இந்த வலையில் தேடவும்

Thursday, January 19, 2012

கலைடாஸ்கோப்-51

லைடாஸ்கோப்-51 உங்களை வரவேற்கிறது

!
=

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று: "சென்னையைச் சேர்ந்த, குழந்தைப்பேறு இல்லாத ஒரு தம்பதியர், தங்களுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க உதவ விந்தணுவை விலைக்குத் தர முன்வருவோரைக்கோரி விளம்பரம் செய்துள்ளனர்" - செய்தி சரி. ஆனால் அவர்கள் கொடுத்திருக்கும் கண்டிஷன்களைப் பார்த்தால் கொஞ்சம் புன்முறுவல் பூக்கத் தோன்றுகிறது.

தானம் செய்பவர்

* அழகாக இருக்கவேண்டும்
* உயரமாக இருக்கவேண்டும்
* எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாமல் இருக்க வேண்டும்.
* இந்தியத் தொழில்நுட்பக்கழகங்களில் படிப்பவராகவும் இருக்க வேண்டும் என்பது தான் கண்டிஷன்கள்.

அழகு உயரம் எல்லாம் சரி. அப்பா உயரமாக இருந்தால் பிள்ளையும் 90 % உயரமாக இருக்கும். அம்மா சிவப்பாக இருந்தால் பிள்ளை பெரும்பாலும் சிவப்பு.திரைப்படங்களில் வடிவேலு சொல்வது போல இதற்கு விதிவிலக்காக சில சமயங்களில் அப்பா அம்மா இருவருமே சிவப்பாக இருந்தாலும் குழந்தை அட்டக்கருப்பாக,தொட்டால் கையில் ஒட்டிக் கொள்ளும் கருப்பாக பிறக்கலாம்(பிறந்து தொலைக்கலாம்) எனவே உங்கள் துணையை தேவையில்லாமல் சந்தேகப்பட வேண்டாம்.இதெல்லாம் மரபியல் செய்யும் சின்னச் சின்ன சேஷ்டைகள்! மேலும் என்னை ஏம்மா கருப்பா பெத்தாய்? போன்ற செண்டிமெண்ட் எல்லாம் வேண்டாம். கிருஷ்ணா பரமாத்மாவே இந்தக் கேள்வியை தன் பெற்றோர்களிடம் கேட்கவில்லை.தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டாரும் கேட்டதாகத் தெரியவில்லை.சரி மனோரமா சொல்வது போல ஆம்பிளைக்கு கலரா முக்கியம்? ஸ்டைல் தானே முக்கியம்? படையப்பா!

குழந்தை பிறப்பது இன்றுவரை ஒரு CHANCE ஆக மட்டுமே இருந்து வருகிறது.CHOICE ஆக இல்லை.புதுவீட்டுக்கு இஞ்சினியருடன் உட்கார்ந்து நம் தேவைக்கேற்ப இப்படிப் பண்ணலாம் அப்படிப்பண்ணலாம் கிச்சனை இங்கே வைக்கலாம் இங்கே ஒரு சின்ன ரூம் வைத்து விடலாம் பக்கத்து பிளாட்டில் ஒரு அடி ஆட்டையைப் போட்டு விடலாம் என்றெல்லாம் suggestion சொல்வது போல குழந்தை விஷயத்தில் நம்மால் சொல்ல முடிவதில்லை. சொல்லும் அளவு மரபணு தொழில்நுட்பம் இன்னும் வளரவில்லை.வளராமல் இருப்பதே நல்லது என்று
சில சமயம் தோன்றுகிறது. ஒவ்வொரு குழந்தையும் உலகிற்கு அது எப்படி வருகிறதோ அப்படியே வரவேற்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.Originality உடன்! மேலும் எல்லாரும் அழகாக சிவப்பாக உயரமாக அபிஷேக் பச்சன் போல இருந்தால் பார்க்க நன்றாக இருக்காது. சினிமாக்களும் இருக்காது! LIFE NEEDS DIVERSITY ..

சரி இப்போது அறிவு விஷயத்துக்கு வருவோம். ஏழாம் அறிவெல்லாம் இல்லை சாதாரண அறிவு தான். ..டி.யில் படிப்பவருக்கு கண்டிப்பாக அறிவு (?) இருக்கும் என்று அந்தத் தம்பதி எப்படி முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதெல்லாம் பெரும்பாலும் ஏட்டுச் சுரைக்காய் ! சரி அப்படியே அறிவு இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் அவருக்குப் பிறக்கும் குழந்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனாக இருக்கும் என்று கற்பூரம் அணைத்து சொல்ல முடியாது. பெரும்பாலான சமயங்களில் இந்த அறிவு உல்டாவாகவே இருக்கிறது. வாத்தியார் பிள்ளை மக்கு என்பது போல. ஆனால் தாத்தாவின் அல்லது கொள்ளுத்தாத்தாவின் வித்தைகள் குழந்தைக்கு சுலபமாக வரும் என்கிறார்கள்.
சங்கிலியில் சில இணைப்புகள் தள்ளி! எனவே நீங்கள் ஏதாவது சாதித்தால் உங்கள் பையனும் அதேபோல சாதிப்பான் என்று எதிர்பார்த்து அவனை ஓவராக டார்ச்சர் செய்யாதீர்கள். பேரனை அல்லது கொள்ளுப்பேரனை டார்ச்சர் செய்யவும்.ஏனென்றால் தந்தையின் அதீத புகழே சில சமயங்களில் அவன் மகனை மந்தம் செய்து விடுகிறது என்றும் சைக்காலஜிகலாக சொல்லலாம் .பகல்நேர நிலா போல! பேரன் கொள்ளுப்பேரன் என்று வரும் போது புகழ் கிகள் எல்லாம் ஓரளவு செட்டில் ஆகி விடுகிறது.எனவே அழகு மகனுக்கும் அறிவு பேரனுக்கும் போகிறது என்று குத்துமதிப்பாக வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஆனாலும் இது முழுவதுமாக நிரூபிக்கப்படவில்லை. அறிவு என்பது Nature (பிறப்பு) அல்லது Nurture (வளர்ப்பு) எப்படி வருகிறது என்று தெரியவில்லை. நம் முன்னோர்கள் Nurture என்பதை விட Nature என்பதையே நம்பினார்கள் என்று தோன்றுகிறது. கீழே உள்ள பழமொழிகளே அதற்கு சாட்சி:-

* அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு
* தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
* புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
* விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா

@
==

போன வருடம் நடந்த ஒரு நிகழ்ச்சி. புராதனமான கோயில் ஒன்றுக்குப் போயிருந்த போது. நண்பர் ஒருவர் சற்று புரட்சிகரமான சிந்தனை உடையவர்.கோயிலில் நுழையும்போது சட்டையை கழற்ற சொன்னார்கள். அவர் டென்ஷன் ஆகி 'இது எல்லாம் என்ன முட்டாள்தனம்' 'ஏன் சட்டையோடு சென்றால் சாமி பார்க்காதா' என்றெல்லாம் சத்தம் போட்டு கடைசியில் உள்ளே வரவே இல்லை. சரி அர்னால்ட் பாடி என்றால் எங்கு வேண்டுமானாலும் கழற்றி சிக்ஸ் பேக் காட்டலாம். இன்று பெரும்பாலும் எல்லா ஆண்களும் சிங்கிள் போத்தீஸ் பேக்-உடன் தானே திரிகிறார்கள்?அதனால் இதுமாதிரி சமயங்களில் தொப்பை தொந்தியை எல்லாம் வெளியே காட்ட வெட்கப்படலாம்.சரி.

உடைகளுக்கும் மனோநிலைக்கும் தொடர்பு இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஆள் பாதி ஆடை பாதி!புது டிரஸ் போட்டுக் கொண்டு ஆபீஸ் போகும் போது ஒருவிதமான புத்துணர்ச்சி நம்மிடம் தொற்றிக் கொள்வதை நாம் கவனித்திருப்போம். ஆண்கள் போல ஆக வேண்டும் என்று விரும்பும் அடாவடிப் பெண்கள் முதலில் செய்யும் காரியமே ஆணின் உடையை எடுத்து
அணிந்து கொள்வது தான். ஆணின் உடையை அணிந்ததும் தன்னை ஆணாகவே அவள் பாவித்துக் கொள்கிறாள். எல்லா ஆண்களுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள்.அதனால் எல்லா ஆண்களுக்கும் சேலை கட்டிப் பார்க்கும் ரகசிய ஆசை இருக்கிறது என்று உளவியல் படித்த ஒருவர் சொன்னார்.

இதனால்தான் ஆபீஸுக்கு அணிந்து செல்லும் உடைகளை,மார்க்கெட்டுக்கு அணிந்து செல்லும் உடைகளை கோயிலுக்கு அணிந்து செல்லக் கூடாது என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆபீஸ் உடையை கோயிலுக்கு அணிந்து சென்றால்
ஆபீஸ் மனநிலை தான் வரும். யாரை ஏமாற்றலாம் யாரை ஏய்க்கலாம் (யாரை சைட் அடிக்கலாம்) என்ன பொய் சொல்லலாம் என்று தான் நினைத்துக் கொண்டிருப்போமே தவிர இறைவனிடம் கவனம் செல்லாது.மேலும் கோயிலில் உடலுக்கு நன்மை தரும் நிறைய விஷயங்கள் சூழ்ந்துள்ளன. கோபுரக்கலசங்கள் காஸ்மிக் கதிர்களை வாங்கி உள்ளே விடும் என்று சொல்கிறார்கள். அந்த அலைகள் மற்றும் ஹோமத்தின் மூலிகைகள் வெளியிடும் புகை, மந்திரங்களால் ஏற்படும் ஒலி அதிர்வுகள் .இது மாதிரி. உடம்பை முழுவதும் கவர் செய்து கொண்டு போனால் இவற்றையெல்லாம் நாம் இழந்து விடுவோம். இந்த நல்ல விஷயங்கள் கூடுமானவரை உடம்பிற்குள் போகட்டும் என்றுதான் ஆண்களை சட்டை இல்லாமல் வேட்டி கட்டிக் கொண்டு வரச் சொல்கிறார்கள். இது தெரியாமல் நான் ஜீன்ஸ் பேன்ட் டி ஷர்ட் அணிந்து கோயிலுக்கு செல்கிறோம்! பட்டுக்கும் மின்சாரத்துக்கும் தொடர்பு உண்டு என்று நமக்குத் தெரியும். அதனால் தான் ஆண்கள் பட்டு வேஷ்டியும் பெண்கள் பட்டுப் புடவையும் அணிந்து கோயிலுக்கு செல்வது உகந்தது என்று சில பேர் சொல்கிறார்கள் . பட்டு , மிக விரைவாக காஸ்மிக் கதிர்களை (அப்படி ஒன்று இருந்தால்..இந்தக் காலத்து கோயில்கள் ஒரு அபார்ட்மென்ட் போல கட்டப்படுவது வேதனைதான்) கிரகித்துக் கொண்டு தன்னிடம் Static electricity ஆக வைத்துக் கொள்ளுமாம். பிராமணர்கள் மடி என்று ஒரு பட்டு வஸ்த்திரம் வைத்திருப்பார்கள். அதை எத்தனை நாள் ஆனாலும் துவைக்கவே மாட்டார்கள். துவைத்தால் அதன் நிலை மின்சாரம் டிஸ்சார்ஜ் ஆகி விடும் என்று. சில சமயங்களில் அந்த துவைக்காத ,எண்ணெய் கறை படிந்த,வியர்வை நாற்றம் வீசும் 'மடி'யாலேயே உடலுக்கு நோய் வந்து விடும் என்று தோன்றும். ஆனால் அப்படி வராதாம். அந்த சார்ஜ் செய்யப்பட பட்டுத்துணியை அணிவது கிட்டத்தட்ட புல்லட் ஃப்ரூப் ஆடை அணிவது போலவாம். Interesting !

#
=


நண்பர் ஒருவர் ஒரு புகைப்படத்தை அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார். ஆபீசில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு கட்டிய பலூன்களில் சிவப்பு பலூன்கள் சீக்கிரமே காற்றுப்போய் சுருங்கி விட வெள்ளை பலூன்கள் அப்படியே இருப்பதாக. இது ஏன் என்று கேட்டு.

உண்மை சொல்வது என்றால் எனக்கு இதுமாதிரி விஷயங்களில் பெரிதாக ஆர்வம் இல்லை.வெங்காயம் உரிக்கும் போது ஏன் கண்ணீர் வருகிறது என்றால் ஒரு வேதிப்பொருளின் பெயரை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது மாதிரி விஷயங்களில் நாம் கடைசியாக குவாண்டம் இயற்பியலிடம் சரணடைய வேண்டும். வெங்காயத்தின் அணுக்கள் நம் கண்களின் அணுக்களுடன் எப்படி தொடர்பு கொண்டு நீர் மூலக்கூறுகளை உருவாக்குகின்றன என்று boil down செய்ய வேண்டும் .
சரி. படம் கீழே(oh மேலேயா சாரி). உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். சிவப்பு அடர்த்தி ஜாஸ்தி வெள்ளை அடர்த்தி கம்மி என்றெல்லாம் சொன்னால் அடி வாங்குவீர்கள்.

$
=
1 . சாட்டில் வந்த இன்னொரு நண்பர் , நன்றாக எழுதுகிறீர்கள்.. ஆனால் இன்னும் கொஞ்சம் FREE யாக எழுதுங்கள் என்று சொன்னார். ஆனால் நான் எப்போதும் ஒரு Golden Mean இல் இருக்கவே விரும்புகிறேன். ரொம்பவே சீரியஸாக எழுதி படிப்பவர்களை போரடிக்க விரும்பவில்லை. அதே சமயம் மிகவும் கீழிறங்கி வரிக்கு வரி காமெடி செய்து சப்பை பிகர், கரெட் செய்தல், நூல்விடுதல், பிக் அப் செய்தல் , அப்பீட்டு, மச்சி, மாப்ள, அப்பாடக்கர் என்றெல்லாம் எழுதவும் பிடிப்பதில்லை.ரப்பர் பேன்ட் விரியவில்லை என்றால் வேலைக்கு ஆகாது. ரொம்பவும் விரிந்தாலும் பிய்ந்து விடும். என் எழுத்து ஒரு ரப்பர் பேன்ட்!
(வேற உதாரணமே கிடைக்கலையா? :( )

2 . அந்தக் காலத்தில் (ஆண்கள்) காதில் கடுக்கண் போட்டால் கர்நாடகம்.இப்போதெல்லாம் காதில் கடுக்கண் அணியாமல் இருப்பதுதான் கர்நாடகம். ஆபீசில் பார்க்கும் பத்து பையன்களில் எட்டுபேர் ஒற்றைக் காதில் மின்னும் கடுக்கணுடன் வளைய வருகிறார்கள்.
இன்னும் கொஞ்ச நாளில், மூக்குத்தி, வளையல் மெட்டி இவை கூட ஃபேஷன் ஆகி விடுமோ என்று பயமாக இருக்கிறது.கோவணம் கட்டாத ஊரில் கட்டியவன் பைத்தியம் என்பது போல நானும் எங்கே கடுக்கண் அணிய எதாவது ஜுவல்லரி க்குப் போய் விடுவேனோ என்றும் பயமாய் இருக்கிறது.(கம் ஆன் அப்படியொன்றும் வயதாகி விடவில்லை. இன்னும் யூத்து தான் (என்று நினைக்கிறேன்) )



3 . சீரியல்களுக்கும் வெள்ளிக் கிழமைகளுக்கும் என்ன ஏழாம் பொருத்தமோ? நாதஸ்வரம் சீரியலில் Default ஆக ,யாராவது பேசவேண்டும் என்றால் முதலில் ஒரு பட்டம் அழுதுவிட்டு தான் பேசவே ஆரம்பிப்பார்கள். சும்மாவே மெல்லும் வாய்க்கு அவல் கிடைத்தால் கேட்க வேண்டுமா? சீரியலில் பாண்டி என்ற கதாபாத்திரம் தற்கொலை (அல்லது கொலை) செய்து கொண்டுவிட
எல்லாரும் பயங்கரமாக ஆஸ்கார் கொடுக்கும் அளவுக்கு ஒருவாரம் இடைவிடாமல் அழுது பிரித்து மேய்ந்து விட்டார்கள். ஒரே சீராக அழுவது, விக்கி விக்கி அழுவது, நினைத்து நினைத்து அழுவது, சத்தம் வராமல் அழுவது, சிரித்துக்கொண்டே அழுவது, மெளனமாக இருந்து விட்டு திடீரென்று ஓ என்று ஒப்பாரி வைப்பது என்று விதம் விதமாக
வெரைட்டி வெரைட்டியாக! சீரியல்களில் பிணத்தை எடுக்கும் மங்களகர சடங்குகள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை தான் அரங்கேறுகின்றன.இந்த வாரம் திருமதி செல்வத்தில் பிரியா என்ற அழுமூஞ்சி கதாபாத்திரம் மண்டையைப் போட்டுள்ளது. எத்தனை நாள் வைத்து அழுவார்கள் என்று பார்க்கலாம்.

%
==

ஒரு நல்ல விஷயம் இருந்தால் அதை கிண்டல் செய்வது நம் ரத்தத்தில் ஊறிய பழக்கம் ஆகி விட்டது.அது மாதிரி தான் இந்த விக்கி பீடியாவுக்குப் போட்டியாக வந்திருக்கும் அன்-சைக்லோபீடியா எல்லாவற்றையும் சலிக்காமல் கிண்டல் செய்கிறது . India என்று தேடிப்பாருங்கள்.அதில் ஒரு 'சி' ப்ரோக்ராம் எழுதி இந்தியாவின் வரலாற்றையே கிண்டல் செய்கிறது.
(உடனே கொதித்தெழ வேண்டாம். சும்மா ஜாலிக்கு!) இந்தியர்கள் மற்ற நாட்டவர்களுடன் ஒப்பிடும் போது கொஞ்சம் அதிகமாக காரம் சாப்பிடுவார்கள். அதற்காக
Indians eat spice, drink spice, smoke spice, sweat spice, fart spice, and even shit spice என்று சொல்வது கொஞ்சம் ஓவர். Fart என்றால் நம் பின்பக்கத்தில் இருந்து காற்று பிரிவது. ஜாலியானவர்கள் மட்டுமே போய்ப் பார்க்கவும். மூடு சரியில்லாத நேரங்களில் விட்டுவிடவும். ஏனென்றால் ஜோக் செய்கிறேன் பேர்வழி என்று பல இடங்களில் அம்மாவை மனைவியை எல்லாம் கெட்ட வார்த்தைகளில் வம்புக்கு இழுக்கிறார்
அன்-சைக்லோபீடியா ஓனர். ஐன்ஸ்டீனையும்
விட்டு வைக்கவில்லை. பாருங்கள்:-




^
==

ஒரு கவிதை. எழுதியவர் துளசி.

என்
டெஸ்க்டாப்
----------------

கொஞ்ச நாள் சேகுவேரா
அழகு தொப்பியும்
குறுந்தாடியும்
கொள்ளை கொண்ட நாள்கள் அவை
அப்புறம் மாவோ
கிறுகிறுக்க வைத்தவை
அழுக்குக் காக்கியும்
கூர்மைக் கண்ணும்
கீழை மார்க்சியமும்.
சிறிது நாள் மார்க்குவெஸ்
சில நாள்கள் குந்தர் க்ராஸ்
அப்புறம் சட்டென
ஒரு நாள் பாரதி
வீரக்கொம்பூன்றி
செல்லச் செல்லம்மாளோடு.
அன்னையும் அரவிந்தரும்
அலங்கரித்தது
பின்னொரு நாள்.
சில நாள் சாமி
சில நாள் கோயில்
சில நாள் குடும்பம்
அலங்கரித்த எவரும்
அதிக நாள் நீடித்ததில்லை.
எப்போதும்போல்
சுகமாய் இருக்கிறது
சுத்தமாய் இருக்கும்
டெஸ்க்டாப்.

&
==
ஓஷோ ஜோக்.

முல்லா ஒரு நகரத்துக்கு சுற்றுலா சென்றார். முதலில் அங்கு ஒரு ஹோட்டல் ரூம் எடுத்து தங்கினார்.

முன்பணத்தை வாங்கிக் கொண்ட ரிஷப்ஷனிஸ்ட், " சார், இங்கே காலை எட்டு மணியில் இருந்து பதினொரு மணி வரை டிபன் சாப்பிடலாம் , நண்பகல் பன்னண்டு மணியில் இருந்து மாலை நான்கு மணி வரை மதிய உணவு இருக்கும் . ஆறு மணியில் இருந்து பத்து மணிவரை டின்னர் உண்டு' என்றாள்.

முல்லா 'அடப் பாவமே, அப்ப நான் எப்பத்தான் ஊரை சுத்திப் பார்க்க போறது?' என்றார்

சமுத்ரா


24 comments:

பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா said...

//ஆகவே வாழ்க்கையில் சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் ”அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி” என்ற வசனம் சத்தியமாக குலம் தழைக்க உதவாது என்பது இதன் மூலம் தெரிகிறது., ஏன அடைய முடியவில்லை என்பதை வாரிசுகளுக்கு சொன்னால்தானே மாற்று வழி பிறக்கும். ஆகவே திருமணத்திற்கு முன் சவால்களை சந்தித்து தெளிவடைந்து கொள்ளுங்கள். சவாலகளை சந்திக்காவிட்டாலும் பரவாயில்லை உலகத்தை சுற்றிப் பாருங்கள் அல்லது படியுங்கள். நீங்கள் சந்திக்கும் தீர்க்க முடியாத சவால்களுக்கு தீர்வு உங்கள் வாரிசுகளிடம் ஏற்றப்படும்.

//http://chandroosblog.blogspot.com/2011/03/11.html
சீரியலுக்கும் இழவுக்கும் வெள்ளிக்கிழமைக்கும் நல்ல பொருத்தம்தான் அதுமட்டுமல்ல ஒரு சீரியலில் வரும் விஷயமே எல்லா சீரியிலிலும் சிறிது வித்தியாசத்துடன் வரும்.
மண்வாசனை,சிந்து பைரவி பாருங்கள் மனதுக்கு இதமாக இருக்கும்.
அன்சைக்ளோ பீடியா,சிவப்பு பலூன் டிரஸ் விஷயத்தில் ரப்பர் பேண்ட் ரொம்ப இழுக்கப்பட்டு விட்டது.

Katz said...

அன்-சைக்லோபீடியா is hilarious

ILA (a) இளா said...

நீங்க எழுதுறபடியே எழுதுங்க. அதான் சரியா வரும்.

Anonymous said...

"மேலும் கோயிலில் உடலுக்கு நன்மை தரும் நிறைய விஷயங்கள் சூழ்ந்துள்ளன. கோபுரக்கலசங்கள் காஸ்மிக் கதிர்களை வாங்கி உள்ளே விடும் என்று சொல்கிறார்கள். அந்த அலைகள் மற்றும் ஹோமத்தின் மூலிகைகள் வெளியிடும் புகை, மந்திரங்களால் ஏற்படும் ஒலி அதிர்வுகள் .இது மாதிரி. உடம்பை முழுவதும் கவர் செய்து கொண்டு போனால் இவற்றையெல்லாம் நாம் இழந்து விடுவோம். இந்த நல்ல விஷயங்கள் கூடுமானவரை உடம்பிற்குள் போகட்டும் என்றுதான் ஆண்களை சட்டை இல்லாமல் வேட்டி கட்டிக் கொண்டு வரச் சொல்கிறார்கள். "

யாரு சொல்கிறார்கள்? தயவு செய்து விளக்கவும்.. எதற்கெடுத்தாலும், கண்ணுக்கு தெரியாத கதிர்களை வம்புக்கு இழுப்பது நன்றாக இல்லை.. கதிர்களை விளக்கும் Maxwell equation அளவுக்கேணும் விளக்கம் தரவும் ப்ளீஸ்..

Anonymous said...

மின் காந்த அலைகள் எந்த conductor என்றாலும் அதன் surface இல் அடிபட்டு, surface current ஆக மாறிவிடும்.. Dielectric என்றால் புகுந்து ஜமாய்த்து விட்டு வெளியேறும்.. ஒரு பொருளின் வடிவமைப்பைப் பொறுத்து அதன் மேல் படும் கதிர்களின் அம்சங்களை (behaviour) விளக்கலாம்.. for eg, wave equations for antenna எடுத்து படித்தால், antenna சுற்றி உருவாகும் கதிர்களை அழகாக சமன்பாடுகளில் சொல்வார்கள் (BE ECE Antennas புத்தகங்களில் வரும்).. அதே போல், கோயில் கோபுரம் மேல் படும் காஸ்மிக் கதிர்கள் (அதுவும் ஒரு வகை மின் காந்த அலைதான்.. என்ன ரொம்ப வீக் அலை) பற்றி விளக்கவும் அல்லது சமன்பாடுகள் எல்லாம் போட்டால் இங்கே அடிக்க வருவார்கள் என்றால், please mail me the references.. சும்மா "சொல்கிறார்கள்" என்று போட வேண்டாம்.. ரொம்ப வருத்தமாக இருக்கிறது.. இதையெல்லாம் Maxwell கேட்டால் எவ்வளவு வருத்தப்படுவார்.. தயவு செய்து "Psudo science" க்கும், உண்மையான science க்கும் உள்ள வேறுபாட்டில் கவனமாக இருங்கள் (உங்கள மட்டும் சொல்லலப்பா.. மக்களை சொல்றேன்)

{Please note that the anonymous comment above (Jan19th 2012 10:45 AM) also mine..
I could not use my accont login here.. some problem with logging in.. but u could mail me at parthi2929@gmail.com}

சார்வாகன் said...

அருமை
/மரபணு தொழில்நுட்பம் இன்னும் வளரவில்லை.வளராமல் இருப்பதே நல்லது என்று சில சமயம் தோன்றுகிறது./
மிகச்சரி .வாழ்வின் அழகியல் அழிந்து விடும்.

/சுகமாய் இருக்கிறது
சுத்தமாய் இருக்கும்
டெஸ்க்டாப்.
/
இதே போல் முன்பு ஒரு க‌விதை ப‌டித்த‌து ஞாபக‌ம் வ‌ருகிற‌து.

"ஆயிரம் மசாலா படம்
ஆயிர‌ம் ஆபாச‌ம்
ஆயிர‌ம் அழுகை
காட்சியாய் வந்தும்
வெண்மை மாறா திரை"

அது அந்தக் கால‌ம்!!!!!!!!!!!.
ந‌ன்றி

சாப்பிட்ட பின் ஓய்வு தேவையா? said...

1)சிவப்பு பலூன்களையும் வெள்ளை பலூன்களையும் வெவ்வேறு ஆட்கள் ஊதி கட்டியிருக்கலாம்.(அனேகமாக சிவப்பு பலூன்களை பெண்கள் காற்று நிரப்பி கட்டியிருக்கலாம்.)
2) சிவப்புக் கலருக்காக சேர்க்கப்படும் (dye)சாயத்தின் தன்மையால் வித்தியாசம் இருக்கலாம்.

சமுத்ரா said...

Anonymous ,இப்படி ஆன்மீகமே அறிவியல் தான் என்று சொல்லும் விஷயம் எனக்கும்
பிடிக்காது.மேலும்
நானும் நீங்களும் 'சொல்கிறார்கள்' என்று தான் சொல்ல முடியும். அறிவியலிலும் அப்படித்தான் .ஒளி என்பது மின்காந்த அலை என்று மாக்ஸ்வெல் சொன்னார் என்று தான் சொல்ல முடியும். நியூட்டனும் மாக்ஸ்வெல்லும் ஐன்ஸ்டீனும் சொன்னதைத்தான் நாம் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம். அங்கே, அவர்களிடம்,ஒரு நிமிடம்
நான் நிரூபித்துப் பார்த்து ஏற்றுக் கொள்கிறேன். ஒளிவேகத்தில் காலம் ஸ்தம்பித்து விடும் என்று நானே
நிரூபித்து ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்வதில்லை. ஆனால் நம் முன்னோர்கள் சில விஷயங்களை
(கவனிக்கும் சில விஷயங்கள் தான். பல விஷயங்கள் வெறுமனே ஆன்மீகக் குப்பை) சொன்னால்
அதை Pseudo science என்று திட்டுகிறோம். நிரூபணம் வேண்டும் என்கிறோம். கண்ணுக்குத் தெரியாத
கதிர்கள் என்கிறீர்கள். //கண்ணுக்கு தெரியாத கதிர்களை வம்புக்கு இழுப்பது நன்றாக இல்லை..//இயற்பியலில் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத கதிர்கள் தான் சார் . மைக்ரோவேவ் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனாலும் அதை ஏற்றுக் கொள்கிறோம்.

காஸ்மிக் கதிர்கள் என்று மைக்ரோவேவ் பின்புல கதிரியக்கத்தை சொல்லவில்லை. அது படுத்துவிட்ட மாடு.அதனிடம் எந்த சக்தியும் இல்லை.
மனிதனும் அவன் கண்டுபிடித்த கருவிகளும் உணரமுடியாத அதிர்வெண் அலைவரிசையில் சில கதிர்கள் இருக்கலாம் என்று நான்
நினைக்கிறேன். கருவிகளே உணராத போது செப்புக்கலசம் எப்படி அதை கிரகிக்கும் என்று கேட்க வேண்டாம். There must be something !
மேலும் ஒன்றை கவனிக்கவும். மாக்ஸ்வெல் கண்டுபிடிக்கும் முன்னேயே காலம் காலமாக மின் காந்த அலைகள் இருந்து
வருகின்றன. ஐன்ஸ்டீனுக்கு முன்னேயே காலம் காலமாக விண்மீன்கள் பொருளை சக்தியாக வெளியிட்டு வந்திருக்கின்றன.
எனவே//ரொம்ப வருத்தமாக இருக்கிறது.. இதையெல்லாம் Maxwell கேட்டால் எவ்வளவு வருத்தப்படுவார்.. //இப்படி பொய்யாக வருத்தப்படுவது
வேண்டாம். மாக்ஸ்வெல் மின்காந்த அலைகளைத் தயாரிக்கவும் இல்லை. அதற்குப் பேடன்ட் எடுக்கவும் இல்லை.எனவே அவர் வருத்தப்படமாட்டார்.TBC...

சமுத்ரா said...

//யாரு சொல்கிறார்கள்? தயவு செய்து விளக்கவும்.. //

இயற்பியலில் நீல்ஸ் போர், மாக்ஸ்வெல், டைராக் என்று பெயர் சொல்வது போல இங்கே சொல்ல முடியாது.
இது என்னைக்குத் தான் சொந்தம் என்று இங்கே யாரும் உரிமை கொண்டாடியதில்லை என்பதை கவனிக்கவும்.
இந்த அனுபவம் எல்லாருக்கும் பொதுவானது. இந்தியக் கோயில்களில் பெரும்பாலும் கோபுரங்களில் கலசங்கள்
இருக்கின்றன. கருவறைகள் பெரும்பாலும் சிறியதாக வெண்டிலேஷன் செய்யப்படாமல் வேலைப்பாடுகள் இல்லாமல்
இருட்டாக இருக்கின்றன. இவையெல்லாம் வெறும் ஃபேஷன் என்றால் அதை அடிக்கடி மாற்றி இருந்திருப்பார்கள்.
வெறும் சம்பிரதாயம் என்றால் யாராவது புரட்சியாளர் நான் கலசம் இல்லாமல் கோயில் கட்டுகிறேன் என்று
கட்டியிருப்பார்.ஆனால் அப்படி செய்யப்படவில்லை. விலாசமான கோயிலை கட்டிய மனிதர்களுக்கு
கர்ப்ப கிரகத்தை கொஞ்சம் பெட்டெர் ஆக கட்டத் தெரியாதா? ஏன் மெட்ரோ பொலிடன் நகரத்து பேச்சுலர்
அறை போல கட்டிவைக்க வேண்டும்? அதில் ஒரு ஜன்னல் வைக்க வேண்டும் என்று கூடவா அவர்களுக்குத்
தெரிந்திருக்காது? கர்பக்ரகம் என்றால் தாயின் கருவறை என்று அர்த்தம். அது வெறும் அறை மட்டும் என்று
குழந்தைக்கு எல்லா Nutrition மற்றும் பாதுகாப்புகள் அளிக்கும் ஒரு பொக்கிஷம். அதைப்போல கற்பக்ராகமும்

சார்வாகன் said...

நல்ல விவாதம்!!!!!!!!!!!!

//மனிதனும் அவன் கண்டுபிடித்த கருவிகளும் உணரமுடியாத அதிர்வெண் அலைவரிசையில் சில கதிர்கள் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.//

இருக்கும் வாய்ப்பு மிக அதிகம்.இருக்கலாம் என்பதை ஏற்கிறேன்.
இருக்கும் கருவிகளில் கிடைக்கும் காஸ்மிக் கதிர்களையும் ஆய்வு செய்தே வருகிறார்கள்.
http://en.wikipedia.org/wiki/Cosmic-ray_observatory

A cosmic-ray observatory is a scientific installation built to detect high-energy-particles coming from space called cosmic rays. This typically includes photons (high-energy light), electrons, protons, and some heavier nuclei, as well as antimatter particles.

எதிர் துகள்[antimatter] காஸ்மிக் கதிர்களில் இருக்கும் பட்சத்தில் அதன் கதிர் வீச்சு,விளைவு என்று சைன்ஸ் ஃபிக்சன் அளவு இப்போதே எழுதலாம்

//கருவிகளே உணராத போது செப்புக்கலசம் எப்படி அதை கிரகிக்கும் என்று கேட்க வேண்டாம்//

இது சரி அல்லது தவறு என்று [குறைந்த பட்சம்] இப்போது நிரூபிக்கமுடியாது.ஏன் எனில்.
1.அக்கதிர்கள் இப்போதுள்ள கருவிக்களுக்கு புலப்படாதது.அளவிட முடியாது.
2. ஆகவே கலசம் உணர்வதையும் அள்க்க முடியாது.

ஆகவே இதனை பற்றி எந்த முடிவுக்கும் வர இயலாது.நம்பினால் நம்புங்கள்!!!!!!. கட்டாயம் கிடையாது.

சமுத்ரா said...

நன்றி சார்வாகன்...உண்மையில் மாக்ஸ்வெல் மின்காந்த விதிகள் , ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு சமன்பாடுகள்
எல்லாம் பிரபஞ்சத்தின் மாடல்கள் தான். உண்மை என்னவோ யாருக்கும்
தெரியாது.

Jayadev Das said...

\\சென்னையைச் சேர்ந்த, குழந்தைப்பேறு இல்லாத ஒரு தம்பதியர், தங்களுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க உதவ விந்தணுவை விலைக்குத் தர முன்வருவோரைக்கோரி விளம்பரம் செய்துள்ளனர்.\\

ஆணோட விந்துவை வாங்குவது சரி, அதை எந்த பெண்ணுடைய அண்ட செல்லோடு [கரு முட்டை] சேர்ப்பார்கள், சேர்த்த பின்னர் உண்டான கருவை யார் வயிற்றில் வைப்பார்கள்? இதில் சட்ட சிக்கல் எதுவும் வராதா? [லைக் அந்த ஐ.ஐ.டி. பையன் சோத்துக்கு நான்தான் முதல் வாரிசுன்னு அந்த குழந்தை எதிர் காலத்தில் சொன்னால்...????].

Jayadev Das said...

\\ஐ.ஐ.டி.யில் படிப்பவருக்கு கண்டிப்பாக அறிவு (?) இருக்கும் என்று அந்தத் தம்பதி எப்படி முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதெல்லாம் பெரும்பாலும் ஏட்டுச் சுரைக்காய் !\\ கலாம் மாதிரி ஜீனியஸ்கள் உருவாக்கப் படாவிட்டாலும், ஐ.ஐ.டி.யில் B.Tech படிப்பவர்கள் நிச்சயம் இந்தியாவின் கிரீம் பசங்கதான். 90% க்கும் மேல அமெரிக்காவுலதான் செட்டில் ஆவுறாங்க. [யாரோட வரிப்பணம் எவனுக்கோ, எங்கேயோ போய் மஜா பண்ண உதவுது பாருங்க பாஸ்..]

Jayadev Das said...

ஆதாரம் வேண்டும். அதாவது இந்த கதிர்கள் பட்டதால், இன்னின்னாருக்கு இந்த மாற்றங்கள் வந்தன, படாதவர்களுக்கு அது வரவில்லை என்று புள்ளி விவரத்துடன் ஆய்வுகள் செய்யப் பட்டு நிரூபிக்கப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு காண்பிக்க முடியாது, ஆனால் இருக்கிறது என்றால் அது அறிவியல் அல்ல.
\\இது மாதிரி. உடம்பை முழுவதும் கவர் செய்து கொண்டு போனால் இவற்றையெல்லாம் நாம் இழந்து விடுவோம்.
இந்த நல்ல விஷயங்கள் கூடுமானவரை உடம்பிற்குள் போகட்டும் என்றுதான் ஆண்களை சட்டை இல்லாமல் வேட்டி கட்டிக் கொண்டு வரச் சொல்கிறார்கள். \\ பெண்கள் ஆண்கள் போல மேலாடை இல்லாமல் செல்ல முடியாது. அப்படியானால் அவர்களுக்கு கதிர்வீச்சு நன்மை எப்படிக் கிடைக்கும்? அல்லது ஆண்களுக்கு மட்டும் கிடைத்தால் போதுமா? பெண்களுக்கு தேவையே இல்லை என்று அவர்கள் முடிவு செய்துவிட்டார்களா?

Jayadev Das said...

\\பட்டு , மிக விரைவாக காஸ்மிக் கதிர்களை (அப்படி ஒன்று இருந்தால்..இந்தக் காலத்து கோயில்கள் ஒரு அபார்ட்மென்ட் போல கட்டப்படுவது வேதனைதான்) கிரகித்துக் கொண்டு தன்னிடம் Static electricity ஆக வைத்துக் கொள்ளுமாம். பிராமணர்கள் மடி என்று ஒரு பட்டு வஸ்த்திரம் வைத்திருப்பார்கள். அதை எத்தனை நாள் ஆனாலும் துவைக்கவே மாட்டார்கள். துவைத்தால் அதன் நிலை மின்சாரம் டிஸ்சார்ஜ் ஆகி விடும் என்று. சில சமயங்களில் அந்த துவைக்காத ,எண்ணெய் கறை படிந்த,வியர்வை நாற்றம் வீசும் 'மடி'யாலேயே உடலுக்கு நோய் வந்து விடும் என்று தோன்றும். ஆனால் அப்படி வராதாம். அந்த சார்ஜ் செய்யப்பட பட்டுத்துணியை அணிவது கிட்டத்தட்ட புல்லட் ஃப்ரூப் ஆடை அணிவது போலவாம். \\ சமுத்ரா நீங்களுமா????? This is totally against what is taught in Physics about the principles of static Electricity.

Jayadev Das said...

\\சீரியல்களுக்கும் வெள்ளிக் கிழமைகளுக்கும் என்ன ஏழாம் பொருத்தமோ? \\ சீரியல் எல்லாம் பார்க்கிறீங்களா!! உங்களுக்கு கோடி நமஸ்காரம்!! ஹா..ஹா..ஹா....

ஜேகே said...

சமுத்ரா .. உங்கள் பாணி உங்களுடையது .. நீங்க கலக்குங்க!

Jayadev Das said...

Correction: \\சோத்துக்கு\\ சொத்துக்கு

Anonymous said...

"நானும் நீங்களும் 'சொல்கிறார்கள்' என்று தான் சொல்ல முடியும். அறிவியலிலும் அப்படித்தான் .ஒளி என்பது மின்காந்த அலை என்று மாக்ஸ்வெல் சொன்னார் என்று தான் சொல்ல முடியும். நியூட்டனும் மாக்ஸ்வெல்லும் ஐன்ஸ்டீனும் சொன்னதைத்தான் நாம் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம். அங்கே, அவர்களிடம்,ஒரு நிமிடம் நான் நிரூபித்துப் பார்த்து ஏற்றுக் கொள்கிறேன். ஒளிவேகத்தில் காலம் ஸ்தம்பித்து விடும் என்று நானே
நிரூபித்து ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்வதில்லை. "

1. அவர்கள் சொன்னார்கள் என்பதோடு பாடப்புத்தகங்கள் நிறுத்திக்கொள்வதில்லை.. அதை சமன்பாடுகளோடு விளக்குகின்றன.. ஆனால் இந்த கோயில்கள் கிரகிக்கும் விஷயத்தில், சமன்பாடுகளோ விளக்கவுரைகளோ இல்லை என்பது தான் பிரச்சனை.. அதனால் தான் Psudo science என்கிறோம்..
2. Science க்கும் எந்த திசையில் கேள்வி கேட்டு சென்றாலும் ஒரு எல்லை இருக்கிறது (eg: quantum world, before big bang, black holes, etc).. அதற்கு மேல் இன்னும் பதில்கள் கண்டு பிடிக்கப்படவில்லை.. இதை Psuedo Science காரர்கள் நன்றாக உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள்.. அதைத்தான் சுட்டிக்காட்டுகிறேன்..

"இயற்பியலில் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத கதிர்கள் தான் சார் . மைக்ரோவேவ் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனாலும் அதை ஏற்றுக் கொள்கிறோம்."

1. மின் காந்த அலை என்பது ஒரு maths tool.. அதை ஒரு பொருளாக பார்க்க முடியாது.. Intangible "energy" ஒரு இடத்தில் உணரப்பட்டு பின் மற்றொரு இடத்தில் உணரப்படும், comprehend செய்ய கடினமான விஷயத்தை விளக்க உருவாக்கப்பட்ட ஒரு கணித அமைப்பே இங்கே "அலை" என்பது.. இது Vector Calculus என்ற தியரியில் அழகாக விளக்கப்பட்டிருக்கும்.. அதை அடிப்படையாக வைத்தே Maxwell equations உடைய கணித அமைப்பும் இருக்கும்.. ஆகவே என்ன தான் அதை வைத்து நாம் இவ்வளவு விளையாடினாலும், அடிப்படையில், அது "என்ன" என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படாத விஷயமாகும் (இந்த கேள்வி நான் சொன்ன Science எல்லைக்கு இன்னுமொரு உதாரணம்)..

அப்பறம், மின் காந்த அலை என்பதன் ஒரு பகுதி தான் ஒளி (which is Visible)... அதன் ultraviolet compound சுவரை தாண்டி சென்றாலும், infrared சுவரை தாண்டி சென்றாலும், நம் கண்களுக்கு தெரியாத அலைகளே நிரம்பி இருக்கும்..

"இப்படி பொய்யாக வருத்தப்படுவது வேண்டாம். மாக்ஸ்வெல் மின்காந்த அலைகளைத் தயாரிக்கவும் இல்லை. அதற்குப் பேடன்ட் எடுக்கவும் இல்லை.எனவே அவர் வருத்தப்படமாட்டார்"

தயாரித்தவர் தான் வருத்தப்பட வேண்டுமா என்ன? தவிர அவர் தான் ஏதோ இதற்கெல்லாம் சொந்தக்காரர் போலெல்லாம் சொல்லவில்லை.. அவர்கள் அவ்வளவு
ஆராய்ந்து கடினப்பட்டு dervice செய்த விஷயங்களின் விளக்க இணைப்புகள் இல்லாமல், "தூள்" படத்தில் பரவை முனியம்மா, dumbbells ஐ, தூக்கிப்போட்டு போவதைப்போல போகிற போக்கில், கோபுர விஷயங்களை சொல்வது தான் பிரச்சனை.. "Antenna" wave equations போல், இதற்கும் விளக்கம் கொடுத்தால், ஏற்றுக்கொள்வதில் பிரச்சனை இல்லை..

Science இல், நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்.. ஆராய்ச்சியாளர்கள் சொன்ன விஷயங்களை absolute truth என்று யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை.. அதைத்தவிர, இயற்கையை, அதன் செயல்பாட்டை விளக்க, Proof செய்யும் விஷயம் இல்லை என்பதால் best truth என்ற வகையில் தான் இருக்கிறது.. இன்று வரை, Einsten theory இல் ஒரு அடிப்படை விஷயத்தை நம்பினோம்.. எதுவும் ஒளி வேகத்தை தாண்டாது என்று (Science எல்லை).. தாண்டும் என்று வைத்துகொண்டால், பல விஷய்ங்களின் அடிப்படை புரிதல்கள் தவறு என்றாகிவிடும்.. இப்போது nuetrino தாண்டியவுடன், இந்த தியரியும் இப்போது ஆட்டம் கண்டு விட்டது!

Anonymous said...

நான் சொல்வதெல்லாம் நீங்கள் ஒரு விஷயத்தை கண்மூடித்தனமாக நம்பாமல், கோபப்படாமல் ஆராயுங்கள்.. கோபுர கலசம் இத்தனை different ஆக ஏன் கட்டியிருக்க வேண்டும், ஏன் இவ்வளவு சின்னதாக?? இதற்கும் கதிர்களுக்கும் என்ன சம்பந்தம் (கோபுரங்கள் மேல் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும், omni present ஆக, மின் காந்த அலைகள் எப்பொழுதும் வெவ்வேறு சக்திகளில் பரவிக்கொண்டே, பட்டுக்கொண்டே இருக்கின்றன.. அதை ஓரளவுக்கு உணர முடியும் example ஒளி)

கதிர்களுக்கு சம்பந்தம் இருக்கிறது என்றால், அதை விளக்கும் தியரி கொண்டு புரிந்து கொள்ள முற்படுங்கள்.. தியரிகளும் வானத்தில் இருந்து குதித்தவை அல்ல,.. நம் அடிப்படை புரிதல்களையும், ஏற்றுக்கொண்ட விஷயங்களயும் கொண்டே கட்டப்பட்டவை.. ஒரு கட்டிடம், செங்கற்களால் உருவாவதைப்போல.. அந்த தியரிலேயே சந்தேகம் இருந்தால், முதலில் அதை புரிந்து பின் இதற்கு வாருங்கள்..

For eg,
1. கோபுரத்தின் மேல் படியும் கதிர்களை விளக்க, முதலில், கதிர்களின் இயல்புகள் தெரிய வேண்டும் - Read "Electro magnetics and wave equations"
2. Electromagnetics புரிய, முதலில் உங்களுக்கு நன்றாக Vector calculus தெரிய வேண்டும்.. அது தெரியாமல் இது தொட்டால் மர்ம தேசம் போல எதுவும் புரியாது
3. Vector calculus ஒரு கணித தியரி,.. அதைப்புரிந்து கொள்ள, Differential calculus, Integral calculus நன்றாக தெரிய வேண்டும்..
4. Differential calculus, Integral calculus களைப்புரிய, Integration, differentiation நன்றாக புரிந்து கொண்டிருக்க வேண்டும் (அனேகமாக இதை 11th, 12th std இல் படித்து இருப்பீர்கள்)..

ஆனால், இப்பொழுது இருக்கும் science தியரி வைத்துக்கொண்டு absolute truth தேடாதீர்கள்.. அது தெரிந்திருந்தால், உலகில் எந்த ஆராய்ச்சியும் இப்பொழுது நடைப்பெற்றுக்கொண்டிருக்காது.. நாம் இன்னும் உண்மைகளை தேடிக்கொண்டே இருக்கிறோம்.. இயற்கை ஒரு புதிரை அவிழ்த்து விட்டு, பல புதிர்களை போட்டு விட்டு, முடிந்தால் கண்டுபிடி என்று ஓடி விடுகிறது.

Anonymous said...

Actually, உங்க "அஅஅ" கட்டுரைகளுக்கு நான் ரசிகன் சார்.. சுஜாதாவிற்கு பிறகு, இவ்வளவு entertaining ஆக, அறிவியல் கட்டுரைகளை நான் படித்ததில்லை..
நம்ம ஊர் பாடப்புத்தகங்களில், ஏண்டா பிறந்தோம் என்று நொந்து கொள்ளும் அளவிற்கு போர் அடிக்க எழுதுவார்கள் :(

Anonymous said...

By the way, January 20, 2012 12:54 PM posting, January 20, 2012 1:17 PM posting, January 20, 2012 1:28 PM posting அனைத்தும் நானே parthi2929.. ஏன் என் login வொர்க் ஆகவில்லை என்று தெரியவில்லை.. வேற யாருக்கும் இந்த பிரச்சனை இல்லயா? I mean people without blogger account but only gmail account?!

Anonymous said...

"மனிதனும் அவன் கண்டுபிடித்த கருவிகளும் உணரமுடியாத அதிர்வெண் அலைவரிசையில் சில கதிர்கள் இருக்கலாம் என்று நான்
நினைக்கிறேன்"

Frequency can be infinite.. எந்த frequency யிலும் அலை இருக்கலாம்.. அதாவது 1 Hz அலை இருக்கலாம்.. 2 Hz அலையையும் உருவாக்கலாம்.. 1 க்கும், 2க்கு இடையே எப்படி infinite numbers இருக்கிறதோ, அத்தனை நம்பரிலும் வேண்டுமென்றால் உருவாக்கலாம்.. அதற்கும் இயந்திர எல்லைகள் உண்டு.. 1.352 Hz உருவாக்கலாம்.. ஆனால், 1.239856986345349 Hz அலை இப்பொழுது உள்ள இயந்திரங்களை வைத்து உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை.. அதற்காக, 1.239856986345349 Hz அலை தென்பட்டால் பார்த்து ஆச்சர்யப்படவும் தேவையில்லை.. அதிர்வெண் என்பது ஒரு unit நேரத்தில், எத்தனை cycles முடித்து விடுகின்றன என்பது தானே!!

(மறுபடி நானே தான்.. parthi2929.. இங்கே ரோஷப்பட்டு, microwave oven இல், சாப்பாடு வைக்க மறந்து விட்டேன்.. டின்னர் லேட்!!)

அரபுத்தமிழன் said...

//சிவப்பு பலூன்கள் சீக்கிரமே காற்றுப்போய் சுருங்கி விட //

ஒரு தலை ராகம் சந்திரசேகர் சொன்ன கதைதான் ஞாபகம் வருது
'நீ எப்ப சிவப்பு ரோஜாவாப் போறதுன்னு' ரத்தம் கொடுத்து ....

அடுத்து, வெள்ளைமாளிகையும் செம் 'மாஸ்கோ' வும் ஞாபகம் வருது..