இந்த வலையில் தேடவும்

Thursday, May 17, 2012

கலைடாஸ்கோப் -64

லைடாஸ்கோப் -64 உங்களை வரவேற்கிறது.


int main()
{
int i=0;
i++;

ஒலி பரவ காற்று (அல்லது ஊடகம்) தேவை என்பது நமக்குத் தெரியும். அப்படி இல்லாமல் 'நான் என் சொந்தக் கால்களிலேயே' நடந்து வருவேன் என்று ஒளி போல ஒலி நினைத்தால் எப்படி இருக்கும்?நம்மை சுற்றி உள்ள பிரபஞ்சத்தின் 'சத்தத்தை' நம்மால் கேட்க முடியும்.'பிரபஞ்சத்தின் மௌனம் என்னை திகிலில் ஆழ்த்துகிறது' என்பது தத்துவஞானி ஒருவரின் வாசகம். நம் வளிமண்டலத்தைத் தாண்டிப் போய் விட்டால் எல்லையில்லாத மௌனம் தான்.[காதுக்கருகில் போய் காதலர்கள் பேசுவது போல பேசினால் எலும்புகள் மூலம் ஒலி ஓரளவு நேரடியாகக் கடத்தப்படும்]சரி. வெற்றிடத்தில் ஒலி நகர்ந்து வருமே ஆனால் சூரியனின் ஒலியை(?) நம்மால் கேட்க முடியும். சூரியன் என்ற மெகாசைஸ் அணு உலை அவ்வளவு சைலன்ட் அல்ல என்கிறார்கள். வளிமண்டலத்துக்கு வெளியே சதா மோதிக் கொண்டு இருக்கும் asteroid (விண்கற்கள்) களின் ஒலியைக் கேட்க முடியும். சூரியன், செவ்வாய், வியாழனில் நிகழும் புயல்கள் கூட சன்னமாகக் கேட்கும். சூப்பர் நோவாக்களின் சத்தம் கூடக் கேட்கும். மொத்தத்தில் எப்போதும் ஈரான் போன்ற ஒரு யுத்த பூமியில் இருப்பது போல இருக்கும். THANK GOD , FOR SOUND NEEDS A MEDIUM ...

i ++;

நண்பர் ஒருவர் புதிர் ஒன்று கேட்டிருந்தார்.

புதிர்களுக்கு விடை சொல்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: 'இதையெல்லாம் நாங்க ஸ்கூல்லயே படிச்சிட்டோம்.யாரு கிட்ட' என்ற தொனியில் பதில் சொல்ல வேண்டாம். இந்த ப்ளாக்கை எல்லா வயதினரும் படிக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் இப்போதுதான் ஸ்கூலுக்கு செல்லும் ஒரு மாணவருக்கு இந்தப் புதிர் புதிதாகவே இருக்கும்.

பிறவியிலேயே பார்வை இல்லாத ஒருவரின் கையில் சில பொருட்களைக் கொடுத்து தடவிப் பார்க்க சொல்கிறோம். உதாரணம் குடை,பென்சில், பந்து, டி.வி. ரிமோட் போன்றவை. அவர் குடையைத் தடவிக் கொண்டு இருக்கும் போது 'இது தான் குடை' என்று அவரிடம் நாம் சொல்வதாக வைத்துக் கொள்வோம்.இப்போது அவருக்கு தமிழ் சினிமாப் படங்கள் போல திடீரென்று பார்வை வந்து விடுவதாக வைத்துக் கொள்வோம்.அப்போது அவர் முன்னால் (அவருக்கு ஏற்கனவே தொடுதல் ரீதியாகப் பரிச்சயமான) குடை இத்தியாதிகளை வைத்து விட்டு, இதில் எது குடை எது பந்து என்று தொடாமல் சொல்லுங்கள் பார்ப்போம் என்றால் அவர் சரியாக சொல்லுவார் என்று ஒரு கோஷ்டியும் சரியாக சொல்ல மாட்டார் என்று இன்னொரு கோஷ்டியும் சொல்கிறார்கள். தொட்டு ஒரு பொருளை உணரும் போது அவர் மனதில் அந்தப் பொருளின் பிம்பத்தை create செய்கிறார் என்று ஒரு சிலரும் பிறவியிலேயே பார்வை இல்லாததால் அவரால் இமேஜ் create செய்யமுடியாது தொடுதல் மூலமாகவே (பார்வை வந்த பின்னும்) ஒரு பொருளை அடையாளம் காண முடியும் என்று ஒரு சிலரும் சொல்கிறார்கள்.

சரி இப்போது புதிர்.

உங்கள் முன் ஐந்து பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் எப்போதும் உண்மையே பேசுபவர். மற்ற நான்கு பேரும் உண்மை பொய் என்று மாற்றி மாற்றி பேசுபவர்கள். அதாவது முதல் கேள்விக்கு சரியாக பதில் சொன்னால் அடுத்த கேள்விக்கு தவறாக பதில் சொல்வார்கள் அதற்கு அடுத்த கேள்விக்கு சரியாக and so on .உங்களுக்கு யார் உண்மை பேசுபவர் யார் உல்டாவாகப் பேசுபவர் என்று தெரியாது.இப்போது உங்களிடம் இரண்டே இரண்டு கேள்விகள் இருக்கின்றன. இரண்டு கேள்விகளை யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம்.(இரண்டு கேள்விகளை ஒருத்தரிடமே கூடக் கேட்கலாம்). இந்த இரண்டு கேள்விகளை வைத்துக் கொண்டு உண்மை பேசுபவர் யார் என்று சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும்.அந்தக் கேள்விகள் என்னென்ன?

i ++;

இப்போதெல்லாம் தமிழ் சினிமா ,டைட்டில்களுக்கு மெனக் கெடுவதே இல்லை. முன்பே வந்த பாடல்களின் வரிகளை டைட்டில்கலாக வரித்துக் கொள்கிறது. உதாரணம்: ஒரு கல் ஒரு கண்ணாடி

கீழ்க்கண்ட தலைப்புகளில் NEAR FUTURE அல்லது FAR FUTURE இல் படங்கள் வரலாம்:

* நாக்கமுக்க
* கொலவெறி
* இதுதானா இதுதானா
* ரா ரா
* கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
*
ர்க்கரை நிலவே
* கண்கள் இரண்டால்
* மின்சாரக் கண்ணா
* நெஞ்சோடு கலந்திடு


i ++;

'சென்னையில் ஒருநாள்' வாழ்வின் நிதர்சனங்களை நமக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்தி விடுகிறது. ஐ.டி. யில் இருந்தால் அவன் எப்போடா வெளியே போகச் சொல்வான் எப்போ எங்கே போகச் சொல்வான் என்ற திகிலுடனே இருக்க வேண்டி இருக்கிறது. அவன் சென்னை போகச் சொன்னால் போக வேண்டும். பெங்களூர் வாசிகளுக்கு சென்னை செல்வது ஒரு DOWNGRADED PROCESS .சென்னை யில் இருக்கும் ஆபீஸ் நண்பர் ஒருவர் 'தயவு செய்து இங்கே வந்து விடாதீர்கள்' பெஞ்சில் இருந்தாலும் பெங்களூரிலேயே இருங்கள் எப்பாடு பட்டாவது இண்டர்வியூவை சொதப்பி விடுங்கள் என்றார். சென்னையின் சோளிங்கநல்லூர் ஏரியா அந்த அறிவுரையின் தீவிரத்தை உணர்த்தியது. அதுவும் பெங்களூருவின் எலக்ட்ரானிக் சிடியைப் பார்த்தவர்களுக்கு சோ.நல்லூர் ஏதோ தண்ணி இல்லாத காடு போல இருக்கிறது.அதுவும் பெங்களூருவில் கடந்த ஒரு வாரங்களாக மழை + ரொமாண்டிக் வானிலையைப் பார்த்து விட்டு சென்னை சென்றால் அது மிகவும் UNROMANTIC ஆக தோன்றுகிறது. உலகில் எத்தனையோ நகரங்கள் கடல் மட்டத்தில் இருக்கின்றன. அழகாக இருக்கின்றன. ஆனால் நாம் சென்னையை ரியல் எஸ்டேட் களின் பெயரால் எப்படி கெடுத்து வைத்திருக்கிறோம் என்பது ஏனோ நமக்கு உறைப்பதே இல்லை. பஸ்ஸில் வாங்கி குடித்து விட்டு வெளியே எறியும் வாட்டர் பேக்கெட் கூட சென்னையை ஏதோ ஒரு விதத்தில் இன்னும் மோசமாக்கும் என்ற கேயாஸ் தியரி ஏனோ நமக்கு உரைப்பதே இல்லை. கமலஹாசன் படம் எடுத்தாலும் அதெல்லாம் நமக்குப் புரிவதில்லை. நகரம் எக்கேடு கெட்டால் என்ன? நாம் வீட்டில் ஏ.சி. போட்டுக்கொண்டு பக்கோடாவைக் கொறித்துக் கொண்டே ஐ.பி.எல் பார்க்கலாம் என்ற மனநிலை வேறு நம்மில் பலருக்கு இருக்கிறது. ஓர் அழகிய கடற்கரை நகரத்தை இத்தனை மோசமாக மாற்றி வைத்திருக்கிறோம். பெங்களூர் ஐ.டி. ஊழியர்கள் சென்னை என்ற வார்த்தையைக் கேட்டாலே அஜாமேளன் நாராயண நாமத்தைக் கேட்ட மாதிரி பதறுகிறார்கள்.

சிங்காரச் சென்னை எப்போதோ சீர்கெட்ட சென்னை ஆகி விட்டது. வெறுமனே சுவருக்கு சுவர் 'அண்ணன் வாழ்க' 'தமிழ்க்குலத் தலைவர் வாழ்க' 'விடிவெள்ளி வாழ்க' 'வேழம் நிகர் வேந்தன் வாழ்க' என்று போஸ்டர் அடித்து ஒட்டாமல் போர்க்கால அடிப்படையில் அரசியல் வாதிகள் சென்னைக்காக ஏதேனும் செய்தே ஆக வேண்டும். சென்னையில் ஒரு மரம் வெட்டப்பட்டாலும் ம-
ர் போச்சு என்று இருக்காமல் உயிர் போகிற அளவு துடிக்க வேண்டும். சாலையெங்கும்
ஆக்கிரமித்திருக்கும் ப்ளாஸ்டிக் பைகளுக்கு , கண்ட இடங்களில் கடைவிரித்து வியாபாரம் செய்து அழுக்காக்குபவர்களுக்கு, ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு, சரியான வடிகால் இன்றி ஓடும் சாக்கடைகளுக்கு,வரைமுறை இன்றி வெப்பத்தைக் கக்கும் Process -களுக்கு, வீணாகும் தண்ணீருக்கு,வாகனங்களுக்கு ஒரு போர்க்காலத் தீர்வு வேண்டும்.
எப்போது சென்னைக்கு ட்ரான்ஸ்பர் தருகிறீர்கள் என்று பெங்களூர் வாசிகள் தங்கள் மேனேஜர்களை நச்சரிக்கும் காலம் வர வேண்டும். அதுதான்
நமக்குப் பெருமை. CHENNAI BADLY NEEDS ATTENTION ...


i ++;

ரசித்த சில விளம்பரங்கள்:







i ++;

சினிமா பாடல்களுக்கும் கர்நாடக இசைப் பாடல்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நண்பர் கேட்டார். கேள்வி கொஞ்சம் சுலபமாகத் தோன்றினாலும் பதில் கொஞ்சம் கடினம்.

க. பாடலில் ஒரு குறிப்பிட்ட ராகம் வரவில்லைஎன்றால் அதை சாஹித்யம் என்று கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள். WELL DEFINED UNDOUBTFUL ராகம் ஒன்று அதில் இருக்க வேண்டும். கொஞ்சநேரம் கொஞ்சநேரம் என்று பாடினால் அது ஆபோகியா ஸ்ரீரஞ்சனியா வலசியா என்று கடைசி வரை சந்தேகத்திலேயே இருக்கக் கூடாது.சினிமாப் பாடல்களில் சில
(பல) ஒரே மாதிரி இருக்கும். இருபது கோடி நிலவுகள் கூடி, வானம் பாடியின் வாழ்விலே, அழகான சின்ன தேவதை இந்த மூன்று பாடல்களையும் அடுத்தடுத்துக் கேட்டுப் பாருங்கள் புரியும். ஆனால் இன்ன ராகம் என்ற கேடகிரியில் இணைக்க முடியாது. ராகம் கொஞ்சம் தெளிவாக இருந்தாலும் இளையராஜா தர்மவர்தினியை use செய்திருக்கிறார், ரஹ்மான் நாட்டக்குறிஞ்சியில் பாட்டுப் போட்டிருக்கிறார் என்பதால் மட்டும் அதை கச்சேரிகளில் பாட முடியாது. மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச மங்கை உடல் கெஞ்சக் கெஞ்ச என்ற வரிகளை நிரவலுக்கு எடுத்துக் கொள்வது TECHNICALLY கரெக்ட். ஆனால் அது எப்படி ஏடா கூடமாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்ய முடியவில்லை.

பாபநாசம் சிவனின் கிருஷ்ணா முகுந்த முராரே தேவியைப் பூஜை செய்வாய் போன்ற சினிமாப் பாடல்களை மேடைகளில்
பாட அனுமதி இல்லை.அவரின் NON சினிமாப் பாடல்களையே நிறைய நாள் மேடைகளில் அனுமதிக்க வில்லை. சினிமாவுக்கு பாட்டெழுதும் ஒருவரின் பாடல்களை எப்படி தியாகய்யரின் 'கத்தனுவாரிகி' யுடன் பாடுவது என்ற தயக்கம். ஆனால் இப்போது பா. சிவனின் பாடல்கள் (சினிமாவில் வராத கர்நாடக இசைப் பாடல்கள்) வெகுவாகப் பாடப்படுகின்றன. மா ரமணன், கார்த்திகேய காங்கேய, ஸ்ரீ மாதவா, ஸ்ரீ வாதாபி கணபதியே, etc .,

இன்னொரு வித்தியாசம் SONG PETTERN ... பல்லவி அனுபல்லவி சரணம் என்று இருப்பது.(கீர்த்தனைகளுக்கு) சினிமாப் பாடல்களில் அந்த அமைப்பு அவசியம் இல்லை. பல்லவிக்கும் ௮.பல்லவிக்கும் எதுகை வரவேண்டும் என்ற அவசியமும் இல்லை. பாடலின் நடுவில் ஒரு கட்டைக் குரல் பாடகி தாளம் மாறி கத்துவதற்கு சினிமாப் பாடல்களில் அனுமதி உண்டு.ஆ, ஊ, கும்தலக்கா , உவ்வாஹு நீயா என்று துணைப்பாடகர்கள் இடையிடையே கத்தலாம். பாடகர் திடீரென்று சுருதியை உயர்த்தி வலிப்பு வந்தது போல பாடலாம்.இவையெல்லாம் க. சங்கீதத்தில் அனுமதிக்கப் படுவதில்லை. மேலும் தாளம் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆக இருக்கிறது க.சங்கீதத்தில். கைத்தட்டு ஒன்று விலகினாலும் அதற்கான விலையை பாடகர் கொடுக்க வேண்டி இருக்கும்.

இந்த freedom தான் சினிமா இசை பெரும்பாலான மக்களால் விரும்பப்படுவதற்குக் காரணம். க. இசை என்பது கடிவாளம் இட்ட டொக்கு டொக்கு குதிரை வண்டிப் பயணம். சி.இசை என்பது ரோலர் கோஸ்டர் ...



i ++
ஓஷோ ஜோக்.

[நீங்கள் கடவுளை சந்திக்க நேர்ந்தால் அவரிடம் பிரார்த்தனை செய்வதை விட அவரிடம் ஒரு ஜோக் சொல்லுங்கள். அவர் அதை மிகவும் விரும்புவார்- ஓஷோ]

பீட்டர் ஒரு சியாமீஸ் பூனை வைத்திருந்தான். அவன் அதை மிகவும் நேசித்தான். ஆனால் அதை விட்டுப் பிரிந்து அவன் வெளிநாடு செல்ல வேண்டி வந்தது. எனவே அவன் சகோதரனிடம் 'என் பூனையை நான் திரும்பி வரும் வரை பத்திரமாகப் பாத்துக் கொள்' என்று பலமுறை சொல்லி விட்டு கனத்த மனதுடன் வெளிநாடு சென்றான். மறுநாளே தன் சகோதரனுக்கு ஃபோன் செய்து பூனை எப்படி இருக்கிறது என்று கேட்டான். சகோதரனுக்கு பூனை என்றாலே அலர்ஜி. போனில் அந்தப் பூனை இறந்து விட்டது என்று சொல்லி விட்டு உடனே வைத்து விட்டான்.

பீட்டரால் இதைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. மீண்டும் சில நாள் கழித்து போன் செய்து, 'நான் அந்தப் பூனையை எந்த அளவு நேசித்தேன் என்று உனக்குத் தெரியும். அது எப்படி இறந்தது? அப்படியே அது இறந்திருந்தாலும் அதை என்னிடம் நீ மெதுவாக சொல்லி இருக்க வேண்டும். முதல் நாள் அது கூரை மேல் விளையாடிக் கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும். அடுத்த நாள் விளையாடும் போது கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டு விட்டது. அடுத்த நாள் பூனைக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கிறது என்றெல்லாம். கடைசியில் நான் அங்கே வந்த போது இறந்து விட்டது என்று சொல்லி இருக்கலாம்., நீ நேரடியாக சொன்னதால் நான் மிகவும் அப்-செட்டாக இருக்கிறேன் என்றான்.

சில நாட்கள் கழித்து பீட்டர் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்ததும் மீண்டும் சகோதரனுக்கு ஃபோன் செய்து 'அம்மா எப்படி இருக்கிறாள் '? என்றான்.

சகோதரன் 'அம்மாவா, அவள் கூரையின் மீது விளையாடிக் கொண்டிருக்கிறாள்'' என்றான்.

முத்ரா

return (0);
}



6 comments:

ammuthalib said...

May be since you have visited chennai, you have come to a conclusion like "Chennai badly needs attention"... Keep exploring other parts of TN and India as well... It is so alarming in many places...

Kodees said...

can i ask the 2 Qs to everybody?

adhvaithan said...

ayyoo.. rofled at osho joke.. vishayathukku varuvom.. karnataka sangeethathula bhakthikuthaan first place. even if shrunkaara rasam is there primarily it is with love towards God. cinema paattu appadi illa.. saami paatula kuda devotion, dedication irukkathu (e.g. mukundha mukundha.. see the standard of deekshidhar's dasavathara raga malika.. this mukuntha mukuntha is bull shit) one more thing ucharippu telivaa irukkanum (eg "dha", "tha" laam correctaa irukkanum.. even in tamil nakHAm nu solla mudimaa? it is nagam.)

voice mukkiyam illai. shruthi, layam, sahithya bhavam thaan mukkiyam.. (chembai vaidhyanatha bhagavathar kural enna spb kural matri sweet ah vaa irunthutu..) carnatic values shruthi, layam, sahithyam, raga bhavam, dedication, devotion rather than sweetness, melody, voice, rap, high pitch, instrument richness..

innum nerayya different sollite polaam.. in short, carnatic is a high quality, high standard, focussed student who comes first consistently in most of the exams..

cine songs are like low quality, low standard, fun loving last bench student, who occasionally (aththi pootha maatiri) gets first rank..

suresh said...

RA RA and Minsara kannaa, already came.

சமுத்ரா said...

A: True
K: you can ask..
A: Thanks for the analysis
S: oh! mudhallaye vanduruchhcaa?

ம.தி.சுதா said...

அருமையானதொரு தொகுப்பாக தந்திருக்கிறீர்கள்...

நன்றீங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்