இந்த வலையில் தேடவும்

Saturday, August 28, 2010

ரயிலுக்குள் உலகங்கள்...





ஓடும் ரயில் ஒன்றின் பொது வகுப்புப் பெட்டி சிறியது தான்...அதற்குள் தான் எத்தனை உலகங்கள்?

*போன நிறுத்தத்தில் வாங்கித் தந்த
பலூன் உடைந்ததற்கு
அழுகின்ற குழந்தையின் உலகம்...

* சுமந்து வந்த முறுக்குக் கூடையை
கீழே வைக்க இடம் தேடும்
மூதாட்டியின் உலகம்...

* தரையை சுத்தம் செய்து
பயணிகளின் பாதம் பிடிக்கும்
போலியோ சிறுவனின் உலகம்...

* கதவருகே நின்று
கொண்டு வெளியே
வானத்தை வெறிக்கும்
இளைஞனின் உலகம்.....

* ஜன்னல் அருகே அமர்ந்து
பத்திரிக்கை படிக்கும்
மூக்குக் கண்ணாடி மனிதரின் உலகம்....

*அருகே அமர்ந்துள்ள
அத்தனை பேரையும்
விரோதமாகப் பார்க்கும்
பச்சைச் சேலை பெண்மணியின் உலகம்...

* கழிப்பறை அருகே
அழுக்கு உடையுடன்
செய்தித் தாள் விரித்து படுத்திருக்கும் கிழவரின் உலகம்....

* காதில் இயர்-போன்
மாட்டிக் கண்ணயர்ந்து விட்ட
வாலிபரின் உலகம்...

*'கரம் சாயா ' என்று சட்டைப் பையில்
சில்லறை குலங்க வந்து
கொண்டிருக்கும்வியாபாரியின் உலகம்....

*சக பயணியுடன் அரசியல்
பேசிக் கொண்டு
வரும் பெரியவரின் உலகம்....

இந்த உலகங்கள்
சிறிது நேரம் அருகருகே
வந்து விட்டுப் பின்னர்
மிக தூரம் மிக தூரம் விலகிச் செல்லும்
ரயில் நின்றதும்....

~சமுத்ரா

No comments: