இந்த வலையில் தேடவும்

Thursday, July 21, 2011

கலைடாஸ்கோப்-30

இந்த வார கலைடாஸ்கோப் monochromatic ! :D (வெயிட், வெயிட், கூகிளை அப்புறம் பார்த்துக்கலாம் :-) )

நேற்று விஜய் டி.வி. 'நடந்தது என்ன' நிகழ்ச்சியில் ஒருவரைக் காட்டினார்கள். ஏதோ ஒரு விசித்திரமான வியாதி வந்து அவருக்கு முகம், கண்கள் வாய் எல்லாம் பெருத்து விகாரமான முகம் வந்து விட்டிருந்தது. அவர் இதனால் எங்கேயும் வெளியே நடமாடுவது இல்லையாம். மேலும் தான் எங்கே மீண்டும் குரங்காக (Reverse evolution ) மாறி விடுவோமோ என்றும் பயப்படுகிறாராம். தன் முகத்தை தானே பார்க்க சகிக்காமல் ஓ என்று அழுகிறார். (உண்மையில் ஓ என்று எல்லாம் அழவில்லை.சும்மா உயர்வு நவிற்சி அணிக்காக சொன்னேன்!)

தான் அழகாக இல்லையே என்ற எண்ணம் காலம் காலமாக மனிதர்களைப் படுத்தி வந்திருக்கிறது என்று தோன்றுகிறது.அதே போல கொஞ்சம் அழகாக இருப்பவர்களுக்கு இயல்பாகவே உள்ளூர ஒரு கர்வம் இருப்பதையும் மறுக்க முடியாது. 'என்னை ஏம்மா கருப்பா பெத்த ? என்று ஒரு மகனோ மகளோ கேட்கும் போது குங்குமப்பூ சாப்பிட மறந்து விட்டேன் என்று அம்மா ஒவ்வொரு முறையும் ஜோக் அடிக்க முடியாது.

Beauty is in the eyes of the Beholder என்பார்கள். மஜ்னுவைப் பார்த்து அந்த நாட்டு மன்னன் "அந்த லைலா என்ன அவ்வளவு அழகா?சாதாரணமாகத் தானே இருக்கிறாள்? நீ சரி என்று சொன்னால் உனக்கு அரண்மனை அந்தப்புர பேரழகி ஒருத்தியை
கல்யாணம் செய்து கொள்ள அனுமதி தருகிறேன் "என்கிறான். அதற்கு மஜ்னு 'அரசே , லைலாவின் அழகைக் காண
உங்களுக்கு மஜ்னுவின் கண்கள் வேண்டும் ' என்கிறான்.

அழகு என்றால் என்ன??அழகு என்பது ஒரு Subjective term .அதை சரியாக வரையறுக்கத் தெரியாமலேயே நாம் அதை இலக்கியங்களில் இருந்து ஹைக்கூக்கள் வரை சகட்டு மேனிக்கு உபயோகித்துக் கொண்டு வருகிறோம். ஏய் நீ ரொம்ப அழகா இருக்க , அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்று சினிமாவெல்லாம் வேறு எடுக்கிறோம்.'அழகான' ராட்சசியே அழகிய அசுரா என்று ஆக்சிமோரானில் பாடுகிறோம். சரியான வரையறை தெரியாமலேயே சில சொற்களை நாம் வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம் என்று தோன்றுகிறது.உ.தா: கடவுள், காதல், மகிழ்ச்சி..இதில் அழகும் ஒன்று.

மனித வரலாற்றிலேயே அவன் எதற்காக அதிக பணம் செலவழித்தான் என்று கணக்கு பார்த்தால் அழகு சாதனங்களுக்காக என்று தைரியமாக சொல்லலாம். 'சிவப்பழகு' என்ற புதிய வார்த்தையை நம் விளம்பரங்கள் இப்போது அறிமுகப்படுத்தி இருக்கின்றன.(ஆமாம்,
சிவப்பாக இருப்பவர்கள் உண்மையிலேயே பொய் சொல்ல மாட்டார்களா? வறுமையின் நிறம் போல உண்மையின் நிறமும் சிவப்பா? )ஆண்களுக்கு என்று தனியாக FAIRNESS CREAM கள் வந்து விட்டன.ஒரு விளம்பரத்தில் பெண்களுக்கான க்ரீமை அப்பிக்கொள்ளும் இளைரைப் பார்த்து சூர்யா டென்ஷன் ஆகி கத்துவது எரிச்சலாக இருக்கிறது. எதை அப்பிக் கொண்டால் என்ன? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான். நிஜ வாழ்க்கையில் அந்த க்ரீமை அப்பிக் கொண்டதால் மட்டும் மறுநாள் வேலை கிடைத்து விடப் போவதில்லை. ஒவ்வொரு க்ரீம்களிலும் ஒவ்வொரு 'FORMULA ' இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் எல்லா கிரீம்களிலும் ஒரு ஃபார்முலா பொதுவாக இருக்கிறது. நம்மிடம் பணத்தைக் கறக்கும் ஃபார்முலா.


பெங்களூருவில் Health and Glow என்று அழகு சாதனங்களுக்காகவே ஷாப்கள் இருக்கின்றன.(சென்னையிலும் இருக்கிறதா?) உள்ளே போய் பார்த்தால் மயங்கி விழுந்து விடும் அளவு கலர் கலராக கிரீம்கள், BODY லோஷன்கள், ஷாம்புகள், சோப்புகள் கிடைக்கின்றன. தலை சீவிக் கொள்வதற்கு Rounded tip சீப்புகள் அதிகம் இல்லை ஒரு இருநூறு ரூபாய் விலையில் 'சீப்பாக' கிடைக்கின்றன.பொடுகு என்னும் டான்ட்ரஃப்-பைப் போக்க மட்டும் இப்போது ஒரு பத்து ஷாம்பூக்கள் கிடைக்கின்றன.எதை வாங்குவது எதை விடுவது? Head n shoulders விளம்பரம் பார்த்து ஓரளவு convince ஆகி இருக்கும் போது All clear விளம்பரத்தில் இரண்டு பேர் வந்து இனிமேல் பொடுகு வாழ்க்கையில் வரவே வராது என்று தலைமேல் கைவைத்து சத்தியம் செய்து குழப்புகிறார்கள்! பேசாமல் தலைக்கு சீயக்காய்த் தூள் பூசிக் கொண்டு விடலாம் என்று தோன்றுகிறது.

சிலரை ஏனோ நமக்குப் பார்த்தவுடன் பிடித்துப் போகிறது. அப்படி என்றால் அவர் அழகாக இருக்கிறார் என்று அர்த்தமா? தெரியவில்லை.ஏதோ Something attracts ! அதே போல சிலரை நாம் பார்த்தவுடனே (ஏனோ காரணமின்றி )அவரை நாம் வெறுக்கிறோம். தனுஷ் சொல்வது போல சிலரை பார்த்தவுடன் பிடிக்காது ;பார்க்க பார்க்க தான் பிடிக்கும்! 'கண்டதும் காதல்' என்ற கான்செப்ட் வாழ்க்கையில் எத்தனை தூரம் வெற்றிகரமாக அமைந்திருக்கிறது தெரியவில்லை.'யாரோ இவர் யாரோ ' என்று ராமாயணத்தில் சீதையைப் பாட வைத்ததும் கண்டதும் காதல் தான் . அவளுக்கு அது வெற்றிகரமாக அமைந்தது. எல்லாருக்கும் அமையும் என்று சொல்ல முடியாது. எனவே முதல் பார்வையிலேயே எல்லாவற்றையும் முடிவு செய்து விடாதீர்கள். 'துள்ளாத மனமும் துள்ளும்' விஜய் மாதிரி முதல் பார்வையில் உங்களுக்கு பரம எதிரியாகத் தெரிபவர் கூட பின்னாளில் உங்கள் வாழ்க்கைத் துணையாக வரலாம்!


நாம் நம் இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் நாடகங்களிலும் அழகானவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம். அப்படியென்றால் சுமாரனவர்கள் , கறுப்பானவர்கள் பின்னால் நின்று கொண்டு டான்ஸ் ஆட வேண்டியது தானா? ஒரு பாடலில் ஹீரோவும் ஹீரோயினும் மட்டுமே சேர்ந்து டான்ஸ் ஆட வேண்டுமா? பின்னே நிற்கும் ஆண்களும் பெண்களும் ஏன் தங்கள் ஜோடியுடன் ஆடக் கூடாது? நம் இலக்கியங்கள் , புராணங்கள் தலைவியை (கொஞ்சம்)ஓவராக வர்ணிக்கின்றன. சூர்பணகை ராவணனிடம் "உனக்கு இருக்கும் இருபது கண்கள் சீதையைப் பார்க்க போதாது;லட்சம் கண்கள் வேண்டும்" என்கிறாள். லட்சம் கண்கள் இருந்தாலும் பார்வை ஒன்று தானே? சீதா தேவி என்றால் அவளுக்கு முகப்பரு வராதா? வெய்யிலில் நடந்து
சென்றால் முகம் கருத்துப் போகாதா? நரைமுடி எட்டிப்பார்க்காதா? என்ன அபத்தம்! அதே மாதிரி ராமனை கோடி மன்மத ஸ்வரூபன் என்கிறார்கள். கோடி மன்மதன்களின் ஸ்வரூபத்தையும் தானே எடுத்துக் கொள்ளும் ராமன் பேராசைக்காரன் இல்லையா? 'நளவெண்பாவில்' வரும் அன்னம் தான் எப்படி நடக்க வேண்டும் என்று தமயந்தியைப் பார்த்து கற்றுக்கொண்டேன் என்கிறது. (அன்னமதை முன்னே நடைவென்றாள் -38) இன்றைக்கு கூட ஒருவரை ஒருவர் பார்க்காமலே காதல் செய்யும் கதைகளில் கூட அஜீத்தும் தேவயானியும் நடிக்க வேண்டி இருக்கிறது. லிவிங்க்ஸ்டனும் ஆனந்தியும் நடித்திருந்தால் படம் அவ்வளவு நாள் ஓடி இருக்குமா தெரியாது

ஐ.டி கம்பெனிகளில் இருப்பவர்கள் இப்படி சொல்வதை நீங்கள் கேட்டிருக்கக்கூடும் : ஆள் கொஞ்சம் பார்க்க லட்சணமாக இருந்தா விடமாட்டாங்களே? அள்ளிட்டு போயிடுவாங்களே? என்று. yes. அவர்கள் சொல்வது Boy Friends பற்றி தான்.அழகான பெண்களுக்கு பா.பிரண்ட்ஸ் சுலபமாகக் கிடைத்து விடுகிறார்கள்.அழகான பெண்கள் ஒரு நகரத்தில் தனியாக அலைவதை நீங்கள் பார்க்கும் காட்சி அரிதாகத் தான் இருக்கும்.

மேலும் இன்னொன்று சொல்கிறார்கள் :அழகும் அறிவும் ஒரே இடத்தில் சுமுகமாக இருக்காது என்று. இது ஓரளவு உண்மை என்றே தோன்றுகிறது. அழகுப் பதுமையான சில நடிகைகளுக்கு இப்போதெல்லாம் பேசவே வருவதில்லை. ஆங்கிலம் பேசினால் போதுமா ? பேசுவதை அர்த்தத்துடன் பேச வேண்டும். இந்த ஜோக்கை நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கக் கூடும்:
அழகான பெண் ஒருத்தி ஓர் அறிரிடம் வந்து 'நாம் கல்யாணம் செய்து கொள்ளலாமா? என் அழகுடனும் உங்கள் அறிவுடனும் ஒரு குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் ?" என்று கேட்டாளாம். அதற்கு அவர் 'நல்ல ஐடியா தான்..ஆனால் ஒரு வேளை என் அழகுடனும் உன் அறிவுடனும் குழந்தை பிறந்து தொலைத்து விட்டால் என்ன செய்வது ? என்றாராம். அழகானவர்கள் முட்டாள்கள் என்று சொல்வதை விட அவர்கள் தங்கள் அறிவுக்கு வேளை கொடுக்காமல் இருந்து விடுகிறார்கள் என்றே
சொல்ல வேண்டும்.அதாவது தங்கள் அழகையே எங்கு போனாலும் மூலதனமாகப் பயன்படுத்தி விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு விடுகிறார்கள்.ஒருவரை அழகால் வசப்படுத்துவது என்பது அறிவால் வசப்படுத்துவதை விட சுலபமானது. ஹீரோயின்கள் INTELLECTUAL -களாக வரும் தமிழ் சினிமா ஒன்றை சொல்லுங்கள் பார்க்கலாம்.ஹீரோயின்கள் எதுவுமே செய்ய வேண்டாம்.ஹீரோவைக் கவர சும்மா மொட்டை மாடியில் நின்று இரண்டு நிமிடம் 'எக்சர்சைஸ்' செய்தாலே மதி! சூப்பர் ஃ பிகரு என்று சொல்கிறார்களே தவிர 'என்ன ஒரு அறிவுடா அவளுக்கு' என்று யாராவது சொல்கிறார்களா? தத்துவ ஞானி சாக்ரடிஸ் ரொம்ப அசிங்கமாக இருந்தாராம். அறிவியல் மேதை நியூட்டனுக்கு ரொம்ப பெரிய நீண்ட மூக்கு இருந்ததாம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது அழகும் அறிவும் பனிப்போர் விரோதிகள் என்றே சொல்லத் தோன்றுகிறது.


இறைவனை அடையும் வழிமுறைகளை சத்தியம் சிவம் சுந்தரம் என்று சொல்வார்கள். இதில் மூன்றாவதாக வருவது சுந்தரம் என்ற அழகு. அதாவது அழகை ஆராதிப்பது. Never lose an opportunity of seeing anything beautiful, for beauty is God's handwriting - Ralph Waldo Emerson :) அப்படியானால் ரோட்டில் சைட் அடித்துக் கொண்டிருந்தால் இறைவனை சுலபமாக அடைந்து விடலாமா என்று கேட்கக்கூடாது. இது வேறுவிதமான Beauty ! இந்த inner beauty inner beauty என்கிறார்களே? அப்படி என்றால் என்ன ? அழகான காஸ்ட்லியான ஜாக்கி அண்டர்வேர் ஒன்றை வாங்கி அணிந்து கொள்வதா? இல்லை. சில பேர் பார்பதற்கு சுமாராகத் தான் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் பழகினால் அவர்கள் இதயம் எத்தனை அழகானது என்று தெரிய வரும். அந்த inner beauty!

மிகவும் அசிங்கமாகத் தோற்றமளித்த ஒருவனிடம் 'இதைப்பற்றி உனக்கு கவலை இல்லையா"? என்று யாரோ கேட்டார்களாம். அதற்கு அவன் 'நான் ஏன் கவலைப்பட வேண்டும் , இது என்னைப் பார்ப்பவர்களின் பிரச்சனை' என்றானாம். இது மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு ஜோக் மாதிரி தெரிந்தாலும் இதனுள் தான் எத்தனை உண்மை பொதிந்துள்ளது? ஆம்.. நமக்கு முகம் இல்லை. இந்த உலகத்தில் நம்மைத்தவிர எல்லாரும் மறைந்து போய் விட்டால் நமக்கு முகம் இருக்குமா? இருக்காது.
அப்போது நாம் FAIR -N-HANDSOME அப்பிக் கொள்வோமா? நம்மிடம் உள்ள எல்லா அழகு சாதனங்களையும் தூக்கி எறிந்து விடுவோம்.(உடைகளையும் தான்) நாம் பிறப்பதற்கு முன்னர் நமக்கு என்ன முகம் இருந்தது என்று சிந்திப்பது ஒரு அருமையான தியான முறை என்று ஜென் சொல்கிறது! இந்த கவிதையைப் பாருங்கள்.

நான் முகமற்றவன்
தனிமையில் ஒரு பாடலை முணுமுணுக்கும் போதும்
தூங்கச் செல்லும் போதும்
தூங்கும் போதும்
காலையில் விழித்தெழும் போதும்
பல் துலக்கும் போதும்
வீட்டை சுத்தம் செய்யும் போதும்
ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு புன்னகை செய்யும் போதும்
நான் முகமற்றவன்
செருப்பு மாட்டிக் கொண்டு
வெளியே கிளம்பும் போதுதான்
ஏதோ ஒரு முகத்தை
எங்கிருந்தோ எடுத்து
அவசரமாக மாட்டிக் கொள்கிறேன்!


உங்களுக்கு யாரையாவது பிடிக்கவில்லையா? அவர் அழகாக இல்லை என்பதற்காக மட்டுமே அவரை நிராகரித்திருக்கிறீர்களா? அப்படியானால் இன்று அவரை சந்தித்து அவருடன் ஒரு காபி சாப்பிடுங்கள்.ஒவ்வொருவருக்கும் அவருக்கே உரித்தான ஒரு தனித்துவமான அழகு இருக்கவே செய்கிறது .அதை உற்றுநோக்கும் கண்கள் நமக்கு வேண்டும் அவ்வளவு தான். நம் கண்கள் மிக அவசரமாக முடிவெடுத்து விடுவது தான் இங்கே பிரச்சினை. ஐஸ்வர்யா ராய் தான் அழகு என்று இறைவன் தீர்மானித்திருந்தால் எல்லாரையும் ஐஸ் போலவே அவன் படைத்திருக்கலாமே? ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்யேக அழகு உள்ளே ஒளிந்திருக்கும். சிலருக்கு முடி அழகாக இருக்கும். சிலருக்கு கண்கள் சிலருக்கு பல், சிலருக்கு உதட்டருகில் இருந்து எட்டிப் பார்க்கும் ஒரு மச்சம்.,சிலருக்கு முகப்பரு!சிலர் பேசுவது அவ்வளவு அழகாக இருக்கும். சிலர் நடப்பது அழகாக இருக்கலாம்.எல்லாவற்றுக்கும் மேலாக சிலரின் இதயம், சிலரின் அன்பு , ஏன் சிலரின் இருப்பே கூட அழகாக இருக்கலாம். ஓகே. என்ன காபி சாப்பிட கிளம்பி விட்டீர்களா? ஆல் தி பெஸ்ட்!


சைடு பிட்: "முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து,முகம் பொலிவுடன் இருக்கும்" இதற்கெல்லாம் நம் மாடர்ன் பெண்களுக்கு இன்றைக்கு நேரம் இருக்கிறதா தெரியவில்லை!

ஒரு ஓஷோ ஜோக்
====================

ஒரு டாக்டருக்கு ஒரு போன் வந்தது.

"டாக்டர் , ரோஸிக்கு பிரசவ வலி வந்து மிகவும் துடிக்கிறாள்.. நீங்கள் உடனே வர முடியுமா?"

"சரி...இது அவர்களின் முதல் குழந்தையா?"

"லூசுத்தனமாக பேசாதீங்க டாக்டர்.. இது அவங்க ஹஸ்பன்
ட்"


சமுத்ரா

10 comments:

ஆர்வா said...

இந்தக்கலைடாஸ்கோப் வாழ்க்கையின் பல வண்ணங்களை அழகாய் பதிவு செய்திருக்கிற்து. அருமை.. வாழ்த்துக்கள்

Katz said...

மிகவும் அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் அழகைப் பற்றி.

கவிதை அசத்தல்.

இராஜராஜேஸ்வரி said...

செருப்பு மாட்டிக் கொண்டு
வெளியே கிளம்பும் போதுதான்
ஏதோ ஒரு முகத்தை
எங்கிருந்தோ எடுத்து
அவசரமாக மாட்டிக் கொள்கிறேன்!//

பல சமயங்களில் பிடிக்காத முகத்தை மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறதே,

பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்.

Aba said...

//Beauty is in the eyes of the Beholder என்பார்கள். மஜ்னுவைப் பார்த்து அந்த நாட்டு மன்னன் "அந்த லைலா என்ன அவ்வளவு அழகா?சாதாரணமாகத் தானே இருக்கிறாள்? நீ சரி என்று சொன்னால் உனக்கு அரண்மனை அந்தப்புர பேரழகி ஒருத்தியை
கல்யாணம் செய்து கொள்ள அனுமதி தருகிறேன் "என்கிறான். அதற்கு மஜ்னு 'அரசே , லைலாவின் அழகைக் காண
உங்களுக்கு மஜ்னுவின் கண்கள் வேண்டும் ' என்கிறான்.//

உண்மை...
எனக்கு காபி சாப்பிடவேண்டிய அவசியம் இல்லைபோல தெரிகின்றது... அது என்னைப் பார்ப்பவர்களின் பிரச்சனை...

//அறிவாளிகளிடம் அழகு குடி கொள்வதில்லை.//

அதுவும் உண்மைதான்.. அழகானவர்கள் தமது அழகை வைத்து செய்யமுடிபவற்றை செய்வதோடு நிறுத்திக்கொள்கிறார்கள். (கல்யாணம், மீடியா) அதற்கு மேலே ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை... (அழகுக்குத்தான் priority கொடுக்கிறார்கள்)


அதுசரி, நம்ம ஐன்ஸ்டீன் இளமையில் அப்படியொன்றும் அசிங்கமாக இல்லையே?

G.M Balasubramaniam said...

எனக்கு இந்த பதிவை படித்ததும் நீங்கள் ஏதோ வலையில் விழுந்துவிட்டதாகத் தோன்றுகிறது. ஜஸ்ட் அன் இண்ட்யூஷன்.! அழகுக்கு டெஃபினிஷன் தேடுகிறீர்களா. ?என்ன் இவ்வளவு ஆராய்ச்சி.?

HVL said...

அழகைப் பற்றி நன்றாய் சொல்லியிருகிறீர்கள்.
//
அது என்னைப் பார்ப்பவர்களின் பிரச்சனை...
//
good

Uma said...

//G.M Balasubramaniam said...
எனக்கு இந்த பதிவை படித்ததும் நீங்கள் ஏதோ வலையில் விழுந்துவிட்டதாகத் தோன்றுகிறது.
// எனக்கும் அப்படித்தான் தோணுது...Justification தேடுகிறீர்களோ...அழகைப் பற்றி கொஞ்சம் ஓவராவே சிந்திச்சி இருக்கீங்க...

சைடு பிட் உண்மையா...Combination of ingredients கொஞ்சம் புதுசா இருக்கு.. Try பண்ணி பாக்கலாமா?

ஓஷோ ஜோக் நல்லா இருக்கு..

சமுத்ரா said...

ஜி.எம்.பி, உமா, வலையில் எல்லாம் விழவில்லை...
ஏதோ பார்த்தவர்கள் பயந்து ஓடாதபடி முகத்தை கடவுள் தந்திருக்கிறார்.
அது போதும்..

Guna said...

u rock ...

போக ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி .. இப்போதுதான் இந்த வலைப்பூ வை தொடருப்படி அமைத்து உள்ளேன் . இதுவரை சுமார் ஐம்பது போஸ்ட் களை செய்த பிறகு இப்போதுதான் இதை ஆரமிப்து இருக்கிறேன்..


ஏற்கனவே வருகை தந்தவர்களும் , புதிதாக வருகை தருபவர்களும் இணைத்து கொள்ளவும் ...

வலைபூ நண்பர்கள் இணைந்தால் disccusion forum கலை கட்டும் ..


அதற்க்காகவே ஒரு புதிய பக்கம் தொடங்குவதால் .. நண்பர்கள் இணைத்துக்கொண்டால் ,நண்பர்களை பின் தொடரவும் வசதியாக இருக்கும்


நன்றி
http://vallinamguna.blogspot.com/

adhvaithan said...

அழகான பெண் ஒருத்தி ஓர் அறிஞரிடம் வந்து 'நாம் கல்யாணம் செய்து கொள்ளலாமா? என் அழகுடனும் உங்கள் அறிவுடனும் ஒரு குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் ?" என்று கேட்டாளாம். அதற்கு அவர் 'நல்ல ஐடியா தான்..ஆனால் ஒரு வேளை என் அழகுடனும் உன் அறிவுடனும் குழந்தை பிறந்து தொலைத்து விட்டால் என்ன செய்வது ? என்றாராம். ////

intha arignar Bernard shaw endru engo padiththirukkiren.