இந்த வலையில் தேடவும்

Monday, July 19, 2010

Poeple's Week





ங்கள் கம்பெனியில் (MNC தான்) வருடத்துக்கு ஒரு முறை Poeple's Week என்று ஒரு சமாச்சாரம் நடக்கும். வருடம் முழுவதும் வேலை செய்கிறாயே? இந்த ஒரு வாரம் ENJOY பண்ணு என்று நினைத்தோ என்னவோ ! (அப்போதுபல போட்டிகள், FUN EVENTS எல்லாம் நடக்கும்) ..அப்போதும் கூட எங்கள் மேனேஜர் 'நீ எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்... "but make sure your deliverables are not affected" என்று சொல்வார். [அது எப்படி சாத்தியம் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை]

அடியேன் ஒரு ஐந்தாறு போட்டிகளில் கலந்து கொண்டேன். ஒன்றிலும் பரிசு வரவில்லை... Competition களில் எனக்கு நம்பிக்கை இல்லை... நான் ஒருபோட்டியை நடத்தினால் ஒன்று கலந்து கொண்ட எல்லோருக்கும் பரிசு கொடு, இல்லை யாருக்கும் கொடுக்காதே என்று சொல்வேன்... ஏனென்றால்
"It is not selecting the best ' . It is selecting the better !"...உங்களுக்குப் பரிசு கிடைத்தால், அல்லது நீங்கள் முதலாவதாக வந்தால் மற்ற எல்லாரும் உங்களைவிட கேவலமாக Perform செய்தார்கள் என்றும் அர்த்தம்...

அழகிப் போட்டிகளைப் பற்றிய அறிவே இல்லாமல் ஏதோ ஒருஅக்ரஹாரத்தில்
பிறந்து தயிர் சாதத்தில் வளர்ந்த ஒரு பெண் உண்மையிலேயே 'உலக அழகி' யாக இருக்கலாம். 'Star Singer', 'Super Singer'
என்ற non-sense களை அறியாது வயல் வெளியில் நாற்று நடும் போது சுருதி சுத்தமாகப் பாடும் பெண் உண்மையிலேயே Super Singer ஆக இருக்கலாம்...

OK back to the topic...

பாட்டுப் போட்டி நடந்தது... நானும் கலந்து கொண்டு 'ப்ரோசேவாரெவருரா"
(ஏன் இந்தக் கொலை வெறி????) என்ற சங்கராபரணப் பாடலைப் (ராகம் அல்ல , திரைப் படம்)பாடினேன்.

முன்னே அமர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தவர்களில் சிலர் தலையைச் சொறிந்து கொண்டும் , சிலர் கொட்டாவி விட்டுக் கொண்டும் , சிலர் வேறுபக்கம் திரும்பிக் கொண்டும் இருந்தனர். (தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டுவிட்டோமே என்ற முக பாவனையில்)

இருந்தாலும் Prize கிடைக்கும் என்ற நப்பாசை ( ச ரி க ம ப த நி எல்லாம் நடுவில் பாடியதால்) மனதின் ஓர் ஓரத்தில் இருந்தது. முடிவுகள் அறிவிக்கும் வரை ஒரு விதமான 'Virtual Dignity' யில் உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.
எல்லோரும் மிக நன்றாகப் பாடியதாகவும் , புள்ளி பூஜ்ஜியம் பூஜ்ஜியம் தசமஸ்தான வித்யாசத்தில் மற்றவர்கள் தோற்று விட்டதாகவும் நடுவர்கள் நவின்றார்கள்... (இது எல்லாம் உடான்ஸ் என்று ,மனட்சாட்சி உறுத்தினாலும்)

முதல் பரிசு யாரோ 'X' இற்கும் இரண்டாம் பரிசு யாரோ 'Y' க்கும் மூன்றாவது 'Z' இற்கும் கொடுக்கப் பட்டது.

அப்போது தான் நான் பாடியதை காமெடியாக எடுத்துக் கொண்டு விட்டார்கள் என்று தெரிந்தது. மேலும், பரிசு கிடைக்க வேண்டும் என்றால் ஒரு பிரபலமான ஹிந்திப் பாடலை அடித் தொண்டையிலிருந்து உச்ச ஸ்தாயியில் கத்த வேண்டும் என்பதும் புரிந்தது...

~சமுத்ரா



No comments: