இந்த வலையில் தேடவும்

Monday, September 27, 2010

ராக ரஞ்சனி - ஆபேரி




உங்களிடம் ஒரு கார் டிரைவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்(காரும் இருக்கிறது) ...நீங்கள் அவசரமாக கொஞ்சம் தூரமான ஓர் இடத்திற்குப் போக வேண்டியுள்ளது....ஏம்பா டிரைவர்! கொஞ்சம் வண்டி எடுப்பா என்று அவரிடம் கூறுகிறீர்கள்.... அவர் அதற்கு 'அவ்ளோ தூரமெல்லாம் நான் வர முடியாது சார் ' என்று கூறி விட முடியுமா? "போகலாம் சார் , இதோ அஞ்சே நிமிஷம் வண்டி கொண்டு வந்துடறேன் " , என்று சொன்னால் தானே தன் வேலையை தக்க வைத்துக் கொள்ள முடியும்?

அதே போல் மஹா விஷ்ணு இருக்கிறார்... அவரின் வாஹனம் கருடன்....'ஹே கருடா, த்யாகராஜனுக்கு ஏதோ கஷ்டமாம், உடனே புறப்படு" என்று கூறினால் "தங்கள் சித்தம் சுவாமி" இதோ புறப்பட்டு விட்டேன் என்று தானே கூற வேண்டும்? ஆனால் இன்னும் ராமர் (விஷ்ணு) த்யாகராஜரின் முன் வரவில்லை...அப்படியானால் என்னவென்று எடுத்துக் கொள்வது?
அந்த கருடன் "சுவாமி வைகுண்டத்திற்கும் பூலோகத்திற்கும் ரொம்ப தூரம் சுவாமி" என்னாலெல்லாம் அவ்ளோ தூரம் பறக்க முடியாது...நீங்கள் வேண்டுமானால் ஒரு ஹெலிகாப்டரை அர்ரெஞ் பண்ணிக் கொள்ளுங்கள்' என்று அவரிடம் சொல்லி விட்டான் போல் அல்லவா உள்ளது?

கக ராஜு நீ ஆனதி வினி வேக சனலேடோ

ககனானிகி இலகு பஹு தூரம் அனிநாடோ?


(நீ ஆணையிட்டால் கருடன் வேகமாக முன்னேறிச் செல்ல மாட்டானா? இல்லை அவன் வானுக்கும் பூமிக்கும் ரொம்ப தூரம் என்று கூறி விட்டானா?)

ஆபேரியில் த்யாகராஜரின் அழகியதொரு கீர்த்தனை 'நகுமோமு கனலேனி'...(உன் சிரித்த முகத்தைக் காணாமல்) நாமெல்லாம் பெரும்பாலும் இதைக் கேட்டிருப்போம்...
ஆபேரியில் அவர் இயற்றியது இந்த ஒரு கீர்த்தனை தான் போல் தெரிகிறது....

ஆபேரி ஒரு சேய் ராகம்...கரஹரப்ரியாவிலிருந்து பிறந்த ராகம் (அது என்ன பெயர்
கரஹரப்ரியா???) ....இதன் ஏறு வரிசை இறங்கு வரிசை கீழே:

ஆரோஹனம்: ச க 2 ம 1 ப நி 2 ச

அவரோஹனம்: ச நி 2 த 2 ப ம 1 க 2 ரி 2 ச

ஆபேரியில் கர்நாடக இசைப்பாடல்கள் நிறைய இருப்பதாகத் தெரியவில்லை (பஜரே மானச (மைசூர் வாசுதேவாசாரியார்) வீணாபேரி (முத்துசாமி தீக்சிதர் )என்பவை விட்டு...
இப்போது நகுமோமுவை யேசுதாஸ் அவர்களின் குரலில் கேட்டு விடலாம்

Get this widget | Track details | eSnips Social DNA

ஹிந்துஸ்தானி இசையில் ஆபேரிக்கு அருகில் வரும் ராகம்: "பீம்ப்ளாஸ்"

நகுமோமு பற்றி இன்னொரு தகவல்: அப்போதெல்லாம் இந்தப் பாடல் கச்சேரிகளில் பாடப்பட்டு வரவில்லையாம்.... (கொஞ்சம் 'western ' ஸ்டைலில் இருப்பதாலோ என்னவோ?)முதன்முதலில் இதைக் கச்சேரி செய்தவர் புல்லாங்குழல் வித்வான்ஸ்ரீ 'சரப சாஸ்திரிகள்' என்று கூறுவார்கள்...

ஓகே இனி சினிமாவுக்கு வருவோம்....

ஆபேரியில் சினிமாப் பாட்டு என்றதும் நினைவில் வருவது,, எஸ்,,,யு ஆர் கரெக்ட் ...."சிங்கார வேலனே, தேவா" சாஸ்திரிய சங்கீதத்தில் முறையான பயிற்சி இல்லாவிட்டாலும் எஸ்.ஜானகி அவர்கள் காரைக்குறிச்சிக்கு இணையாக வெளுத்து வாங்கியிருப்பார் இந்தப் பாட்டில் .....அடுத்து திருவிளையாடலில் வருமே "இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை"
சமீபத்திய உதாரணம் வேண்டும் என்றால் நித்யஸ்ரீ அவர்களின் குரலில் ஜீன்ஸ் படத்தில் பெரும் ஹிட் ஆன "கண்ணோடு காண்ப
தெல்லாம் தலைவா "

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா என்பது ஒரிஜினலாக எழுதப் பட்ட வரிகள் இல்லையாம்...கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட வரிகள் அவை....வைரமுத்து முதன் முதலில் எழுதிய வரிகள் கீழே...இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்....

"விண்மீனை ஏன் அழைத்தாய் தலைவா
வீட்டில் வைத்து வளர்ப்பதற்கா ?"

இனி மேல் ஆபேரியில் எந்தப் பாடு கேட்டாலும் "ஜக மேலே பரமாத்மா எவரிதோ மொரலிடுது? (உன்னை அல்லால் வேறு யாரிடம் முறையிடுவேன்) என்று அழுது உருகிய த்யாகராஜரின் பக்தியைக் கொஞ்சம் நினைத்துக் கொள்ளவும்...

மற்றொரு ராகத்துடன் சந்திக்கலாம்....

~சமுத்ரா

3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அருமையான ராக விளக்கம்.
நகுமோ...முழு தமிழ் மொழி பெயர்ப்பைத் தரவியலுமா?

சமுத்ரா said...

நன்றி யோகன் பாரிஸ்! கீழே உள்ள தளத்தில் நகுமோமுவின் முழு விளக்கத்தையும் காணலாம் நான் த்யாகராஜர் கீர்த்தனைகளுக்கு இந்த தளத்தைத் தான் பார்கிறேன்...

http://thyagaraja-vaibhavam.blogspot.com/2007/07/thyagaraja-kriti-nagu-momu-kana-leni.html

adhvaithan said...

enaku abheri ragam pathi onum teriyatu :(:(

karaharapriya... ithu asampoorna mela panchathi ragam kidayatu.. antha mela muraila they use to call this raaga as sri.. deekshidhar followed asampoorna melam.. he dint compose on karaharapriya..

this karaharapriya raga will be similar to sama ganam.. siva loves sama ganam.. so it is called harapriya..

athu sari munadi ethuku oru kara otindrukunu neenga kekratu kathula vizhartu.. that kara is for naming scheme "kadabayadhi".. for the same naming scheme sankarabarnam is called deerashankarabarnam, thodi is hanumaththodi, kalyani is mechakalyani.. google panunga for that naming scheme it s difficult to explain tat in comment