இந்த வலையில் தேடவும்

Monday, October 10, 2011

அணு அண்டம் அறிவியல் -50

அணு அண்டம் அறிவியல் -50 உங்களை வரவேற்கிறது

ஐன்ஸ்டீன் தன் தியரிக்கு ரிலேடிவிடி என்று பெயர் வைக்கவில்லை. அவர் வைத்த பெயர் PRINCIPLE OF INVARIANCE என்பதாகும்.

அவன் வீட்டை பூட்டி விட்டு
கிளம்பியதும்-உள்ளே
நாற்காலி, மேஜை, புத்தகங்கள்
எல்லாம் எழுந்து
ஆரவாரம் செய்து
குதித்துக்
கும்மாளம் போட்டன
எதையோ மறந்தவனாக அவன்
மீண்டும்
பூட்டைத் திறந்ததும்
எல்லாம் அவசர அவசரமாக
தங்கள் இடத்தில் வந்து
சத்தம் செய்யாமல் அமர்ந்து கொண்டன..

- ஒரு கவிதை

இந்த நூற்றாண்டின் நியூட்டன் என்று போற்றப்படும் ஸ்டீபன் ஹாக்கிங் இவ்வாறு சொல்கிறார்:

"இயற்பியலில் வி
ஞ்ஞானிகள் தான் பிரபஞ்சம் பற்றிய கொள்கைகளை முன்வைக்க வேண்டும் என்பது இல்லை. யார் வேண்டுமானாலும் முன்வைக்கலாம்.ஆனால் அது எளிமையாக (simple ) இருக்கவேண்டும்.நிரூபிக்கத்தக்கதாக (provable ) இருக்க வேண்டும்.அதை அறிவியல் வரவேற்கும்.அந்தக் கொள்கை எத்தனை அபத்தமானதாக (absurd ) வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். ஆயிரம் சோதனைகளில் ஒரு முறை அது தவறினால் கூட அது தயவு தாட்சிண்யம் இன்றி நிராகரிக்கபப்டும். நீங்கள் வீட்டை விட்டு நீங்கும் போது உள்ளே இருக்கும் நாற்காலி, மேஜை எல்லாம் மறைந்து போகின்றன (நீங்கள் திரும்பி வரும் போது மீண்டும் வருகின்றன) என்று ஒரு சுவாரஸ்யமான 'மாடலை' நீங்கள் முன்வைக்கலாம். ஆனால் இதை நிரூபிக்க முடியாது.மேஜை இருக்கிறதா என்று பார்க்க நீங்கள் உள்ளே போக வேண்டும். உள்ளே போனால் மேஜை திரும்ப வந்து விடும்!நீங்கள் பூட்டி விட்டு வெளியே போகும் போது(ம்) நாற்காலி மேஜை எல்லாம் அப்படியே அதே இடத்தில் போட்டது போட்டபடி இருக்கின்றன என்ற 'மாடல்' எளிமையானது.அவ்வளவு தான்.ஆனால் இந்தக் கொள்கை தான் சரி என்று நூறு சதவிகிதம் நம்மால் சொல்ல முடியாது. நாம் வீட்டை விட்டுக் கிளம்பும் போது அதனுள் உள்ள எல்லாம் மறைந்து போகின்ற கொள்கை கூட உண்மையாக இருக்கலாம்"

ஒரு டெலஸ்கோப் கூட இல்லாமல் தான் ஐன்ஸ்டீன் பிரபஞ்சத்தைப் பற்றிய தன் மாடல்களை வடிவமைத்தார். அவருடைய சிறப்பு சார்பியல் கொள்கை (special theory of relativity)அத்தனை முக்கியத்துவம் பெறவில்லை. நாம் முதலிலேயே சொன்னபடி அதை நிரூபிக்க அதி வேகத்தில் வேகம் மாறாமல் நகரும் ஒருவர் தேவை.இது ஒரு சிறப்பு நிபந்தனை (ஸ்பெஷல் கண்டிஷன்) ஆனால் அவரது பொது சார்பியல் கொள்கை (பொருட்கள் காலவெளியை வளைக்கும் என்பது ) மிகுந்த வரவேற்பு பெற்றது. வரவேற்பு பெற்றால் மட்டும் போதுமா?துல்லியமான பல நிரூபணங்களுக்குப் பிறகே அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. பொது சார்பியல் கொள்கையின் கணிப்புகளையும் நிரூபணங்களையும் கொஞ்சம் (சுருக்கமாக) அலசலாம்.

ஈர்ப்பின் அருகே ஒளி வளைதல் (BENDING OF LIGHT )
==========================================


படத்தைப் பாருங்கள். (௮) விண்கலம் ஒன்று நிலையாக இருக்கிறது அல்லது சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.விண்கலத்தின் ஒரு முனையில் உள்ள S என்ற மூலத்தில் இருந்து t1 நேரத்தில் ஒரு ஒளிக்கற்றை அனுப்பப்படுகிறது.t2 நேரத்தில் (t2 >t1 ) அது நேர்க்கோட்டில் சென்று D என்ற இலக்கை அடைகிறது.இதை காலவெளி வரைபடத்தில் வரைந்தால் ஒளியின் பாதை ஒரு நேர்கோடாக இருக்கும்.இப்போது அந்த விண்கலம் மேலே முடுக்கப்படுவதாகக் கொள்வோம்.(ஆ) t1 இல் S இல் இருந்து ஒளி புறப்படுகிறது.ஆனால் அது t2 வில் இலக்கு D யை அடையும் முன்னர் விண்கலத்தின் முடுக்கத்தால் அதன் தரை மேலே வந்து ஒளிக்கற்றை D யை அடையாமல் அதற்கு கொஞ்சம் கீழே முட்டுகிறது.காலவெளி வரைபடத்தில் ஒளியின் பாதை வளைந்து காணப்படுகிறது.

ஒளியானது GEODESIC கில் மட்டுமே பயணிக்கும் என்று நமக்குத் தெரியும்.(இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள குறைந்த
தூரத்தையே ஒளி தேர்ந்தெடுக்கும்.) ஆட்டோக்காரர்களுக்கு அப்படியே Opposite ! ஆனால் கேஸ் (ஆ) வில் ஒளியின் பாதை வளைந்து உள்ளது.நாம் முதலிலேயே பார்த்தபடி ஒரு வளைந்த (கால)வெளியில் இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மிகக்குறைந்த தூரம் நேர்கோடாக இல்லாமல் ஒரு வளைவாக (curve ) இருக்கும்.எனவே நாம் முடுக்கமானது வெளியை வளைக்கிறது என்ற ஒரு தைரியமான முடிவுக்கு வரலாம்.சரி இது இருக்கட்டும். Equivalence தத்துவப்படி முடுக்கமும் ஈர்ப்பும் ஒன்று தான். (under small volume considerations ) எனவே முடுக்கம் ஒளியை வளைத்தால் ஈர்ப்பும் வளைக்க வேண்டும்.(இ) பூமியின் அருகிலும் ஒளி வளைய வேண்டும். ஆனால் சாதாரண முடுக்கத்தின் போது படம் (ஆ) வில் ஒளியின் பாதை கிட்டத்தட்ட ஒரு நேர்கோடாகவே இருக்கும். (ஒளியின் அபாரவேகத்துடன் ஒப்பிடும் போது விண்கலத்தின் முடுக்கம் ஜுஜுபி) எனவே பூமியின் அருகிலும் ஒளியின் பாதை கிட்டத்தட்ட நேர்கோடாகவே இருக்கும். (இல்லை என்றால் துப்பாக்கி சுடும் போட்டியில் நேராக நிற்காமல் கொஞ்சம் தள்ளி நின்று தான் குறி பார்க்க வேண்டும்) அனால் கணிசமான நிறை உள்ள ஒரு விண்மீனின் அருகே ஒளியும் கணிசமாக வளைய வேண்டும் என்று ஐன்ஸ்டீன் ஊகித்தார். சரி நமக்கு பரிச்சயமான விண்மீன் சூரியன் இருக்கவே இருக்கிறது. சூரியன் ஒளியை வளைத்தால் தூரத்தில் உள்ள விண்மீன்கள் தங்கள் உண்மையான இருப்பிடத்தில் இருந்து கொஞ்சம் நகர்ந்து தவறான இடத்தில் இருப்பது போலத் தோன்ற வேண்டும்.(படம் ௮ )


சரி ஆனால் விண்மீன்கள் உண்மையிலேயே அந்த இடத்தில் தான் இருக்கின்றனவா இல்லை சூரியன் ஒளியை வளைக்கிறதா என்று சொல்ல முடியாது.ஆனால் இதைக் கண்டுபிடிக்க ஒரு வழிமுறை உள்ளது.(படம் ஆ) பூமி தன் சுற்றுப் பாதையில் P1 என்ற நிலையில் இருக்கும் போது வானத்தைப் பார்த்து நட்சத்திரங்களின் நிலையை போட்டோ பிடித்து வைத்துக் கொள்ள வேண்டியது.பிறகு ஆறு மாதம் கழித்து பூமி நேரெதிர் பாதையில் P2 என்ற நிலையில் இருக்கும் போது மீண்டும் போட்டோ எடுத்து வைக்க வேண்டியது. இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவற்றின் நிலையில் வித்தியாசம் தெரிந்தால் சூரியன் ஒளியை வளைக்கிறது என்று சொல்ல முடியும்.

(P1 இல் விண்மீனின் ஒளி சூரியனை கடக்காமல் நம் கண்ணை அடைகிறது
P2 வில் விண்மீனின் ஒளி சூரியனைக் கடந்து நம் கண்ணை அடைகிறது.)

ஆனால் நிலை P2 வில் சூரியனின் ஒளி வானம் முழுவதும் ஆக்கிரமிப்பதால் நட்சத்திரங்களை போட்டோ பிடிப்பது அசாத்தியம்.இதற்கு நம் சந்தா மாமாவை சூரியனை சற்று மறைக்கும் படி வேண்டிக் கொள்ள வேண்டும். ஏனோ தானோ என்று மறைத்தால் போதாது. நந்தனாரை சிதம்பர நந்தி மறைத்தது போல Complete -ஆக மறைக்க வேண்டும்.(சற்றே மறைத்து இரும் பிள்ளாய்,சந்நிதானம் கூசுதாம்!)
அப்படிப்பட்ட ஒரு கங்கண சூரிய கிரகணம் வரும்வரை (29 -3 -1919) விஞ்ஞானிகள் காத்திருந்தனர். ஆப்பிரிக்காவில் தெரியும் அந்த கிரகணத்தைப் பார்த்து போட்டோ பிடிக்க அங்கே எடிங்க்டன் என்ற விஞ்ஞானி துல்லியமான காமிராக்களுடன் பயணித்தார்.அவரும் சமர்த்தாக சூரியன் மறைந்து பூமி இருண்டதும் தாமதிக்காமல் வானத்தைக் கிளிக்கினார். கிரகணத்தின் முடிவுகள் ஐன்ஸ்டீனுக்கு சாதகமாகவே அமைந்தன. ஐன்ஸ்டீன் உலகப் புகழ் பெற்றார்.நம் சூரியன் நட்சத்திரங்களின் ஒளியை சத்தம் போடாமல் வளைத்து அனுப்பியது தெரிய வந்தது.



வெயிட்..

ஈர்ப்பு ஒளியை வளைக்கும் என்று முதலில் சொன்னவர் ஐன்ஸ்டீன் அல்ல. நியூட்டன்! ஒளி கூட சிறு சிறு துகள்களால் ஆனது என்று முதன்முதலில் ஊகித்தவரும் அவரே.ஒளிக்கு சாதாரணமாக நிறை இல்லை.ஆனால் ஒரு இயக்க நிறை அதன் ஆற்றலால் வருகிறது. m = E / C2 இங்கே E என்பது hv . h என்பது பிளான்க் மாறிலி. v என்பது ஒளியின் அதிர்வெண்.ஒளிக்கு நிறை உண்டு என்பதால் அதை சூரியன் வளைக்கும் என்று நியூட்டன் தியரி கணிக்கிறது.சரி இங்கே ஐன்ஸ்டீன் என்ன செய்தார் என்றால் ஒளி நியூட்டன் கணித்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக வளையும் என்று சொன்னார்.

இது ஏன் என்றால் சூரியனின் ஈர்ப்பு என்பது ஒருவகை ஆற்றல். அந்த ஆற்றலுக்கும் நிறை இருக்கிறது.(E /c2 ) (Energy weighs !) இந்த நிறை மீண்டும் கொஞ்சம் ஈர்ப்பை உருவாக்குகிறது. இந்த ஈர்ப்பு மீண்டும் ஒரு சிறிய நிறையை உருவாக்குகிறது.இந்த செயின் ரியாக்சன் காரணமாக நட்சத்திர காட்சிப்பிழை (aberration
) நியூட்டன் விதி கணித்தபடி 0 .84 ஆர்க் செகண்டுகளாக இருக்காமல் ஐன்ஸ்டீன் கணித்தபடி 1 .75 ஆர்க் செகண்டுகளாக இருந்து. அதாவது ஒரு டிகிரியில் 3600 இல் ஒரு பாகம்.பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் தெரியாது! சூரியன் போன்ற ஒரு கனமான விண்மீன் கூட இவ்வளவு தான் ஒளியை வளைக்கிறது.ஆனால் ஒளியை 180 டிகிரி வளைக்கும் சமாச்சாரங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றன. கருந்துளைகள்! அதன் விளிம்பில் ஒருவேளை நாம் நிற்க முடிந்தால் நம் முதுகை நாமே கண்களுக்கு எதிரில் பார்க்க முடியும்! புதன் கோளின் சுற்றுப்பாதையில் இருந்த மர்மத்தையும் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கொள்கை விடுவித்தது.கோள்கள் நியூட்டனின் Inverse square law கணித்தபடி நிலையான நீள்வட்ட சுற்றுப்பாதைகளில் செல்வதில்லை.ஈர்ப்பு காலவெளியில் பயணிக்க நேரம் எடுத்துக் கொள்கிறது. எனவே கோள்களின் சுற்றுப்பாதை முறுக்கு பிழிவது போல தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும் என்று ஐன்ஸ்டீன் கணித்தார்.

ஈர்ப்பு லென்சு (GRAVITATIONAL LENSING )
================================

சினிமாவில் ஹீரோ நடந்து வந்து கொண்டிருப்பார். திடீரென்று (வில்லனை பார்த்ததும்) இரண்டு ஹீரோவாக மாறிவிடுவார்.கிராஃபிக்சில் இது சுலபம்.நிஜத்தில் இது நடக்க பிரம்மாண்டமான ஈர்ப்பு வேண்டும்.வெள்ளைக் குள்ளன் (white dwarf) போன்ற ஒரு பிரம்மாண்டமான ஈர்ப்பின் அருகே தூரத்து விண்மீனின் ஒளி வரும் போது ஒளி அதன் இரு முனைகளாலும் வளைக்கப்பட்டு நமக்கு ஒரே விண்மீனின் இரண்டு பிம்பங்கள் தெரியும்.
கீழே உள்ள கீழே படத்தில் நீங்கள் பார்ப்பது நான்கு QUASAR கள் அல்ல. ஒன்றே ஒன்று தான்!(இது ஐன்ஸ்டீன் சிலுவை என்று அழைக்கப்படுகிறது) இரண்டு பேர் ஒரே நேர்க்கோட்டில் ஒருவருக்குப் பின் ஒருவர் நின்று கொண்டிருந்தால் நம்மால் பின்னால் நிற்பவரைப் பார்க்க முடியாது.அனால் இரண்டு விண்மீன்கள் ஒன்றன் பின் ஒன்று இருந்தால் பின்னால் இருக்கும் விண்மீன் ஈர்ப்பு லென்சு விளைவின் காரணமாக முன்னால் இருக்கும் விண்மீனை சுற்றி ஒளிவட்டம் போலத் தெரியும். படத்தைப் பாருங்கள்.



ஈர்ப்பு அலைகள் (GRAVITATIONAL WAVES )
=================================

ஒரு ரப்பர் சீட்டை எடுத்துக் கொண்டு அதை இறுக்கிப் பிடிக்கவும். அதன் மையத்தில் ஒரு கனமான இரும்பு குண்டைப் போடவும். குண்டின் நிறை காரணமாக ரப்பர் அமுங்கும்.ரப்பர் சீட்டின் மையத்தில் ஏற்பட்ட இந்த சிதைவு அதன் முனைகளுக்கு நெருங்க கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்ளும்.அதே போல ஒரு விண்மீன் திடீரென்று தோன்றுவதாக வைத்துக் கொண்டால் அதன் ஈர்ப்பு கால வெளியில் பரவ நேரம் எடுத்துக் கொள்ளும். அதாவது சூரியன் தோன்றி குறைந்த பட்சம் எட்டு நிமிடங்கள் கழித்து மட்டுமே பூமியை ஆதிக்கம் செய்யும்.நீரில் அலைகள் பரவுவது போல இந்த ஈர்ப்பு அலைகளாகப் பரவ முடியும் என்று பொது சார்பியல் கணித்தது. குவாண்டம் கருத்தாக்கத்தின் படி ஈர்ப்பு என்பது கிராவிடான் எனப்படும் துகள்கள் மூலம் கடத்தப் படுகிறது.ஈர்ப்பு அலைகள் என்ற இந்த கருத்து மீண்டும் சார்பியலையும் குவாண்டம் இயற்பியலையும் இணைப்பதை
கடினமாக்குகிறது.

ஈர்ப்பு சிவப்பு நகர்ச்சி (RED SHIFT ) மற்றும் கால நீட்டிப்பு (time dilation )
=======================================================


ஈர்ப்புப் புலத்தின் மிக அருகே இருக்கும் A என்ற ஒருவரைக் கருதுவோம்.(படம்) அவர் மிக உயரத்தில் இருக்கும் B என்பவருக்கு ஒளித் துடிப்புகளை அனுப்புகிறார். நாம் மேலே ஏறுவதற்கு கஷ்டப்படுவது போல ஒளியும் மேலே ஏற கஷ்டப்படுகிறது.இதை ஈர்ப்புக் கிணறு (gravitational well ) ஏறுவது என்கிறார்கள்.மேலே ஏறும்போது நாம் ஆற்றலை இழப்பது போல ஒளியும் ஆற்றலை இழக்கிறது.ஒளியின் ஆற்றல் இழப்பு அதன் வேகத்தை குறைக்க முடியாது.(ஒளி எப்போதும் ஒரே வேகத்தில் செல்கிறது) எனவே ஒளியின் ஆற்றல் குறைவு அதன் அதிர்வெண்ணைக் குறைக்கிறது (
E = hv என்பதால்) அதிர்வெண் குறைவதால் அதன் அலைநீளம் அதிகரிக்கிறது. நீல நிறம் குறைந்த அலைநீளத்தையும் சிவப்பு நிறம் அதிக அலைநீளத்தையும் உடையவை.எனவே கீழே இருந்து கிளம்பும் நீல ஒளி கிணறு ஏறி முடித்ததும் சிவப்பு ஒளியாக மாறி விட்டிருக்கிறது.(red shifted) சரி.

இப்போது இந்த ஒளியை வைத்துக் கொண்டு A மற்றும் B இருவரும் தங்கள் கடிகாரங்களை வடிவமைப்பதாக வைத்துக் கொள்வோம்.A என்பவர் கீழிருந்து கிளம்பும் ஒளியின் ஒவ்வொரு முகடிலும் ஒரு பந்தை வைத்து அனுப்புவதாக (பேச்சுக்கு) கற்பனை செய்வோம்.A என்பவருக்கு அதிர்வெண் அதிகம் என்பதால் அவருக்கு ஒளியின் முகடுகளும் அதிகம். எனவே அவர் அதிக பந்துகளை அனுப்ப முடியும். மேலே இருக்கும் B என்பவரை ஒளி சென்று அடையும் போது அதன் அதிர்வெண் குறைந்து விடுவதால் அவருக்கு குறைவான முகடுகளே (பந்துகளே) கிடைக்கும்.பந்துகளின் வரவை வைத்து B என்பவர் A யின் காலத்தை நிர்ணயம் செய்கிறார்.(1 பந்து= 1 நொடி) குறைவான பந்துகளே அவருக்குக் கிடப்பதால் A யின் காலம் மெதுவாக நகருவது போல B உணர்கிறார்.அதே போல B யில் இருந்து A விற்கு வரும் ஒளி கிணற்றுக்குள்ளே விழுவதால் ஆற்றல் அதிகரித்து அது நீல நிறத்தை நோக்கி நகர்கிறது.மேலும் A விற்கு அதிக பந்துகள் கிடைக்கும்.எனவே A வைப் பொறுத்து B யின் காலம் சீக்கிரம் நகரும். எனவே ஈர்ப்பு ஒன்றின் அருகே காலம் மெதுவாக நகரும் என்று பொது சார்பியல் கணித்தது.

G- red shift என்பதை டாப்ளர் விளைவுடன் குழப்பிக் கொள்ளாதீர்கள். டாப்ளர் விளைவு பற்றி பின்னால் பார்க்கலாம்.


your attention please...


அன்பர்களே,அணு அண்டம் அறிவியல் ஐம்பது அத்தியாயங்கள் எழுதுவதற்கு ஊக்கம் அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இனி வரும் அடுத்த நாற்பது அத்தியாயங்களில் பிரபஞ்சத்தின் தோற்றம்,பிரபஞ்சம் விரிவடைதல், கருந்துளைகள், விண்மீன்களின் வாழ்க்கை சுழற்சி, ஸ்ட்ரிங் தியரி இவற்றையெல்லாம் விரிவாகப் பேசுவோம்.-- வின் கடைசி பத்து அத்தியாயங்கள் அறிவியலையும் ஆன்மீகத்தையும் பக்கத்தில் கொண்டுவரும் முயற்சியாக இருக்கும். ஏன் பிரபஞ்சம் இருக்கிறது? (ஏன் எதுவுமே இல்லாமல் சூனியமாக இல்லை?) நாம் ஏன் இருக்கிறோம்?வேற்று கிரக உயிர்கள் இருக்கின்றனவா?பிரபஞ்சம் உண்மையா மாயையா? மாயை என்றால் எது உண்மை? இவற்றையெல்லாம் (விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும்) அலசுவோம்.

அணு அண்டம் அறிவியல் முதல் பாகம் முற்றிற்று.

சமுத்ரா

Thursday, October 6, 2011

அணு அண்டம் அறிவியல் -49

அணு அண்டம் அறிவியல் -49 உங்களை வரவேற்கிறது.

Equivalence principle


பெர்ன்-இல் நான் என் பேடன்ட் ஆபீசில் அமர்ந்திருக்கும் போது திடீரென்று எனக்கு இந்த எண்ணம் பளிச்சிட்டது.ஒருவர் ஈர்ப்பு விசையின் ஆதிக்கத்தில் மேலிருந்து கீழே விழும் போது அவர் தன் எடையை உணர்வதில்லை! இந்த எளிய கருத்தாய்வு எனக்குள் ஒரு மிகப்பெரிய ஈர்ப்பு கொள்கைக்கான விதையை இட்டது -ஐன்ஸ்டீன்

ஒரு கேள்வி: உயரத்தில் மிதக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷன் ஒன்றின் மீதான புவியின் ஈர்ப்பு பூமியில் இருக்கும் ஒருவரின் மீதான புவியின் ஈர்ப்பை விட பதினைந்து சதவிகிதம் மட்டுமே குறைந்து இருக்கிறது (F = GMm /R2 என்ற நியூட்டன் விதிப்படி) . அப்படி இருந்தாலும் அதில் இருக்கும் விஞ்ஞானிகள் தங்கள் எடையை உணர்வதில்லை. ஏன்?
Free fall and relativity


() ஈர்ப்புப்புலம் ஒன்றின் ஆதிக்கத்தில் இல்லாமல் இருக்கும் ஒரு விண்கலத்தில் A என்ற ஒருவர் இருக்கிறார். அவர் தன் மீது எந்த ஒரு விசையையும் உணர மாட்டார். விண்கலத்துக்கு வெளியே இருக்கும் B என்பவரின் மீதும் எந்த விசையும் செயல்படாமல் இருவரும் மிதந்து கொண்டு இருப்பார்கள். இப்போது விண்கலம் முடுக்கப்படுகிறது. A என்பவர் தன்
கால்களுக்கு எதிராக ஒரு மேல்நோக்கிய விசையை உணர்வார். (அது அவருக்கு விண்கலத்தின் ஈர்ப்பு போல தென்படலாம்) இப்போது A என்பவருக்கு B என்பவர் எடை இல்லாமல் மிதந்து (அல்லது விழுந்து) கொண்டு இருப்பது போலத் தோன்றும் .

மிக அதிக உயரத்தில் இருந்து குதிக்கும் சில டைவிங் வீரர்கள், மேலிருந்து விழும் போது அவர்களின் எடையை உணர முடிவதில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.(பாராசூட்டை விரிப்பதற்கு முன்பு) (இதனாலேயே மிக அதிக உயரத்தில் இருந்து தற்கொலை செய்து கொள்வது சிலருக்குப் பிடிக்கிறது,எடை அற்ற தன்மையை சில வினாடிகளாவது உணர முடியும் என்பதால் )எடை என்பது பூமியின் ஈர்ப்பினால் விளைவது என்றால் ஒருவர் கீழே விழும்போது எந்த எடை என்ன ஆகிறது? இந்த மாதிரி எடை இல்லாமல் விழுவதை (?!) இயற்பியல் FREE FALL என்கிறது. அதாவது முழுவதும் தன்னை பூமி மாதாவுக்கு சரணாகதி என்று எண்ணிக் கொண்டு மேலிருந்து 'தொப்' என்று விழுவது.கீதையில் கிருஷ்ணன் சொல்கிறானே

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ -எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு என் சரணங்களில் விழு!

ஐன்ஸ்டீனின் முடுக்க ஈர்ப்பு சமன்மை ( THEORY OF EQUIVALENCE) படி படத்தில்() மற்றும் () ஆகிய இரண்டும் சமம் ஆகும்.

() இப்போது பூமியில் இருக்கும் ஒருவர் (A ) சர்வதேச விண்வெளி நிலையத்தில் (Space station ) உள்ள ஒருவரைப் (B ) பார்த்தால் அவர் கேஸ் () வில் உள்ளது போலவே உணர்வார்.அதாவது தான் தொடர்ந்து மேலே முடுக்கப்படுவது போலவும் B என்பவர் தொடர்ந்து கீழே விழுந்து கொண்டிருப்பது போலவும்!

முடுக்க ஈர்ப்பு சமன்மை படி ஒரு மரத்தில் இருந்து அறுபடும் எடை இல்லாத ஆப்பிள் ஒன்றை பூமி மேல் நோக்கி வந்து பிடித்துக் கொள்கிறது என்று (கூட) சொல்லலாம். அதாவது மலையின் உச்சியில் இருந்து குதிக்கும் ஒருவர் அங்கேயே எடை இல்லாமல் மிதக்கிறார். பூமியின் தளம் மேல் நோக்கி விரைந்து வந்து அவரை முட்டுவதால் அவருக்கு அடிபடுகிறது! சரி இங்கே உங்களுக்கு தர்க்க ரீதியாக ஒரு கேள்வி எழலாம். படத்தில் A என்பவருக்கு நேர் எதிராக பூமியின் எதிர் திசையில் இருக்கும் C என்பவருக்கு என்ன நிகழும்? C கவனிக்கும் ஆப்பிள் அங்கேயே நின்று கொண்டிருக்க, பூமி மேலே (கீழே!)சென்று அதைப் பிடித்துக் கொள்ளும். சரி. அதே போல D என்பவருக்கும்! இப்படி பூமி தொடர்ந்து எல்லா திசைகளிலும் முடுக்கப்பட்டுக் கொண்டிருந்தால் அது விரிவடைந்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா? பூமியின் ஆரம் மாறாமல் உள்ளதே?

வளைந்த வெளி-2D


இதற்கு நாம் கடினமான ஒரு முப்பரிமாண (அல்லது நாற்பரிமாண) வளைந்த வெளியை கற்பனை செய்ய வேண்டும்.(அந்த வெளியில் பூமி எல்லா திசைகளிலும் முடுக்கபப்டும்) மேலே உள்ள படத்தில் காட்டி இருப்பது இருபரிமாண வளைந்த வெளி. ஆனால் நம் பூமி சூரியனால் நான்கு பரிமாணங்களிலும் வளைக்கப்பட்ட ஒரு வெளியில் பயணம் செய்கிறது.

இன்னும் உங்களைக் குழப்ப வேண்டும் என்றால் பூமியில் நாம் எல்லாரும்(பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமும்) FREE FALL இல் தான் உள்ளோம். (பூமியின் மையத்தை நோக்கி) நியூட்டன் இரண்டு பொருட்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை அவற்றுக்கு இடையே உள்ள தூரத்திற்கு (இருமடிக்கு) எதிர் விகிதத்தில் இருக்கும் என்று கண்டுபிடித்தார்.அதாவது தூரம் குறையக் குறைய ஈர்ப்பு அதிகரிக்கும்.இப்போது இரண்டு பொருட்களை பக்கத்தில் கொண்டு வந்து ஒன்றை ஒன்று ஒட்டி வைத்து விட்டால் (தூரம் ஜீரோ) ,அவற்றுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை முடிவிலியாக (1 / 0 ) இருக்குமா? (இரண்டையும் பிரிக்கவே முடியாது) இல்லை ! தூரம் என்பது ஒரு பொருளின் மையத்துக்கும் இன்னொரு பொருளின் மையத்துக்கும் இடையே கணக்கிடப் படுகிறது.இரண்டு பொருட்களை ஒட்டி வைத்தாலும் அவற்றின் மையங்களுக்கு இடையே உள்ள தொலைவு பூஜ்ஜியமாக இருப்பது இல்லை.

[இரண்டு பொருட்களுக்கு ஒரே மையம் இருக்கும் என்ற பட்சத்தில் அவைகளுக்கு இடையே ஈர்ப்பு விசை முடிவிலியாக இருக்கும். ஆனால் இரண்டு பொருட்களுக்கு ஒரே மையம் என்றால் இரண்டு பொருட்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.இயற்பியலில் இரண்டு பொருட்கள் ஒரே காலத்தில் இருக்க அனுமதி உண்டு. ஒரே இடத்தில் இருக்க முடியாது. இன்னும் சரியாக சொல்வதென்றால் இரண்டு பொருட்கள் ஒரே காலத்தில் ஒரே இடத்தில் இருக்க முடியாது. ஒரு பொருள் ஒரே காலத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியாது! ]

நியூட்டன் இரண்டு பொருட்கள் ஒன்றை ஒன்று மற்றதன் மையத்தை நோக்கி இழுக்கப்படுகின்றன என்றார். ஆனால் ஐன்ஸ்டீன் இதையே இரண்டு பொருட்கள் ஒன்றை ஒன்று மற்றதன் மையத்தை நோக்கி சுயமாக விழுகின்றன என்றார்.(பொருளை சுற்றி உள்ள காலவெளி வளைவதால்) நாமெல்லாம் தொடர்ந்து பூமியின் மையத்தை நோக்கி விழுவதை ஈர்ப்பு என்கிறோம். (பூமியின் மேற்பரப்பு தடுப்பதால் நாம் பூமியின் மையத்தை அடைய முடிவதில்லை) ஒரு கல்லை நேராக மேலே எறிந்தால் அது நேராக அதே பாதையில் கீழே வருகிறது. அது ஏன் கொஞ்சம் தள்ளிப் போய் விழுவதில்லை? ஏன் என்றால் கல் பூமியின் மையத்தை நோக்கிய மிகக் குறைந்த தூரத்தையே தேர்ந்தெடுக்கிறது.
தன்னைத்தானே முழுங்கும் பாம்பு /பிரபஞ்சம்



பூமியில் மிக ஆழத்துக்கு ஒரு குழியைத் தோண்டுவதாகக் கொள்வோம்.(பூமியின் மறுபக்கம் வரை) இப்போது அந்தக் குழியில் ஒரு கல்லைப் போட்டால் அதற்கு என்ன ஆகும்? அது குழியின் அடுத்த முனை வழியே வெளிவராது. பூமியின் மையத்தை சார்ந்தே ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கும். இந்த மையத்தை நோக்கிய ஈர்ப்பு இயற்பியலில் மட்டும் அல்ல; ஆன்மீகத்திலும் இருக்கிறது.புத்தரின் வழி மையத்தின் வழி என்றுஅழைக்கப்படுகிறது.ஏதோ ஒரு மையம் நம்மை ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. சமயங்கள் மையத்தை அடைவது எப்படி என்று போதிக்கின்றன.பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற உண்மையை சில விஞ்ஞானிகள் 'உண்மையின் ஒரு பகுதி' தான் என்கிறார்கள். ஒரு காலத்தில் பிரபஞ்சம் விரிவடைவதை மெல்ல மெல்ல நிறுத்தி U -டர்ன் எடுத்து தன் மையத்தை நோக்கி வந்தே ஆக வேண்டும் என்கிறார்கள். தனக்குள் தானே விழுவது!!!
பாம்பு தன் வாலைப் பிடித்து தானே தன்னை முழுங்குவது போல! முழுவதும் சுருங்கி தனக்குள் தானே அடங்கி விடும் என்கிறார்கள். ஆனால் தர்க்க ரீதியாக பாம்பு தன் வாலைக்கடித்தால் அந்த வால் அதன் உடம்புக்குள் தானே போய் ஆக வேண்டும்? !!!!

சரி ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு கொள்கையை சுருக்கமாக சொல்வது என்றால் :கனமான பொருட்கள் தன்னை சுற்றி உள்ள காலவெளியை வளைத்து பள்ளங்களை ஏற்படுத்துகின்றன. லேசான பொருட்கள் தங்களுடைய நிலைமம் (INERTIA ) காரணமாக எப்போதும் நேர்கோட்டில் பயணிக்கும் என்பது தெரியும். (ஈர்ப்பு இல்லாத போது நேர்கோடு என்பது இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மிகக்குறைந்த தூரம்) எனவே வளைந்த வெளியில் பொருட்கள் பயணிப்பதற்கு மிகக்குறைந்த தூரமான (GEODESIC ) வளைந்த பாதையைத் தேர்ந்தெடுத்து தங்கள் நிலைமம் காரணமாக சென்று கொண்டே இருக்கின்றன.
அவைகளின் பாதை தொடர்ந்து வளைக்கப்படுவதால் அவை அந்த பெரிய நிறையுள்ள பொருளை ஒரு முப்பரிமாண வெளியில் சுற்றி வருவது போலத்தோன்றும். அதாவது நிலவு அல்லது உயரத்தில் இருக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷன் இவை பூமியை நோக்கி தொடர்ந்து விழுந்துகொண்டே இருக்கின்றன. பூமியை நோக்கி விழும் பொருளுக்கு எடை இல்லை என்பதால் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருப்பவர்களுக்கு எடை இருப்பதில்லை.(கேபிள் அறுந்த லிப்டில் இருப்பவர்களைப் போல.லிப்ட் சீக்கிரமே தரையை அடைகிறது. ஆனால் ஸ்பேஸ் ஸ்டேஷன் தொடர்ந்து வட்டப்பாதையில் சதா விழுந்து கொண்டே இருக்கிறது.) நிலவும் பூமியை நோக்கி தொடர்ந்து விழுந்து கொண்டே இருக்கிறது (continuous free fall ) எனவே நிலவில் இருப்பவர்களுக்கும் எடை இருக்காது.ஆனால் நிலவின் சொந்த நிறை காரணமாக அதற்கு சொந்த ஈர்ப்பும் இருக்கிறது. எனவே நிலவில் நாம் எடையை உணர முடிகிறது.பொருட்கள் தங்கள் GEODESIC பாதையில் இருந்து தவறும் போது மட்டுமே ஈர்ப்பு உணரப்படுகிறது.(பூமி சூரியனைப் பொறுத்து GEODESIC இல் உள்ளது. எனவே நாம் சூரியனின் ஈர்ப்பை உணர முடிவதில்லை) நாம் ஏன் பூமியின் ஈர்ப்பை உணர்கிறோம் என்றால் பூமியின் மையத்தை நோக்கிய நம் GEODESIC பயணத்தில் இருந்து நாம் பூமியின் பரப்பால் தடுக்கப்படுகிறோம்.

சரி. படம் இரண்டை () மறுபடியும் பாருங்கள் .FREE FALL இல் இருக்கும் B என்பவர் தொடர்ந்து முடுக்கப்படும் A என்பவரைக் கவனிப்பதாகக் கொள்வோம். FREE FALL என்றால் எந்த விசையும் இல்லாமல் எந்த முடுக்கமும் இல்லாமல் இருக்கும் ஒரு நிலை. எனவே அவர் ஒரு INERTIAL FRAME இல் இருப்பதாக (நிலையான FRAME ) நாம் கருத முடியும். எனவே இந்த கேசில் நாம் சிறப்பு சார்பியல் கொள்கையை (Special relativity ) பயன்படுத்தலாம். ஒருவர் நிலையாக இருக்க இன்னொருவர் சீரான வேகத்தில் நகர்ந்து கொண்டு இருப்பது சிறப்பு சார்பியல் .அனால் வெயிட். இங்கே இன்னொருவர் சீரான வேகத்தில் நகருவதில்லை.தொடர்ந்து முடுக்கப்படுகிறார் . ஆனால் முடுக்கம் என்பதை ( INCREMENT OF SPEED IN STEPS
)என்று சொல்லலாம்.அதாவது நொடிக்கு நொடி வேகம் மாறுகிறது. எனவே ஒரு நொடி காலத்தை மட்டும் கணக்கில் கொண்டால் முடுக்கம் என்பதை சீரான வேகம் என்று ஒரு பேச்சுக்கு தோராயமாக சொல்ல முடியும். சிறப்பு சார்பியலின் படி நகரும் ஒருவரின் காலம் நிலையாக உள்ள ஒருவரின் காலத்தை விட மெதுவாக நகரும். எனவே a என்பவரின் காலம் B என்பவரின் காலத்தை விட மெதுவாக நகரும்.இப்போது படத்தில் () வுக்கு வரவும்.ஐன்ஸ்டீனின் கொள்கைப்படி () () இரண்டும் ஒன்று தான். எனவே பூமியில் இருக்கும் a என்பவருக்கு தொடர்ந்து FREE-FALL அல்லது inertial frame (விண்வெளி நிலையம்) இல் இருக்கும் B என்பவரை விட காலம் மெதுவாக நகர வேண்டும் .எனவே ஈர்ப்பு காலத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்று பொது சார்பியல் கணித்தது.ஆனால் இதை எவ்வாறு ஆய்வுகள் மூலம் நிரூபிப்பது?

சரி அடுத்த அத்தியாயத்தில் பொது சார்பியலின் கணிப்புகளை எப்படி நிரூபித்தார்கள் என்று பார்க்கலாம். 1919 கிரகணம்!

சமுத்ரா

Tuesday, October 4, 2011

kaleidoscope -40


kaleidoscope -40 welcomes you.

1
=
The reason I decided to English K-40 is simple and just simple. Just for a change! If you could observe someone closely, forget someone, If you can observe yourself closely, you will find that you are moving in a circle. May be, just like our earth, the radius of that circle (whatever it is) is so large that we think we are progressing in straight lines! Sometimes I feel that I have not done anything today that I can say is not a repetition of what I had done yesterday.So,at least writing in English, I feel, would make me feel a little difference from being monotonous. Do not worry, kaleidoscope will continue to glow in Tamil from K-41 onwards

2
=

Which are the moments when you felt that the human life is a hell? For me, it is not when I passed through painful nights alone ; not when I did not get through the job I wanted;not when ..(OK I can't tell this!) but when I have to travel in the city buses while the next or next to next day happens to be a festival day.(Better I stay in Bangalore for the so-called Diwali). People boarding buses with heaviest luggage possible (why don't they keep their luggage simple??) labors entering with all their fancy tools, unfriendly conductors,Oxygen demanding ambiance,sweat, last but not the least, TRAFFIC! physicists are wondering what can be said to be the lowest speed possible, I hereby tell them, please go and ask the city bus drivers!

In order to learn gymnastics, just travel in a crowded city bus! you will learn all the tricks! how to stand on a single finger, how to bend your body eight fold (Astavakra!) How to make room for three people in an 1x1 square foot area, how to stand on your bag!Electrons are lucky, According to uncertainty principle they cannot be squeezed beyond a certain limit (and they say that's why
we do not find electrons inside the nucleus) but humans are unlucky, in this context, they can be squeezed beyond limit, into the tiniest volumes possible.

And this crazy conductors, for them, there is always a plenty of space in the rear side, howsoever full the bus is!Still there are ladies who demand a volume of space around them even when the bus is dangerously overloaded. With all these non-sense around, I feel why on the earth I should celebrate a festival? but, still there are reasons why people (including me) travel home for festivals. May be , for them, a little smile on their nephew's face when they offer him a box of crackers would outweigh all the sufferings they underwent traveling last night.

3
==

There was fun fiesta in the office last week. For some people, the definition of 'Fun' is Antaksari , musical chair, cricket,Facial painting. etc., OK leave that point, I'm wondering how on the earth people remember so many cine songs! (esp. Hindi) So far, one Hindi song,I have successfully managed to remember first two lines of! that is 'Ek do theen chaar pAnch'

J
ust play first few seconds of the initial music and there they are! they come up with the (entire) song! Just tell the Actor's name ; they come up with hundred's of his songs!

being IT professionals, I'm wondering how do they manage to fingertip all the songs? (mobile audio libraries!) For me all the movie songs, sound more or less the same (Everything tastes like Chicken!) and that's why I have not been able to remember many! memory needs its contents to be versatile! And why do they think the classical Singers are a stand-out? In fact without classical music no light music would have been evolved. In India , people clap when someone sings western music with a burst voice and laugh when someone sings ah-ah ! Strange! I have so far not heard of something called 'Carnatic Antaksari' :-(

4
==

Have you ever been a guest? the answer would be yes! We all have been sometimes guests; sometimes hosts! For me, to be a host is easier than to be a guest! to be a guest is so embarrassing; so uneasy.

There are people who belong to this category: 'when you come to my house, what will you bring? when I come to your house what will you give?' And there, I think, are three types of hosts;

First: They serve you without asking you. Just enter their house. Coffee, Fanta, snacks, biscuits, Bajjis will all be sequenced toward you as a pleasant surprise!

Second: They serve you after asking you. 'Sir will you have some drinks? Do you like tea or Coffee, Do you like the sugar to be less or normal'?

Third: They serve after you ask them ."It's too hot outside, May I have a glass of water?'

and ultimately the fourth. 'They don't serve even after you ask them' .Fortunately there are not many in the fourth category.

Gone are the days when we went to relative's house with kith and kin, stayed there for days together. Now people are booking appointments to visit their relatives. (hospitality!!) but Guests were treated with immense respect in the earlier days esp. in India . They were called 'Atiti' meaning they can walk into the house anytime, any day, any season without any reason! There were hosts that sacrificed their own little food in order to serve their guests! That's nothing. There were crazy guests who demanded the host's child be cooked and served!

A Thirukkural reads like this:

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா
னல்விருந்து வானத் தவர்க்கு.

He who pleases the guests outgoing and look forward to having more guests
shall become a good guest to the celestials.

5
==

A few week ago, a historical event happened. Yes I joined Gym! I'm not greedy for six pack,but to get rid of at least the Pothy's bag! :) but, as you know, great things do not last long! After a few days, the life-negative thoughts of indian sages started bothering me. Kind of: Oh fool, would you go on beautifying the body that shall one day be buried? so don't be worried! don't go to Gym! :D you guessed it right, I quit the gym!

பார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா? ஞானத் தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா?

Elegant tree if you behold, green and tall
just a long dead trunk after the fall
Collect it, you cannot use it for fuel
Burn it ,there remains no charcoal

Yes this is a riddle! and the answer is our Human body!

Ok this is thought of meta-physics. To state it simply, why I quit the gym, is that I cannot get up so early in the morning! (so early,to me, is 6:30 AM!)


6
==

Why why why?

Why is that when we book a ticket, we have to pay the money immediately and when we cancel the ticket, it comes back to us after seven days?
why is that when we book a ticket, you have to pay the entire amount and when you cancel the ticket, a portion of the fare is deducted?

7
==

A simple way to look busy in the office: hold a piece of paper in your hand along with a pen (better open pen's cap) and roam here and there.(EE (exceeds expectation) confirmed!!!!)

8
==
Osho joke:

A woman received a report from the school.

'Your little boy is very intelligent,' said the teacher's note accompanying the report card, 'but he spends entirely too much time playing with the girls. However, I am working on a plan to break him of the habit.'

The mother signed the report and sent it back with this note: 'Let me know if it works, and I will try it out on his father.'

Samdura

Wednesday, September 28, 2011

நவராத்திரி பாடல் (குழந்தைகளுக்கு)

மழை பொய்த்து விட்ட
மாநிலத்திலும் -
குழந்தைகள் பாடுகிறார்கள்
'RAIN RAIN GO AWAY '

இது தான் எத்தனை உண்மை? ஆங்கில ரைம்ஸ்களில் பல, அந்த நாட்டு கலாச்சாரத்துக்கும் சூழ்நிலைக்கும் பருவநிலைக்கும் பொருந்துபவை, அவற்றை இங்கே நாம் நம் குழந்தைகளுக்கு பெருமையாக சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சரி ஆங்கில அறிவு வளர அர்த்தம் எல்லாம் பார்க்க வேண்டாம் என்று வைத்துக் கொண்டாலும் நாம் குழந்தைகளுக்கு எளிய தமிழ்ப் பாடல்களையும் கற்றுத் தரலாமே? பின்னர் பேருந்துகளில் தமிழில் எழுதி இருக்கும் வழித் தடங்களைப் படிக்க முடியாத நிலைமையை நாம் நம் குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டிருக்காது. சரி குழந்தைகளுக்கு எளிமையான ஒரு நவராத்திரி பாடல். பிடித்திருந்தால் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம்:


அழகழகாய் பொம்மை பாரு
அணிவகுத்து நிற்குது
கலகலப்பாய் கண் சிமிட்டி
கவலை மறக்க வைக்குது 1

குண்டு வயிறு செட்டியாரு
கடுகு சீரகம் விற்குது
அண்ட வந்த ஈயும் விரட்ட
ஆளில்லாமல் சுத்துது 2

பூங்காவிலே பொம்மையெல்லாம்
புதிய பாட்டு பாடுது
தூங்காமலே இரவும் பகலும்
தூளியிலே ஆடுது 3

மரப்பாச்சி பொம்மை பாரு
மணி மணியாய் நிற்குது
கருப்பாச்சி பொண்ணு அங்கே
கணவனை முறைக்குது 4

ராமர் பொம்மை வில்லை ஏந்தி
ரம்மியமாய் நிற்குது
சாமி முன்னே அனுமாரும்
சாந்தமாய்கை குவிக்குது 5

சின்னக் கண்ணன் கையினிலே
வண்ணப் பானை இருக்குது
உண்ண உண்ண வாய்வழியே
வெண்ணையும் தான் ஒழுகுது 6

தஞ்சாவூரு பொம்மையும்தான்
தலையை தலையை ஆட்டுது
கொஞ்சம் அங்கே திரும்பிப் பாரு
கொரங்கு பொம்மை அசத்துது 7

பாவை விளக்கு பொம்மை ஒண்ணு
பத்திரமாய் நிற்குது
சாவி கொடுத்த ரயிலு ஒண்ணு
சக்கரம் போல் சுத்துது 8

முருகன் பொம்மை மயிலு மேலே
முத்து முத்தாய் ஒளிருது
அருகில் வந்து பாரு இங்கே
ஆனை ரெண்டு பிளிருது 9

மூணாவது படியில் பாரு
முதலை ஒண்ணு சிரிக்குது
ஆனா கிட்டப் போயிடாதே
அடிவயிறு கலக்குது 10

கல்லியாண ஊர்வலத்தில்
குதிரை ஒண்ணு நடக்குது
ஒல்லியான மணப்பொண்ணு
ஒயிலாத்தான் சிரிக்குது 11

கொக்கு பாரு ஆமை பாரு
கோழி பாரு கத்துது
பக்கத்திலே வந்து பாரு
பூமி உருண்டை சுத்துது 12


பாவக்காய் கத்திரிக்காய்
பிளாஸ்டிக்கிலே சிரிக்குது
கோவக்கார பூனை ஒன்னு
கண் முழித்துப் பார்க்குது 13

பார்த்தாயா நாயி பொம்மை
படுத்து கனவு காணுது
வாத்து பொம்மை தண்ணி இன்றி
வருத்தமாக தோணுது 14


புள்ளையாரு பொம்மை ஒண்ணு
புதுவிதமாய் இருக்குது
குள்ளமான பொம்மை ஒண்ணு
குடைபிடித்து நிற்குது 15


காவி உடை சாமியாரு
கண்ணை மூடி இருக்குது
தாவி வரும் மானு பாரு
தலை நிமிர்த்திப் பார்க்குது 16

ஒன்பதுநாள் கொலுவும் இங்கே
ஒயிலாத்தான் இருக்குது
தின்பதற்கு தினம் தினமும்
தீனி கூட கிடைக்குது 17

பெரிய துன்பம் வந்த போதும்
பொம்மை போல இருக்கணும்
உறுதியாக இருந்து விட்டால்
உள்ளம் இன்னும் பலப்படும் 18


சமுத்ரா




Monday, September 26, 2011

கலைடாஸ்கோப் -39

லைடாஸ்கோப் -39 உங்களை வரவேற்கிறது.

1
==

சில விஷயங்கள் அல்லது பொருட்கள் உண்மையில் எதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டனவோ அதை விட்டு வேறு சில உபயோகங்களுக்காகவும் பயன்படும். சேஃப்டி பின்னை அல்லது பென்சிலை சில சமயம் காது குடைய உபயோகிக்கிறோம். பத்திரிக்கைகள் சில சமயம் விசிறிகள் ஆகின்றன. விசிறிகள் (டேபிள் பேன்) சில சமயங்களில் 'ஹேர் ட்ரையர்' ஆகி விடுகிறது.கரண்டிகள் சில சமயம் கணவனை அடிக்கப் பயன்படுகின்றன. ஒரு வீட்டில் ஏலக்காய் பொடி செய்ய டி.வி ரிமோட் உபயோகித்ததைப் பார்த்திருக்கிறேன். சீப்பு சில சமயம் முதுகு சொரியப் பயன்படுகிறது. நியூஸ் பேப்பர் பார்சலுக்கு பயன்படுகிறது.தேளை அடிக்க செருப்பு உபயோகப்படுகிறது.இப்படி நிறைய... இந்த லிஸ்டில் செல்போனும் அடக்கம் என்று தோன்றுகிறது. இப்போது செல்போன் பேசுவதற்கு தான் குறைந்த அளவில் பயன்படுகிறது. சாம்சங் காலக்சி, பாப், வேவ், சாம்ப் என்று என்னென்னவோ சொல்கிறார்கள். செல்போன் கிட்டத்தட்ட ஒரு கம்ப்யூட்டர் ஆகி விட்டது.இந்த மாதிரி மொபைல் போன் இப்போதெல்லாம் வருகிறதா என்று தெரியவில்லை.(வந்தாலும் யாரும் வாங்க மாட்டார்கள்)



செல்போன்கள் என்ன என்னவோ செய்கின்றன. படம் எடுக்கின்றன. வீடியோ எடுக்கின்றன.டெம்பரேசர் காட்டுகின்றன.பக்கத்தில் கொண்டு வந்தால் ஃபைல்களை TRANSFER செய்கின்றன. பெயர் சொன்னால் அந்த பெயர் உள்ளவர்களுக்கு கால் செய்கின்றன. மனதில் நினைத்தாலே கால் செய்யும் செல்போன்கள் வரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று தோன்றுகிறது.

லேன்ட் லைன் என்று அழைக்கப்படும் வீட்டு போன்கள் செல்போன்களுடன் ஒப்பிடும் போது ஒரு கற்கால மனிதனைப் போலத் தோன்றுகின்றன.


சைடு பிட்: செல் போன் ரிங்-டோன்களைப் பார்க்கும் போது மனிதர்களின் கற்பனை வளம் வியக்க வைக்கிறது. ஒரு மெசேஜ் வந்தால் நாய் குரைப்பதுபோல, 'டேய் வெத்து வேட்டு உனக்கு ஒரு மெசேஜ்' என்று, அப்புறம் குழந்தை அழுவது போல , வடிவேலுவின்அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...இதையெல்லாம் வைத்திருக்கிறார்கள்....FUNNY !

2
==

நம்முடைய
வாழ்க்கை
நேர்க்கோடாக,

LINEAR ஆக இருந்தால் நம்மால் ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியாது என்று சொல்கிறார்கள். லீனியர் என்றால் நம்முடைய இன்றுகள் நேற்றுகளின் நகலாக,நம்முடைய நாளைகள் இன்றுகளின் நகலாக இருப்பது. செய்ததையே செய்து கொண்டு இருப்பது. காலையில் எழுந்து பல்துலக்கி காபி குடித்து பாத்ரூம் சென்று பஸ் பிடித்து ஆபீஸ் வந்து பொய்யாக சிரித்து பொய்யாக குட் மார்னிங் சொல்லி,பேலன்ஸ் சீட் தயார் செய்து , கஸ்டமரை பொய்யாகப் புகழ்ந்து, ஏதோ சாப்பிட்டு, சாயங்காலம் கூட்ட நெரிசலில் வீடு வந்து சேர்ந்து, டி.வி ரிமோட்டை கையில் எடுப்பது.

இன்றைய தொழிலதிபர்கள் , சி... க்கள் எல்லாரும் இந்த லீனியர் மாயையை உடைத்துக் கொண்டு வந்தவர்கள் தான். கம்பெனி தரும் மாத சம்பளத்துக்கு மாடு மாதிரி உழைத்துக் கொண்டிருக்காமல் நல்ல சம்பளம் வரும் வேலையை உதறி விட்டு நிச்சயமில்லாத ஒரு பிசினஸை கையில் எடுத்தவர்கள் இருக்கிறார்கள். வனஸ்பதியையும் பேபி சோப்பையும் (வெற்றிகரமாக) மார்கெட் செய்து கொண்டிருந்த விப்ரோவை சாப்ட்வேரை நோக்கி நகர்த்திய போது அஜிம் பிரேம்ஜியை 'நீ முன்னேற மாட்டாய்' என்று திட்டியவர்கள் இருந்தார்கள்.

சாப்ட்வேர் என்றதும் ஞாபகம் வருகிறது. டிகிரி முடித்து விட்டு வரும் பட்டதாரிகளுக்கு இன்றைய சாப்ட்வேர் துறை பரீட்சித்து மாளிகை போல நுழைவதற்கு கஷ்டமாக இருக்கிறது. புதிதாக வருபவர்களிடத்தில் OUT OF BOX THINKING என்ற அணுகுமுறையை எதிர்பார்க்கிறார்கள். ஒரு பிரச்சினையை நேர்கோட்டில் அணுகாமல் புதிய பரிமாணங்களில் அதற்கான தீர்வை யோசிப்பது.
இன்டர்வியூக்களில் CASE STUDY எனப்படும் நடைமுறை பிரச்சானைகளையும் கொடுத்து அதற்குரிய தீர்வுகளை அலச சொல்கிறார்கள்.

கணித மேதைகள் மூன்று பேர+ஒரு சாதாரண ஆள் இவர்கள் நாலு பேரையும் ஒரு சிறையில் அடைத்து ஒரு சிக்கலான புதிரைக் கொடுத்து அதை விடுவிக்க சொன்னார்களாம். அந்த புதிரின் விடையின் படி அந்த சிறைக்கதவின் பூட்டை செட் செய்தால் அது திறந்து கொள்ளுமாம். கணித மேதைகள் மூன்று பேரும் மணிக்கணக்காக பேப்பர்களை வைத்துக் கொண்டு புதிரை விடுவிக்க மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்த போது அந்த ஆள் கூலாக உட்கார்ந்திருந்தானாம். பின்னர் மெதுவாக நடந்து சென்று கதவைத் தள்ள அது திறந்து கொண்டதாம். அதாவது கதவு பூட்டப்படவே இல்லை.இதுதான் OUT OF BOX சிந்தனை. இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் இன்னொரு விஷயம் என்ன என்றால் Before working on the solutions, make sure the problem really exists!

இன்ஃபோசிஸ் போன்ற சில கம்பெனிகள் சகுந்தலாதேவி டைப் புதிர்களைக் கொடுத்து மாணவர்களை விடுவிக்க சொல்கின்றன. இப்போது லைடாஸ்கோப் வாசகர்களுக்காக இரண்டு புதிர்கள்:

1 . ஒரு மாதத்தில் ஒரு முறை வரும்; பன்னிரண்டு ஆண்டுகளுக்கு இருமுறை வரும்; ஒரு யுகத்தில் ஒருமுறை கூட வராது; அது என்ன?

2 . நான் ஒரு விலங்கு. என் தலையை வெட்டினால் நான் ஒளிருவேன். என் இடையை வெட்டினால் நான் ஒரு கோள். நான் யார்?

(விடைகளை இமெயிலில் சொன்னால் நல்லது)

3
==

உலகிலேயே மனிதனால் அமைக்கப்பட்ட மிக உயரமான சிலை எது? சுதந்திரதேவி சிலையா? தப்பு. SPRING TEMPLE BUDDHA எனப்படும் வசந்த கோயில் புத்தர் சிலை. சைனாவில் இருக்கும் இதன் உயரம் 420 அடி.நம் கன்யாகுமரி திருவள்ளுவரை விட மூன்று மடங்கு உயரம். புத்தரின் கால் கட்டை விரல் மட்டும் இரண்டு ஆள் உயரம் இருக்கிறது. படத்தைப் பாருங்கள்.




ஆனால் மனித மனதிற்கு இந்த உயரங்கள் எல்லாம் ஜுஜுபி. நினைத்தால்அபாரமான உயரங்களில் பயணிக்க வல்லது மனம்.அதே சமயம் அதல பாதாளத்துக்கு இறங்கவும் கூடியது.கழிவில் உட்காரும் , அதே சமயம் இறைவன் நைவேத்தியத்திலும் உட்காரும் போன்றது மனித மனம். காலையில் மிக உயர்ந்த உலக இலக்கியங்களைப் படைத்து விட்டு இரவில் வேசி வீடு தேடிய கவிகள் இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது.இதில் தவறு ஏதும் இல்லை. EXTREMISM என்பது மனித மனத்தின் தவிர்க்க முடியாத ஒரு பண்பு. வயிறு முட்ட சாப்பிடுவது. மறுநாள் வயிற்று வலியில் துடிக்கும் போது சாப்பாட்டைப் பார்த்தாலே வாந்தி எடுப்பது. குடித்து விட்டு கண்கள் இருள HANG OVER இல் இனிமேல் வாழ்வில் அதைத் தொடவே மாட்டேன் என்று சத்தியம் செய்வது.மறுநாள் மீண்டும் அதே BAR க்கு செல்வது. ஓஷோவின் இந்த கதையின் மேல் தியானம் செய்யுங்கள் :

பண்டிதன் ஒருவன் ஞானத்தைத் தேடி மிகவும் அலைந்தான். சத்தியம் எது , உண்மை எது என்ற தேடலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மனைவி மக்களைத் துறந்து தேசம் தேசமாக சுற்றி வந்தான். ஆனாலும் அவனுக்கு ஞானத்தின் ஒரு கீற்று கூட சாத்தியப்படவில்லை. மிகவும் நொந்து போன நிலையில் ஒரு நாள் சாது ஒருவரை அவன் சந்தித்தான். அவர் கண்களில் தோன்றிய ஒளியைக் கண்டு, அவர்பால் ஈர்க்கப்பட்டு காலில் விழுந்து 'சுவாமி, எனக்கு உண்மை எது என்று அறிவுறுத்துங்கள்' என்றான். அவர் சிரித்து விட்டு 'முட்டாளே , உன் குரு உனக்கு பக்கத்து வீட்டிலேயே இருக்கிறார்;போய் அவர் காலில் விழு' என்று சொல்கிறார். பண்டிதனுக்கு ஒரே குழப்பம்; ஏனென்றால் அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு படிக்காத ,ஏழையான, தராசு தயாரிக்கும் தொழிலாளி ஒருவன் தான் வசிக்கிறான் .அவனுக்கு தராசு செய்வதைத் தவிர ஒன்றும் தெரியாது. அதனால் அவன் பெயரே 'துலாதர்' என்று மாறி விட்டிருந்தது. அவனிடம் என்ன உபதேசம் கிடைக்கக் கூடும் என்று பண்டிதன் தயங்கினான்.ஆனாலும்அந்த சாது சொல்லிவிட்டாரே என்பதற்காக தன் ஊருக்கு திரும்பி வந்து அவன் வீட்டுக்கு செல்கிறான். துலாதர் தராசு செய்வதைப் பார்த்து அவன் வியந்து போகிறான். அவன் முகத்தில் ஆயிரம் ஞானிகளின் தரிசனத்தைப் பார்க்கிறான் பண்டிதன். துலாதரின் காலின் விழுந்து தனக்கு உபதேசம் தரும்படி கேட்கிறான். துலாதர் 'எனக்கு இந்த தராசு செய்வதைத்தவிர ஒன்றும் தெரியாது; தராசு செய்து செய்து நானே ஒரு தராசு போல மாறிவிட்டேன்; தராசின் முள்ளை மையத்தில் நிறுத்தி நிறுத்தி என் மனமும் மையத்தில் நின்று விட்டது. என் மனமும் துருவங்களில் அலைபாய்வதை நிறுத்தி விட்டது' என்கிறான். அன்று முதல் பண்டிதன் துலாதரின் சிஷ்யன்ஆகிறான்.

இந்தக் கதையில் இருந்து நமக்கு இரண்டு விஷயங்கள் தெரிய வருகின்றன

ஒன்று: நாம் எதைத் தேடுகிறோமோ அது நமக்குப் பக்கத்து வீட்டிலேயே இருக்கலாம் (யாரது? இது ஃபிகருக்கும் பொருந்துமா என்று கேட்பது?. கொஞ்சம் சீரியஸ் ஆக இருங்கள்)

இரண்டு: துருவங்களுக்கு நகர்வது நமக்கு எளிது. மையத்தில் நிற்பது கஷ்டம்; ஒன்று ஏசுவாக இருக்க வேண்டும். இல்லை ஜூடாஸ்-ஆக இருக்க வேண்டும். இடையில் ஆட்டு மந்தைகளில் ஒரு ஆடாக இருக்க மனம் விரும்புவது இல்லை.ஒன்று தாடி மீசை வளர்ப்பது; இல்லை அடுத்த துருவத்துக்கு சென்று மொட்டை போட்டுக் கொள்வது.

4
==

தாடி மீசை என்றதும் ஒன்று தோன்றுகிறது. ஆண்களுக்கே உரிய அவஸ்தைகளில் ஒன்று இந்த கட்டிங் மற்றும் ஷேவிங். (அடுத்த ஜென்மத்தில் பஞ்சாபில் பிறக்க வேண்டும்!) பெண்களின் மாதாந்திர அவஸ்தை கூட குறிப்பிட்ட வயதுக்கு அப்புறம் நின்று போகிறது. ஆனால்ஆண்களுக்கு இந்த மற்றும் ஷே சுடுகாடு வரை வருகிறது. சுயமாக சேவிங் செய்யக் கற்றுக் கொண்ட மனிதன் சுயமாக கட்டிங் செய்யக் கற்றுக் கொள்ளவில்லை.சின்ன வயதில் அப்பா கட்டிங் செய்து விட பார்பர் ஷாப் கூடப் போவார். ஒரு உயர்ந்த நாற்காலி, அதன் மேல் ஒரு பலகை, ஒரு பெஞ்ச், ஒரு நீண்ட கண்ணாடி, சீப்புகள், இவ்வளவு தான் இருக்கும். ஷேவிங் இரண்டு ரூபாய் கட்டிங் ஐந்து ரூபாய் ஆகும். கட்டிங் செய்து விட்டு வீட்டுக்கு வரும் போது ஏதோ பஞ்சமா பாதகங்களில் ஒன்றை செய்து விட்டது போல பம்மியபடியே பின்பக்க வழியாக வர வேண்டும். துணிகளை நனைத்து வைக்க வேண்டும்.

இப்போது எல்லாம் தலைகீழாக மாறி விட்டன. பெண்கள் அழகு நிலையங்களுக்கு சற்றும் குறையாமல் பார்பர் ஷாப்புகள் மாறி விட்டன. கட்டிங் செய்யப் போனால் கட்டிங் மட்டும் செய்து கொண்டு வர முடிந்தால் அது உங்கள் சாமார்த்தியம். சார், ஃபேஷியல் பண்ணிக்கங்க, ஹெர்பல் ஃபேஷியல், சைட் எபெக்ட் இருக்காது, தலைக்கு ஆயில் மசாஜ் பண்ணிக்கங்க ,ப்ளீச் பண்ணிக்கங்க ஏதாவது சொல்லி என்று பணம் கறந்து விடுவார்கள். (நமக்கும் அழகாகலாம் என்ற ஆசையில் வேண்டாம் என்று சொல்ல மனம் வராது) இப்போதெல்லாம் ஆண்களிடமும் அழகுணர்ச்சி அதிகமாகி வருகிறது. அப்பாயின்மென்ட் வாங்கிக் கொண்டு கட்டிங் செய்து கொள்கிறார்கள்! பத்து ரூபாயில் முடிந்து கொண்டிருந்த பார்பர் ஷாப் விஷயங்கள் இன்று ஆயிரம் ரூபாய் வரை பர்ஸைப் பதம் பார்க்கின்றன. சரி இத்தனை செய்து அழகாக இருக்கிறோம் என்ற திருப்தி ஏற்படுகிறதா? கண்ணாடியில் பார்க்கும் போது முதலில் இருந்த முகமே தேவலாம் என்று தோன்றும் கொடுமையை என்னவென்று சொல்ல?

5
==

கவித! கவித!

தூக்கம் கலைக்கப்பட்ட
கும்பகர்ணன் போல
சலித்துக் கொள்கின்றன பெட்டியைத் திறந்ததும் பொம்மைகள்!
சிவந்த கண்களுடன்
வேண்டா வெறுப்பாய் வெளிவருகின்றன..
அம்மாவுக்கு தெரியாமல்-படியில்
சுட்டிக் குழந்தைகள் தங்களை ஒன்பது நாட்கள்
தொட்டு நகர்த்தி விளையாடும் -என்று தெரிந்ததும்
உற்சாகப் புன்னகையை அணிந்து கொண்டு
ஒயிலாய் சோம்பல் முறிக்கின்றன!

6
==

ஒரு ஓஷோ ஜோக்.

ஒரு ஆள் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான்.

'இன்ஸ்பெக்டர் , நேற்று இரவு எங்க வீட்ல நுழைந்த அந்த திருடனை நான் பார்க்கணும்' என்றான்.

அதெல்லாம் முடியாதுப்பா 'கோர்ட்டுல வேணா பார்த்துக்க' என்றார் இன்ஸ்பெக்டர்.

'இல்லை சார், அவனைப் பார்த்து ஒண்ணே ஒண்ணு கேட்கணும்.அது எப்படி என் பொண்டாட்டியை எழுப்பாமல் உள்ளே நுழைந்தாய் என்று, நானும் இதை நாலு வருஷமா முயற்சி பண்ணிட்டு இருக்கேன், முடியலை ' என்றான்.


முத்ரா