இந்த வலையில் தேடவும்

Wednesday, July 7, 2010

இரண்டு விஷயங்கள்...

சமீபத்தில் கர்நாடகா அரசின் KSTDC package tour ஒன்றிற்குச் சென்றிருந்தேன். ( மடிகேரி மற்றும் நாகர ஹோளே) .[ யாருடன் என்பது beyond the scope of this document :D)
உங்களுக்கு விருப்பம் இருந்தால் இங்கே கிளிக் செய்க.
அப்போது நான் சந்தித்த மனதை நெருடிய இரண்டு விஷயங்களைப் பற்றி எழுதலாம் என்று எழுதுகிறேன்.

வி1: பஸ் புறப்பட்டதும் tour guide (ரொம்ப பக்திமான் போலும்) 'வாதாபி கணபதிம்' மங்கள கரமாக play செய்தார். (மாண்டலின் ஸ்ரீநிவாஸ் ) .பிறகு நளின காந்தியில் ' மன வ்யாலகிம்' தொடங்கியது. ரொம்ப நாளாக நான் நளின காந்தி கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். (ஆபீசில் எல்லா music site- களும் block :( ) அப்போது பின் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு இளைஞர் (வட நாட்டில் இருந்து வந்த மாடர்ன் இளைஞர் போலும்)
எழுந்து வந்து டிரைவர் -இடம் அந்த music- ஐ தயவு செய்து நிறுத்துமாறு கூறி தன் கலைச் சேவையை ஆற்றினார். (இத்தனைக்கும் அவர் தன் காதில் I-pod அணிந்து இருந்தார்) ...கர்ணன் குண்டலத்துடன் பிறந்தது போல இவர் காதில் I-pod உடன் பிறந்திருப்பார்
போலும்....
மன வ்யாலகிம் நிறுத்தப்பட்டு FM -இல் ஒரு ஹிந்தி பாட்டு கத்த ஆரம்பித்தது.
ஏன் கர்நாடக சங்கீதத்தின் மீது இவ்வளவு Intolrence? நம் மண்ணில் பிறந்த ஓர் அபூர்வமான இசையின் மீது நம் இளைஞர்களுக்கே
ஏன் இத்தனை வெறுப்பு வந்தது? of course, முதன் முதலாகக் கேட்கும் போது அது ஒரே இரைச்சலாகத் தான் இருக்கும்.
எனக்குத் தெரிந்த சிலர் TV. யில் சேனல் மாற்றும் போது இடையே கர்நாடக சங்கீதம் வந்தால் என்னவோ அஜாமேளன் நாராயண நாமம் கேட்டு விட்ட ரேஞ்சுக்கு அதிர்ந்து ஒரு மில்லி செகண்டில் சேனலை மாற்றி நிம்மதிப் பெரு மூச்சு விடுவதைப் பார்த்திருக்கிறேன்.
ஏன் கர்நாடக இசை , சமூகத்தில் வெகு சிலரையே கவர்ந்து வந்துள்ளது? இதைப் பற்றி விரிவாக இன்னொரு பதிவில் சீக்கிரம் எழுதலாம் என்று உள்ளேன்.

வி2: அந்த tour -இன் போது Abbay Falls என்ற ஒரு நீர் வீழ்ச்சிக்குக் கூட்டிச் சென்றார்கள். Falls சிறியது தான் என்றாலும் மிக ரம்மியமாக இருந்தது. வழக்கம் போல் சிலர் அருவியை ரசிக்காமல் தங்களுடைய கேமரா க்களில் முழுகி விட்டிருந்தனர்.
அப்போது பக்கத்தில் யாரோ இருவர், (NRI போலும்) பேசுவது காதில் விழுந்தது. " this is not even 1% compared to Niagra Falls, no?"
என்று. ..
இவர்களெல்லாம் எதற்காக செலவு செய்து இவ்வளவு தூரம் வர வேண்டும்? Niagra விலேயே நீச்சல் அடித்துக் கொண்டு
அமெரிக்கா போல உண்டா? கனடா போல உண்டா? என்று பாடிக் கொண்டு இருக்க வேண்டியது தானே?
of course, நயாகராவில் "Maid of the mist' என்று சொல்லப்படும் படகு சவாரி ஒரு அற்புதமான அனுபவம் என்றாலும் Niagra is Niagra, and Abbay Falls is Abbay Falls!" இல்லையா? ஒவ்வொன்றிக்கும் அதற்கே உண்டான அழகு உள்ளதல்லவா?
கடந்த காலத்தை விட்டு வர இயலாத, அழகை ரசிக்கத் தெரியாத இவர்களெல்லாம் ஏன் சுற்றுலா வர வேண்டும் என்று தெரிய வில்லை...

-சமுத்ரா






1 comment:

cheena (சீனா) said...

அன்பின் சமுத்ர சுகி

ஆதங்கம் புரிகிறது - ஆனால் தவிர்க்க இயலாது. என்ன செய்வது .....

ஆரஞ்சின் விலையில் ஆப்பிளின் குனம் வேண்டும் என விரும்புவார்கள். ஆரஞ்ச் ஆரஞ்ச் தான் - ஆப்பிள் ஆப்பிள் தான்

நல்வாழ்த்துகள் சமுத்ர சுகி
நட்புடன் சீனா