இந்த வலையில் தேடவும்

Monday, December 27, 2010

ஹலோ, நீரா ராடியா ஸ்பீகிங்...




எல்லாம் கற்பனையே...

நீரா : ஹலோ ,யார் பேசறது?
எக்ஸ் : அதை சொல்றதுக்கே பயமா இருக்குதுங்க மேடம், இப்பல்லாம் நம்ம பேசறதை ஒட்டுக் கேட்டு குறுந்தகடா வெளியிட்டுர்றாங்க...பேஜாரு மேடம்...
நீரா: கவலைப் படாதீங்க.. இது 'சைனா' இம்போர்டட் போன்..யாராவது ஒட்டுக் கேட்க நினைத்தால் அதுல 'ப்ளா ப்ளா ப்ளாக் ஷீப்" அப்படின்னு ரைம்ஸ் வர்ற மாதிரி செட் பண்ணியிருக்கோம்..
எக்ஸ்: அப்பாடா....சரி மேடம் நான் தான் விஜய்..
நீரா: விஜய் மல்லையாவா? சொல்லுங்க புது பீர் ஏதாவது அப்ரூவ் பண்ணித் தரணுமா?
எக்ஸ்: மேடம், நான் விஜய், தமிழ் நடிகர் மேடம்..
நீரா: அப்படியா.. சாரி டமில் படம்லாம் பார்கறதுக்கு எங்க டைம்? சரி சொல்லுங்க..இது வரைக்கும் எவ்ளோ காமெடி படம் பண்ணியிருக்கீங்க?
எக்ஸ்: மேடம், நான் ஹீரோ..
நீரா: ஓ, சாரி..உங்க டமில் நாட்ல அல்லாரும் ஒரே கலர்ல இருக்கறதால தெரிய மாட்டேங்குது...சரி என்ன விஷயம்? அடுத்த கால்கு அத்வானி வெயிட் பண்றார் சீக்கிரம்..
எக்ஸ்: மேடம், நான் நடிச்ச காவலன் படத்துக்கு எப்படியாவது நீங்க இந்திய அளவுல நூறு தியேட்டர்கள் ஏற்பாடு பண்ணித் தரணும் ..டீலிங் எல்லாம் அப்பறம் பேசலாம்..
நீரா: (கடுப்பாகி) ஏய்! நான் ஏதோ டீலிங் பண்ணி அஞ்சு பத்து சம்பாதிக்கறது பிடிக்கலையா? நூறு பேரை கொலை செய்த குற்றத்திற்காக ஜெயிலுக்குப் போகனுமா? போன வைங்க ,,,
எக்ஸ்: (கண் கலங்கி) மேடம் என்னதா இருந்தாலும் ஒரு தியேட்டருக்கு ஒருத்தரு வருவாருன்னு கணக்கு போட்டீங்களே.. அது தான் மேடம் எனக்கு சந்தோஷம்..அந்த ஒரு ரசிகனுக்காக இந்த விஜய் உயிருள்ள வரை நடிப்பான் மேடம் நடிப்பான்.. இன்னிசை பாடி வரும் உங்கள் குரலுக்கு ஈடு இல்லை..நீரா இல்லையென்றால் ஒரு டீலிங் நடப்பதில்லை.. மேடம்...மேடம்,,
லைன்: கொய்ங்கக்க்க்கக்க்க்........

லைன்: டிரிங், டிரிங்...
நீரா: (மனதில்)ஐயோ இது எந்த சாவு கிராக்கியோ? ஹலோ! நீரா ஸ்பீகிங்...
எக்ஸ் : ஏய் நீரா, தலைக்கு யூஸ் பண்ணு மீரா. கூந்தல் வளரும் ஜோரா..
நீரா: ஹலோ, கவிதை கேட்கறதுக்கு எல்லாம் டைம் இல்லை.. டீலிங்க ஆரம்பிங்க.. ஒபாமா வைட்டிங்...உங்க பேர் என்ன?
எக்ஸ்: ஏய், யாரைக் கேட்கிற பேரு? நான் தான் உலகம் அறிந்த டீ.ஆரு...
நீரா: டீ. ஆர் னா? ஹலோ..உங்க அடை மொழியக் கேட்கவா நான் இருக்கேன்? அஞ்சு நிமிஷம் வேஸ்ட் ஆயிருச்சே!
எக்ஸ்: சிம்பு தெரியுமா? சிம்பு..
நீரா: யார் சிம்பு? என்னடா இது வம்பு? (ஐயோ இந்த ஆள் கூட பேசி நமக்கும் அடை மொழி வந்துருச்சே) சார், மேட்டருக்கு வரலன்னா போனு கட்டு..பேசுங்க துட்டு...
எக்ஸ்: நான் ஒரு சானல் ஆரம்பிக்கிறேன் பாப்பா..அதுக்கு உன் சிபாரிசு வேணும் டீப்பா..
நீரா: என்ன சானல்? இந்த கரடி எல்லாம் காட்டுவாங்களே, டிஸ்கவரி மாதிரி எதாவதா?
எக்ஸ்: (மனதில்) இவ கரடின்னின்னு சொன்னது இயல்பா தானே? ஏய் இல்லை..இது புதிய உலகின் டீ.வி.. மாற்றத்திற்கான ஒரு சாவி.. எனக்கு மட்டும் இதை முடிச்சுக் கொடுத்தா
உலகையே மாற்றிக் காட்டறேன்..
நீரா: (மனதில்) மக்கள் சானலை மாத்தாம இருந்தா சரி..சரி அட்ரஸ் கொடுங்க.கொட்டேஷன் அனுப்பறேன்
எக்ஸ்: சரி..(மனதில்) அடிப்பாவி லஞ்சத்துக்கும் கொட்டேஷனா? சரி நம்ம டிவிக்கு என்ன பேர் வைக்கலாம்?


லைன்: டிரிங், டிரிங்...
நீரா: ஹலோ..
எக்ஸ்:ஆங், உனக்கு தினமும் வர்ற கால்ஸ் முன்னூறு , அதுல சக்சஸ் ஆறது நூத்தி ரெண்டு..அதுல உனக்கு வர்ற அமௌன்ட் அம்பது லட்சத்து நானூத்தி இருபத்தி மூணு..
நீரா: (தாழ்ந்த குரலில்) சார் நீங்க பீ.ஜே.பி யா?
இத ரகசியமா வச்சுக்கங்க.. கவர் எந்த அட்ரசுக்கு வேண்டும்னு மட்டும் சொல்லுங்க..
எக்ஸ்: ஆங், தே.தி.மு.கா தெரியுமா?
நீரா: என்னது தேங்கா மூக்குல போயிருச்சா? ராங் நம்பர்..
எக்ஸ்: ஏய்ய் நில்லு, துளசி வாசம் மார்னாலும் இந்த தவசி வார்த்தை மாற மாட்டான்..
நீரா: உஸ் அப்பா.. ஒரு மார்கமாத்தான் அலையறாங்கப்பா.
எக்ஸ்: அது என்னோட கட்சி
நீரா: எனக்கு ரொம்ப நாளாவே ஒரு டவுட்டு..அது ஏன் தமிழ்நாட்டுல எல்லா கட்சியும் 'கா' வுல முடியுது? மக்களை காக்கா புடிக்கராங்களே அதனாலயா?
எக்ஸ்:ஏய் கேளு, எனக்கு உடனடியா அம்பது பம்பரம் வேணும்...(அய்யய்யோ இன்னும் பம்பரத்துலையே இருக்கமே) நான் தமிழ் நாட்டுல அம்பது தொகுதிகள்ல ஜெயிக்கணும்..இல்லன்னா உன்னைக் கடத்தி விருத்தகிரி படத்த நைட்டு பூரா பார்க்க விட்டுடுவேன்..
நீரா: அம்பது தொகுதியா? ரொம்ப செலவாகுமே?
எக்ஸ்: ஏய், இந்தியாவுல மொத்த கருப்புப் பணம்...
நீரா: ஐயோ, மறுபடியுமா..உங்களுக்கு இலவசமாவே முடிச்சுத் தந்திடறேன் ..மொதல்ல போனை வைங்க..
எக்ஸ்: தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை இலவசம்..ஹலோ...ஹலோ...ஹெல்ல்லோ...
லைன்: கோயங்க்க்

நீரா: இந்த போனை எவன் தான் கண்டுபிடிச்சானோ?
பி. ஏ: க்ரகாம்பல் மேடம்
நீரா: ஹலோ, நான் இங்க என்ன குவிஸ்சா நடத்தறேன்?போங்க வெளியில நின்னு யாராவது சி.பீ.ஐ காரங்க வராங்களா பாருங்க...
போன்: டிரிங், டிரிங்
நீரா: ஹலோ
எக்ஸ்: கதவைத் திற...காற்று வரட்டும்
நீரா: (இப்பவே கண்ணைக் கட்டுதே,,) கதவைத் திறந்தா
காத்து வருதோ இல்லையோ ..சி.பீ.ஐ காரங்க வந்துருவாங்க..சீக்கிரம் சொல்லுங்க..என்ன முடிக்கணும்?
எக்ஸ்: (பேட்டை ரவுடி லெவலுக்கு பேசறாளே) சாந்தம், ஆனந்தம் மகளே நிம்மதி பெருகட்டும்..
நீரா: யார் நீங்க?
எக்ஸ்: அதைத் தேடித்தானே இந்த ஆன்மீகப் பயணம்! வா உள்ளே வா! உச்சம் காணலாம்..
நீரா: (என்னது உச்சா வருதா?ஐயோ இன்னிக்கு பூராம் மெண்டல் கேசாவே மாட்டுதே..ராசா எவ்வளவோ தேவலாம் சாமி) என்ன வேணும் உங்களுக்கு?
எக்ஸ்: ரஞ்சிதா.. (அய்யய்யோ ஒளறிட்டமோ?) மகளே புல்லர்கள் என் மீது போட்டுள்ள பொய் வழக்குகளை விடுவிக்க நீ உதவி செய்ய வேண்டும்..
நீரா: டீலிங் என்ன?
எக்ஸ்: டீலிங்னா உணர்ச்சி தானே?
நீரா: கருமம் ,கருமம் எவ்ளோ தருவீங்க?
எக்ஸ்: மனம் நிறைய மகிழ்ச்சி, ஆன்மா நிறைய ஆனந்தம் தருவேன் பெண்ணே, வா ஆயிரம் இதழ்த் தாமரையை விரிக்கலாம்
நீரா: சார், தாமரை எல்லாம் இருக்கட்டும், உங்க செக் புக்கை முதல்ல விரிங்க..
எக்ஸ்: மகளே, நான் குபேர யாகம் செய்விப்பேன்..உனக்கு பொருள் இன்னும் கொட்டும்..ஓம் க்ரீம் ஹைம்..
நீரா பி.எ. : மேடம், இந்தாங்க பஞ்சு, காதுல பாருங்க ரத்தம்...


நீரா: இன்னிக்கு இது தான் கடைசி கால்..போதும் டா சாமி,, கடவுளே நல்ல பார்டியா மாட்டனும்
போன்: டிரிங்,டிரிங்
நீரா: ஹலோ, யாரது?
எக்ஸ்: மேடம் நான் தான் சமுத்ரா
நீரா: அப்படின்னா?
எக்ஸ்: பதிவர்..
நீரா: பத்திரம் எழுதரவரா? (ஆஹா நல்ல பார்டிதான்)
எக்ஸ்: இல்லங்க..ப்ளாக் எழுதறவர்...
நீரா: ப்ளாக்-னா?
எக்ஸ்: (மனதில்) அட ஞான சூன்யமே! நம்ம மனசுல இருக்கறதெல்லாம் கொட்டற இடம் மேடம்..
நீரா: குப்பைத் தொட்டி மாதிரியா?
எக்ஸ்: (மவளே இரு உன்னை சுப்பிரமணியம் சாமியிடம் கோலி மூட்டி விடுறேன்) இல்லை...இது வேற விஷயம் உங்களுக்குப் புரியாது...
நீரா: என்ன எழவோ, சரி ஸ்டார்ட் டீலிங்...
எக்ஸ்: என் ப்ளாக்-ல ஆயிரம் follower இருக்கற மாதிரி ஏற்பாடு பண்ணித் தரனும் ...
நீரா: சரி..ஒரு follower க்கு ஆயிரம் கொடுத்துருங்க...பாவம் குரலைப் பாத்தா பாவப்பட்டவர் போலத் தெரியுது..இல்லன்னா என் ஸ்டார்டிங் டீலே ஒரு கோடி தான்
எக்ஸ்: கொஞ்சம் குறைச்சுக்குங்க மேடம்...
நீரா: வாட் நான் சென்ஸ், வெங்காய
ம் என்ன விலை தெரியுமா இன்னிக்கு? போன் பில் கட்டவே எனக்கு காசு போத மாட்டேங்குது..
எக்ஸ்: இல்லைன்னா என் ப்ளாக்-ல உங்களைப் பத்தி எழுதிருவேன்...
நீரா: ஹா ஹா ஹா... எழுது ரூமர் எல்லாம் எனக்கு பூமர் சாப்பிடற மாதிரி...
போன் கட் ஆகி விடுகிறது...
சாமி, வேண்டாம் டா இந்தப் பொழப்பு...பீ.
. அந்த --ஆனந்தா ஆஸ்ரமத்துக்கு போன் போடுங்க...சிஷ்யையா போய் சேர்ந்துடறேன்...
பீ,ஏ. வேண்டாம் மேடம்..வாணலிக்கு பயந்து அடுப்புல போய் விழுந்துராதீங்க...


சமுத்ரா...


2 comments:

வானம் said...

சூப்பரப்பு.

Anonymous said...

//எக்ஸ்: ஆங், தே.தி.மு.கா தெரியுமா?
நீரா: என்னது தேங்கா மூக்குல போயிருச்சா? ராங் நம்பர்..//
super. உக்காந்து யோசிச்சிருக்கீங்களே!!