இந்த வலையில் தேடவும்

Monday, November 8, 2010

நான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-16


மாறுகண் போலிஸ்காரர் ஒருவர் மூன்று குடிகாரர்களை அரஸ்ட் செய்தார்...

போலீஸ்காரர் முதல் ஆளைப் பார்த்து "உன் பேர் என்னடா ?" என்றார்...

இரண்டாவதாக நின்றிருந்தவன் "என் பேர் மைகேலுங்க" என்றான்



போலீஸ்காரர் கடுப்பாகி அவனைப் பார்த்து "உன்னைக் கேக்கலை" என்றார்..

மூன்றாவதாக நின்றிருந்தவன் " சார் நான் எதுவுமே சொல்லலைங்களே" என்றான்...


*****

வேலைக்காரி முனியம்மா ஒரு மத்தியான நேரம் வீட்டைத் துடைத்துக் கொண்டிருந்தாள்..

ஹாலில் ஃபோன் அடித்தது...

வெகு நேரம் ஆகியும் யாரும் எடுக்காததால் போய் எடுத்து "ஹலோ யாருங்க?" என்றாள்..

"என்னது யாரா, நான் தான் இந்த வீட்டு முதலாளி, நீ யார்?"

"வேலைக்காரி முனியம்மாளுங்க"

"சரி..போய் உடனே வீட்டுக்காரம்மாவை கூட்டி வா..அவசரம்"

"சரிங்க"

சில வினாடிகள் கழித்து
"அய்யா,, எப்படி சொல்றதுன்னு தெரியலைங்க....அம்மா பெட் ரூம்ல வேற யாரோ கூட இருக்காங்க"

"என்னது,,,? துரோகி, சரி நீ என்ன பண்ற...அவங்களுக்குத் தெரியாம பெட் ரூமுக்கு போ...அங்க என் ட்ராயர்ல
துப்பாக்கி இருக்கும்...அதை எடுத்து ரெண்டு பேரையும் சுட்டுடு"

"அய்யா இது என்னால முடியாதுங்க"

"இதப் பார்...சொல்ற மாதிரி செய்...இல்லன்னா வேலை போயிரும்"

"சரிங்கய்யா"

டுமீல்...டுமீல்...


சில நிமிடங்கள் கழித்து
"ஐயா...நீங்க சொன்ன மாதிரியே செஞ்சுட்டேன்"

"ரொம்ப நல்லது...துரோகி ஒழிஞ்சா...சரி நீ இப்ப என்ன பண்ற ரெண்டு பேரையும் காலைப் பிடித்து இழுத்துட்டு போய் நீச்சல் குளத்துல போட்டுடு..."

"ஐயா..நீச்சல் குளங்களா...அது எங்க இருக்கு"

போனில் சில வினாடிகள் மௌனம் நிலவியது...

"சாரி, ராங் நம்பர்"



~சமுத்ரா

3 comments:

கணேஷ் said...

நல்ல சிரிப்பு..பகிர்ந்ததுக்கு நன்றி...

cheena (சீனா) said...

aakaa ஆகா - சூப்பர் ஜோக்ஸ் - ஓஷோவின் ஜோக்ஸ் - நல்வாழ்த்துகள் சமுத்ர சுகி - நட்புடன் சீனா

bandhu said...

your blog is very very interesting! one of the blogs i resolve to visit as often as possible!