இந்த வலையில் தேடவும்

Monday, November 8, 2010

குருவியும் குழந்தையும் ...









பாட்டி பாத்ரூமில் கீழே விழுந்து விட்டாளாம்..
அப்பா போட்டிருந்த லோன் இன்னும் தாமதம் ஆகுமாம்...
தம்பி இந்த முறையும் அரியர் வைத்திருந்தான்...
தங்கைக்கு அவசரமாக இருபதாயிரம் வேண்டுமாம்...
வீட்டின் பின் சுவர் மழையில் இடிந்து விழுந்து விட்டதாம் ...
இவ்வளவு இருந்தும்
ஏதோ ஒரு இனம் புரியாத சுகம்
சொந்த ஊருக்குச் செல்லும் போது....

*****
என் குழந்தையுடன்
ஒரு மழைக் கால மாலையில் நடந்து கொண்டிருந்தேன்...
நாளை ஆபீசில் ஆடிட்டிங் ...
எல்.ஐ.சி ப்ரீமியம் இன்னும் கட்டவில்லை...
நண்பனின் கல்யாணத்திற்கு பரிசு வாங்க வேண்டும் ...
போன் ரிப்பேருக்கு மனைவி லைன் மேனைக் கூட்டி வரச் சொன்னாள்...
ஒரு கணத்தில் என்
குழந்தை "அப்பா அங்க பார் குருவி, அங்க பார் குருவி" என்றது
மரம் ஒன்றைக் காட்டி....

~சமுத்ரா

No comments: