இந்த வலையில் தேடவும்

Tuesday, September 4, 2012

எமிலி டிகின்ஸனின் காதல் கவிதைகள்

நீங்கள் காதல் கவிதை எழுதி இருக்கிறீர்களா? கண்டிப்பாக எழுதி இருப்பீர்கள். மானே தேனே என்றெல்லாம் கமலஹாசன் லெவலுக்கு எழுதி இருக்காவிட்டாலும் I MISS U என்று அர்த்த ராத்திரியில் போர்வையின் கீழிருந்து அனுப்பும் எஸ்.எம்.எஸ். கூட ஒருவகையில் கா.கவிதை தான் ...

சங்க காலத்தில் பெண்கள் எழுதிய காதல் கவிதைகளே செறிந்திருந்தன.தலைவனுக்கு ரொமாண்டிக் ஆக யோசித்து காதல் கவிதைகள் எழுதுவதற்கு நேரம் இருக்கவில்லை.அவனுக்கு போர்கள் இருந்தன. திரைகடல் ஓடி பொருள் சேர்க்கும் அவசியம் இருந்தது. தலைவி வீட்டில் சும்மா தான் இருந்தாள். டி.வி யோ , ஃபேஸ்புக்கோ, நாளைக்கு துளசி புருஷனுக்கு கோ
ர்ட்டில் என்ன தீர்ப்பு வரும் என்று வாழ்வை சுவாரஸ்யமாக்கும் மெகா சீரியல்களோ இல்லை.எனவே அவள் தலைவனை எண்ணி கவிதை எழுத ஆரம்பித்தாள். தான் அம்மா வீட்டில் எப்படி காலத்தை கழித்தேன், (தொடலை ஆயமொடு கடல்உடன் ஆடியும் சிற்றில் இழைத்தும், சிறுசோறு குவைஇயும் என்றெல்லாம் )என்ன விளையாடினேன், தலைவனை எங்கு எப்போது முதன்முதலில் பார்த்தேன், எப்படி இருவருக்கும் காதல் மலர்ந்தது, தலைவனின் நாடு எப்படி இருந்தது,(மானுண்டெஞ்சிய கழலி நீர்) இப்போது தலைவன் இல்லாததால் எப்படி தவிக்கிறேன் என்பதையெல்லாம் விலாவாரியாக கவிதைகளில் சொன்னாள்.

இடைக்காலத்தில் எப்படியோ இந்த காதல் கவிதைகளை பெண்களிடம் இருந்து ஆண்கள் பிடுங்கிக் கொண்டார்கள். போர்கள் மறைந்தன.
அறிவியல் வளர்ந்தது.Work from home எல்லாம் வந்து விட்டது.எனவே ஆண்கள் பொழுது போகாமல் காதல் கவிதை எழுத ஆரம்பித்தார்கள். ஆண்களின் இந்த கவிதை எழுதும் வெறி,இப்போது யொய் திஸ் கொலவெறி என்ற அளவில் வந்து விட்டிருக்கிறது. என்னதான் இருந்தாலும் பெண்களின் காதல் கவிதைகள் போன்று ஆண்களுடையது அவ்வளவு ஆழமாக இருப்பதில்லை. பெண்களின் உணர்வுகள் மென்மையானவை. ஒரு பெண் தன் உணர்வுகளை,தன் காதல் தவிப்புகளை, ஆதங்கங்களை, வெளிப்படையாக சொல்லிவிட முடியாது. சொல்லக் கூடாது என்று இல்லை. அவளது biology அப்படி இருக்கிறது. ஆண் ஒருவன் ஒரு பெண்ணை கலவிக்கு நேரடியாக அழைக்கலாம். ஆனால் பெண் அது தன் கணவனாகவே இருந்தாலும் அதை பூடகமாகத் தான் உணர்த்த வேண்டும். மல்லிகைப்பூ , அவனுக்கு பிடித்த பெர்பியூம், அவனருகில் சென்று நின்று கொண்டு ஒரு அசட்டுப்புன்னகை இப்படி...அப்படி சொன்னால்தான் அழகு. இப்போது சில பெண்கள் புரட்சி, முன்னவீனத்துவம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு முலை, புணர்ச்சி, குறி என்றெல்லாம் எழுதத் தலைப்பட்டுள்ளார்கள். கவிதைகளில் எப்போதாவது ஸ்ட்ரெஸ் செய்ய இவைகளை உபயோகிக்கலாம். (ஆண்டாள் மாதிரி) இவைகள் தான் கவிதை என்று இருந்துவிடக் கூடாது.அப்படிப்பட்ட கவிதைகள் படிக்க அருவருப்பை மட்டுமே தருகின்றன.

இப்போது எமிலி டிகின்சனின் சில காதல் கவிதைகளைப் பார்க்கலாம். என்னால் இயன்ற அளவு மொழிபெயர்த்துள்ளேன். எமிலியின் கவிதைகள் குறிப்பாக காதல் கவிதைகள் புரிந்து கொள்ள கடினமானவை. காதல் கவிதைகளை எல்லாருக்கும் புரியும்படி எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். அது நம்முடைய சொந்த உணர்
ச்சிகளின் வெளிப்பாடு. அதனால் என்ன வெளிப்படுத்துகிறோம் என்று அந்த உணர்வு நமக்கு மட்டும் புரிந்தால் போதுமானது. எமிலியின் கவிதைகளைப் படிக்கும் போது நம்மால் அவளுடைய ஒரிஜினல் உணர்வுகளை கொண்டுவரவே முடியாது. மேலும் அதை மொழி பெயர்க்கும் போது அது இன்னும் நீர்த்துப் போகிறது. I held a jewel in my fingers என்பதை 'விரல்களில் ஏந்தினேன் வைரம் ஒன்றை' என்று ஓரளவு தமிழில் கவிதை form -க்கு பெயர்க்கலாம். ஆனால் அவள் எதை நினைத்து இதை எழுதினாள் என்பதை நம்மால் மீண்டும் கொண்டுவரவே இயலாது.

சரி, பிறகு எதற்கு வேலை மெனக்கெட்டு மொழி பெயர்க்கிறாய், show off ?என்று நீங்கள் கேட்கலாம் அல்லது நினைக்கலாம். I dont know .
'ரெண்டுல தான் ஒன்னைத் தொட வரவா' 'டாடி மம்மி வீட்டில் இல்லை' 'மஞ்சக்காட்டு மைனா' 'வச்சுக்கவா வச்சுக்கவா 'போன்ற இலக்கியத் தரம் மிக்க தமிழ் கவிதைகளை கேட்டுக் கேட்டு ஒன்பதாவது மேகத்தில் இருக்கும் உங்கள் காதுகளை சற்றே பூமிக்கு இறக்கும் முயற்சி அந்தே.

**********

HEART, we will forget him!

மனமே, அவனை மறப்போம்

HEART, we will forget him!
You and I, to-night!
You may forget the warmth he gave,
I will forget the light.

When you have done, pray tell me,
That I my thoughts may dim;
Haste! lest while you’re lagging,
I may remember him!



மனமே, அவனை மறப்போம்
நீயும் நானும் இன்றிரவே!
நீ அவன் வெம்மையை மற
நான் அவன் ஒளியை மறப்பேன்

நீ முடித்ததும் எனக்கு சொல்
எனவே என் எண்ணங்கள் மங்கும்
சீக்கிரம் ! நீ தாமதம் செய்தால்
அதுவரை மனதில் அவன் நினைவுகள் தங்கும்!

**********

“GOING to him! Happy letter!
அவனை அடைகையில் கடிதமே சொல்வாய்

“GOING to him! Happy letter! Tell him—
Tell him the page I didn’t write;

அவனை அடைகையில் கடிதமே சொல்வாய்
இதை நான் எழுதவே இல்லை

“Tell him night finished before we finished,
And the old clock kept neighing ‘day!’
And you got sleepy and begged to be ended—
What could it hinder so, to say?
Tell him just how she sealed you, cautious,
But if he ask where you are hid
Until to-morrow,—happy letter!
Gesture, coquette, and shake your head!”

நாம் முடிக்கும் முன்பே
இரவு முடிந்தது
காலை வந்ததென கடிகாரம் கடிந்தது
தூக்கம் மேலிட சீக்கிரம் முடிப்பாய் -
என
தடையாய் நீதானே
இடையில் மொழிந்தது ?
உன்னை கவனமாய் உரையிட்டேன் என்றுரை
ஒளிந்து கொண்டாய் எங்கே? என்பான்
நாளை வரும்வரை என் நல்ல கடிதமே
நடி, பசப்பு, உன் தலையினை குலுக்கு !

*************

THE MOON is distant from the sea,
நிலவு கடலுக்கு நீண்ட நெடு தூரம்

THE MOON is distant from the sea,
And yet with amber hands
She leads him, docile as a boy,
Along appointed sands.

Oh, Signor, thine the amber hand,
And mine the distant sea,—
Obedient to the least command
Thine eyes impose on me.

நிலவு கடலுக்கு நீண்ட
நெடு தூரம்
ஆயினும் அதன் கரமோ
மின்சாரம்
அவன் அவளை வழிநடத்திடுவான்
அகன்றதொரு மணல்வெளியோரம்

மன்னா, உமதோ மின்சாரக் கைகள்
மங்கை யானோ தொலைவின் ஆழி!
அசைவிற்கெல்லாம் நான் ஆட்படுவேன்
ஆட்கொண்டதென்னை அய்யா நின் விழி!

************

MY river runs to thee:
நின்னிடமே ஓடுகிறது என் நதி


MY river runs to thee:

Blue sea, wilt welcome me?

My river waits reply.
Oh sea, look graciously!

I ’ll fetch thee brooks
From spotted nooks,—

Say, sea,
Take me!

நின்னிடமே ஓடுகிறது என் நதி

நீலக்கடலே என்னை வரவேற்பாயா?
பதிலுக்காய்
பொறுத்திருக்கிறது நதி
கடலே, ஒரு பார்வை பார்ப்பாயா?
ஒவ்வொரு மூலையினின்றும் உனக்காய்
ஓடைகள் கொண்டு வந்தேன்
கடலே பேசு
என்னிடம் பேசு!


**********

I HIDE myself within my flower,
நான் என் மலருக்குள் ஒளிகிறேன்

I HIDE myself within my flower,
That wearing on your breast,
You, unsuspecting, wear me too—
And angels know the rest.

I hide myself within my flower,
That, fading from your vase,
You, unsuspecting, feel for me
Almost a loneliness.



நான் என் மலருக்குள் ஒளிகிறேன்
உன் மார்பில் மலர் சூடுகையில்
இயல்பாய் என்னையும் அணிவாய் நீ
எல்லாம் அந்த தெய்வங்கள் அறியும்

நான் என் மலருக்குள் ஒளிகிறேன்

உன் பூந்தொட்டியில் இருந்து விழுகிறேன்
நான் விழுவதை நீ உணர்வாயா
ஆக்கிரமிக்கும் மௌனத்தினை?

************


I ENVY seas whereon he rides,
அவன் உலவும் கடலினைக் கண்டு

I ENVY seas whereon he rides,
I envy spokes of wheels
Of chariots that him convey,
I envy speechless hills

அவன் உலவும் கடலினைக் கண்டு -நான்

அசூயைப்படுகிறேன்
அவனை சுமந்து செல்லும் தேரின்
ஆழியின் ஆரங்களைக் கண்டும்!
அமைதியான மலைகளைக் கண்டும்!

That gaze upon his journey;
How easy all can see
What is forbidden utterly
As heaven, unto me!

அவன் வலம்வரும் அழகின் காட்சி

அனைவருக்கும் தான் எத்தனை சுலபம்?
எனக்கு ஏன் அது கிட்டுவதில்லை
எட்டாத் தொலைவின் சொர்க்கம் போல?

I envy nests of sparrows
That dot his distant eaves,
The wealthy fly upon his pane,
The happy, happy leaves

அவன் கூரையினை அழகுசெய்யும்

கூடுகள் மீதும் எனக்கசூயை
அவன் ஜன்னல்கள் கடந்து செல்லும்
ஆனந்த இலைகள் மேல் பொறாமை!

That just abroad his window

Have summer’s leave to be,
The earrings of Pizarro
Could not obtain for me.

அவன் ஜன்னலுக்கு வெளியே

அழகாய் நகரும் கோடை
அது ஜொலித்திடும் அரசனின் குண்டலம் போலே
அது ஏன் எனக்கு வசப்படவில்லை?


I envy light that wakes him,
And bells that boldly ring
To tell him it is noon abroad,—
Myself his noon could bring,

அவனை எழுப்பும் ஒளியின் மீதும்

பகல் வந்ததென அவனிடம் புகலும்
மணிகளின் மீதும் எனக்கசூயை
ஏன் எனை அவனிடம் எடுத்துச் செல்லவில்லை?

Yet interdict my blossom

And abrogate my bee,
Lest noon in everlasting night
Drop Gabriel and me.

என் பருவத்தை தண்டித்து விடு

என் சந்திப்பை தவிர்த்து விடு
இடையின்றித் தொடரும் இரவில்
விடியல் என்னை மறந்து போகட்டும்!

***************

I HELD a jewel in my fingers
விரல்களில் ஏந்தினேன் வைரம் ஒன்றை

I HELD a jewel in my fingers
And went to sleep.
The day was warm, and winds were prosy;
I said: “’T will keep.”

I woke and chid my honest fingers,—
The gem was gone;
And now an amethyst remembrance
Is all I own.

விரல்களில் ஏந்தினேன் வைரம் ஒன்றை
பிறகு நான் படுக்கைக்கு சென்றேன்
காலையோ வெம்மை காற்றோ இனிமை
வைரத்தை நானே வைத்திடுவேன் என்றேன்
எழுந்து பார்த்தேன் வைரம் இல்லை
எந்தன் விரல்களை யானே வைதேன்-அது
விட்டுச் சென்ற நினைவுகள் உண்டு
வேறு எதுவும் என்னிடம் இல்லை.

*************

LOVE is anterior to life,
வாழ்வுக்கு முன்பும் காதல்

LOVE is anterior to life,
Posterior to death,
Initial of creation, and
The exponent of breath.

வாழ்வுக்கு முன்பும் காதல்

இறப்புக்கு பின்பும் காதல்

உயிருக்கு ஆரம்பம் காதல்

உயிர்மையின் சின்னம் காதல்

*********

FATHER, I bring thee not myself-எந்தாய், என்னை நான் கொணரவில்லை.

FATHER, I bring thee not myself,—
That were the little load;
I bring thee the imperial heart
I had not strength to hold.

The heart I cherished in my own
Till mine too heavy grew,
Yet strangest, heavier since it went,
Is it too large for you?

எந்தாய், என்னை நான் கொணரவில்லை.

ஏனெனில் அது மிக மிக சொற்பம்
இறுதியே அற்றதோர் இதயம் கொணர்வேன்
இங்கே அதன் கனமோ அபாரம்

நன்றாய் வளர்ந்து பெருக்கும் வரையில்

நானே அன்பில் வளர்த்ததோர் இதயம்
புதியது உனக்கிந்தப் புதிரான இதயம்
பெரிதாய் ஆனதோ புகல்வாய் எந்தாய் !

**********

IN lands I never saw நான் பார்க்காத நிலத்தில்

IN lands I never saw, they say,
Immortal Alps look down,
Whose bonnets touch the firmament,
Whose sandals touch the town,—

Meek at whose everlasting feet
A myriad daisies play.
Which, sir, are you, and which am I,
Upon an August day?

நான் இதுவரை பார்க்காத நிலத்தில்

நெடிய மலைகள் கீழே நோக்குமாம்
அதன் தலைப்பாகை ஆகாயம் தொடுமாம்
அதன்பாதுகைகள் புவியை வருடுமாம்

அழிவற்ற நின்னடியில் அற்பம் நானே

'அங்கே மலர்களின் ஆனந்த நடனம்
அற்புதமானதோர் அழகிய நாளிது
யார் நான் அன்பரே யாவர் நீவிர்?

************

WE outgrow love like other things

அன்பை விட்டு நாம் வளர்கின்றோம்

WE outgrow love like other things
And put it in the drawer,
Till it an antique fashion shows
Like costumes grandsires wore.

அன்பை விட்டு நாம் வளர்கின்றோம்

அதனை பரணில் அடைத்திடுகின்றோம்
பரணில் அகப்படும் பாட்டன் துணிபோல்
காதல் ஒருநாள் காணக் கிடைக்கும்!

*************

DOUBT me, my dim companion! என்னிடம் ஐயம் கொள்


DOUBT me, my dim companion!
Why, God would be content
With but a fraction of the love
Poured thee without a stint.
The whole of me, forever,
What more the woman can,—
Say quick, that I may dower thee
With last delight I own!

என்னிடம் ஐயம் கொள் என் துணையே

உன் அளவற்ற அன்பின்
சிறு பகுதியே போதும் என்று
சிந்தித்து விட்டான் அந்த இறைவன்
என் இருப்பு முழுதும் -ஆம்
எத்தனை தான் ஒருபெண் இயம்ப முடியும்?
விரைவாய் சொல், அந்த கடைசி மகிழ்வின்
பாத்யதையாவது எனக்குக் கிடைக்கும்.

**************

SaMuDrA


5 comments:

G.M Balasubramaniam said...

/மன்னா, உமதோ மின்சாரக் கைகள்
மங்கை யானோ தொலைவின் ஆழி!
அசைவிற்கெல்லாம் நான் ஆட்படுவேன்
ஆட்கொண்டதென்னை அய்யா நின் விழி/!நான் மிகவும் ரசித்த மொழிபெயர்ப்பு. . ஆனந்த விகடன் வரவேற்பறையில் கலக்குகிறீர்களே. வாழ்த்துக்கள்.

Caricaturist Sugumarje said...

அருமை!மொழி பெயர்ப்பில் அழகும் இருக்கிறது!

இந்திரபோகன் said...

ஹாய் சமுத்ரா,

சென்ற வார ஆனந்த விகடனில் தங்களது வலைப்பூ பற்றிப் பார்த்தேன். " பிரபஞ்ச இயற்பியலை சிறுகதைகள் மூலம் எளிமையாக விளக்குகிறார் " என்றதும் நிமிர்ந்து விட்டேன். உங்கள் வலைப்பூவிற்கு எனது முதல் வருகை.
ஒரு மொழிபெயர்ப்பின் " தொழில் நுட்ப " விஷயங்களை இக்கட்டுரை நுட்பத்துடன் சொல்கிறது. " கவிதை " என்ற மென்மையான உணர்வு, பெண்களுக்கே உரித்தானது என்று உணர்த்துகிறது. திடீரென்று ஒன்பவாவது மேகம் என்கிறீர்கள். கண்மூடித்தனமான சில பெண்ணியவாதிகளின் பச்சையான மொழி பிரயோகங்களை விமர்சித்து உள்ளீர்கள்.
எமிலி டிக்கன்சனின் கவிதைகளை மொழிபெயர்த்து இருப்பது தங்களது " பல்துறை புலமையைக் " காட்டுகிறது. நல்லதொரு பதிவு

சிவகுமாரன் said...

எமிலியின் கவிதைகளை மிக அழகாக மொழி பெயர்த்துள்ளீர்கள்.
\\பரணில் அகப்படும் பாட்டன் துணிபோல்//
மிகவும் ரசித்தேன்.
அருமை

Unknown said...

Please post anu andam ariviyal, everytime i am coming for your site to search anu andam ariviyal writings. Its really good i have lot of doubts in science but when i studying your article its very easy to understand. Keep the good writings. i am not a supporter of kalaidoscope. sorry.