை ஒன்று இருந்தாலே கண்டுபிடித்து விடலாம் அல்லவா? பார்வையை எப்போதும் நம்ப முடியாது. எப்போதும் 360 டிகிரி கவரேஜ் கிடைக்காது. எனவே எதிரியின் காலடி ஓசை கேட்க வேண்டும்..எனவே காது வந்தது. மேலும் உணவு கெட்டுபோய் விட்டதா என்று அறிய காதும் கண்ணும் அவ்வளவாக துணை செய்யாது. அதற்கு வாசனையும் சுவையும் வேண்டும்..தொடு உணர்ச்சி வலி வேண்டும்...இல்லை என்றால் உடலில் காயம் பட்டாலும் உயிர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்கும்.."
"சரி, இங்கே ஆறாவது புலன் எங்கிருந்து வருகிறது?"
"மற்ற ஐந்தும் போதாத போது "


"யு மீன்?"

"சளி வந்தால் உங்கள் நாக்கும் மூக்கும் படுத்து விடுகின்றன. ஆனால் எங்களுக்கு சளி வந்தாலும் ஓர் உணவு உண்மையிலேயே சுகாதாரமானது தானே என்று கண்டுபிடிக்க முடியும்...தமான் இருக்கிறதே?"

"உணவு தமானை வெளியிடுமா?"

"தமான் என்பது பொருட்களின் பண்புகளில் ஒன்று.."


"..."


பவன் நம்பவில்லை..


"ஏன் டார்லிங் காலம் காலமாக இப்படி ஒரு பொய்யை கட்டி விடுகிறீர்கள்? எங்களை விட நீங்கள் ஒரு படி மேலே இருந்து என்ன சாதித்தீர்கள்? ஏன்? எல்லாரும் சரி சமமாக வாழ்ந்தால் என்ன?எங்களை ஏன் மாற்றுத் திறனாளிகள் என்கிறீர்கள்?ஏதோ ஒரு பொருளை மாய்ந்து மாய்ந்து பர்ச்சேஸ் செய்கிறீர்கள் ...அது எங்களுக்கு மண் உருண்டை மாதிரி தான் இருக்கிறது ..ஒருநாள் அதில் இருந்து தமா அதிகமாக வருகிறது என்று தூக்கி எறிந்தாயே ..ஒருநாள் நான் உனக்கு ஆசையாக அந்த உருண்டையை வாங்கி வந்த போது  சீ சீ கெட்ட தமா என்றாயே, எனக்கு எல்லா உருண்டையும் ஒரே மாதிரி தான் இருக்கிறது..சில சமயம் சில இடங்களுக்கு சென்றால் நெற்றியை மூடிக் கொள்கிறாய்...சில சமயம் சில பொருட்களை ஆசையாக நெற்றியின் அருகில் கொண்டு செல்கிறாய்...உங்கள் இனத்தவர் வீடுகளில் நெற்றியை மூடிக்கொண்ட குரங்கு பொம்மை கூட இருக்கிறது."

வாசிகா கொஞ்சம் கடுப்பானாள் .


"இதைப் பாருங்க தயாள், இது கட்டுக்கதை அல்ல,,,உண்மை! நாங்கள் வாங்கும் அந்தப் பொருள் தாமானீஸ் ...ஊதுபத்தி வாங்குவதில்லையா? சி.டி பிளேயர் வாங்குவது இல்லையா? அப்படி...எங்கள் தமானுக்கு அது விருந்தளிக்கிறது ...அந்தப் புலனே இல்லாத உங்களுக்கு அது மண் உருண்டை மாதிரி தான் இருக்கும்...வாசனை அறிவில்லாதவன் ஊதுபத்தியை வீண் என்பான். மல்லிகைப் பூவை மூக்கின் அருகில் கொண்டு சென்று வாசனை பிடிப்பதில்லையா? அப்படித்தான்."


"அம்மா, பசிக்குது" என்றான் சம்வர்.

"இங்க வாடா, " என்றான் தயாள். "உனக்கு தமான் இருக்கா?"

நெற்றியை சுட்டிக் காட்டினான் .

"அது நல்லா வேலை செய்யுதா?"

"போப்பா, எனக்கு பசிக்குது!" உள்ளே ஓடினான்.

"உள்ளே ஸ்டராபெரி இருக்கு பாரு, சாப்பிடு, தமானுக்கு நல்லது!"


தயாள் எரிச்சலுடன் உள்ளே போனான். சம்பவர் அப்பாவின் முதுகில் அன்புடன் உப்பு மூட்டை ஏறிக் கொண்டான்.


***


ஒரு வாரம் கழித்து தயாள் அலுவலகத்தில் இருந்த போது அவனுக்கு போன் ஒன்று வந்தது.


"சார், உடனே ஸ்கூலுக்கு வாங்க, உங்க பையன் மயங்கி விழுந்துட்டான்"


தயாள் போட்டது போட்டபடி ஓடினான்.


சமீபத்திய புரட்சியின் போது சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்து விட்டதால் H 1 பிள்ளைகளுக்கும் H 2 பிள்ளைகளுக்கும் தனித்தனி ஸ்கூல்.

சம்வர் H 1 களின் பள்ளியிலேயே படித்து வந்தான். பொதுவாக அங்கே H 2 க்களுக்கு அனுமதி இல்லை. இருந்தாலும் இப்போது உள்ளே விட்டார்கள்.


***


தயாளும் வாசிகாவும் அழுதபடி நின்றிருந்தார்கள்.


ஹாஸ்பிடலில் டாக்டர் அந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.


"மனசை திடப்படுத்திக்கங்க, தயாள், உங்க பையனுக்கு 15 வருடம் தான் ஆயுசு.. அவன் இதுவரை உயிர் வாழ்ந்ததே அதிசயம்..ஜெனிடிக் குறைபாடுகளால் , செயற்கை முறையில் பிறந்ததால், அவன் உடம்பு முழுவதும் உள் உறுப்புகள் 90%செயலிழந்துவிட்டன. வி காண்ட் ஹெல்ப் ஹிம் எனி பர்தர் ...விஷ் ஹிம் குட் பார்வெல் ..."


தயாள் அப்படியே மயங்கிச் சரிந்தான்.


*****

பிருத்வியும் பவனும் மறுபடி ரெடி ஆகிக் கொண்டிருந்தார்கள்.


15 வருடங்களுக்கு முன்பு இருந்த உற்சாகம் அவர்களிடம் மிஸ்ஸிங்...இப்போது அவர்களுக்கு கம்பெனியில் பிரமோஷன் எல்லாம் வந்து விட்டிருந்த போதிலும் சம்வரின் கடைசி நிமிடங்களை தாங்களே படம் பிடிக்க அதிகாலையிலேயே எழுந்து கிளம்பி விட்டிருந்தார்கள்.


"what an unfortunate morning" என்றான் பவன்.


"ஆமாம் பவன், H 1 மற்றும் H 2 இனத்தின் முதல் மற்றும் கடைசி பாலம் இன்று அறுந்து விழப் போகிறது..அந்தக் குழந்தை பிறந்த போது எத்தனை உற்சாகமாக இருந்தோம்!"


"...."


கனத்த மௌனத்தின் பின் பிருத்வி தொடர்ந்தாள் .


"ஆனால் ஒரு விஷயம் இடிக்குது பவன், பையன் சம்வர் தனக்கு எக்ஸ்ட்ரா புலன் ஒன்றின் அனுபவம் எதுவும் இல்லை , இது சத்தியம் என்று அறிக்கை விட்டிருக்கிறானாமே"


"அதுதான் எனக்கும் ஆச்சரியம் பிருத்வி, அப்படியானால் H 1 கள் இதுநாள்வரை நம்மை ஏமாற்றித்தான் வந்தார்களா, அவர்கள் நெற்றியில் இருக்கும் அந்த உறுப்பு பயனற்ற ஒரு இணைப்பு தானா!"

"மே பி "

சம்வரின்  வீடு.

பையன் ஒரு பெரிய படுக்கையில் ஆக்சிஜன் மாஸ்க்குடன் படுத்திருந்தான். மார்பு சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.

பத்திரிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

அவர்கள் வெளியே போலீஸ் காரர்களை கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

"சார், ப்ளீஸ், இரண்டே இரண்டு கேள்விகள்....பையனோட அப்பா, இல்லை அம்மாவை கேட்டுக்கறோம், ஜஸ்ட் டூ .."

"...சாரி, அவங்க பதில் சொல்லும் நிலைமையில் இல்லை...ப்ளீஸ் டோன்ட் டிஸ்டர்ப்"

படுக்கை அறையில் வைப்பட்டிருந்த கேமெரா சம்வரை படம் எடுத்து தொலைக்காட்சிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. நிருபர்கள் சோக முகங்களுடன் கேமிராக்கள் முன் நின்று எதை எதையோ பேசி டி .ஆர்.பி ரேட்டிங் பெறுவதற்காய் விசும்பிக் கொண்டிருந்தார்கள்.


"உங்கள் குழந்தையின் கடைசி நிமிடங்கள்" என்றார் டாக்டர். சம்வருக்கு இன்னும் கான்ஷியஸ் கான்ஷியஸ் இருந்தது.


தயாள் அவன் நெற்றியில் முத்தமிட்டான். அதுவரை அமைதியாக இருந்தவன் ஏனோ வெடித்து அழுதான்.


"சம்வர்...ப்ளீஸ் டோன்ட் லீவ் மீ...ப்ளீஸ் டோன்ட் லீவ்.......வ்வ்வ்...."


அப்படியே இடிந்து போய் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தான்..."வாசிகா, நம்ம சம்வர்,,நம் செல்லக் குழந்தை...கடவுள் அவன் கூட இருக்கும் பாக்கியத்தை நமக்கு கொஞ்ச வருடங்கள் மட்டுமே கொடுத்திருக்கார்..பாத்தியா அவன் கோலத்தை...ஒருநாள் கூட அப்பா கதை சொல்லாமல் தூங்க மாட்டானே...நேத்து கூட சொன்னான். "அப்பா நான் பிறந்ததே ஒரு லக் தானே...நான் போயிட்டா நீங்க ரொம்ப அழக்கூடாது...உங்களுக்கு ஏற்கனவே பி.பி இருக்குன்னு...அம்மாவை பாத்துக்கணும்..என்ன ஒரு ஜெம் அவன்! இனிமேல் என் முதுகில் யார் சவாரி செய்வார்கள் வாசிகா! யார்.."...


"ப்ளீஸ் காம் யுவர்செல்ப்..." டாக்டர் தேற்றினார். அவன் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தான்..


அருகில் நின்றிருந்த மத குருமார் ஒருவர் ஏதோ ஒரு ஸ்தோத்திரத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

போலீஸ் ஒருவர் வந்து "சார், உங்க பையனிடம் ஸ்டேட்மென்ட் வாங்கணும், கோர்ட் ஆர்டர் " என்றார்.

"ஏஸ்  ஹிஸ் பேரெண்ட்ஸ் இதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம்" என்றாள் வாசிகா ."ப்ளீஸ்  லெட் ஹிம் டிபார்ட் பீஸ்புலி ..."

"நான் என் பையனுடன் தனியாக கொஞ்சம் பேச வேண்டும்" என்றாள் .
 எல்லாரும் வெளியேறினார்கள்.

"நீங்களும் தான்" என்றாள் கணவனை நோக்கி..

"ராஜா, அம்மாவுக்கு ஒரு கடைசி முத்தம்"

கன்னத்தை அவன் தமான் அருகே கொண்டு சென்றாள் .

"கண்ணா, இப்போதாவது சொல்..உனக்கு உண்மையிலேயே தமான் வேலை செய்யவில்லையா? ஏன் எனக்கு வெறும் ஐந்து புலன்கள் தான் என்று கோர்ட்டிடம் சொன்னாய்? ஏன் நம் இனத்தில் பிறந்து விட்டு நம் இனத்துக்கே துரோகம் செய்தாய்?"


சம்வர் கஷ்டப்பட்டு பேசினான்.

"அம்மா, எனக்கு அந்த புலனின் அனுபவம் இருக்கத்தான் செய்கிறது... எனக்கு என் இனம் முக்கியம் தான்...ஆனால் அதை விட எனக்கு என் அப்பா முக்கியம்..

எனக்கு அவர் தான் எல்லாமே. மற்றவை எல்லாம் எனக்கு இரண்டாம்பட்சம் தான். உலகத்தின் பார்வையில் அவர் புலன் குறைந்த ஊனமுற்றவராக இருப்பதை நான் விரும்பவில்லை...என் அப்பா ஒரு முழு மனிதர்...ஒரு ஹீரோ..அதனால் தான் நான் பொய் சொன்னேன்.. மை டாட் ஈஸ் நாட் டிஸ் ஏபில்ட்..இதே மாதிரி ஒரு ஹீரோவா என் அப்பாவை வைத்திருப்பீர்கள் என்று எனக்கு நீங்கள் ப்ராமிஸ் செய்யணும்.."

வாசிகா அவனை ஆச்சரியம் அடங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் நெற்றியில் இருந்த தமான் கொஞ்சம் கொஞ்சமாக துடிப்பை நிறுத்திக் கொண்டிருந்தது....



முற்றும்..




Friday, July 8, 2016

கலைடாஸ்கோப்-112

கலைடாஸ்கோப்-112 உங்களை வரவேற்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கலைடாஸ்கோப்பில் சந்திக்கிறோம்.

காந்தம் என்பது சிறுவயதில் இருந்தே நமக்கு அறிமுகமான ஒன்று. காந்தத்தையும் ,பேப்பரையும், மணல் துகள்களையும் வைத்து பேய் உருவம் நகர்த்தி இருப்போம். மூன்றாம் வகுப்பு அறிவியல் பாடத்திலேயே
காந்தம் வந்து விடுகிறது என்று நினைக்கிறேன். காந்தம் என்பதற்கான வரையறைகள் circular ஆக இருக்கின்றன. உதாரணமாக, A magnet is a material that possesses magnetism.  Magnetism is a force produced by a magnet. இப்படி.

காந்தவிசை என்பது பிரபஞ்சத்தின் ஆதாரமான விசைகளில் ஒன்று. ஆச்சரியமாக அது மின் விசைக்கு (electrical )இரட்டையாக இருக்கிறது. மின் விசையால் காந்தமும்,காந்தத்தால் மின் விசையும் தோன்றுகின்றன.
இன்று நாம் அனுபவிக்கும் எல்லா luxury யிலும் காந்தம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்குவகிக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. நிலை காந்தங்களை சுற்றி மின் கடத்திகளை அசைக்கும் போது அதில் மின்சாரம் வருகிறது.

மோட்டார் ஒன்றை ஓட விட்டு அதில் ஒரு ஜெனெரேட்டரை இணைத்து அந்த ஜெனெரேட்டரில் இருந்து வரும் பவரை மறுபடியும் அந்த மோட்டாருக்கே கொடுத்து இப்படி இயக்க முடியுமா? இல்லை. ஏன் என்று இன்டர்நெட்டில் படித்துக் கொள்ளுங்கள். அதே போல கீழ்க்கண்ட படத்தில் இருக்கும் வண்டி ஓடாது. troll physics.


ஒரு காந்தத்தை இரண்டாகப் பிளக்கும் போது ஒன்றில் அதன் வட துருவமும் இன்னொன்றில் அதன் தென் துருவமும் சென்று விடுவதில்லை. மாறாக பிளக்கப்பட்ட ஒவ்வொரு துண்டும் N S  N S என்று தனித்தனி காந்தம் ஆகி விடுகிறது. (பூரணத்தைப் பிளந்தால் பூரணம் வருவது போல. i .e ., கொழுக்கட்டை பூரணம் அல்ல) முழுக்க முழுக்க வடதுருவம் மட்டுமே உள்ள , அல்லது தென் துருவம் மட்டுமே உள்ள காந்தம் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. இதை ஒரு analogy உடன் ஒப்பிடலாம். 100% ஆண் என்றோ 100% பெண் என்றோ யாரும் கிடையாது. after all , ஆண் ஒரு பெண்ணிடம் இருந்தும் பெண் ஓர் ஆணிடம் இருந்தும் பிறப்பதால். இரண்டு துருவங்களும் ஒருவரிடம் இருக்கின்றன.(N மற்றும் S ). முழுக்க முழுக்க ஒரு பெண்ணிடம் இருந்து பிறந்த ஆணை 100% ஆண் என்றும் முழுக்க முழுக்க ஓர் ஆணிடம் இருந்து பிறந்த பெண்ணை 100% பெண் என்றும் சொல்ல முடியும். (Or should it be other way?) ஏவாள் ஒரு ஆணிடம் இருந்து மட்டுமே பிறக்கிறாள். ஏசு ஒரு பெண்ணிடம் இருந்து மட்டுமே பிறக்கிறார் .
ஏவாள் 100% பெண்ணா? opposite உதாரணம் இந்து மதத்தில் கிடைக்கிறது. பிரம்மா முழுக்க முழுக்க ஓர் ஆணிடம் இருந்து மட்டுமே தோன்றுகிறார். (அவர் தான் 100%ஆணா ?) சீதை முழுக்க முழுக்க அம்மாவிடம் (பூமி) இருந்து பிறக்கிறாள். 

செக்ஸ் என்னதான் fascinating  ஆக இருந்தாலும் இந்த இரண்டு பேரிடமும் இரண்டு துருவங்களும் இருப்பதால் சீக்கிரமே சலித்தும் விடுகிறது. It's not a sex between N and S; it is between NS - NS . orgasm ஏற்பட்டு சமாச்சாரம் வெளியேறியதும் எல்லாமே சோபை இழந்து  என்னடா இந்தக் கருமத்துக்காகவா இத்தனை ஓட்டம் ஓடினோம் என்று சலிப்புத் தட்டுகிறது. அந்த சமயத்தில் மனிதனின் creativity பன் மடங்கு அதிகரிக்கிறது என்கிறார்கள். creative ஆன சமாச்சாரங்களை ஆரம்பிக்கும் முன் masturbate செய்து விடுங்கள் என்கிறார்கள். (இன்டெர்வியூ வுக்கு போகும் முன்னர் கூட) இதனால் உடல் கொஞ்சம் சோர்வடைந்தாலும் மூளை புத்துணர்வாகும். இத்தனை நேரம் செக்ஸ் சிந்தனைகளுக்கு சென்று கொண்டிருந்த எனெர்ஜி இப்போது கவிதை எழுத உபயோகிக்கப்படும். நிற்க. இன்னும் கூட அர்த்த ராத்திரி சானல்களில் சுய இன்பம் உலகமகா பாவம் என்ற ரேஞ்சில் டுபாக்கூர் டாக்டர்கள் ஓர் அழகிய பிகரை அருகில் அமர்த்திக் கொண்டு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்கள். 'இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்வேன்' என்கிறார் ஒருவர். 'என்னப்பா, வாழ்க்கையா வீணா போச்சே, பொண்டாட்டி உன்னை டைவர்ஸ் பண்ணிருவா ப்ளா ப்ளா  '......ஓகே . back to physics .

முழுக்க முழுக்க ஒரே துருவத்தால் ஆன காந்தத்தை magnetic molopole என்று அழைக்கிறார்கள்.( காந்தத்தின் சகோதரி மின்சாரத்தில் இது எப்போதும் சாத்தியம். முழுக்க முழுக்க + சார்ஜ். அல்லது - சார்ஜ்.)  இது சீதை, ஏவாள், ஜீசஸ், பிரம்மா போல மிகுந்த ஆற்றல் மிக்கது. இன்னொன்றின் கலவையே இல்லை. ஜீஸஸும் ஏவாளும் சந்தித்தோ, பிரம்மாவும் சீதையும் சந்தித்தோ செக்ஸ் வைத்துக் கொண்டால் அது சரித்திரமாக இருக்கும். அந்த காமத் தீயில் அவர்கள் வெந்து ஒன்றும் இல்லாமல் அழிந்தே போய் விடுவார்கள். well , புராணப்படி அவர்களுக்கு அம்மா-மகன் உறவு வருவதால் இது சாத்தியமில்லை. (unless incest fetish) அது போல north molopole ஒன்றும் south molopole ஒன்றும் சந்தித்துக் கொண்டால் ஒன்றை ஒன்று இடம் தெரியாமல் அழித்துக் கொண்டு அதன் மூலம் கிடைக்கும் ஆற்றல் பூமியையே சில வினாடிகளில் துகள் துகளாக வெடித்துச் சிதற வைத்து விடும். உண்மையான காதல், அல்லது காமம் என்பது அழிவு, பேரழிவு என்கிறார்கள் சிந்தனையாளர்கள்.
'காதலில் மரணம் ஏழாம் நிலை' என்று வைரமுத்து சொல்வதாக ஞாபகம். 

'நான்' என்பதன் அழிவு. ஆண், பெண் என்ற அடையாளங்களின் ,துருவங்களின் அழிவு. நம்முடைய அடையாளத்தை உருத்தெரியாமல் முற்றிலும் அழித்து விடும் another half ஐத் தேடிக் கொண்டிருக்கிறோம். நாம் எல்லாரும் ஆண் பெண் கலந்தவர்கள் என்பதால் அந்த perfect சங்கமத்துக்கு வாய்ப்பே இல்லை. ஒருவரை '9' என்று கேலி செய்யும் முன்னர் இந்த விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

மோனோபோல் என்பதை இன்னும் விஞ்ஞானிகள் தேடி வருகிறார்கள். துகள் முடுக்கிகளில். கிராவிட்டான் போல. ஒவ்வொரு 10 ^ 28 துகள்களுக்கு ஒரு துகள் மோனோபோல் ஆக இருக்கலாம் என்கிறார்கள். 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி Blas Cabrera என்பவர் magnetic molo pole ஒன்றைக் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தார். (Valentine 's day mono pole )ஆனால் அது equipment malfunction !!

பூமி கூட ஒரு மெகாசைஸ் காந்தம் என்கிறார்கள்.பூமியின் உள்ளகத்தில் இருக்கும் இரும்புக் குழம்புகள் வழியே ஓடும் மின்சாரத்தால் இந்தக் காந்தப்புலம் பூமிக்கு கிடைக்கிறது. காம்பஸ் ஒன்றின் வடதுருவம் பூமியின் வடதுருவத்தைக் காட்டுகிறது. வெயிட், வடக்கும் வடக்கும் ஒன்றை ஒன்று விலக்க வேண்டும் அல்லவா?நாம் உண்மையில் வடதுருவம் என்று அழைப்பது பூமி காந்தத்தின் தென் துருவம். (magnetic south pole ).பூமியின் இந்தக் காந்தப்புலம் நம்மை தீங்கு செய்யும் காஸ்மிக் கதிர்களில் இருந்து பாதுகாக்கவும் செய்கிறது.



பூமியினுடைய geographic south pole பற்றிக் கொஞ்சம் பேசலாம். பூமியின் சாய்வினாலும், வருடத்துக்கு 6 மாதங்கள் சூரிய ஒளி கிடைக்காததாலும் வெண்பனி கொஞ்சநஞ்ச  சூரிய ஒளியையும்  திரும்பப் பிரதிபலித்து விடுவதாலும் , கடல் மட்ட உயரம் காரணமாகவும் south pole மிக மிகக் குளிராக இருக்கிறது. வடதுருவத்தை விட. (வெம்மையில் இருந்து தப்பிக்க உங்கள் வீட்டு மொட்டை மாடி தளத்துக்கு வெள்ளை பெயிண்ட் அடிக்கவும். வீடு கூலாக இருக்கும்) . ஆறு மாதங்களுக்கு ஒரு முறையே சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் நடக்கின்றன.' நாளை சூரியன் உதிக்க மறந்தாலும் நான் இந்தக் காரியத்தை செய்வேன்' போன்ற 
புராண கால சபதங்களை நாம் துருவங்களில் மேற்கொள்ள இயலாது. மார்ச் முதல் செப்டெம்பர் வரை சூரியன் மறையாமல் தொடுவானிலேயே ரவுண்ட் அடிக்கும். temperature 30 டிகிரிக்கு வந்தாலே சென்னைவாசிகள் ஸ்வெட்டர், மங்கி குல்லாய் எல்லாம் தேடுகிறார்கள். தென் துருவத்தில் வெப்பநிலை -89 டிகிரி செல்ஸியஸ் வரை விழுகிறது. எந்த நாடும் சொந்தம் கொண்டாட முடியாத அண்டார்டிக் பிரதேசத்தில் இந்நாளில் 2 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஆராய்ச்சி  செய்பவர்கள். இந்தியா கூட அங்கே தட்சின் கங்கோத்ரி, மற்றும் மைத்ரி எனும் இரு ஆய்வகங்களை அமைத்துள்ளது. அங்கே என்ன ஆராய்ச்சி என்றால் புவி வெப்பமயமாதல், நுண்ணுயிரி etc மேலும் விண்கல் ஆராய்ச்சி. வெண்பரப்பின் மீது விண்கல் ஏதேனும் விழுந்தால் சுலபமாகப் பார்க்க முடியும்.

விண்கல் என்றதும் ஞாபகம் வருகிறது. பூமி மீது இரவில் தினமும் தீபாவளி நடந்து கொண்டிருக்கிறது. மேலிருந்து விழும் விண்கல் வளிமண்டலத்தில் உராய்ந்து எரிந்து விடுவதால். மற்றபடி ஒன்றிரண்டு எப்படியாவது தப்பித்து விழுந்து விடும். இவை பொதுவாக asteroid belt எனப்படும் பகுதியில் இருந்து விழுகின்றன. நம் நம் சூரிய தேவன் இரண்டு அழகான பெல்ட்-களை அணிந்து கொண்டுள்ளான். ஒன்று செவ்வாய் மற்றும் வியாழனுக்கு இடைப்பட்ட asteroid belt .இன்னொன்று கிரகங்கள் எல்லாம் முடிந்தபின் கிட்டத்தட்ட 50 AU தொலைவுக்குப் பரவிக்கிடக்கும் 
kuiper belt .இதில் உள்ள புளூட்டோ உட்பட்ட இப்படிப்பட்ட பெரிய பாறைகள் trans neptunian objects என அழைக்கப்படுகின்றன. btw செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே ஒரு கோள் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். தற்போது மிஸ்ஸிங். அஸ்டிராய்டு பெல்ட்டை அப்படி இருந்து அழிந்து போன ஒரு கிரகத்தின் மீதிகள் என்றும் , கோள் ஆவதற்கு முயற்சி செய்து தோற்றுப்போன கற்கள் என்றும் சொல்கிறார்கள்.Paul Davies என்பவர் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலத்தை ஆக்கிரமித்த ஏலியன்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக இந்த கிரகத்தை உபயோகித்துவிட்டு பின்னர் வெடிக்கச் செய்திருக்கலாம் என்கிறார்.

topic change 

யூ டியூப்பில் தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் கேட்கக் கிடைக்கின்றன.
ஜான் ஜெபராஜ் போன்றோரின் 'சத்தாய் நிஷ்களமாய் ' போன்ற பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. நிற்க. ஸ்தோத்திரம், சுதன்,
கிருபை, மாட்சிமை, ஜபம், பரலோகம், பரிசுத்தம், சகாயம், கர்த்தர்,
பிதா, ரட்சகம் ,மகிமை, பராக்கிரமம், துதி, பலி, ஆசிர்வாதம்,
கீதம், பாக்கியவான், சத்துரு, நாமம், ஜீவன் , விஷேஷம், ஐஸ்வரியம் 
அதிசயம், தரிசனம் ,தயை ,ஆத்துமா ,ஜீவிதம் போன்ற பெரும்பாலும் சமஸ்கிருத வேர் உள்ள சொற்கள் கிறிஸ்துவத்தின் உதவியால் இன்னும் தமிழில் வழங்கிக் கொண்டுள்ளன.

தேவனே என்னை ஆசீர்வதியும் 
ஜீவனுள்ள பிதாவே 
பரலோகப் பிதாவே போன்ற பிரயோகங்கள் பெருமாளுக்கும் பொருந்தும். ஆனால் கேட்டதுமே கிறிஸ்துவ வாசனை வீசிவிடும் சொற்கள்.

.ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ் செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறது போல தம்முடைய ஜனங்களை கடாட்சிகிறவரே ¨C ஸ்தோத்திரம்,

போன்ற வினோத வார்த்தைப் பிரயோகங்கள்.


நிற்க.

பேஸ்புக்கில் சண்டைகளுக்கு பஞ்சம் இல்லை. இந்துவாக இருந்து 
பின்னர் சமீபத்தில் கிறிஸ்துவர் ஆன come live (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் , தன் சுவரில், சர்வலோகப் பிதாவை ஸ்தோத்திரம் செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் பிற மதத்து துர் ஆத்மாக்களை 'பாவிகளே, நீங்கள் கர்த்தரிடத்தில் வரும் வரை உங்களுக்கு மீட்பு இல்லை' என்று நான் டீசண்ட் ஆக சொன்னதை கொஞ்சம் harsh ஆக நிந்தித்து  எழுதிக் குவிக்க இந்துக்கள், முஸ்லிம்கள் இவர்கள் அனல்பறக்கும் கமெண்டுகளை தந்து நமக்கு பொழுது போக வைக்கிறார்கள்.

இந்த மதச் சண்டை புராண காலத்தில் இருந்தே இருந்து வருகிறது.
வைணவ-  சைவ, சைவ- சமண, சமண- பௌத்த, வைணவ- பௌத்த,
சண்டைகள். அப்போது கிறிஸ்துவம் உள்ளே வரவில்லை போலும். வைணவர்களைக் கேட்டால் ராமானுஜர் சமணர்களை வாதத்தில் வென்று சீடர்கள்  ஆக்கினார் என்பார்கள். சமணர்களைக் கேட்டால் கதை வேறு விதமாக இருக்கும். எது உண்மையான தெய்வம்?
சிவ வாக்கியர் சொல்வதைக் கேளுங்கள் 

“கட்டையால் செய் தேவரும் கல்லினால் செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும்
“வெட்டவெளி” தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே.. 

கட்டை மட்டையை எல்லாம் கும்பிட்டுக் கொண்டிருக்கும் மூடனே என்கிறார்.


கல்யாண்ஜி யின் கவிதைகள் இரண்டு
========================

அடிக்கடி
பார்க்க முடிகிறது யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண் புழுவைப் பார்த்து


காக்காய் கத்தி
இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.
காதில் விழவே காணோம்
உப்பு விற்கிறவரின் குரல்,
கோலப்பொடி விற்கிறவரின் குரல்.
என்னவோ ஆகத்தான் போகிறது
இந்த உலகத்துக்கு
இன்றைக்கு.

ஓஷோ ஜோக்
===========


அடல்ட் ஒன்லி.

ஸ்பிரோஸ்கி. போலந்து விவசாயி. தன் பண்ணைக்கு ஆள் எடுக்கிறான்.

ஒருவன் வந்து நின்றான். நேர்முகத் தேர்வு ஆரம்பமானது.

"ஏம்ப்பா , நீ மூக்கை எப்படி சிந்துவாய்? பண்ணிக் காட்டு"

அவன் அசூசையாக உணர்ந்தாலும், வேலை கிடைக்க வேண்டும் என்பதால், விரலால் மூக்கை மூடி , பலமான ஒலியெழுப்பி மூக்கை சிந்திக் காட்டினான்.

"உன்னை வேலைக்கு எடுத்துக்கிறேன்" என்றான்.

"அவ்ளோதானா அய்யா? வேற கேள்விகள் எதுவும் இல்லையா?"

"இல்லைப்பா, அவ்ளோதான். ஏன்னா, இதுக்கு முன்னாடி இருந்தவன் தினமும் மூக்கை சிந்தி குட்டி குட்டி பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி என்னோட மனைவி படுக்கையில் போட்டுக் கொண்டிருந்தான்"


சமுத்ரா 




Monday, February 29, 2016

கலியன் -4 (இறுதி)

பிரபாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது...கடிதம் நான் இதுவரை பார்த்திராத ஒரு லேசான மெடீரியல் -இல் இருந்தது.எழுதப்பட்டதா அச்சிடப்பட்டதா தெரியவில்லை.


படிக்க ஆரம்பித்தேன்.

"அன்பின் மகேஷ், ஸ்டீபன், ரகு,சந்துரு, வருண்..
 
நான் தான் பிரபா. ட்ரெக்கிங் -இல் இருந்து எங்கே காணாமல் போனேன் என்று நீங்கள் கவலைப்படுவது தெரியும். கவலை வேண்டாம். நான் இப்போது கலியனின் காலத்தில் இருக்கிறேன். கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் பின்னோக்கி வந்திருக்கிறேன். இங்கே எல்லாமே எனக்கு விசித்திரமாய் இருக்கிறது. உங்களை , பெற்றோர்களை விட்டுப் பிரிந்த துயரம் ஒருபுறம்; புதியதொரு காலத்தில் அன்னியனாய் வந்து சேர்ந்த அவலம் ஒருபுறம். சொன்னால் நம்பமாட்டீர்கள். நான் இங்கே நிர்வாணமாக அழைத்து வரப்பட்டேன். எதிர் காலத்தில் இருந்து இறந்த காலத்துக்கு வரும் உற்பத்தி செய்யப்பட்ட எந்த ஒரு பொருளும் காலவெளி வளையத்தை உருவாக்கி விடும் என்பதால்.

இவர்களின் விதிப்படி என்னை இறந்த காலத்துக்கு கொண்டு வர ஒரு replacement ஆக கலியனை 21ஆம் நூற்றாண்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.கலியன் அத்தனை அப்பாவி அல்ல. நம்மிடம் இதைப்பற்றி மூச்சு விடவில்லை அவர்.

இங்கே காலதீதர் என்ற ஒரு விஞ்ஞானி இருக்கிறார். காலம்  மற்றும் வெளியின் சூட்சுமங்களை எப்படியோ அறிந்து வைத்துக் கொண்டு சர்வாதிகாரம் செய்கிறார். இங்கே ஓர் அரசர் இருந்தாலும் அவர் பெயருக்கு தான். இவர் தான் எல்லாம். எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் என்னை அழைத்து வந்திருக்கிறார்கள். நான் மிகுந்த சிரமப்பட்டு இந்த எதிர்காலத்துக்கு செய்தி அனுப்பும் வித்தையை இவர்களிடம் திருடி உங்களுக்கு செய்தி அனுப்புகிறேன். இது உங்களை வந்து சேரும் என்று நினைக்கிறேன். எனக்கு அதிக நேரம் இல்லை. மற்றவை அடுத்த கடிதத்தில்!"

எனக்கு கடிதத்தை படித்ததும் குழப்பம் தான் ஏற்பட்டது. இதெல்லாம் சாத்தியம் தானா?இல்லை யாராவது விளையாடுகிறார்களா?

கடிதத்தை பற்றி நான் யாரிடமும் சொல்லவில்லை.

இரண்டு நாள் கழித்து இன்னொரு கடிதம்.

"நான் தான் பிரபா, மீண்டும். உங்களுக்கு இன்னும் சில விஷயங்களை சொல்ல வேண்டும். நான் தான் உங்களுக்கு தகவல் அனுப்ப முடியுமே தவிர நீங்கள் எனக்கு அனுப்ப முடியாது. ஒருவழித் தகவல். இறந்த காலத்துக்கு தகவல் சொல்லும் டெக்யான் தொழில்நுட்பம் இன்னும் இவர்களுக்குப் பிடிபடவில்லை. இங்கிருந்து இவர்கள் கலியனை கட்டுப்படுத்தினார்கள். ஆனால் அவர் தன் பயண ரகசியத்தை யாரிடமோ கூற முற்பட்டதால் அவர் வாழ்க்கையை அலுங்காமல் முடித்து விட்டார்கள். 

இங்கே நான் நன்றாகவே இருக்கிறேன். செயற்கை தீண்டாத காலம். எல்லாமே அழகு. நான் கலியனின் மகள் கோதையை கல்யாணம் செய்து கொண்டேன். இந்த தேசத்தின் பெண்கள் மிக அழகு. கறுப்பழகிகள். நான் ஒரு விதத்தில் அதிர்ஷ்டசாலி தான். என்ன உங்களையும் அப்பா அம்மாவையும் மிகவும் மிஸ் செய்கிறேன். அவர்கள் இதை எந்த அளவுக்கு நம்புவார்கள் என்று தெரியவில்லை. முடிந்தால் இதைக் காட்டி நான் இன்னும் சாகவில்லை என்று சொல்லவும்!மற்றவை அடுத்த கடிதத்தில்!"


அன்று இந்த விஷயத்தை ஸடீபனிடம் சொன்னேன். கடிதத்தைக் காட்டினேன்.

"ஸம் ஒன் ஈஸ் ப்ளேயிங் அரௌண்ட் மகேஷ்!" என்றான்.

"பிரபாவை யாரோ கடத்தி இருக்காங்க. நம்ம கிட்ட இருந்து ஏதோ அவங்களுக்கு ஹ்யூஜ் அட்வான்டேஜ் இருக்கு. பிரபா இனிமேல் திரும்பி வர முடியாத இடத்துக்கு போயிட்டது போல நாடகம் ஆடறாங்க! "

எனக்குக் குழம்பியது.

"வி ஆர் ட்ரேப்ட் . அடுத்த குறி நம்ம யாரோ தான்! "

இதெல்லாம் என்ன? ஏன் எங்கள் வாழ்க்கையில் இத்தனை குழப்பங்கள்?பிரபா சாகவில்லையா? உண்மையில் அந்தக் காலத்துக்குப் போய் விட்டானா? எப்படிப் போனான்? 

"இந்தப் பெட்டிக்கு கடிதம் எப்படி வரதுன்னு வாட்ச் பண்ணுவோம்!" என்றான் ரகு.

மறுநாள் இரவு ஒவ்வொருவராக உட்கார்ந்து பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு விடிய விடிய காவல் காத்தோம். ஹூம். கடிதம் வரவில்லை.

இதற்காக ஆபீசுக்கு போகாமல் இருக்க முடியுமா? வீட்டுக்கு வந்ததும் மற்றொரு கடிதம் இருந்தது .ஒரு கடிதம் வந்ததும் அதற்கு முதலில் வந்த கடிதங்கள் காணாமல் போய் விடும்.

"நலம் தானே? நீங்கள் யாரும் அந்தப் பெட்டியைப் பார்க்காத போது தான் கடிதம் வரும். இதை குவாண்டம் டி -கொஹரன்ஸ் என்று ரகு சொல்லி இருக்கிறான். இன்னொரு விஷயம். முக்கியமான விஷயம். அங்கே உங்களுக்கு ஒரு மாதம் போனால் இங்கே எனக்கு ஒரு வருடம் போய் விட்டிருக்கும். இந்தக் கடிதங்களை நான் மாத இடைவெளிகளில் எழுதினாலும் உங்களுக்கு அது நாட்கள் இடைவெளியில் கிடைக்கும்!"
மற்றவை அடுத்த கடிதத்தில்"- கடிதம் குறுகியதாக அவசரத்தில் எழுதப்பட்டது போல இருந்தது.

இப்போது நாங்கள் எதையும் செய்ய முடியாதவர்களாக இருந்தோம். என்ன இது இப்படியெல்லாம் நடக்கிறது?

சந்துரு ஒரு ஐடியா சொன்னான். இந்தப் பெட்டியையே தீ வைத்து அழித்து விடலாம் என்றான். நான் போலீசில் எல்லா  உண்மைகளையும் சொல்லி விடலாம் என்றேன். ரகு பத்திரிக்கைக்கு சொல்லலாம் என்றான். "இறந்த காலத்தில் இருந்து வரும் இன்லண்ட் லட்டர்" என்ற தலைப்பை நான் கற்பனை செய்து பார்த்தேன். ஸ்டீபன் இதில் எதையுமே ஏற்கவில்லை. "இட்ஸ் இன்டரெஸ்டிங்..இது எதுவரை போகிறதோ அதுவரை போகட்டும் பார்க்கலாம் " என்றான்.

மற்றொரு கடிதம்.3 மாதம் கழித்து.

"நலமா? இங்கே என் ஞாபகங்களை அழித்து விடப் .போகிறார்கள். நான் முழுவதுமாக சங்ககாலப் பிரஜை ஆகப் போகிறேன். அதற்குப் பின் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியாது. அந்தப் பெட்டியும் மறைந்து விடும். என்னைப் பற்றி கவலைப் படாதீர்கள். நான் இங்கே அருமையாக இருக்கிறேன். எனக்கு இப்போது இரண்டு பெண் குழந்தைகள்! டேக் கேர்!"

நாங்கள் அந்தக் கடிதத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இன்னொரு மூன்று மாதம் கழித்து ஒரு கடிதம்.

"மகேஷ் மற்றும் நண்பர்களுக்கு. இது தான் என்னுடைய இறுதிக் கடிதம். நான் சொல்லப்போவதை மிக மிக மிகக்  கவனமாகக் கேளுங்கள். நான் இப்போது காலதீதருடன் நன்றாக நட்புக் கொண்டு விட்டேன். இப்போது தான் ஒரு அதிர்ச்சி கரமான தகவல் வெளியானது.கலியனை நம் காலத்துக்கு அனுப்பும் போது இவர்கள் ஒரு தவறு செய்து விட்டார்களாம்.இதனால் நம் எல்லாருடைய உலகக் கோடுகளிலும் (world line ) ஒரு வளையம் ஏற்பட்டு விட்டது. இது மிகவும் ஆபத்தானது. இதில் மாட்டிக் கொண்டால் அனந்த காலத்துக்கு முடிவில்லாமல் நடந்ததே நடந்து  கொண்டிருக்கும். வளையத்தின் தொடக்கத்துக்கு வரும் போது நம் ஞாபகங்கள் அழிந்து விட்டிருக்கும்!"

"ஆனால் அதிர்ஷ்டவசமாக இதில் ஒரு எக்ஸிட் பாயண்ட் , ப்ரேக் பாயன்ட் இருக்கிறது. சி ப்ரோகாம் -மில் வருவது போல. அந்த எக்ஸிட் பாயிண்ட் வேறெதுவும் இல்லை. என் கடிதம் தான். ஒருவிதத்தில் நான் கடிதம் எழுதுவது இவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. அந்த எக்ஸ்சிட் பாயன்ட்-ஐ அனுமதிக்கத் தான் என்னை எதுவும் செய்யவில்லை. மற்றபடி நான் ஹிக்ஸ் பீல்ட் மூலம் எதிர்காலத்துக்கு தகவல் சொல்ல இங்கே அனுமதி இல்லை."

..

"எனவே இந்தக் கடிதத்தை படித்து முடித்ததும், வீட்டை காலி செய்து விட்டு, சென்னையை விட்டே, முடிந்தால் மாநிலத்தை விட்டே எங்கோ வடக்குப்பக்கம் சென்று விடவும். இது தான் ஒரே வழி . இந்த சாய்ஸ் ஸ்பேஸ் டைம் ப்ராஞ்சிங் உங்களுக்கு ஒரு இணை பிரபஞ்சத்தை திறந்து வழி விடும். இல்லையேல் நாமெல்லாம் முடிவில்லாத காலவெளிப் பள்ளத்தில் மாட்டிக் கொள்வோம். அது மரணத்தை விடக் கொடுமை. உடனே, உடனே, ஊரைக் காலி செய்து விடவும்!. குட் பை!"


நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

"புல் ஷிட்" என்றான் ஸ்டீபன்.

ரகு ஓனருக்கு போன் செய்தான்.

"என்ன செய்ற, ரகு?"- ஸ்டீபன்.

"வீட்டைக் காலி பண்ணனுமே?"

ஸ்டீபன் கடிதத்தைக் கிழித்தான். ஏனோ அது கிழியவில்லை. பெட்டியைத் தூக்கி சுவரில் வீசினான். சத்தம் வரவில்லை.

"வாட் நான்சென்ஸ், நம்ம இங்க வொர்க் பண்றோம். ஆபீஸ் நடந்து போகிற தூரத்துல இருக்கு.  நம் ரிலேடிவ்ஸ் இங்கே இருக்காங்க. நம் காதலிகள் இருக்காங்க. இதை எல்லாம் விட்டுட்டு எங்க போறதாம்? தயவு செஞ்சு எல்லாரும் வேலையைப் பார்ப்போம்!நம்ம தங்கம் எல்லாம் பணம் ஆனதும் எல்லாரும் துபாய்ல செட்டில் ஆகறோம். எங்க மாமா அங்க பைவ் ஸ்டார் ஹோட்டல் நடத்தறார்!"

"ஸ்டீபன், இதெல்லாம் உண்மை" என்றான் ரகு.

"போதும் உன்னோட டைம் ட்ராவல் நான்சன்ஸ், அண்ட் யுவர் ஸ்பேஸ்டைம் லூப் ஷிட். யாரோ நம்ம கூட விளையாடறாங்க...நம்ம யாரோவோட பகடைக்காய்கள்..இப்ப கூட இது நம்மை அவங்க இடத்துக்கு வரவழைக்கிற டெக்னிக்!"

"அப்படீன்னா, போல்லீஸ்ல சொல்லலாம்" என்றேன் நான்.

"நோ. பிக் நோ!"

"அவன் ஏன் இப்படி சொல்றான்னு தெரியும் மகேஷ் "என்றான் ரகு. "தங்கம், தங்கம்!"
 
"..."

"எங்களுக்குத் தெரியாம எத்தனை டா அடிச்ச?பேராசை பிடிச்சவனே!"

"ட்யூட், மைண்ட் யுவர் வேர்ட்ஸ்.."

இருவருக்குள் சண்டை மூண்டு சட்டையைப் பிடித்தார்கள். நானும் சந்துருவும் என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்கள் இருவருக்கும் கேர்ள் பிரண்டுகள் விஷயத்தில் ஏற்கனவே தகராறு இருந்தது.

இருவரையும் தடுத்தோம்.

வீடு ஸ்டீபனின் பெயரில் தான் அக்ரீமெண்ட் ஆகி இருந்தது. நாங்கள் அவன் சொல்லைத் தட்ட முடியாது.  மேலும் அவன் இல்லாமல் எங்களால் தங்கத்தை பணமாக மாற்றவே முடியாது. இன்னும் 2 கிலோ தங்கம் மிச்சம் இருந்தது.
 
"நீ என்னடா சொல்ற?" என்றான் ரகு.
 
"அம் ஹெல்ப்லஸ் " என்றேன்.

ரகு தன் மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பி விட்டான்.

"நான் போறேன், இந்த ராஸ்களுடன் நான் இருக்க மாட்டேன். யூ ஆல் கெட் லாஸ்ட் இன் தி ஸ்பேஸ் டைம் லூப்"

"கெட் லாஸ்ட் " என்றான் ஸ்டீபன்.

அன்று இரவு பசிக்கக் தொடங்கியதும் ரகு திரும்பி வந்து விட்டான். எங்கே போவான்?! பசி வந்தால் பத்தும் பறக்குமே! சண்டை போட்டாலும் நண்பர்கள் அல்லவா. ஸ்டீபன் அவனைப் பார்த்துப் புன்னகைத்தான். "வெல்கம் டு ஷிட் அகைன்" என்றான்.

"நான் படித்த இயற்பியல் படி இதெல்லாம் சாத்தியமே இல்லை" என்றான் ரகு. "டைம் இஸ் லீனியர்"

"ஆல் செட்ட்ல்ட் ..இந்த கசப்பான சாப்டரை இத்தோட எல்லாரும் மறந்துருவோம்!"

மூன்று மாதம் கடந்தது. பிரபாவிடம் இருந்து அதற்குப் பிறகு கடிதம் வரவில்லை. அந்தப் பெட்டி எங்கேயோ மறைந்து விட்டது. எத்தனை தேடியும் கிடைக்கவில்லை.

ஆல் இஸ் வெல் .யாவரும் நலம். பிரபாவுக்கு திதி செய்தார்கள்.போய் வந்தோம். அவன் சங்க காலத்தில் இருக்கிறான் என்று சொன்னால் ஒருமாதிரி பார்ப்பார்கள். விட்டுவிட்டோம். லெட் ஹிம் பி டெட்.

பாருங்கள். இன்று வழக்கம் போல ஆபீஸ் கிளம்புகிறேன். வெள்ளிக்கிழமை. ஜாலி தான். இரவு ட்ரிங்க்ஸ் பார்ட்டி. !!! மதியம் எனக்குப் பிடித்த ஆந்த்ரா மீல்ஸ் ஆபீஸ் கேண்டீனில்.

தூங்கி விட்டேன் போலிருக்கிறது. அதுவும் டெஸ்க் -கிலேயே. மத்தியானம் சாப்பிட்ட ஆந்திரா மீல்ஸின் மயக்கம். கண்களைக் கசக்கிக் கொண்டு அருகில் இருந்த ஸ்மிதா-வைப் பார்த்து 'சாரி' என்றேன். "இட்ஸ் ஓகே டியூட்..கேரி ஆன் "என்று புன்னகைத்தாள் .இது என்ன வேறு ஏதோ ஒரு உலகத்தில் வாழ்ந்தது போல! கொஞ்சம் மங்கலாக ஏதேதோ நினைவில் இருக்கிறது. இதெல்லாம் உண்மையா? ஆம். பிரபாவுக்கு என்ன ஆயிற்று? ஈஸ் ஹி ஓகே !உடனே பிரபாவுக்கு போன் செய்து "உனக்கு ஒண்ணும் இல்லையே!?" என்றேன். அவன் குழம்பிப் போய் "என்னடா, இப்பவே சரக்கு போட்டுட்டியா? திடீர்-ன்னு கால் பண்ணி "உனக்கு ஒண்ணும் இல்லையே? ன்னு கேட்கிறே?என்றான்.
"ஒண்ணும் இல்லை!" என்றேன். "சரி, ஈவ்னிங் பார்க்கலாம், சீக்கிரம் வந்திரு!"
மீட்டிங் முடித்து விட்டு நானும் ரகுவும் கிளம்பினோம்.


.....


மணி இரவு 11:30. ஒரு பெக் உள்ளே போனதும் சிகரெட் தீர்ந்து விட்டதை உணர்ந்தோம். தெருக்கோடியில் இருக்கும் பெட்டிக்கடை ஒன்று சில சமயங்களில் திறந்திருக்கும். அங்கே போய் வாங்கி வரலாம் என்று நானும் பிரபாகரும் சென்றோம்.பேட் லக். கடை மூடி விட்டிருந்தது. சரி எதிர் பிளாட் பேச்சுலர்களிடம் வாங்கிக் கொள்ளலாம் என்று திரும்பி வந்தோம்.

பெட்டிக்கடை சந்தில் அவர் நின்றிருந்தார்....

....