இந்த வலையில் தேடவும்

Tuesday, November 30, 2010

ஓர் அறிவிப்பு (கர்நாடக இசை)


டாக்டர் சிவகுமார் கல்யாண ராமன் என்பவர் கர்நாடக இசைப் பிரியர்களுக்காக ஒரு வெப்-சைட் உருவாக்கியுள்ளார்...

http://www.shivkumar.org/music/index.html

and

http://www.shivkumar.org/music/varnams/index.html


குறிப்பாக கர்நாடக இசையின் ஆரம்ப நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு இந்த சைட் ஒரு guide மாதிரி வழி காட்டுகிறது...வர்ணங்கள் , கிருதிகள், கீர்தைனைகள் முதலியவற்றை சாகித்யத்துடன் அழகாக கற்றுக் கொடுக்கிறார்.. கர்நாடக இசைப் பிரியர்கள் தவறாமல் சென்று பார்க்கவும்..இந்த தளத்திலிருந்து பாடல்களின் ஒரிஜினல் வடிவங்களையும், lesson களையும் download கூட செய்து கொள்ளலாம்...

Hi Madhu ,

My previous employer RPI has requested the site to be closed down recently. I have just backed up the site at:

http://www.shivkumar.org/music/index.html

and

http://www.shivkumar.org/music/varnams/index.html

I have to work further on the manodharma site etc

Could you kindly spread the word via online/email/social network channels and if you have a public site, kindly point it to these links? Thanks so much!

சமுத்ரா

இருபத்து ஒன்று, பன்னிரண்டு -4

உலகம் அழியும் என்று குத்து மதிப்பாக மாயா சொல்லிப் போனார்களே தவிர எப்படி ,எதனால் அழியும் என்று நிகழ்ச்சி நிரல் எல்லாம் போடவில்லை...இதை வைத்துக் கொண்டு நிறைய பேர் தங்கள் கற்பனைக்கேற்ப புரளிகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்..இவற்றில் முக்கியமானது நான்சி லைடர் என்ற பெண்மணி கிளப்பி விட்டுள்ள புரளி..அதாவது' பிளானட் X ' (அல்லது நிபுரு) என்ற கிரகம்(பூமி மாதிரி நான்கு மடங்கு சைஸ்) பூமி மீது வந்து டொம் என்று மோதப் போகிறதாம்... நீங்கள் சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கும் பொது ஒரு சைக்கிள்காரர் உங்கள் மேல் வந்து மோதினால் "சாவு கிராக்கி" என்றெல்லாம் அவரை செந்தமிழில் வைது விட்டு போய்க் கொண்டே இருக்கலாம்...அனால் நம் பூமி மீதே ஒரு கோள் வந்து மோதினால் ???

இந்த நான்சி லைடர் என்ற அம்மணி ஒரு வெப்-சைட் வைத்திருக்கிறது...நேரம் இருந்தால் சென்று பாருங்கள்...தான் ஒரு 'அவதார புருஷி(?)' என்று சொல்லிக் கொள்ளும் அந்த பெண்மணி , Zeta என்னும் வேற்று கிரகத்துக்காரர்கள் தன்னை 'contact ' செய்து பூமிக்கு ஆபத்து வரவிருக்கிறது என்று சொன்னதாக சூடம் அணைக்காத குறையாக சத்தியம் செய்கிறார்...இந்த கோள் சரியாக டிசம்பர் 21 , 2012 அன்று மோதப் போகிறதாம்..அருகே உள்ள படங்களில் சூரியனுக்குப் பக்கத்தில் மங்கலாகத் தெரிகிறதே அது தான் நமக்கு எமன் 'பிளானட் x '



ஆனால் வானியல் அறிர்கள் இதை உண்மை இல்லை என்று நிரூபித்து விட்டார்கள்...அந்த போடோக்கள் எல்லாம் 'டுபாக்கூர்' என்று சொல்கிறார்கள்...இன்னும் இரண்டு ஆண்டுகளில் நம் மீது மோதப் போகும் கிரகம் வானத்தில் வெறும் கண்களுக்கே தெளிவாகத் தெரியும் என்கிறார்கள்...(கிட்டத் தட்ட நிலா சைசில்) அப்படி எதுவும் தெரிவதாகத் தெரியவில்லை...

சரி இதனால் பூமி மீது எந்தக் கோளும் வந்து மோதாது என்று நாம் தைரியமாக இருந்து விட முடியாது....அண்ட வெளியில் நம் பூமி மிதந்து கொண்டிருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்..கோள்கள், சிறு கற்கள், பாறைகள் ,துணைக் கோள்கள் என்று எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து மோதலாம்...சொல்லப் போனால் 'Asteroid ' எனப்படும் சிறு கற்கள் நம் பூமி மீது சதா விழுந்த வண்ணம் உள்ளன...அனால் அவை சிறியவை என்பதால் நம் வளி மண்டலத்தில் நுழைந்த உடனேயே உராய்வினால் எரிந்து சாம்பலாகி விடுகின்றன...பூமிக்கு வளி மண்டலம் மட்டும் இல்லை என்றால் நாம் வீட்டை விட்டுச் சென்று கடையில் ஒரு சக்தி மசாலா வாங்கி வருவதற்குள் நான்கைந்து கற்களாவது வந்து நம் தலை மீது விழும்..NEA என்று வானவியலில் அழைக்கப்படும் Near Earth Asteroid ,அதாவது பூமிக்கு மிக அருகில் இருக்கும் பாறைகள் குத்து மதிப்பாக ஒரு ஏழாயிரம் இருக்கலாம் என்கிறார்கள்..

1908 ஆம் ஆண்டு ரஷ்யாவின் 'துங்குஷ்கா ' என்ற இடத்தில் ஒரு மிகப் பெரிய விண் கல் ஒன்று வந்து விழுந்தது...அதிர்ஷ்ட வசமாக முழுவதுமாக வந்து மோதாமல் பூமிக்கு சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திலேயே வெடித்து சிதறி விட்டது....அப்படியிருந்தும் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தி விட்டது...(அப்படியே வந்து மோதியிருந்தால் ரஷ்யாவே போயிருக்கும் என்கிறார்கள்) இதனால் விளைந்த ஆற்றலானது ஹிரோஷிமாவின் மீது வீசப்பட்ட குண்டைப் போல ஆயிரம் மடங்கு ஆற்றலுக்குச் சமம் என்கிறார்கள்..இந்த கல் எரிந்ததால் கோடிக்கணக்கான மரங்கள் எரிந்து அக்னி தேவனின் அகோரப்பசிக்கு இரையாகின...

இந்த நிகழ்ச்சியை பக்கத்தில் இருந்து பார்த்த செமியோனவ் என்று விவசாயி கூறுவதைக் கேளுங்கள்..."அன்று நான் காலை டிபனை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தேன்...வானத்தின் வடக்குப் பக்கம் ஏதோ ஒன்று இயல்புக்கு மாறாக நடப்பது போல் தோன்றவே திரும்பிப் பார்த்தேன்...வானம் இரண்டாகப் பிளந்து திடீரென்று ஒரு ஒளிக் கற்றை தோன்றியது...நான் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அந்த நெருப்பு பூதாகாரமாக வளர்ந்து அடிவானமெங்கும் பரவியது...மரங்கள் தீப்பற்றிக் கொண்டன...வடக்குப் பக்கத்தில் இருந்து தாங்க முடியாத வெப்பம் வந்து என்னைத் தாக்கியது... என் சட்டையை கழற்றக் கூட நேரம் இல்லாமல்
அப்படியே கிழித்து எறியும் அளவு வெப்பம் என்னை தாக்கியது ...உலகம் அழியப் போகிறது என்றே நான் நினைத்தேன்...வானத்தில் ஆயிரம் இடிகள் சேர்ந்து ஒலிப்பது போல சத்தம் கேட்டது ...பூமி நடுங்கத் தொடங்கியது..எங்கிருந்தோ பாறைகள் பறந்து வந்து விழுந்தன...நான் தூக்கி வீசப்பட்டேன்...நினைவு தவறி விட்டது...நினைவு திரும்பியதும் வயல்கள் எல்லாம் சுடுகாடுகள் போல காட்சியளித்தன...நான் உயிரோடு இருக்கிறேனா என்று எனக்கே சந்தேகமாக இருந்தது..."

இது போன்ற ஒரு சம்பவம் நமக்கும் நடக்கலாம்...எதற்கும் காலையில் எழுந்து ஒரு முறை வெளியே வந்து வானத்தின் வடக்குப் பக்கம் பார்த்து விடுங்கள்...

அறிவியலில் உள்ள முக்கியமான ஒரு கொள்கை
Anthropic principle என்று அழைக்கப் படும் ஒரு கொள்கை...(தமிழில் என்ன?) மனிதன் , அதாவது conscious observer வருவதற்காகத்தான் இந்த பிரபஞ்சமே தன்னை உருவாக்கிக் கொண்டது என்று சொல்லும் கொள்கை...அதாவது ரமேஷும் சுரேஷும் வருவதற்கு தான் இந்த பிரபஞ்சம் வெடித்தது, வாயுக்கள் திரண்டு நட்சத்திரமாக உருவானது, நட்சத்திரத்தை சுற்றி பூமி என்னும் கோள் வந்தது, அதன் தட்ப வெட்ப நிலை சாதகமாக அமைந்தது, ஆதி உயிர் எப்படியோ தோன்றியது என்ற எல்லா அதிசயங்களும்...ஆனால் ஹீரோக்களின் கட்-அவுட்களுக்கு பாலாபிசேகம் செய்கிற , தன் இனத்தை தானே அளிக்க அணு குண்டு தயாரிக்கிற இந்த முட்டாள் மனித இனத்தின் வருகைக்கு இயற்கை இத்தனை மெனக்கெட்டதா என்று நினைக்கும் போது நெருடுகிறது...

நம் பூமி ஒரு விதமான 'Safe Zone ' இல் இருப்பதாக சொல்கிறார்கள்...அதாவது உயிர்கள் வாழக் கச்சிதமான ஒரு சூழ்நிலையில்...பூமியின் வளிமண்டல அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்திருந்தாலும் உயிர்கள் வந்திருக்காது...பூமியின் ஈர்ப்பு விசை கொஞ்சம் குறைந்திருந்தால் கடல்கள் குழிகளில் தங்காது..ஓசோன் இல்லா விட்டால் நாமெல்லாம் மைக்ரோவேவ் ஓவனில் வெந்து போகும் கேரட் போல் எப்போதோ இறைவனடி சேர்ந்திருப்போம்...பூமியின் பகல் நேரம் கொஞ்சம் அதிகமாக இருந்திருந்தாலும் பயிர்கள் கருகிப் போயிருக்கும்...இதையெல்லாம் யாரோ ஒரு கை தேர்ந்த இஞ்சினியர் பார்த்துப் பார்த்து செய்தது போல் இருக்கிறது அல்லவா?

இந்த கொள்கையின் படி, அடிக்கடி விண்கல் மோதுகிற இடத்திலோ, அடிக்கடி Supernova என்னும் வெடிப்பு அடிக்கடி நிகழும் இடத்திலோ உயிர்கள் உருவாகாது...எனவே மற்ற குடும்பங்களை ஒப்பிடும் போது நம் சூரியக் குடும்பத்தில் விண் கல் மோதல்கள் மிக மிகக் குறைவு...பக்கத்தில் supernova எனப்படும் ஆபத்தான விண்மீன் வெடிப்புகள் எதுவும் இப்போதைக்கு இல்லை...மேலும் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்.நம் மீது மோத வரும் பெரும்பாலான விண் கற்களை நமக்கு அடுத்து உள்ள 'வியாழன்' பூதக் கிரகம் பெரும்பாலும் கிரகித்துக் கொள்கிறது..அல்லது திசை திருப்பி விட்டு விடுகிறது...வியாழன் இல்லாவிட்டால் பூமி என்றோ அழிந்திருக்கும்...எனவே ஏதோ ஒன்று, ஏதோ ஒரு சக்தி, ஏதோ ஒரு விதி மனிதகுலம், உயிரினம் நன்றாக வாழ வேண்டும் என்று விரும்புகிறது..(அது கடவுளா என்று தெரியாது..இல்லை என்றால் இவ்வளவு 'இறந்த' விண்மீன்களுக்கும் கிரகங்களுக்கும் இடையே ஒரே ஒரு நீல கிரகத்துக்கு உயிர் கொடுக்க எந்த அவசியமும் இல்லை)


இருந்தாலும் இந்த விண்கல் மோதல்கள் நமக்கு கிலியை கிளப்பிக் கொண்டு தான் உள்ளன...பல கோடி ஆண்டுகளுக்கு முன் இது மாதிரியான சக்தி வாய்ந்த ஒரு விண்கல் மோதலில் தான் டைனோசர்கள் கூண்டோடு அழிந்து போனதாக சொல்கிறார்கள்...LIC கட்டிடத்தின் அளவே உள்ள ஒரு கல் வந்து பூமி மீது விசையுடன் மோதினால் அந்த மோதல் மட்டும் இந்த உலகின் உயிரினங்களை கூண்டோடு அழித்து விடும்...பூமி தான் சுற்றுவதை சில நொடிகள் நிறுத்தும்... கடல் நீர் வானில் சிதறும்..யாருக்குத் தெரியும் மனிதன் ரொம்ப ஆடுகிறானே என்று அந்த சக்தி ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி சுத்தமாகத் துடைத்து விட்டு, மீண்டும் ஒரு செல் உயிரினத்தில் இருந்து சிருஷ்டியை ஆரம்பிக்கலாம்...ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்..அடுத்த முறை இயற்கை தப்பித் தவறி கூட மனிதன் என்ற பிராணியைப் படைக்காது..எதற்கு வம்பு என்று குரங்குக்கு முன்னாலேயே நிறுத்திக் கொண்டு விடும்...

சமுத்ரா


Monday, November 29, 2010

டாக்டர் எனக்கு கண்ணு சரியா தெரியமாட்டேங்குது!

















நான் : டாக்டர், எனக்கு கண்ணு சரியா தெரியமாட்டேங்குது!

டாக்டர் : அப்படியா, வாங்க செக் பண்ணிரலாம்...

டா : (கை விரல்களை உயர்த்திக் காட்டி) இது எவ்ளோ சொல்லுங்க

நான் : நாலு

டா : இது?

நான் : ஒண்ணு

டா : (தூரத்தில் இருக்கும் போர்டைக் காட்டி) கடைசி வரியைப் படிங்க..

நான் : ஐஞ்சு நாலு மூணு ரெண்டு ஒண்ணு ஏழு ஆறு...

டா :எல்லாமே தான் சரியா தெரியுது உங்களுக்கு, அப்பறம் என்னபிரச்சனை?

நான் : அது வந்து டாக்டர் நான் பார்த்தேன், என் பதிவுக்கு இருபது கமெண்டு வந்திருந்துச்சு...
.
டா : என்னது, உங்க பதிவுக்கு இருபது கமெண்டா? நர்ஸ், சாயங்காலம்ஒரு ENT ஸ்பெலிஸ்ட் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்குங்க!


சமுத்ரா


பிரஜா வாணி-1 தாயைப் பிரசவிப்பவள்!

(தாய்மை அடையாத பெண்ணின் குரல்)


என் கருப்பையில் ஒரு
மகவு வந்து அமரும் என்று
என் மனப்பையில் ஒரு
கனவு வந்து அமர்ந்தது...

அது
இன்று நேற்றல்ல

சிறுமி என்ற
சிற்றுடை நீக்கி நான்
பெண்ணான நாளில்-
என் கருமுட்டைகள்
காலம் கனிந்து
எமக்கு உயிர் தா உயிர் தா என்று
உரக்கக் கதறி
உயிர் விட்டு வெடித்த ஒரு
பொன்னான நாளில்...

ஆனால் ஏனோ
என்
மார்பை உரச ஒரு
தாலி வந்து அமர்ந்த பின்னும்-என்
வயிறை உரச ஒரு
வாரிசு வந்து அமரவில்லை...
முத்தம் விளக்க ஒரு
மணாளன் இருந்த போதும்
என்
மூன்று நாள்
ரத்தம் விலக்க
ஒரு
ரத்தினம் வாய்க்கவில்லை....

யாராவது சொல்லுங்கள்,
உள்ளுக்குள் ஓர்
உயிரை சுமக்கும் சுகம் எவ்வாறு இருக்கும்?
ஆயிரம் தேவதைகளால்
ஆசிர்வதிக்கப் பட்டது போன்றா?
மலை மேல் மலர்ந்த மூலிகைப் பூக்கள்
ஒரு சேர நம்
தலை மேல் விழுந்தது போன்றா?
சொர்கத்தின் நதி ஒன்று
பக்கத்தில் பாய்வது போன்றா?
அமுதக் கலசம் ஒன்று நம்
அடிவயிற்றில் அமர்ந்திருப்பது போன்றா?

மலரைப் படைத்த
மகேசன் ஏனோ அதற்கு
மகரந்தம் மறுத்தான்...
கருவை சுமக்கும் வயிறை ஏனோ
கவலையை சுமக்க
சபித்தான்....

போட்ட விதை
பூமி துளைக்கவில்லை என்று-
உழவன் அழுதால்-அவன்
உள்ளம் தேற்ற
உறவுகள் உண்டு
தான் ஒரு மலடி என்று
மண் அழுதால் அதன்
கண் துடைக்க ஒரு
கரம் தான் எங்குண்டு??

மடி கனக்காததால்
இன்று என்
மனம் கனக்கிறது
இணைந்த மறு நாளே
இன்பச் செய்தி கேட்கும்
அவசர உறவுகளுக்கிடையே
என்
அடிமனம் அழுகிறது

ஜன்ய ராகம் இல்லை
என்ற ஒரே காரணத்தால்
இந்த
தேனுகா
பாடப்படாது நிராகரிக்கப்பட்டது...

என் குழந்தை படுத்து ஏற்படும்
மடி ஈரம்...
மார்பை முட்டிப்
பாலுண்ணும் போது
மெலிதாய்க் கேட்கும் மோகன ராகம்...
பிஞ்சுக் கரங்களின்
தொடுதலில் விளையும்
தாய்மையின் இன்பம்...
இவையெல்லாம் ஏழை எனக்கு
எட்டாத கனியா?
மாரைப் படைத்து
பாலை மறுத்த இறைவா
இது என்
மாயப் பிறவியின் வினையா?

அய்யா இறைவா
காற்று தூங்கவா என்
கருப்பையை வைத்தாய்
அதற்குள்
உயிர் நுழையாமல் எந்த
ஊசி கொண்டு தைத்தாய்??


பேறு வலி என்னைப்
புறக்கணித்து விட்டதால்
வேறு வலிகள் என்னை
வாடகைக்கு எடுத்தன...

பேறு வலியாவது -பிள்ளை ஒன்று
பிறக்கும் மட்டும்
எந்தன் இதயத்தின் வலிகளோ
இனி நான் இறக்கும் மட்டும்!


என் குழந்தைக்காய் நான்
எழுதிய
தாலாட்டு வரிகள்- எனக்கு
ஒப்பாரியாய் மாறி என்
உயிரைக் குடித்தன...

என்
உறவுகளே!
உடன் பிறவா சகோதரியரே!
பத்து மாதம் மூச்சடக்கி
பனிக்குடத்தில் முத்தொன்று எடுத்த
தாய்க்குலங்களே ! இறுதியாக ஒன்று மட்டும்!
திங்கள் நிகர்த்த சிசுவொன்று


என்னைத் தீண்டாததால் நான்
தீண்டத்தகாதவள் அல்ல..
பாவை மகவொன்று என்னைப்
புறக்கணித்ததால் நான் ஒரு
பாவி மகள் அல்ல..

தொப்புள் -
கொடி ஏந்தாத மகவை என்
மடியாவது ஏந்தட்டும் தாருங்கள்!
மார்பில் சீரம் சுரக்கா விடினும்
நெஞ்சில்
ஈரம் சுரக்கும் என்று இனி மேல் அறியுங்கள்..

கரு அமரும்
அறை காலி என்பதால்
என்னை அரைப்பெண் என்று
நாவில் அரைப்பதை விடுங்கள்!

உங்கள் மகவு
கண்ணனாக இருக்கலாம்-ஆனால்
நான் ஒன்றும்
பூதனி அல்ல! தயங்காமல் கொடுங்கள்!


ஆம்
பெற்றவளுக்கு ஒரு பிள்ளை..
பெறாதவளுக்கு பல பிள்ளை..

உங்கள் மகவை இனிமேல்
உரிமையாய்த் தாருங்கள்!

ஏனென்றால்
என் வயிறு ஒரு குழந்தையை
பிரசவிக்காவிடிலும்-
நான் கொஞ்சும்
ஒவ்வொரு குழந்தைக்கும்
என் இதயம்
ஒரு தாயைப் பிரசவிக்கிறது....


சமுத்ரா

Friday, November 26, 2010

பிரஜா வாணி

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ பத்திரிக்கை ஆரம்பித்து விட்டேனென்று நினைக்க வேண்டாம்..இது ஒரு கவிதைத் தொடர் (supposed to be) பிரஜா வாணி என்றால் 'மக்கள் குரல்' என்று அர்த்தம்...ஏன் தலைப்பை தமிழில் வைக்க வில்லை என்றால் சும்மா தான்...(வலைப் பூக்களுக்கு வரி, வரிவிலக்கு எல்லாம் இல்லை தானே)




அன்றாடம் ஏதாவது ஒரு வகையில் பிரஜா வாணியை ,அதாவது, மக்கள் குரலை நாம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்..(யாரோ ஒரு அறிர் சொன்னாராம்: "My ears are so sharp that sometimes it cannot hear " ...)அவற்றில் நமக்கு ஏதாவது ஆதாயம் இருந்தால் ஒழிய 99 % அந்த குரல்கள் அப்படியே நம்மால் நிராகரிக்கப் பட்டு விடுகின்றன...சாலையின் இரு முனைகளை இணைக்கும் பாலங்களில் அமர்ந்து கொண்டு வாழ்க்கையின் மறுமுனை அறியாமல் கையேந்துபவர்களின் குரல்கள்...வாகனங்களுக்கு எரியும் சிவப்பு விளக்கை தன் வாழ்க்கைக்கான பச்சை விளக்காக பாவித்து இறுகிப் போய் விட்ட கண்ணாடிகளையும் , கண்களையும் பார்த்து சில்லறை கேட்பவர்களின் குரல்கள்...கையேந்துவது மானப் பிரச்சைனையா இல்லை கை ஏந்தக் கூட திராணி இல்லையா என்று அறிய முடியாமல் பஸ் நிலையங்களில் சுருண்டு படுத்திருக்கும் பாட்டிகளின் முனகல் குரல்கள் என்று பலப்பல ..

சரி இந்த குரல்கள் ஒரு புறம் இருக்கட்டும்...நம் அன்றாட வாழ்க்கையில் நாம் இன்னும் மிகப் பல குரல்களால் சூழப் பட்டிருக்கிறோம்..மிக மிக மெல்லிய குரல்கள்..மனிதனின் காதுகள் இருபது ஹெர்ட்சுகளுக்கும் கீழே கேட்கக் கூடிய திறன் பெற்றால் மட்டுமே கேட்கக் கூடிய மெல்லிய குரல்கள்...சில சமயங்களில் நமக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களின் நெஞ்சக் குரல்கள் கூட நமக்குக் கேட்பதில்லை...அறிவியல் வளர்ந்ததும் மனிதனின் கேட்கும் திறமை மிக மிகக் குறைந்து விட்டது என்று சொல்வார்கள்...அது சரி தான் போலிருக்கிறது..உதாரணமாக அன்பில்லாத கணவனுக்கு வாழ்க்கைப் பட்ட அபலைப் பெண் ஒருத்தியின் குரல், வேர்கள் விழுந்தாலும் விழுதுகள் தாங்கும் என்று நம்பி, கடைசியில் விழுதுகளாலும் வீசி எறியப்பட்ட பெற்றோர்களின் குரல், வேலைக்குச் செல்லும் பெற்றோர்களால் வீட்டில் அடைக்கப் பட்டு அன்புக்கு ஏங்கும் மழலைகளில் குரல், உடல் ஆண் என்று அடம் பிடிக்க உள்ளம் பெண் என்று அடம் பிடிக்கும் அரவாணிகளின் குரல், தாலி ஒன்று தன் கழுத்தைத் தழுவ தவம் கிடக்கும் முதிர் கன்னிகளின் குரல்கள், என்று இவை மிக மிக நுட்பமான குரல்கள்..."ஐயா, அம்மா" என்று ஐந்து கட்டையில் அலறும் குரல்களே நமக்குக் கேட்பதில்லை...அடுத்தவருக்குத் தெரிந்து விடுமே என்று சிந்தியவொரு கண்ணீர்த் துளியை எந்திரனில் ரஜினி தன் வியர்வையை துடைப்பது போல கணத்தில் துடைத்து விட்டு , இயல்பாய் இருக்க முயலும் இந்த பாவப் பட்ட மனிதர்களின் மனதாழக் குரல்கள் நமக்கு எப்படி கேட்கும்? இந்தக் குரல்களை என்னால் இயன்ற வரை பதிவுகள் மூலம் பதிவு செய்யும் ஒரு சிறு முயற்சி தான் 'பிரஜா வாணி'....



சரி சும்மா எழுதி விட்டால் போதுமா? சமூகத்திற்காக என்ன செய்ய (கிழிக்கப்) போகிறாய்? என்று கேட்கலாம் ... நியாயமான கேள்வி ...எழுத்தாளர் சுஜாதா இந்த மாதிரி ஒரு கேள்விக்கு சொன்ன பதில்: "எழுத்துக்கள் நேரடியாக ஒரு சமுதாய மாற்றத்தைக் கொண்டு வரும் வரும் என்று சொல்ல முடியாவிட்டாலும், அவை ஆயுதங்கள் தான்...மறைத்து வைக்கப் பட்ட கன்னி வெடிகள் போல..சமயம் வரும் போது கண்டிப்பாக வெடிக்கும்...அதிகாரமும் நல்ல மனதும் (இது இரண்டும் ஒன்றாக இருக்க சாத்தியமா??) உள்ள ஒருவர் எழுத்துகளைப் படிக்க நேரிடும் போது அவை அந்த மனிதருக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினால் அதுவே இந்த சமுதாய மாற்றத்திற்கும் காரணமாக அமையும்..."

இன்னொரு முக்கியமான விஷயம் பிரஜாவாணியில் ஒரு காதல் கவிதை கூட இருக்காது.... :) :)

சரி பொன்னியின் செல்வன் லெவலுக்கு முன்னுரையிலேயே பெரிதாக பில்ட்-அப் கொடுக்காமல் இனி பிரஜா வாணி...
...

சமுத்ரா

Wednesday, November 24, 2010

தமிழ்ப் பதிவுலகம்-ஒரு பார்வை


ப்ளாக் எழுதும் போது கிடைக்கிற ஒரு முக்கியமான advantage ...நாம் ஒரு பெரிய எழுத்தாளர் (?) ஆகி விட்டோம் என்று நினைக்கக் கூட அளவில் கிடைக்கிற ஒரு virtual satisfaction ...இது எனக்கே கூட நிறைய தடவை ஏற்பட்டிருக்கிறது...ஒரு நல்ல (?) பதிவு எழுதி விட்டு அதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தால் (சில சமயம் ஒரு கமெண்டும் வராததைப் பார்த்தால் கூட )ஓ நமக்குள்ளும் ஒரு பிரபலமான எழுத்தாளன் கும்பகர்ணன் லெவலுக்கு தூங்கிக் கொண்டிருக்கிறானோ என்ற சந்தேகம் வருகிறது..

.
சில சமயங்களில் டி. வி சீரியல்களில் நடிப்பவர்கள் பத்து ரூபாய் கொடுத்தால் நூறு ரூபாய்க்கு நடிப்பார்கள்.. சரி சினிமாவில் தான் சான்ஸ் கிடைக்கவில்லை...இதிலாவது புகுந்து விளையாடலாம் என்று நினைத்தோ என்னவோ? (பலர் பெரிய திரையில் இருந்து downgrade ஆகி சின்னத்திரைக்கு வந்தாலும் சில பேர் இன்னும் t .v . உலகில் இருந்து திரைப்பட உலகிற்கும் சென்று கொண்டு தான் உள்ளார்கள் ) [இந்த நாட்கள் மிக அதிக தொலைவில் இல்லை: உங்கள் சன் டிவியில் தமன்னா நடிக்கும் 'கோமதி'...மெகாத் தொடர் ..காணத் தவறாதீர்கள்]சில பேர் விளம்பரங்களிலும் கொடுத்த காசுக்கு அதிகமாகவே நடித்து விடுகின்றனர்....(முதலில் விளம்பரங்களில் நடித்து இம்ப்ரெஸ் செய்து சில பேர் நேரடியாக சினிமாவில் கூட நுழைந்து இருக்கிறார்களாம்)


இது மாதிரி ப்ளாக் எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் சக்திக்கு மீறி எழுதுகிறார்கள்...ஒரு நாள் யாராவது ஒரு டைரக்டரோ ,பிரபல சினிமா கவிஞரோ நம் ப்ளாக்கைப் பார்த்து "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்' என்று பாட்டுப் பாடாத குறையாக வெள்ளித் திரைக்கு வா என்று சிவப்புக் கம்பளம் விரிக்க மாட்டார்களா என்ற நப்பாசையாகக் கூட இருக்கலாம்...ஆனால் நிஜங்கள் வேறு விதமாக உள்ளன...உண்மையிலேயே திறமை உள்ள நிறைய பேர் ப்ளாக்- பக்கம் தலை வைத்துக் கூட படுப்பதில்லை...(நிஜமான கவிகள் கவிதை எழுதி விட்டு ச்சே! நல்லா இல்லை! என்று கிழித்துப் போட்டு விடுகிறார்கள்...) அப்படியே அங்கொன்றும் இங்கொன்றுமாக திறமையானவர்கள் சிலர் எழுதினாலும் பிரபலமாவதில்லை...எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்கு, கவிஞர்களை அடையாளம் கண்டு மேலே கொண்டு வருவதற்கு அதிகாரமும்,பதவியும் உள்ள சிலர் தமிழ்மணம்.காம் என்று டைப் செய்து பதிவுகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான்..


இன்றைய பதிவுலகில் பெரும்பாலான பதிவுகள் (30 %)கவிதைகளைத் தாங்கி வருகின்றன...சந்தோஷம்...தமிழ்நாட்டில் நிறைய கவிஞர்கள் உருவாகி விட்டார்கள் போலிருக்கிறது... ஆனால் கவிதை என்றாலே 'காதல்' தான் என்று யார் சொன்னார்களோ தெரியவில்லை...ஒரு வகையில் இரண்டுமே ஒரு விதமான அதிகப்படுத்துதல் (exaggeration ) என்பதால் கூட இவை இரண்டும் இணைக்கப்பட்டு இருக்கலாம்..ஒரு வேளை blogspot என்பது இலவசமாக இல்லாமல் ஒவ்வொரு பதிவுக்கும் நூறு ரூபாய் என்று ஏதாவது இருந்திருந்தால் இப்படி கவிதைகளை அள்ளி விடுவார்களா தெரியவில்லை...கவிதை என்பது அதைப் படித்து முடிந்த பின் இதயத்தை என்னவோ செய்ய வேண்டும்...அந்த மாதிரி கவிதைகள் மிக மிக குறைவு..கிட்டத் தட்ட பூஜ்ஜியம்...(யாரோ சொன்னார்களாம் Prose is written by the brain , for the brain ,of the brain .... poem is written by the heart , for the heart , of the heart ..) கவிதை எழுது முன் அது உங்கள் இதயத்தில் இருந்து வருகிறதா என்று தயவு செய்து பாருங்கள்...இல்லை என்றால் ப்ளீஸ், blogspot சர்வரின் இடத்தை மிச்சம் செய்யுங்கள்...

அடுத்த பத்து சதவீத பதிவுகள் so called 'திரைப்பட விமர்சனங்களாக' உள்ளன..எனக்குத் தெரிந்து 'எந்திரனுக்கு'மட்டும் ஒரு ஐநூறு பேர் வரிந்து கட்டிக் கொண்டு விமர்சனம் எழுதி தங்கள் திரையுல ஆர்வத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்...ஆனால் எவ்வளவு இடங்களில் தான் விமர்சனங்களை படிப்பது? சன் டிவி, ராஜ் டிவி தொடங்கி, விகடன், குமுதம், கல்கி குங்குமம் என்று அந்த படத்தை எல்லாரும் ஸ்டில் ஸ்டில்லாக அலசி படாத பாடு படுத்தி விடுகிறார்கள்...(மதிப்பெண் வேறு போடுகிறார்கள்...) என்னைக் கேட்டால் ஒரு படத்தை விமர்சனம் செய்யும் உரிமை ஒரு திரைப்பட தொழில்நுட்பக் கலைஞருக்கோ ,இயக்குனருக்கோ அல்லது திரைப்படக் கல்லூரியில் படித்தவருக்கோ மட்டுமே உள்ளது... யார் வேண்டுமானாலும் ஓட்டு போடலாம் என்று இருப்பது போல யார் வேண்டுமாளாலும், ரகுமான் பாட்டு சரி இல்லை, லாஜிக் சரி இல்லை, என்றெல்லாம் அள்ளி விடுகிறார்கள்...நாமெல்லாம் ஒரு ரெண்டு நிமிடம் ஓடும் விளம்பரம் ஒன்றை செய்து பார்த்தால் தான் அதன் கஷ்டம் தெரியும்..

தமிழர்கள் நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்கள் என்பது பதிவுலகில் வலம்வரும் 25 % நகைச்சுவை (also called மொக்கை) பதிவுகளைப் பார்த்தால் தெரிகிறது...ஆனால் எத்தனை நேரம் தான் சிரித்துக் கொண்டே இருப்பது? (உதாரணம்: உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும், ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.)இந்த மாதிரி பதிவுகளில் பதிவை எழுதியவர்களும் அதன் follower -களும் மாறி மாறி கமெண்டுகளில் பேசிக்கொள்கிறார்கள்...இந்த மாதிரி காமெடிகள் நன்றாகவே இருக்கின்றன...ஆனால் உங்கள் creativity - ஐ வேறு விஷயங்கள் மீதும் திருப்பினால் நன்றாக இருக்கும்...

ஓகே இனி சில suggestions :

*பதிவுலகத்தின் (உண்மையான) திறமைகளையும் வெளி உலக வாய்ப்புகளையும் இணைக்க சில விஷயங்கள் வேண்டும்... தமிழ்மணம் போன்ற தளங்கள் வெறும் திரட்டிகளாக இல்லாமல் பதிவர்களை பத்திரிக்கை உலகிற்கோ, சினிமா உலகிற்க்கோ அறிமுகம் செய்யும் வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும் ..

*திரட்டிகள் போட்டிகளை அடிக்கடி நடத்தி வலைப் பதிவர்களை ஊக்குவிக்க வேண்டும்

*பதிவர்கள் சந்திப்புகள் அடிக்கடி நடக்க வேண்டும்..(location வாரியாக சங்கம் கூட அமைக்கலாம்

*கைக்கு வந்த எதையோ கிறுக்காமல் ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் பதிவர்கள் 'healthy discussion ' நடத்தலாம்...."அவனை அடி, இவனை அடித்துத் துரத்து, நீ பெரிய யோக்கியனா?" என்றெல்லாம் சண்டை போடாமல்

*ஒவ்வொரு தலைப்பின் கீழும் (ஆன்மிகம், அரசியல், அறிவியல், சினிமா) சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து அறிவிக்கலாம்

*முடிந்தால் பதிவுகள் Subject matter expert களால் 'சென்சார் ' செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்படலாம்

சமுத்ரா

Monday, November 22, 2010

இருபத்து ஒன்று, பன்னிரண்டு -3

மாயன் காலண்டரில் பூஜ்ஜிய நாள் என்பது (0 .0 .0 .0 .0 ) இதற்கு முன் இருந்த உலகம் அழிந்து இப்போதைய உலகம் தோன்றிய நாளாம்..அந்த நாள் 11 ஆகஸ்ட் 3114 (கி.மு) என்கிறார்கள்...இந்த நாளில் இருந்து எவ்வளவு நாட்கள் கழிந்து விட்டன என்ற கணக்கில் இந்த காலண்டர் ஒரு குறிப்பிட்ட நாளை அடையாளம் காண்கிறது...எனவே இது மறுத்திரும்பாத நேர்கோட்டு நாட்காட்டி (non -repeating linear calendar ) என்று அழைக்கப்படுகிறது...இந்த காலண்டர் எண் 20 ஐ அடிமானமாக (பேஸ்) உபயோகிக்கிறது (மனிதனின் விரல்கள் இருபது என்பதால்)


11 ஆகஸ்ட் 3114 ..இந்த நாள் தான் உலகத்தின் ஆரம்பம் என்பதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை..இருந்தாலும் மாயன் இனத்தவரின் ஜோதிட, வானியல் கணிப்புகள் எல்லாம் அறிவியல் முடிவுகளுடன் கிட்டத்தட்ட ஒத்துப்போகின்றன என்கிறார்கள்...இந்த மக்கள் தங்களின் நகரங்களையும் வீடுகளையும் வானில் உள்ள கிரகங்களின் நிலைகளின் படி நிர்மாணம் செய்தார்களாம்... இவர்கள் பூமி சூரியனை சுற்றி வர மிகச் சரியாக 365.24 நாட்கள் ஆகின்றன என்று ஆயிரம் ஆண்டுகள் முன்பே கணித்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது...

இந்த காலண்டரில் ஒரு நாள் 'கின்' (k 'in ) என்று அழைக்கப் படுகிறது...இருபது நாட்கள் சேர்ந்து ஒரு 'யூனல்' (uinal ) ஆகின்றன..பதினெட்டு யூனல்கள் சேர்ந்து ஒரு 'துன்' (tun ) (இது நம் காலண்டரில் கிட்டத்தட்ட ஒரு வருடம் 20x18 =360 )இருபது துன்கள் ஒரு காதுன்(k'atun ) இருபது காதுன்கள் ஒரு 'பக்தூன்' ( b'ak'tun ) உதாரணமாக மாயன் காலண்டரில் 4 .5 .1 .10 .15 என்ற குறியீடு உலகப் படைப்பில் (?) இருந்து 4 பக்தூன்கள் 5 காதுன்கள் 1 துன் 10 யூனல்கள் மற்றும் ஒரு நாள் கடந்து விட்டது என்ற அர்த்தத்தை தருகிறது..

மாயன் கல்வெட்டுகளின் படி ஒவ்வொரு பதிமூன்று பக்தூன்களுக்கு பிறகும் ஒரு பிரளயம் தோன்றி உலகம் அழிகிறது...இப்போது நடப்பது பதிமூன்றாவது பக்தூன் ...அதாவது உலகம் அழியப் போவது 13 ஆவது யுகத்தின் முடிவில் (13 . 0 .0 .0 .0 ) இது நம் காலண்டரில் 2012 டிசம்பர் 21 அன்றுடன் ஒத்துப் போகிறது... கீழே மாயன் குறியீடுகளையும் அவற்றுடன் ஒத்த நாட்களையும் காண்க

13 . 0 .0 .0 .0 -ஆகஸ்ட் 11 , 3114 யுக பிறப்பு

1 . 0 .0 .0 .0 - நவம்பர் 13 2720

2 . 0 .0 .0 .0 -மே 21 , 1931

3. 0 .0 .0 .0

"
"
13 . 0 .0 .0 .0 - டிசம்பர் 12 , 2012 யுக முடிவு

(ச்சே, இந்த பதிமூனுக்கு நம்மளை எல்லாம் பயமுறுத்துவதே வேலையாப் போச்சுப்பா)

விரல்கள் இருபது என்பதால் 20 ஐ அடிமானமாக மாயன் மக்கள் எடுத்துக் கொண்டார்களாம்....(நாம் ஏனோ கை விரல்களை மட்டும் எடுத்துக் கொண்டு 10 ஐ அடிமானமாகக் கொண்ட கணிதத்தை உருவாக்கி விட்டோம்) ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் என்பதால் அதனுடன் ஒத்து வருவதற்கு இருபதை 18 ஆல் பெருக்கினார்கள்...(மீதியிருக்கும் ஐந்து நாட்களை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவற்றை 'ராசியில்லாத' நாட்கள் என்று ஒதுக்கி விட்டார்கள்)

குகுல்சான் கோயிலைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? (the Temple of Kukulkan ) தங்கள் காலண்டருடன் ஒத்து வரும் படி மாயன் இனத்தவர்கள் கட்டிய பாம்புக் கடவுளுக்கான கோவில் அது...(மெக்சிகோவில் உள்ள ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தளமான சிச்சேன் இட்சாவில் உள்ளது) இந்த கோவில் மாயன் இனத்தவர்களின் புனித இடமாகும்...சூரியனை சுற்றி பூமி செல்லும் நிலைகளை ஒத்து கட்டப்பட்ட கலையமைப்பை உடையது...இது ஒரு பிரமிடின் வடிவில் இருக்கிறது...பிரமிடின் நான்கு பக்கங்களிலும் 91 படிகள் அமைந்துள்ளன...(4 x 91 =364 ) உச்சியையும் சேர்த்து 365 , அதாவது வருடத்தின் 365 நாட்கள் ... பிரமிடின் உள்ளே ஆராய்சியாளர்களைத் தவிர சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப் படுவதில்லை...(இதன் உள்ளே சில ரகசியங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்)


நம் முன்னோர்கள் ஒரு வருடத்தை உத்தராயணம் மற்றும் தட்சிணாயணம் என்று இரு பிரிவுகளாகப் பிரித்தனர்...உத்தராயணத்தை தேவர்களின் பகல் காலம் என்றும் தட்சிணாயணத்தை தேவர்களின் இரவுக்காலம் என்றும் கூறினார்கள்..(மேலும் உத்தராயணத்தில் இறப்பவர்கள் நேரடியாக சொர்க்கத்திற்கு செல்வார்களாம்) அறிவியல் ரீதியாக உத்தராயணம் என்பது பூமியின் வடக்கு அரைக்கோளம் சூரியனை நோக்கி சாய்ந்திருக்கும் ஆறு மாத காலம் (பூமியின் சாய்ந்த அச்சின் காரணமாக) இந்த ஆறு மாதங்களில் சூரியனின் கதிர்கள் வடக்கு அரைக் கோளத்தில் செங்குத்தாக விழுவதால் பூமி வெப்பமாகவும் பகல் பொழுது அதிகமாகவும் இருக்கும்... தட்சிணாயணம் என்பது பூமியின் வடக்கு அரைக்கோளம் சூரியனை விட்டு விலகி இருக்கும் ஆறு மாத காலங்கள்...இந்த நாட்களில் சூரியனின் கதிர்கள் மிகவும் சாய்வாக பூமியின் மீது விழுவதால் குளிராகவும், இரவுப் பொழுதுகள் அதிகமாகவும் இருக்கும்...


மேலும் உத்தராயணத்தின் போது சூரியன் வானத்தில் வடக்குப் பக்கமாக கொஞ்சம் நகர்ந்திருக்கும் (நடு வானில் இல்லாமல்) ...(தட்சிணாயனத்தின் போது வானில் தெற்குப் பக்கமாக) ஆங்கிலத்தில் Solstice என்று அழைக்கப் படும் இந்த கதிர்-திருப்ப நாளின் போது சூரியன் வானத்தில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகரும்...இந்த நாள் எல்லா நாடுகளிலும் ஒரு முக்கியமான உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது...(அந்தந்த கால நிலைகளுக்கு ஏற்ப,...கிறிஸ்மஸ் கூட ஒரு Solstice festival தான் ) இந்தியாவில் இந்த நிகழ்வானது சூரிய பகவான் தன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வடக்குப் பக்கமாக நகர்த்தும் 'ரத சப்தமி' என்ற விழாவாகக் கொண்டாடப் படுகிறது...இன்றும் ஹிந்துக்களின் வீடுகளில் இந்த நாளின் போது சூரியனின் ரதத்தை கோலம் போட்டு அதற்க்கு பூஜை செய்து , பொங்கல் வைத்து, பால் பொங்கி அதை தேவர்களின் உஷத் காலமாகக்(dawn ) கொண்டாடுகிறார்கள்...(மார்கழியின் போது பாடப்படும் திருப்பாவை போன்ற பள்ளி எழுச்சிகள் தேவர்களின் இரவு முடிந்து விட்டதை அறிவித்து அவர்களை துயில் எழச் செய்யவே பாடப்படுகின்றன)



சரி இதற்கும் குகுல்சான் கோவிலுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இந்த பிரமிடு ஒரு 'மினி சூரிய குடும்பம்' போன்றதாம்...இதைப் பார்த்தே வானில் எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கே இருக்கின்றன என்று கூறி விடலாமாம்...(நமக்கெல்லாம் மேலே பார்த்தால் கூட தெரிவதில்லை :-( )

இந்த பிரமிடின் நான்கு பக்கங்களில் பெரிய பாம்புத் தலைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன.. இந்த பாம்புகளுக்கு வேண்டுமென்றே உடலும் வாலும் அமைக்கப்படவில்லை...இது ஏன் என்றால் சூரியத் திருப்பம் ஏற்படும் வருடத்தின் அந்த இரண்டு நாட்களில் சூரிய ஒளி இந்த பிரமிடின் மீது விழுமாம்...அப்போது அதன் பக்கவாட்டுச் சுவர்களின் நிழல்கள் பிரமிடின் மீது விழுமாம்..அப்போது அந்த நிழல் பாம்புத் தலையுடன் கச்சிதமாகப் பொருந்தி அந்த பாம்பு உடல் பெற்று உயிர் பெற்று விட்டது போலத் தோன்றுமாம்...அதாவது பாம்பு சொர்க்கத்தில் இருந்து கீழே இறங்கி வந்து 'அறுவடை' நேரம் வந்து விட்டது என்று கூறுகிறதாம்.... இந்த நிழலில் ஏழு முக்கோணங்களும் ஒரு பாம்பும் இருப்பதால் இது ஏழு சக்கரங்கள் வழியே எழும் குண்டலினியையும் குறிக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள் (பார்க்க படம், இந்த சூரியத் திருப்ப நாளின் போது பிரமிடைப் பார்ப்பது ஒரு புண்ணியச் செயல் என்பதால் அந்த நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது...)



இந்த ஒரு அபாரமான கட்டிடக் கலை மற்றும் வானியல் திறமை மாயன் மக்களை ஒரு பேரறிவு வாய்ந்த சமூகமாக அடையாளம் காட்டுகிறது...தொலைநோக்கி, இயந்திரங்கள் எல்லாம் இல்லாத காலத்தில் எப்படி இவ்வளவு சரியாக பூமியின் ஓட்டத்தைக் கணித்து அதை தங்கள் பிரமிடில் வடிவமைத்தார்கள் என்பது ஆச்சரியம்... மேலும் மழை நீரை சேமிக்க மாயன் மக்கள் ஓர் அருமையான திட்டத்தை செயல்படுத்தினார்கள்...தங்கள் நகரத்தின் தரையை முழுவதும் ஒருவித limestone பூச்சால் பூசினார்கள்...இந்த பூச்சு மழை நீரை மண்ணுக்குள்ளே செல்லாமல் தடுத்தது..அதோடு நகரத்தின் ஒட்டு மொத்த தளமும் 0 .76 டிகிரிகள் சாய்ந்திருக்கும் படியும் சாய்வின் இறுதியில் ஒரு பெரிய நீர்த்தேக்கம் இருக்கும் படியும் அமைத்தனர்...எனவே மழை நீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் அந்த அணையில் தேங்கியது..











இதனால் தான் மாயன் மக்கள் 2012 டிசம்பரில் உலகம் அழியும் என்று கூறிச் சென்றது உண்மையாகி விடுமோ என்று சிலர் பயப்படுகிறார்கள்


சமுத்ரா