இந்த வலையில் தேடவும்

Sunday, July 15, 2012

கலைடாஸ்கோப் -68

லைடாஸ்கோப் -68 உங்களை வரவேற்கிறது

&

ஏன் கொஞ்ச நாளாக எழுதுவதில்லை என்று நிறைய பேர் (in other words , இரண்டு பேர்)கேட்டுக் கொண்டதால் ...

அரசியல், சினிமா, காதல் , கத்திரிக்காய் இவைகளைப் பற்றி எழுதுவதில்லை என்று (தேவையில்லாத) சங்கல்பம் செய்து கொண்டிருப்பதால் எதை எழுதுவது என்று தெரிவதில்லை.சினிமா என்றால் பில்லா 2 பற்றி எழுதலாம், அரசியல் என்றால் பிரணாப் முகர்ஜியை நாமும் கொஞ்சம் திட்டலாம்.காதல் என்றால் கூகுல் சர்வரையே திண
டிக்கச் செய்யும் அளவு எழுதலாம். கத்திரிக்காய்? காதலுக்கும் க.காய்க்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. ஆனால் இவை இரண்டும் 'holier than thou ' மனப்பான்மை உடையவர்களால் எப்போதும் வெறுக்கப்பட்டு வந்துள்ளன.காதலித்தவர்களும் கத்திரிக்காய் சாப்பிட்டவர்களும் வைகுண்டம் போகமுடியாது என்று திடமாக நம்பப்பட்டது. அதுவும் ஏகாதசி அன்று நீங்கள் கத்திரிக்காய் சாப்பிட்டால் உங்களுக்கு நிச்சயமாக நரகத்தில் இரண்டு சீட் (உங்களுக்கு சமைத்துப் போட்டவருக்கும் சேர்த்து) தத்கால் முறையில் முன்பதிவு செய்யப்படும்.

ராஜா ஒருவன் அரண்மனை நந்தவனத்தில் இருந்த அழகிய வாசனை மலர்கள் தினமும் காணாமல் போயினவாம். யார் திருடுகிறார்கள் என்று கண்டுபிடிக்க ராஜா இரவுபகலாக நந்தவனத்தில் காவலர்களை நிற்கச் செய்கிறான். ஒருநாள் தூக்கம் வராமல் இருப்பதற்காக காவலர்கள் எதையோ எரித்து தீ மூட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். திருடர்கள் வேறு யாரும்
இல்லை..வானுலக தேவர்கள்! பூக்களைப் பறித்துக் கொண்டு தங்கள் புஷ்பக விமானத்தில் ஏறி அமர்ந்து கொண்டு கம்பீரமாக் 'மேலே செல்' என்று உத்தரவிட்டும் கூட விமானம் TAKE OFF ஆக வில்லை. என்னடா இது என்று சுற்றுமுற்றும் பார்க்கையில் காவலர்கள் எரித்த நெருப்பில் கத்திரிக்காய் தோல்கள் இருந்திருக்கின்றன. அதன் புகை புஷ்பக விமானத்தின் மீது பட்டதால் விமானம் பாவியாக மாறி சொர்க்கம் செல்லும் தகுதியை இழந்து விடுகிறது.

கத்திரிக்காய் எனக்கு மிகவும் பிடிக்கும். சொர்க்கம் போகாவிட்டாலும் பரவாயில்லை என்று அவ்வப்போது தின்று விடுவேன். பார்ப்பதற்கு அவ்வளவு innocent ஆக இருக்கும் அந்தக் காய் எப்படி நாம் சொர்க்கம் செல்வதைத் தடை செய்யும் என்று தெரியவில்லை. உலகில் எந்தெந்த விஷயங்கள் சுகமாக இருக்கின்றனவோ அவையெல்லாம் பாவங்கள் என்று தடை செய்யப்பட்டு வந்துள்ளன...கத்திரிக்காய் பொறியல் இல்லாத சொர்க்கம்,yes it will miss something tasty...

&&

ஆபீசில் ODC எனப்படும் (ஆன்சைட் கஸ்டமருக்கு இங்கிருந்து காதில் பூ சுற்றும் இடம்) ground floor இல் இருந்து 12th floor க்கு மாற்றி விட்டார்கள். ஆபீசோ வீடோ எந்த ஒரு முடிவு எடுத்தாலு
ம் அதை ஆதரிக்கும் கோஷ்டி ஒன்று இருக்கும் .எதிர்க்கும் கோஷ்டி ஒன்று இருக்கும். ஆதரிக்கும் கோஷ்டி மேலே போவதே நல்லது.ஒருவேளை கட்டிடம் இடிந்து விழுந்தால் எல்லாரும் நம் மேல் தான் விழுவார்கள் (?) என்று சொன்னது.எதிர்க்கும் கோஷ்டி , அடிக்கடி கேண்டீன் வரமுடியாது , லிப்ட் க்கு வெயிட் செய்ய வேண்டும் எமர்ஜென்சி என்றால் கீழே வருவதற்குள் பிராணன் போய் விடும் என்றெல்லாம் சொன்னது.என்னைக் கேட்டதற்கு as a scientist (இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல?)கீழே தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்வேன்
என்றேன். ஏனென்றால் 12 ஆம் தளத்தில் நமக்கு தரையை விட வேகமாக வயசாகி விடும்.பூமியின் ஈர்ப்பு காலத்தை மெதுவாக நகர்த்துகிறது. எனவே சீக்கிரம் தாத்தா பாட்டி ஆக விரும்புபவர்கள் மேலே செல்லலாம் என்றேன்.

லிப்டில் போவது ஒரு பேஜாரான விஷயம். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு! லிப்ட் என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

குண்டான பெண்மணி ஒருத்தி ஷாப்பிங் முடித்து விட்டு நன்றாக வயிறு புடைக்க தின்று விட்டு வெயிட்டான பேக்-குகளுடன் லிப்டில் ஏறி தன் ஆறாவது மாடிக்கு செல்லும் பட்டனை அழுத்தினாள்.அவளுக்கு மிக அவசரமாக தன் கேஸை(gas )ரிலீஸ் செய்ய வேண்டி இருந்தது. மூன்றாவது மாடி வரை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திய அவள் அதன் பிறகு முடியாமல் அதன் போக்கில் விட்டு விட்டாள். உடனே தன் பேக்கில் இருந்து அவசரமாக பைனாப்பிள் மணம் கொண்ட ரூம் ஸ்ப்ரேயை எடுத்து லிப்ட் முழுவதும் அடித்து விட்டாள். ஆறாவது மாடியில் அவள் இறங்கியதும் இரண்டு ஆண்கள் லிப்டில் நுழைந்தார்கள். லிப்டில் நிலவிய விசித்திர வாசத்தை நுகர்ந்த ஒருவன் இன்னொருவனை பார்த்து 'ராபார்ட் என்ன மாதிரியான வாசம் இது?' என்று கேட்டான்.இன்னொருவன் 'ஆமாம் ஜான்,, யாரோ பைனாப்பிள் மரத்தின் கீழே ஆய் போனது போல இருக்கிறது' என்றான்.

&&&

குழந்தை அழுகிறது, பைப்பில் தண்ணீர் வரவில்லை, பஸ் மிஸ் ஆகி விட்டது என்பதெற்கெல்லாம் அப்செட் ஆகும் ஆளா நீங்கள்? சமீபத்தில் வந்திருந்த ஒரு இ-மெயில்:-

9 /11 பென்டகன் அட்டாக்கின் போது நிறைய பேர் ஆபீஸ் வராததால் உயிர் தப்பி இருந்தார்கள். அவர்கள் அன்று லீவ் எடுத்ததற்கு சொன்ன காரணங்கள்:

* அன்று பஸ் மிஸ் ஆகி விட்டது
* கார் ஸ்டார்ட் ஆகவில்லை
* குழந்தை விடாமல் அழுதுகொண்டே இருந்தது
* ரோடு ப்ளாக் ஆகி இருந்தது
* எதிர்பாராமல் உறவினர்கள் வந்து விட்டார்கள்
*அலாரம் வேலை செய்யவில்லை (?)

எனவே இந்த மாதிரி சிறிய சிறிய தொந்தரவுகளிலும் கூட சில சமயங்களில் ஏதோ ஒரு நன்மை இருக்கலாம்.எதிலுமே அர்த்தம் இல்லை என்ற மனநிலையில் வாழ்வது ஒரு அணுகுமுறை. எ
ல்லாவற்றிலும் ஓர் அர்த்தம் இருக்கிறது என்று வாழ்வது இன்னொரு அணுகுமுறை. கொஞ்ச நாள் இரண்டாவது அணுகுமுறையை பின்பற்றிப் பாருங்கள்.


&&&&

மிக மிகச் சிறிய வேறுபாடுகள் தொடரும்போது சங்கிலியின் முதல் விஷயத்துக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு விஷயம் கிடைக்கும் என்கிறது பரிணாம
ம். குழந்தைகள் வட்டமாக உட்கார்ந்து கொண்டு முதலில் சொன்ன ஒரு விஷயம் கடைசியில் உள்ளவருக்கு கடத்தப்படும் போது எப்படி முற்றிலும் மாறி விடுகிறது என்று கவனிப்பது சுவாரஸ்யம்.உதாரணமாக முதலில் இருப்பவர் 'கூடையை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் போய் வெண்டைக்காய் வாங்கி வந்து குழம்பு வைத்து சாப்பிட்டு தூங்கினேன்' என்று சொன்னால் கடைசியில் அது 'கூடையில் தூங்கும் வெண்டைக்காய் ' என்று மாறி விட்டிருக்கலாம்.இதற்குப் பேர் தான் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு வந்த கதை.சரி. நாய்க்கும் சாக்ரடீசுக்கும் என்ன சம்பந்தம்? சாக்ரடீஸ் ஒரு நாய் வைத்திருந்தார் என்று சொல்லக்கூடாது.

விக்கிபீடியாவில் வேடிக்கையாக ஒரு விளையாட்டு.

ஒரு எளிய விஷயத்தை விக்கியில் தேடுவோம். உதாரணம் DOG ...அதன் முதல் பத்தியில் உள்ள ஏதேனும் ஒரு லிங்கை க்ளிக் செய்வோம். அந்த லிங்கில் முதல் பத்தியில் உள்ள வேறு ஒரு லிங்க்.. இப்படியே போய்

dog->hunting->recreation->leisure->time->existence->senses->nervous system->retina->brain->star fish-> frog-> water->earth->solar system->gravity->mass->acceleration->vector->line segment-> geometry-> polygon-> closed chain->sequence->infinite->countable->Georg Cantor->German->central europe->cold war->Nazi germany->adolf hitler-> world war II->human history->paleolithic->Stone tools->stone age->homo->biology->life->object->quantum mechanics->plank constant->physical constant-> constant-> symbol-> idea-> concept-> philosopher-> language-> reality->observation->knowledge->plato->Socrates

நாயில் இருந்து சாக்ரடீஸ் வந்த கதை இது தான். நாயில் இருந்து தொடங்கி இயற்பியல், உயிரியல், வரலாறு ,தத்துவம் மருத்துவம் என்று எங்கெங்கோ சுற்றி சாக்ரடீஸ் வந்துள்ளார். சரி இந்த சங்கிலியில் மீண்டும் (முதல் பத்தியில்)நாய் வருவதற்கு எத்தனை கிளிக்குகள் தேவைப்படும்? வீட்டில் பொழுதுபோகாமல் உட்கார்ந்திருக்கும் போது இதை விளையாடிப் பார்க்கலாம். 'நாயிலிருந்து நாய்க்கு நாலாயிரம் கிளிக்குகள்' ....மௌசை க்ளிக்கி க்ளிக்கி நகச்சுத்து வந்தால் நான் பொறுப்பல்ல.


&&&&&

சமீபத்தில் வந்த இன்னொரு இமெயிலில் ஒரு வீடியோ இருந்தது. அது 'எந்த ஸ்டேஷனிலும் நிற்காத ஒரு டிரெயின்'. (சீனாவில் அறிமுகம்) ஸ்டேஷன் வந்ததும் கொஞ்சம் , கொஞ்சமே கொஞ்சம் slow ஆகிறது அவ்வளவு தான் .பயணிகள் எப்படி ஏறுவது இறங்குவது, ? பிளாட்பாரமே நகருமா,இல்லை சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் மட்டும் தான் ஏற முடியுமா என்றால் இல்லை.
டிரெயின் வருவதற்கு சில பல நிமிடங்களுக்கு முன்னரே பயணிகள் பிளாட்பாரத்தில் உள்ள ஒரு உயரமான மேடையில் ஏறி அதில் இருக்கும் ஒரு கேபினில் நுழைந்து உட்கார்ந்து கொள்வது. டிரெயின் கீழே வந்து கொண்டிருக்கும் போது கேபினை தொட்டதும் அது நகர்ந்து டிரெயினுடன் இணைந்து கொள்கிறது.டிரெயினின் கடைசியில் இருக்கும் அது சுமந்து வந்த இன்னொரு கேபின் ,அது ஸ்டேஷனை விட்டு விலகியதும் கழற்றி விடப்படுகிறது. இறங்க வேண்டியவர்கள் நிதானமாக பாப் கார்ன் கொறித்த படியே இறங்கலாம்.

சரி இப்படி அவசரமாக போய் என்ன சாதிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. நம் இந்திய ரெயில்கள் தான் பெஸ்ட். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் கியாரண்டியாக இருபது நிமிடங்கள் நிற்கும். ரயிலுக்குள் கேட்கும் காபி டீ சமோசா சத்தங்கள் , பிச்சைக்காரனின் குழலில் கேட்கும் மோகனம், ஆறு மணி நேரப் பயணத்திற்கு குடியரசுத் தலைவர் சீட் லெவலுக்கு சீட் பிடிக்கும் அவலங்கள் , முறுக்கு விற்கும் பாட்டி, வடநாட்டு இளைன் விற்கும் கலர் கலர் புத்தகங்கள்,பல்வேறு மனிதர்களின் , வாழ்க்கையில் வெவ்வேறு படிநிலைகளின் தரிசனங்கள்,அபத்தங்கள், அழகுகள்,ஆராவாரங்கள், ( + ஃபிகர்கள் என்று நீங்கள் யூத்தாக இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்). ஒரு ரயில் பயணம் தான் எத்தனை எத்தனை அனுபவங்களை நமக்குத் தந்து விடுகிறது? ஒரு கவிதை.

பக்கத்து சீட்டில் கிடைக்கும் ஓசி பேப்பர் சுகம்
முன் சீட்டில் இருந்து எட்டிப் பார்த்து
முறுவலிக்கும் குழந்தை முகம்
முன் சீட்டு காலேஜ் பெண்களின்
முடிவில்லாத அரட்டை
அடுத்த சீட்டு ஆயா கூடையில் இருந்து
கொத்தமல்லி வாசம்
பின் சீட்டில் இருந்து கொண்டு அரசியல் பேசும்
பெரியவரின் அனுபவம்
'அய்யா மேலே ஏறுங்க
மனசுல மட்டும் யூத்தா இருந்தா போதும்'என்னும்
கண்டக்டரின் அபத்த ஜோக்.

-அத்தனையையும் இழந்தேன்
ஒரு
புது கார் வாங்கிய பிறகு.

&&&&&&

நித்யானந்தா வீடியோ (ரஞ்சிதா வீடியோ அல்ல) ஒன்று பார்த்துக் கொண்டிருந்த போது எல்லாரும் ஒருமாதிரி பார்த்தார்கள். ஒரு மனிதரின் சின்னத் தவறு அல்லது நழுவல் அவரின் நல்ல விஷயங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி விடுவது வேதனை தான்.. நாதஸ்வரத்தில் 'உங்களுக்கு எல்லாம் கோபி மலரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தானே தப்பா தெரியுது? அவன் உங்களுக்குப் பண்ணதெல்லாம் தெரியலை இல்ல? என்று சொக்கலிங்கம் கேட்பது போல.

சரி அவர் கபட சன்னியாசியாகவே இருந்தாலும் அவருக்குப் பின்னே இவ்வளவு கூட்டம் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்கிறீர்களா?. குரு முக்கியம் அல்ல. குருவின் மீதுள்ள நம்பிக்கை முக்கியம் என்கிறார் ஓஷோ.ஒரு சின்னக் கதை.

கபட சந்யாசி ஒருவர் (அவர் கபடமா என்று சரியாகத் தெரியாது. ஆனால் நாம் அவரை கபடம் என்றே வைத்துக் கொள்வோம். என்ன ஒரு கொலைவெறி?) ஆசிரமத்துக்கு தினமும் பால்காரி ஒருத்தி பால் கொண்டு வந்து தருகிறாள் . அவள் பக்கத்து கிராமத்தில் இருக்கிறாள். தினமும் இடையே உள்ள நதியைக் கடந்து படகில் வந்து பால் கொண்டு வருகிறாள். ஒருநாள் இரவு பேய் மழை. மறுநாள் காலை பால்காரி சரியான சமயத்துக்கு பால் கொண்டுவந்து விடுகிறாள். ஆற்றில் வெள்ளம் போகுமே எப்படி வந்தாய் என்று கேட்டதற்கு 'சாமி உங்க பேரை சொல்லிட்டு அப்படியே தண்ணி மேல நடந்து வந்தேனுங்க' என்கிறாள் அவள். தன் பேருக்கே இப்படி ஒரு மகிமை என்றால் தனக்கு எவ்வளவு இருக்கும் என்ற மிதப்பில் சாமியார் ஆற்றில் இறங்கி நடக்க (?) முயலுகிறார். அப்படியே மூட்டைமாதிரி உள்ளே போய் விடுகிறார்.

நித்யானந்தா நினைத்துக் கூட பார்க்க முடியாத ஆன்மீக அனுபவங்கள் அவருடைய பக்தர்களுக்குக் கிடைப்பது இதன் காரணமாகக் கூட இருக்கலாம்.

&&&&&&&


ஓஷோ ஜோக்.

'என் மனைவி பொய் சொல்றா' என்றான் ஜான்.

எப்படி என்று கேட்டான் அவன் நண்பன்

'நேத்து ராத்திரி அவள் வீட்டுக்கு வரவே இல்லை. கேட்டதுக்கு மேரி கூட இருந்தேன்' அப்படிங்கறா...

'ஒருவேளை அவள் உண்மை சொல்லி இருக்கலாம்ல' என்றான் நண்பன்

'சான்சே இல்லை... ஏன்னா நேத்து நான் மேரி கூட இருந்தேன்'


முத்ரா

9 comments:

bandhu said...

கொஞ்சமாக எழுதினாலும் ரத்தினமாக எழுதுகிறீர்கள்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நிறைய விஷயங்களை ஒரே பதிவில் சொல்லி விட்டீர்கள்.குட்டிக் கதை அருமை.

MARI The Great said...

துவக்கமும் ம்டிவும் சரவெடி :)

வழக்கம் போல் இடைப்பகுதி :)

Anonymous said...

arumai.
everyweek eluthukna. romba nalla iruku

Suresh

Aba said...

# கத்திரிக்காய்

இது நான் கேள்விப்படாதது.

# விக்கிபீடியாவில் வேடிக்கையாக ஒரு விளையாட்டு.

பகிர்வுக்கு நன்றி.. விளையாடிப் பார்க்கிறேன். :D

# எந்த ஸ்டேஷனிலும் நிற்காத ஒரு டிரெயின்

இந்த ஐடியாவ கொஞ்ச வருஷமா நானும் (சொந்தமா) யோசிச்சிட்டிருக்கறேன்... (நம்புங்கப்பா) இது பயன்பாட்டில இருக்கறது இன்னிக்குதான் தெரியும்.

//-அத்தனையையும் இழந்தேன்
ஒரு
புது கார் வாங்கிய பிறகு.//

Very true...

Anonymous said...

engal korikkaiyai sevimaduthu pathivitadharku miga nanri.

sakthikarthi
Tiruppur

பால கணேஷ் said...

அருமை. ரயில் பயணம் பற்றிய செய்தியும், கடைசி இரண்டு ஜோக்குகளும் பிரமாதம். ரசிக்க வைத்தது கலைடாஸ்கோப்.

Pattu said...

Super!இந்த மாதிரி பதிவுகள் படிக்க திகட்டாதவை.

இன்னமும் எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்.

கோவை நேரம் said...

ரொம்ப...விஷயங்கள்....