இந்த வலையில் தேடவும்

Tuesday, January 28, 2014

கலைடாஸ்கோப் -105

கலைடாஸ்கோப் -105 உங்களை வரவேற்கிறது.


Any fool can criticize, condemn and complain ... and most fools do.
-Dale Carnegie

If you have something nice to say, please say it.
-Seth Godin


Positive feedback அல்லது constructive criticism என்பதைப் பற்றி முதலில் கொஞ்சம் பேசுவோம் .ஒரு பொருள் அல்லது சேவை சரியாக இல்லை என்றால் உடனே கஸ்டமர் கேருக்கு அழைத்து கண்டபடி திட்டும் நாம் பொருள் அல்லது சேவை திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் பெரும்பாலும் மௌனம் சாதிக்கிறோம்.feedback email களை பெரும்பாலும் நாம் கவனிப்பதே இல்லை.ஹோட்டல்களிலும் ரிஸார்ட்டுகளிலும் வைக்கப்பட்டிருக்கும் feedback form களை  ஏனோதானோ என்று தான் நிரப்புகிறோம். ஒரு நிறுவனம் தன் சேவைகளை மேம்படுத்த feedback என்பது மிகவும் முக்கியம். அதிலும் positive feedback என்பது அவர்களுக்கு மிகுந்த motivation ஆக அமையும். இதை நாம் தினசரி வாழ்க்கையில் கடைபிடிக்கப் பழகிக் கொள்வோம். சில உதாரணங்கள்

* furniture டெலிவரி வரவில்லை என்றால் உடனே போன் செய்து ஏன் வரவில்லை என்று கேட்கிறோம். வந்த பின்பு அவரை மறந்து விடுகிறோம். எந்தப் பொருள் டெலிவரி ஆனாலும் உடனே போன் செய்து டெலிவரிக்கு ஒரு சின்ன நன்றி சொல்லலாம்.

* நோய் சரியானதும் டாக்டரை மறந்து விடுகிறோம். அவரை casual ஆக சென்று சந்தித்து நன்றி சொல்லலாம்.

* இன்னொருவர் ப்ளாக்குகளில் நாம் சும்மா சென்று படிக்கிறோமே தவிர கமெண்ட் போடுவதில்லை. நன்றாக இருந்தால் நன்று என்று சொல்லலாமே, template comment என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்ல வேண்டாம்.குடியா முழுகி விடும்? திட்டுவதற்கு மட்டும் நம் வாய் சாரி விரல் சீக்கிரம் நீள்கிறது!!! எழுத்தாளர்களின் ஆன்லைன் அல்லக்கைகள் போல ஜல்லியடிக்கச் சொல்லவில்லை . just 2 lines !!!

* 'அதான் காசு வாங்குறானே, மாவுக்கேத்த பணியாரம்' என்ற மனநிலை நம்மில் இருக்கிறது. காசு வாங்கினாலும் சேவை சேவை தான். எனவே எல்லா இடங்களிலும் உங்கள் positive feedback கை அவசியம் தரவும். 'உணவு நன்றாக இருந்தது' என்றோ ' I had a great stay' என்றோ 'நல்லாப் பாடினீங்க ' என்றோ (அது உண்மையாக இருக்கும் பட்சத்தில்) சொல்வதில் தவறேதும் இல்லை. நாமும் நன்றாக உணர்வோம். நம் தேவையற்ற ஈகோ கரையும். அவர்களும் They will have their day!


next

Cyber culture என்கிற ஒரு term . இன்டர்நெட் யுகத்துக்குப் பிறகு தோன்றியிருக்கும் ஒரு புது கலாச்சாரம். recent and juvenile  ! பழமையில் வேரூன்றி பல்வேறு விற்பன்னர்களால் காலம் காலமாக கூர் தீட்டப்பட்டு, புடம் போடப்பட்டு இதெல்லாம் இல்லை. இந்த culture ருக்கென்று தனி மொழி இருக்கிறது. தனி உணர்வுகள், தனி கடவுள், தனி மதம், தனி character எல்லாம்..உதாரணமாக facebook ஒரு virtual world ! அதில் நுழையும் போது ஒரு உண்மையில்லா அல்லது உண்மையொத்த
ஓர் உலகில் நாம் சஞ்சரிக்கிறோம். பேசுகிறோம், குலாவுகிறோம், கொஞ்சுகிறோம் , குடுமிப்பிடி சண்டை போடுகிறோம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களுக்கு இந்த virtual இமேஜ் இருக்கவில்லை. வடக்குப்பட்டி ராமசாமி என்றால் அவர் வடக்குப்பட்டி ராம சாமி தான். அவரது physical presence தான்! v.ramasamy@facebook.com அல்லது  v.ramasamy@twitter.com அல்ல . ஒருவரது இந்த virtual image அல்லது cyber image  ஜினால் நாம் மிகவும் குழம்பிப் போகிறோம். நேரில் பார்க்கும் போது இவரா நம்முடன் chat செய்தவர் , இவரா போட்டோவில் உலக அழகி போல் திரிந்தவர், வீடியோவில் உயரமாக இருந்தாரே என்றெல்லாம் ஆச்சரியப்படுகிறோம். நம் virtual காதல்கள் தோற்றுப் போகின்றன.

சீதை மற்றும் ராமன் எப்படி அன்னியோன்னிய தம்பதிகளாக வாழ்ந்தார்கள் என்றால் கற்பு ஒ.ஒ என்ற நெருடலான சமாசாரங்களை விட்டு விட்டு யோசித்தால் அந்தக் காலத்தில் இந்த virtual image கிடையாது. ஆண் என்றால் இப்படித்தான் , பாலைவனத்தில் பைக் ஓட்ட வேண்டாம். ரூபா பனியன் போட வேண்டும் , Axe deo போட வேண்டும், பெண் என்றால் veet உபயோகிக்க வேண்டும் dove ஷாம்பூ போட வேண்டும், dandruff நோ டென்ஷன் போன்ற விளம்பரங்கள் கிடையாது.ஓடும் ரயில் மேல் ஓடியபடி 100 பேரை ஹீரோ அடித்து நொறுக்கும் (?) ஹீரோ இமேஜ்கள் கிடையாது. சீதை தன் அப்பாவை மட்டுமே பார்த்து வளர்ந்தவள்.ராமன் தன் அம்மாக்களை மட்டுமே பார்த்து வளர்ந்தவன். இருவரும் மற்றவரின் real image ஐயே சந்தித்தனர். தன் தந்தை போன்ற ஆண் மகனைக் காணும் சீதையும் தன் தாய் போன்ற பெண்ணைக் காணும் ராமனும் மனமொன்றி விடுகிறார்கள். Simple ! 


"கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே! "


என்று ராமன் அகலிகையைக் கொன்றேன் என்று status போடவில்லை. சீதை அதற்கு லைக்கும் போடவில்லை.


[btw , பையனுக்கு health drink கொடுத்தவுடன் அவன் ஸ்கூலில் ஆளுயர மைக்கின் முன் நின்று எதையோ ஒப்பிப்பது, வீட்டுக்கு அடி உயர கோப்பையுடன் ஓடி வருவது. இவன் என் பையனாக்கும் என்று சொல்வது பையன் ஐன்ஸ்டீன் போல் வேடமணிந்து வீட்டுக்குள்ளேயே லேபில் உட்கார்ந்திருப்பது இதெல்லாம் தேவையில்லை என்கிறார் டாக்டர். ரேச்சல். (சூரிய வணக்கம்) அளவுக்கதிகமான health drink கள் உடலில் சேர்ந்து கொண்டு கிட்னி கற்கள் போன்ற பின் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்கிறார். கண்ட drink களை குழந்தைகளுக்குக் கொடுக்காமல் பழ ஜூஸ்கள் , இரவில் வெறும் பால் இவை கொடுத்தால் போதும் என்கிறார்.

மேலும் , சாப்பிட்டு முடித்தவுடன் கோக் , பெப்ஸி என்று எடுத்துக் கொள்ளும் நவீன trend  unhealthy ஆனது என்கிறார். சாப்பிட்டவுடன் சுடு தண்ணீர் குடிப்பது தான் மிகவும் நல்லது.

மேலும் பார்க்க :

http://www.youtube.com/watch?v=iCayNAP192I ]


ஒரு மொழியை, காலம் காலமாக புழங்கி வரும் ஒன்றை, அதன் எழுத்து வடிவத்தை மாற்றும் வல்லமை cyber culture -ற்கு உண்டு..

Btw, M doin gr8. & was^ with U?
nm bro.
Oic
brb
bak. LOL
K ^-^
cya ltr,,zzz...
ttyl
Gd n8 ya!

இதைப் படிப்பதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டால் நீங்கள் 18ஆம் நூற்றாண்டில் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.

[ கொசுறு: ஆங்கிலத்தில் அதிகப்படி உபயோகப்படும் வார்த்தையான THE என்பதை அதன் 27ஆவது எழுத்தாக சேர்க்க சிலர் பரிந்துரைத்திருக்கிறார்கள். அதன் குறியீடு கீழே!


]


நல்லவேளை. இன்டர்நெட்டில் தமிழ் சிதையாமல் இருக்கிறது. இன்டர் நெட்டின்ஆட்சி மொழியாக தமிழ் இருந்திருந்தால்.

_ ^_ (வணக்கம்)
நலமா?
இலை
விவிசி (விழுந்து விழுந்து சிரி )
எ .ஆ ?    (என்ன ஆயிற்று)

தமிழ் phonetic ஆக இருப்பதால் அதை சுருக்குவது கொஞ்சம் கஷ்டம் என்றே தோன்றுகிறது . ஆங்கிலம் அப்படியல்ல.awesome என்பதில் உச்சரிப்புக்கும் எழுதுவதற்கும் தேவையில்லாத நிறைய எழுத்துகள் உள்ளன. எனவே Ahsum என்று எழுதலாம்!cyber culture க்கு பாவம் ஆங்கிலம் victim ஆகி விட்டது.


ஸ்கூலில் டெலக்ராம் எழுதும் பயிற்சிகள் கொடுப்பார்கள்.

அம்மா போய் விட்டாள் என்பதை

If I were hanged on the highest hill, 
Mother o' mine, O mother o' mine! 
I know whose love would follow me still, 

என்றெல்லாம் எழுத முடியுமா 

MOTHER SERIOUS. START SOON  என்று தான் சொல்ல முடியும். ஒரு வாக்கியத்தை முடிந்தவரை சுருக்குவது என்பது ஒரு கலை. exercise ! கார்பொரேட் நிறுவனங்களில் புதிதாகச் சேர்பவர்களுக்கு நிறைய பயிற்சிகள் கொடுப்பார்கள்.நான் சேர்ந்த போது effective communication கிளாஸில் இங்கிலீஷ் நியூஸ் பேப்பர் கட்டிங்குகள் சிலவற்றைக் கொடுத்து அதற்கு பொருத்தமான தலைப்பு என்ன  என்று யூகிக்க வேண்டும். உதாரணமாக கீழ்க்கண்ட கட்டிங்-கிற்கு தலைப்பு (ஆங்கிலத்தில்)என்ன என்று யோசியுங்கள்.விடை கடைசியில்.




ட்விட்டரில் கதை எழுதுவதைப் பற்றி நண்பர் ஒருவர் கேட்டார். எழுதலாம் ஆனால் ஆழம் இருக்காது. மர்மக் கதைகளுக்கு சில சமயம் சர்ப்ரைஸ் , ட்விஸ்ட், எல்லாம் கொடுத்து கொஞ்சம் ஜவ்வுத் தன்மை இருந்தால் தான் மனதில் நிற்கும். 140 வார்த்தைகளில் என்ன எழுதுவது?காதல் கதை எழுதலாம் ஆனால் படிப்பவர்கள் அதனுடன் ஒன்ற முடியாது!It will remain detached!


"தன் காதலி வேறொருத்தனுடன் சுற்றுகிறாள் என்று இருவரையும் கொலை செய்யப் போனான் அவன்; முதலில் அவள் வீட்டுக்குப் போனபோது அவள் கொலையாகிக் கிடந்தாள்"

- இந்த ட்விட்டர் மர்மக் கதையில் உள்ள மெல்லிய திகில் புரிய வேண்டும். புரிந்தாலும் பெரிதாக அனுதாபமெல்லாம் வராது.

சரி.

*"நான் கடைக்குச் சென்று சாக்லேட் வாங்கி வந்தேன் "

இதை சுருக்குவது எளிது. பார்த்திபனின் "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்" strategy யில் சுருக்கினால் 

'நான் போகாமல் பின்னே நாயா போகும்?

*கடைக்கு சென்று சாக்லேட் வாங்கி வந்தேன் 

கடைக்கு செல்லாமல் கல்கத்தாவுக்கா செல்வார்கள் 

*சென்று சாக்லேட் வாங்கி வந்தேன் 

செல்லாமல் எப்படி வாங்குவதாம்?

*சாக்லேட் வாங்கி வந்தேன்.

வராமல் அங்கேயேவா குடும்பம் நடத்துவார்கள்?

*"சாக்லேட் வாங்கினேன்"

மேட்டர் முடிந்தது.

சில வாக்கியங்களை creative ஆக மட்டுமே சுருக்க முடியும்.

உதாரணமாக,

"மீரா கண்ணனைக் காதலித்தாள் " - ஆதாரமாக , subject , verb , object மூன்று மட்டுமே வரும் இதை எப்படி சுருக்குவது?

விடை 



தம்பூரா, ஒரு லவ் சிம்பல் , ஒரு புல்லாங்குழல்.


Next

ச .ப.பு:

இன்பம் x துன்பம்  , நல்லது x கெட்டது , அழகானது x அசிங்கமானது , உணவு x மலம் என்று வாழ்க்கையை நாம் இருமையாகவே பார்த்துப் பழகி விட்டோம் என்ற முன்னுரையுடன் ஆரம்பிக்கிறது பெருமாள் முருகனின்  'பீக்கதைகள்' (you read it right !).. எல்லாக் கதைகளிலும் மனித மலம் வருகிறது.in fact அது தான் மெயின் கேரக்டர்.முகம் சுளிக்காதீர்கள். நம் எல்லார் உடம்பிலும் எப்போதும் ஒரு அவுன்ஸ் மலம் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது என்று கமலஹாசன் சொல்வது போல 

பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட்டு ஏறுங்கரைகண்டி லேன், இறைவா, கச்சியேகம்பனே

என்று பட்டினத்தார் சொல்வது போல எல்லாருக்குள்ளும் மலம் இருக்கிறது.

வேக்காடு என்ற கதையில் ஒரு கிழவி வறட்சி தாக்கிய குக்கிராமத்தில் தனியாக வாழ்கிறாள். கண் வேறு மங்கி விட்டது. வீட்டில் குடிப்பதற்கு மட்டும் கால் பானை நல்ல தண்ணி இருக்கிறது  போவோர் வருவோரை எல்லாம் ஒரு குடம் உப்புத் தண்ணி கிடைக்குமா என்று கேட்டுப் பார்க்கிறாள். அந்த ஊரின் மைனர் ஒருவன் வீட்டில் மட்டும் கிணறில் தண்ணீர் இருக்கிறது. அதை வைத்து எல்லாரையும் கொடுமைப்படுத்துகிறான் அவன். கிழவி எல்லாரிடமும் கெஞ்சிப் பார்த்து விட்டு காட்டுக்குப் போய் வந்து 'கழுவாமலேயே' படுத்துக் கொள்கிறாள். ராத்திரி இரண்டு மணிக்கு எழுந்து கிழவி யாரேனும் தண்ணீர் கொண்டு வந்து வைத்திருக்கிறார்களா என்று பார்க்கிறாள். யாரும் வைத்திருக்கவில்லை என்று முடிகிறது கதை!

'மஞ்சள் படிவம்' என்ற சிறுகதையில் பிள்ளைகளை சார்ந்து இருக்காமல் இன்னொரு கிழவி தன்மானத்துடன் தனியாக வாழ்கிறாள். மகள் மட்டும் அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்கிறாள். மகன்களோ மருமகள்களோ எட்டிக் கூடப் பார்ப்பதில்லை.கிழவிக்கு நல்ல சாவே வராது என்கிறார்கள் மருமகள்கள். ஒருநாள் கிழவி வழுக்கி விழுந்து படுக்கையோடு படுக்கையாய் படுத்து விடுகிறாள். மகள் மட்டும் வந்து பணிவிடை செய்து கொண்டு அங்கேயே தங்கி விடுகிறாள். ஒருநாள் பாட்டியின் சேலையில் மஞ்சள் படிவத்தைப் பார்க்கும் மகள் 'என்னம்மா, வெளிக்கு வருதுன்னா கூப்பிட வேண்டியது தானே, இப்ப யார் இதை துவைக்கறது' என்று அலுத்துக் கொள்கிறாள். அதன் பிறகு கிழவி என்ன சொல்லியும் கேட்காமல் வைராக்கியமாக பச்சைத் தண்ணீர் பல்லில் படாமல் கடும் பட்டினி இருந்தே செத்துப் போகிறாள்.!

பின்பக்க இருக்கை என்று ஒரு கதை..


சரி. போதும்.யாராவது சாப்பிட்டுக் கொண்டு இருக்கப் போகிறீர்கள்.


ஜென் ஹைக்கூ..



என்
கெண்டைக் கால்கள் சூம்பி இருந்தாலும்
செல்கிறேன்
பூக்கள் மலருமிடத்துக்கு

-பாஷோ

பிடித்த படம்:(FB )





ஓஷோ ஜோக்.


முல்லா தன் மார்டினியை நன்றாக ரசித்து குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு வயதான பெண்மணி அவரை அணுகி "அன்பரே, நீங்கள் குடித்துக் கொண்டிருப்பது ஸ்லோ பாய்சன் " என்றாள் .

"பரவாயில்லை மேடம், எனக்கு அவசரம் ஒன்றும் இல்லை" என்றார் முல்லா.



இன்னொன்று

ஒரு சேவல் சண்டைப் போட்டியில் ஒரு பாகிஸ்தானியை எப்படித் தெரிந்து கொள்வது?

அங்கே கையில் ஒரு வாத்துடன் நிற்பவன்.

ஒரு இத்தாலிக் காரனை?

அவன் அந்த வாத்தின் மேல் பணம் கட்டுகிறான்.

ஒரு சேவல் சண்டையில் அமெரிக்கன் இருக்கிறான் என்று எப்படித் தெரிந்து கொள்வது?

வாத்து வெற்றி பெறுகிறது!


விடை:

RBI surprises again, raises repo rate by 25bp to 8%, keeps CRR unchanged

 Please give your CC  :)





சமுத்ரா ..

Tuesday, January 21, 2014

எழுத்தாளர் (சிறுகதை)

எழுத்தாளர் பக்கி (அதுதான் அவர் புனைப்பெயர்) அன்று கொஞ்சம் உற்சாகமாகவே இருந்தார். அவருக்கு நாற்பது வயது. வயதைக் குறிப்பிடுவது எதற்கென்றால் அவரைப் பற்றிய சரியான பிம்பத்தை உங்களுக்கு அளிக்க!

பக்கி இதுவரை ஏழோ எட்டோ புத்தகங்கள் போட்டிருக்கிறார். வித்தியாசமாகத் தலைப்பு வைத்தால் தான் மக்கள் வாங்குவார்கள் என்று 'சூனியத்தில் முளைத்தெழும் வெளி' , 'விட்டில் பூச்சியின் கனவுகள்' 'ஒளியற்றதன்   நிழல்கள்' 'கடலில் பிறக்கும் நதி' என்றெல்லாம் தலைப்பு வைத்து கவிதை என்ற பெயரில் எதையோ எழுதி இருக்கிறார். இந்த முறை புத்தகக் கண்காட்சியில் ஹேமாவின் பூனை என்ற வரலாற்று சிறப்பு மிக்கதொரு  புதினத்தை (?) எழுதி வெளியிட்டு இருக்கிறார். புதினம் என்றால் புதினா சட்னியின் சுருக்கப்பட்ட பெயர் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ரசனையற்ற மக்களுக்கு மத்தியில் அவர் புத்தகம் வெளியிடப்பட்டதே பெரிய விஷயம் என்று தன் குல தெய்வம் குருத்தாம் பாளையம்  வேலி காத்த அய்யனாருக்கு தினமும் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நிற்க. அவர் உற்சாகமாக இருக்கிறார் என்று நாம் சொல்லியதற்குக் காரணம் மறுதினம் புத்தகக் கண்காட்சியில் அவரது வாசக வட்ட (?) நண்பர்கள் ஒரு சின்ன சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது தான். வா.வ என்றதும் ஏதோ சாரு போல 15000 வாசகப் பெருமக்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். UKG குழந்தை போல டூ, த்ரீ , பைவ், எய்ட் என்று எடக்கு மடக்காக எண்ணினாலும் அவரது வாசக வட்டம் 100 ஐத் தாண்டாது.

அவரது மிகத் தீவிர வாசகர் குளுவான் குஞ்சு என்பவர் . அவர் ப்ளாக்கில் போஸ்ட் போடும் போதெல்லாம் அவருக்கு இமெயில் அனுப்பி கன்னா பின்னா என்று புகழ்பவர். அவர் இருக்க வேண்டியது சென்னை மண்ணடி குறுக்கு சந்தே அல்ல. ஜெர்மனியின் முனீச் சந்து தான் என்று தவறாமல் சொல்பவர். பக்கி தன் ப்ளாக்கில் கமெண்டுகளை disable செய்து விட்டார். இல்லை என்றால் இந்த அறிவு ஜீவிகளின் தொல்லை தாங்க முடியாது. ஒருவாரம் கங்குல் பகலாக யோசித்து ஒரு கருத்தாழமிக்க (?) பதிவு போட்டால் உடனே சண்டை போட ரெடியாக பின்னூட்டத்தில் வந்து விடுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா என்று பக்கி நினைப்பார். இது தப்பு அது தப்பு என்று நொட்டை சொல் சொல்கிறார்களே தவிர உருப்படியாக எதுவும் எழுத மாட்டார்கள். இவர்களுக்கு இருக்கும் இந்த அறிவுக்கு ஏன் இன்னும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வரவில்லை என்று யோசிப்பார்.

பக்கிக்கு அறிவியல் என்றால் அலர்ஜி. இன்னும் கூட இவ்வளவு பெரிய பூமி அந்தரத்தில் ஒரு நட்சத்திரத்தை சுற்றும் என்பதை அவர் நம்பவில்லை. ஒரு நாள் தெரியாத் தனமாக ஏதோ ஒரு நல்ல மூடில் 'பொருள் என்பது சூனியம் தான்' என்ற நவீன இயற்பியல் தத்துவத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வேதம் சொல்லி விட்டது என்று தன் ப்ளாக்கில் ஒரு பிட்டைப் போட்டு வைத்தார். அதற்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்து விட்டுத் தான் தமிழ் நாட்டில் இத்தனை விஞ்ஞானிகள் இருக்கிறார்கள் என்பதை பக்கி உணர்ந்தார். ஒரு விமர்சகர் இப்படிக் கமெண்ட் போட்டிருந்தார். அதைப் பார்த்த நிமிடத்திலேயே அவசர அவசரமாக கமெண்ட்ஸ் ஐ disable செய்து விட்டார்.

ஞானதேசிகன் commented on 'பொருள்-சூனியம்-பொருள்'..

view 59 more comments

"அன்பின் பக்கி, இது எந்த உபநிடதத்தில் எந்த சர்கத்தில் வருகிறது என்று reference சொல்ல முடியுமா? சூனியம் என்ற ஒன்றை குவாண்டம் தத்துவம் நம்புவதில்லை. காசிமிர் வாக்யூம் என்று எண்ணிலடங்கா ஆற்றல் துகள் எதிர்த்துகள் பேரணிகள் சூனியத்தில் நிலை கொண்டுள்ளன.உதாரணமாக மேல் குவார்க் மற்றும் வேறுபடு (strange )குவார்க்குகள் கொண்ட கேயான் ஒன்று பையான் -ஆக சிதைந்து இடைநிலையில் W போசானும் குளுவான்களும் வருகின்றன"

Comments disabled ..


பக்கி ரொம்ப பில்ட் அப் கொடுக்காமல் ஒரு எல்லைக்குள்ளாகவே இருப்பது என்று தீர்மானித்தார்.கொஞ்சம் intellectual ஆன விஷயங்களை இப்போது அவர் தொடுவதே இல்லை.கவிதை எழுதினால் பிரச்சினை இல்லை பாருங்கள். தன் சமீபத்திய ஹேமாவின் பூனை புத்தகத்தில் அவர் அகநானூறு, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் , பிஸி பேளா பாத் செய்வது எப்படி , The count of Monte kristo , குற்றியலிகரம், சிவ வாக்கிய விளக்கம், பார்முலா ஒன் ரேஸ், ஓரினச் சேர்க்கை, 12 years a slave ,இலங்கைத் தமிழர்கள், பரிணாமம், சுவாதிஸ்டானம் , நரேந்திர மோடி, எமிலி டிக்கின்சன் ,வர லக்ஷ்மி விரதம்,ice age ,gravity 3டி ,சிந்து பைரவி, ஜக்கி வாசுதேவ், குட்டி ரேவதி, இளையராஜா ,முடி உதிர்வதைத் தடுப்பது எப்படி என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார்.

நிலவின்
மங்கிய வெள்ளொளியில்
எனக்குள் பீறிட்டுக் கிளம்பிய
தனிமையின் ஏகாந்தத்தை
நிரப்ப வரும்
சம்பூரணத்தின்
சிறகுகளின் நறுமணத்தில்
பூத்துப் படரும்
உன் நினைவு!

என்றெல்லாம் கவிதை எழுதினால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் பாருங்கள்.

குளுவான் குஞ்சு அலை பேசியில் அழைத்து , 'சார் நாளைக்கு ஒரு சின்ன கூட்டம் போடலாம். இருபது முப்பது வாசகர்களை அழைத்து வருகிறேன்' அடையாளம் பதிப்பகத்தின் அருகில் கூட்டம் என்றார்.எழுத்தாளர் பக்கிக்கு உற்சாகம் பொங்க ஆரம்பித்து விட்டது. சந்திப்பில் என்ன பேசுவது , 'இலக்கியம் என்பது என்ன, பெர்னாட்ஷா என்ன சொல்கிறார் என்றால் ..' என்று பேசுவது என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டார். ஆட்டோக்ராப் கேட்பவர்களுக்கு கீழ்க்கண்ட வரிகளை எழுதித் தரலாம் என்றெல்லாம் கற்பித்துக் கொண்டார்.

"உங்கள் தலையெழுத்தை  மாற்ற முடியும் ஒரு எழுத்தாளனின் கையெழுத்து!! "

-உங்கள் அபிமான பக்கி


அன்று இரவு 1 மணி வரை என்னென்னோவோ புத்தகங்களை வைத்து குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டார். " எழுத்தாளர் பக்கியை சந்திக்க வரும் வாசகர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் வாசகர்கள் தங்கள் உடைமை, செல் போன் , புத்தகங்கள் , பிஸ்கட், குழந்தை முதலியவைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும்' என்று மைக்கில் அறிவிப்பதாகக் கனவு கண்டார்.

மறுநாள் காலை ஆறு மணிக்கே எழுந்து கொண்டு ஷேவ் செய்து கொண்டு பேன்டீன் சாம்பூ போட்டுக் குளித்து விட்டு சிறப்பான உடைகளை அணிந்து கொண்டார் பக்கி.புதிய பெல்ட் அணிந்து கொண்டு டக் இன் செய்து கொண்டார். வாட்ச் கட்டிக் கொண்டார். 8 மணிக்கு குஞ்சுக்கு போன் செய்த போது 'The number you are trying to call is not reachable' , என்று வந்தது , அந்த அழகான பெண் குரல் அதைத் தமிழில் பெயர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதற்குப் பாதியிலேயே 'நீங்கள் அழைக்கும் நபர் தற்போது தொடர்பு எல்லைக்...' கட் செய்தார். 9 மணிக்கு மீண்டும் போன் செய்த போது அதே பெண் குரல், வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்றது.சரி தொந்தரவு செய்ய வேண்டாம். வாசக வட்ட நண்பர்களை சேர்த்துக் கொண்டு கண்காட்சிக்கு வந்து விடுவார் என்று பக்கி சுய சமாதானம் சொல்லிக் கொண்டார்.கண்காட்சிக்குத் தனியாகவே போவது என்று முடிவு செய்து டாக்ஸி ஒன்றைப் பிடித்து 11 மணியளவில் அங்கே ஆஜரானார்.அலீப் டிபன் சென்டரில் மூன்று இட்லி ஒரு பரோட்டா ஒரு காபி சாப்பிட்டுக் கொண்டார்.

அன்று கண்காட்சிக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து பக்கிக்குத்  தன் கண்களையே நம்ப முடியவில்லை.தமிழ்நாடு கேரளாவை முந்திக் கொண்டு எங்கோ இலக்கிய ராஜ பாட்டையில் 5th கியரில் போய்க் கொண்டிருப்பதாகத் தோன்றியது.வாக்கிங் ஸ்டிக் வைத்துக் கொண்டு நடக்கும் 90 வயது முதியவரில்  இருந்து சாக்கோ பார் கடித்துக் கொண்டு நடக்கும் 10 வயது சிறுவன் வரை எல்லாரையும் காண முடிந்தது அவ்விடத்தில் .எது எடுத்தாலும் இருபது ரூபாய் என்று கூவி அழைக்கும் பொருட்காட்சிக்குக் கூட இவ்வளவு கூட்டம் வராது போலிருந்தது. இன்னொரு ஆச்சரியம் 'Im a machine; but I used to be a person long long ago' என்பன போன்ற பொன்மொழிகள் பொறிக்கப்பட்ட தேநீர் சொக்காய்களை அணிந்த யுவன்களும் யுவதிகளும் வந்திருந்தது. கத்திரிக்காயில் 90 வகை சமையல், லக்ஷ்மி சஹஸ்ரநாமம்  போன்ற புத்தகங்களை வாங்க வந்திருந்த மாமிகளை பக்கி கண்டு கொள்ளவேயில்லை.

பக்கி நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு ஸ்டால்களுக்குள் நுழைந்து நிதானமாக நடந்து பார்வையிட்டார். முதல் முறையாக 'யாருமே தன்னைக் கண்டு கொள்ளவில்லை' என்ற உண்மை அவருக்கு மெதுவாய் உறைக்க ஆரம்பித்தது. குஞ்சுக்கு போன் செய்தார். மூன்று முறையும் ரிங் போயிற்றே தவிர அவர் attend செய்யவில்லை.நான்காவது முறை குஞ்சு எடுத்து பதட்டத்துடன் , 'சார்,,ரொம்ப சாரி,,,,நண்பர் ஒருவருக்கு ஆக்சிடெண்ட் ஆகி எமெர்ஜென்சியில் இருக்கிறார். ஆஸ்பிடலில் இருக்கிறேன், ஈவினிங் கூப்பிடுகிறேன் சாரி ' என்று சொல்லி போனை வைத்து விட்டார். இன்னொரு வாசகருக்கு போன் செய்ததில் சுவிட்ச் ஆப் என்று வந்தது. பக்கி தனியாளாக கண்காட்சியை நோட்டம் விடுவது என்று தீர்மானித்தார்.

தன் வ .சி.மிக்க புத்தகமான 'ஹேமாவின் பூனை' யை யாராவது வாங்குகிறார்களா என்று ஒவ்வொருவராக நோட்டம் விட்டார். எல்லாரும் கொற்கை, பொன்னியின் செல்வன்,ஓநாய் குலச் சின்னம் உப பாண்டவம்  என்று வாங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னும் மக்கள் பொன்னியின் செல்வன் ,  படிக்கிறார்களா அதில் என்ன தான் இருக்கிறதோ என்று பக்கி வியந்தார்.அவர் புத்தகத்தை வெளியிட்டிருந்த தமிழன்னை பதிப்பகத்தில் ஈயாடியது. அதற்கு நித்தியானந்தா பதிப்பகத்தில் கூட ரெண்டு பேர் நின்று கொண்டு டி.வி.டி இருக்கா என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு அந்த அம்மணி அவர்களிடம் அட்ரஸ் வாங்கிக் கொண்டு டி .வி.டி. அனுப்புவதாகவும் எக்ஸ்ட்ராவாக குண்டலினியை எழுப்பித் தரலாமா என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். குறும்பு மிக்க இளைஞர் ஒருவர் ரஞ்சிதா மேடத்தைக் காணலியே என்று கமெண்ட் செய்து கொண்டே கடந்து சென்றார்.

பக்கி ஒரு லிட்சி ஜூஸ் குடித்து விட்டு கண்காட்சியை மீண்டும் வலம் வந்தார்.தன்னை யாரேனும் அடையாளம் கண்டு கொள்கிறார்களா என்று நோட்டம் விட்டார். அழகான இளம் யுவதி ஒருவள் வந்து 'சார், நான் உங்க தீவிர ரசிகை , உங்கள் 'விட்டில் பூச்சியின் கனவுகள்', சான்சே இல்லை சார், வாட் எ லிடரசர் ஆட்டோ கிராப் ப்ளீஸ் என்று சொல்வாள் என்று கண்டிப்பாக எதிர்பார்த்தார்.ஆனால் சற்றேறக்குறைய அப்படிப்பட்ட யுவதி ஒருத்தி இவர் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல்  தன் ஆண் நண்பரிடம் தன் whatsapp இல் அனுப்பிய குறுந்தகவல் வரவில்லையா என்ற தத்துவ வேந்தாந்த விசாரத்தைப் பேசிக் கொண்டிருந்தாள் .மக்கள் தொடர்ந்து நடுப்பகல் மரணம் கம்ப்யூட்டர் கிராமம் அனிதாவின் காதல்கள்  போன்ற அலுத்துப் போன சுஜாதா புத்தகங்களை வாங்கிய வண்ணம் இருந்தனர். பக்கிக்கு அந்த ஆள் மேல் எரிச்சலாக வந்தது. நல்ல வேளை  அந்த ஆள் இப்போது உயிருடன் இல்லை இருந்திருந்தால் யாரையும் எழுத விட்டிருக்க மாட்டார் என்று ஆறுதலும் வந்தது.உயிர்மை ஸ்டாலின் வெளியே அமர்ந்திருந்த மனுஷ்ய புத்திரனை கண்டும் காணாமல் வந்து விட்டார். ஏனென்றால் மூன்று நான்கு பேர் அவரை சுற்றி நின்று கொண்டு கையெழுத்து வாங்க முயன்று கொண்டிருந்தனர். அப்படியென்ன பிரமாதமாக எழுதறார் என்று தனக்குள் சலித்துக் கொண்டார். தானும் உட்காரலாம் என்று ஏதேனும் நாற்காலியைத் தேடினார். மாற்றுத் திறனாளியாக இருந்தால் மட்டுமே நாற்காலி தருவார்கள் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டார்.கண்காட்சியின் உள்ளே நிலவிய வெக்கை மின் விசிறிகளையும் மீறி உறுத்தியது.

பக்கி வாரியார் பதிப்பகம் சென்று 'வாரியார் சொன்ன குட்டிக் கதைகள்' புத்தகத்தை வாங்கினார்.தன் அடுத்த புத்தகத்துக்கு உதவும் என்று தமிழ் மொழி வரலாறு என்று 600 ரூபாய்  குண்டு புக்கையும் வாங்கினார்.மக்கள் 'அரசு பதில்கள்' 'பக்தி யோக விளக்கம்' 'யானைகள் காணாமலாகின்றன ,சில்க் சுமிதாவின் கதை , கொக்கோக சாஸ்திரம் ,பீக்கதைகள் போன்ற புத்தகம் எல்லாம் வாங்குகிறார்கள், நம் புத்தகத்தை வாங்குவார் இல்லை என்று தனக்குள் அலுத்துக் கொண்டார்.இதற்கும் தன் புத்தகத்தின் பின் அட்டையில் தான் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு மைசூர் ஜூவில் நின்றிருக்கும் போட்டோவை கலரில் போட்டிருக்கிறார்.

மதியம் இரண்டு மணியளவில் பக்கி புத்தகக் கண்காட்சி கேண்டீனுக்குள் நுழைந்தார். முக்கால் வாசிக் கூட்டம் அங்கே தான் இருப்பது போல் இருந்தது.
பக்கி ஒரு ரவா தோசை டோக்கன் வாங்கி தோசை வேகும் வரை அசுவாரஸ்யமாய் காத்திருந்து வாங்கிக் கொண்டு உட்கார்ந்து கொள்ள நாற்காலிகளைத் தேடினார். காலி நாற்காலி ஒன்று கூட இல்லை. யாரேனும் எதிர் வந்து , சார், உட்காருங்க ப்ளீஸ், உங்க 'ஹேமாவின் பூனை'....என்று சொல்வார் என்று எதிர் பார்த்தார்.ஆனால் மக்கள் நூடூல்ஸ் ஐயும் சூடான மசால் தோசையையும் டெல்லி அப்பளத்தையும்  உள்ளே தள்ளுவதிலேயே குறியாக இருந்தனர். கொடுமை என்ன என்றால்  தோசையை தின்று முடிந்ததும் எழும்பிப் போகாமல் மக்கள் அங்கேயே அமர்ந்து தாங்கள் உள்ளே வாங்கிய புத்தகங்களை , ப்ரீயாக வந்த காலண்டர்களை , துண்டுப் பிரசுரங்கள் இத்யாதிகளை  பிரித்துப் படிக்கவும் செய்தார்கள். உங்கள் இலக்கிய ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லையா என்று பக்கி நினைத்துக் கொண்டார். ஒரு நாற்காலி காலியாய் இருக்கவே பக்கி உடனே போய் அங்கு ஏறக்குறைய அமர்ந்தே விட்டார்.அருகில் அமர்ந்திருந்த பெண் விரோதமாக 'ஆள் வருது' என்றாள் . பக்கி பேரவமானமாக உணர்ந்து நின்று கொண்டே சாப்பிட்டு விட்டு அவ்விடத்தினின்றும் வெளியேறினார்.

கண்காட்சிக்கு வெளியே ஒரு இலக்கியக் கூட்டம் (?)நடந்து கொண்டிருந்தது.
தெலுங்கு, கன்னட கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்து சொல்லிக் கொண்டிருந்தனர். ஸ்லீவ்லெஸ் அணிந்த கன்னடப் பெண் கவிஞர் தன் கவிதையை வாசிக்கும் போது கிட்டத்தட்ட நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அதில் பக்கிக்கு 'கொத்தில்லா கொத்தில்லா' என்பது மட்டும் புரிந்தது. அதை மொழி பெயர்த்து சொல்லிக் கொண்டிருந்த பெண் 

என்னை 
துலைத்த உன் விழிகல் 
குலத்தின் கரையில் 

என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். ல ள வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் இலக்கியக் கூட்டத்துக்கு வந்து விடுகிறார்கள் என்று சலித்துக் கொண்டு பக்கி அவ்விடம் விட்டு கோபத்துடன் சாரி அறச் சீற்றத்துடன் வெளியே வந்தார்.

என்னமோ போடா மாதவா என்று விரக்தியுடன் சலித்துக் கொண்டார்.

கண்காட்சியை விட்டு வெளியே போகுமுன் சுண்டல் வாங்கிச் சாப்பிடலாம் என்ற ஆசை அவருக்குள் துளிர் விட்டது. சுண்டல் விற்பவன் டாய்லெட் போய் விட்டு சானிடைசரில் கை கழுவுவானா என்பன போன்ற  மனச்சாட்சியின்  கேள்விகளைப் புறம் தள்ளி விட்டு  சுண்டல் விற்ற பையனை அழைத்தார். ஒரு சுண்டல் குடு என்று பத்து ரூபாயை நீட்டினார்.

அவரை நிமிர்ந்து பார்த்த சுண்டல் பையன் 'சார் , நீங்க எழுத்தாளர் பக்கி தானே'? என்றான்.



சமுத்ரா 

Friday, January 17, 2014

கலைடாஸ்கோப் -104

கலைடாஸ்கோப் -104 உங்களை வரவேற்கிறது.

Login ....

6-5=2 என்று கன்னடத்தில் ஒரு பேய்ப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. 6 பேர் (இரண்டு பெண்கள் உட்பட) மைசூருக்கு அருகில் ஒரு மலை மேல் ட்ரெக்கிங் செல்கிறார்கள். இரவுக்குள் மலை ஏற முடியாததால் இரவில் ஒரு இடத்தில் டென்ட் போட்டுத் தங்குகிறார்கள்.துரதிர்ஷ்ட வசமாக ,அவர்கள் தங்குவதற்குத் தேர்ந்தெடுத்த அந்த இடத்தில் ஒரு மரத்தில் பேய்கள் ஆணியில் அறையப்பட்டு அடைக்கப்பட்டிருக்கின்றன. அதை அவர்கள் கவனிப்பதில்லை. பாட்டும் கும்மாளமுமாக இரவைக் கழிக்கிறார்கள் எப்படியோ வெளியே வரும் பேய், ட்ரெக் சென்றவர்களில் ஐந்து பேரை ஒவ்வொருவராக வெவ்வேறு விதங்களில் ரூம் போட்டு யோசித்து கொலை செய்கிறது. திரைப்படம் முழுவதும் ட்ரெக் செய்பவர்களில் ஒருவரான ரமேஷ் என்பவரது HD கேமெராவில் பதிவு செய்யப்பட்ட  வீடியோ காட்சிகளாக எடுக்கப்பட்டுள்ளது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது .6 பேரில் ஒருவர் மட்டும் காய்ச்சல் வந்து காட்டுக்குள் ட்ரெக் செய்யாமல் பாதியிலேயே வெளியேறி விடுவதால் பேயிடமிருந்து தப்பிக்கிறார். லாஜிக் இல்லாமல் கடைசியில் வெள்ளை ட்ரெஸ் + கண்களுக்கு கருப்பு மை அணிந்த பேய் வரும் பேய் படங்களில் இதுவும் ஒன்று. சும்மா time -pass க்கு ரசிக்கலாம்.






btw , மக்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. நுரையீரல் ஸ்பாஞ் போன்ற மென்மையானது என்பது உட்பட எதையும் யாரும் சீரியஸாக  எடுத்துக் கொள்வதில்லை. ஸ்க்ரீனில் பேய் வரும் போது சிரிக்கிறார்கள். கமெண்ட் அடிக்கிறார்கள். ஹ்ம்ம் :( 21st செஞ்சுரியில் எல்லாருக்கும் குளிர் விட்டுப் போய் விட்டது போலும் ! பேய்ப்படம் பார்த்து விட்டு அன்று இரவு பாத் ரூமுக்கு அம்மாவை கூட்டிப் போகும் பசங்களும் இன்று வழக்கொழிந்து விட்டனர் போலும்! சின்ன வயதில் வா அருகில் வா படம் பார்த்து ஒரு மாதம் மந்திரித்து விட்ட கோழி போல் திரிந்தது ஞாபகம் வருகிறது.  ஒரு திரைப்படத்தின் தாக்கம் நம்மிடையே அதைப் பார்த்து முடித்த சில நிமிடங்களுக்கே (ஏனோ) நீடிக்கிறது. ஒரு படத்தின் வெற்றி அதன் தாக்கம் நம்மிடையே எத்தனை நாள் நீடிக்கிறது என்பதை வைத்தே அளவிடப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். பேய்ப்படம் பார்த்து விட்டு நம் வீட்டிலும் பேய் வந்து விடுமோ என்றெல்லாம் பயப்படும் ஆசாமிகள் இன்று இல்லை என்று தெரிகிறது. பொதுவாக ரொமாண்டிக் படம் ஒன்று பார்த்தால் நாமும் இப்படி இருக்கலாம்; ரொமான்ஸ் செய்யலாம் என்று தோன்றும். ஹாலிவுட் சண்டைப்படம் பார்த்துக் கொண்டிருந்தால் அந்த நொடிக்கு நம்மை ஹீரோவாக ஜாலியாக  imagine செய்து கொள்வோம். இது அந்த படத்துடன் ஹீரோ ஹீரோயினுடன் ஏற்படும் ஒரு தற்காலிக association அவ்வளவு தான். படம் முடிந்து வெளியே வந்ததும் இயல்பு வாழ்க்கையின் எதார்த்தம் நம்மை தொற்றிக் கொள்கிறது.இ .எம்.ஐ, பாலன்ஸ் சீட், ஆடிட்டிங், வீக்லி ரிப்போர்ட் , கஸ்டமர் மீட்டிங் கவலைகள் நம்மை மீண்டும் தொற்றிக் கொள்கின்றன. இன்று நம் முன்னே பேய் வந்தால் நாம் பயப்படுவதை விட முதலில் ஆச்சரியப் படுவோம் என்றே தோன்றுகிறது.

A subject for a great poet would be God's boredom after the seventh day of creation.
-Friedrich Nietzsche   

[உலகத்தைப் படைத்து விட்டு கடவுள் என்ன செய்திருப்பார் என்பது கவிதைக்கான நல்ல கற்பனை... வாசகர்கள் முயற்சிக்கலாம்.!

ஒரு ஹைக்கூ உதாரணம்:

உலகைப் படைத்து விட்டு 
கடவுள் கண் மூடினார் 
திறந்து பார்த்த போது 
உலகம் அழிந்து விட்டிருந்தது!]

6-5=2 என்பது என்ன கணக்கு என்று தெரியவில்லை. may be , தப்பித்து வரும் ஒரு நபருடன் பேய் கூட வந்து விடுகிறதோ என்னவோ?
இந்த தப்புக்கணக்கு  சித்தாந்தம் உளவியலில் 2+2=5 என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.(consensus reality ). ஓஷோ பின்வரும் உளவியல் சோதனையை செய்யச் சொல்கிறார். ஒரு ஏழெட்டு பேர் கொண்ட நண்பர்கள் குழுவில் யாரேனும் ஒரு victim ஐத் தேர்வு செய்யவும். ஒரு நாள் குழுவில் உள்ள மற்ற நண்பர்கள் அவரிடம் 'ஏய் , உனக்கு என்ன ஆச்சு, டல்லா தெரியற? உடம்பு சரியில்லையா' என்று சும்மானாச்சும் கேட்க வேண்டும். முதலில் ஒருத்தர் ரெண்டு பேர் கேட்கும் போது அவர் சும்மா லைட்டாக  விட்டு விடுவார்.அதெல்லாம் இல்லையே . நல்லா தான் இருக்கேன் என்று  அதையே நான்கைந்து பேர் கேட்கும் போது அவர் உண்மையிலேயே களைப்பாக, நோய் வந்தது போல உணர ஆரம்பிக்கிறார். சில சமயம் அவருக்கு உண்மையில் நோய் கூட வந்து விடுகிறது!!! நிறைய பேர் சொல்லும் போது , நிறைய பேர் நம்பும் போது அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று நம் மனம் நம்ப ஆரம்பித்து விடுகிறது. உண்மையில் நாம் நன்றாகத்தான் இருக்கிறோம், 2+2=4 என்று நம் உள் மனதுக்குத்  தெரியும்.ஆனால் இத்தனை பேர் சொல்வதால் ரெண்டும் ரெண்டும் ஐந்தோ ஒருவேளை மாத்திட்டாங்களோ என்று கூட நினைக்கத் தோன்றும்.ஹிட்லரின் mass hypnotism ! 

நோய் ஏற்படுவது மட்டும் அல்ல. நம்பிக்கையால் நோய் குணமாகவும் செய்கிறது. இதை faith healing என்கிறார்கள். அல்லது Placebo ட்ரீட்மென்ட்! ஏதோ கலர் கலராக வைட்டமின் மாத்திரைகளை கொடுத்து இதை விடாமல் சாப்பிடுங்கள் ; குணமாகி விடும் என்று பெரிய பெரிய வியாதிகளை குணப்படுத்துவது. பெரிய பெரிய அறுவை சிகிச்சைகளைக் கூட இந்த முறையில் செய்திருகிறார்கள்.சும்மா பெரிய பெரிய கருவிகள் மானிட்டர்கள் நர்சுகள் எக்ஸ்பெர்டுகள் , ஹெட் லைட் எல்லாம் நோயாளியை சுற்றி நின்று கொண்டிருப்பார்கள்.  நோயாளியை semi -conscious ஆக வைத்திருப்பார்கள். நர்ஸ் அந்த போர்செப்ஸ் எடுங்க, டைலேடர் கொடுங்க ரிட்ராக்டர் கொடுங்க  என்று சும்மனாச்சும் பேசிக் கொள்வார்கள். முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்வார்கள்.அறுவை சிகிச்சை மட்டும் நடந்தே இருக்காது. ஆச்சரியமாக சில நாட்களில் நோயாளி குணமடைந்து விடுவார்!

Tinkerbell effect என்று ஒன்று உள்ளது. மக்கள் நம்புவதாலேயே சில விஷயங்கள் இருக்கின்றன என்று அது சொல்கிறது.உதாரணம் உங்கள் கையில் இருக்கும் ஆயிரம் ரூபாய் நோட்டு. உண்மையில் அது வெறும் காகிதம்.அதன் உண்மை மதிப்பு 50 பைசா இருக்கும் அவ்வளவு தான் . ஆனால் அதற்கு 1000 ரூபாய் மதிப்பு எப்படி மதிப்பு வருகிறது? பத்திரமாக பர்சில் வைத்துக் கொள்கிறீர்கள்? அடிக்கடி இருக்கிறதா என்று பார்க்கிறீர்கள்? வாங்கும் போதும் கொடுக்கும் போதும் கவனமாகக் கொடுக்கிறீர்கள்? மாஸ் ஹிப்னாடிஸம் !!

நிற்க...

ஒரு கவிதை..ஹிஹி 

உன் 
இடையைக் காட்டி 
என்னை 
'ஹிப்' நாடிஸம் செய்கிறாய்! 

Youtube இல் ஒரு வீடியோ பிரபலம் ஆவதும் ஒரு புத்தகம் best seller ஆவதும்  டிங்கர் பெல் விளைவு தான். நிறைய பேர் பார்த்திருக்கிறார்கள் நாமும் பார்க்கலாமே என்று சில பேர் பார்க்கிறார்கள். அது அதை மேலும் பிரபலமாக்குகிறது.விளம்பரங்கள்,  டிரைலர்கள் எல்லாம் இந்த TB effect ஐ ஏற்படுத்தும் முயற்சி தான்.

 Reverse effect இதற்கு இருக்கிறது என்கிறார்கள். ஒன்றின் மீதுள்ள அதீத நம்பிக்கையே சில சமயம் எதிர் மறையான விளைவுகளைக் கொடுத்து விடுகிறது. உதாரணம் ஒரு குறிப்பிட்ட endemic வியாதிக்கு ஒரு குறிப்பிட்ட மருந்து நன்றாக குணமளிக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அப்போது நிறைய மக்கள் அதை எடுத்துக் கொள்வார்கள். நிறைய பேர் எடுத்துக் கொள்ளும் போது அந்த நோய்க்குக் காரணமான நுண்ணுயிரி அதற்கு எதிர்ப்பு சக்தியை சுலபமாக வளர்த்துக் விடுகிறது. அப்போது அந்த மருந்து அந்த நோயை குணப்படுத்தும் தன்மையை இழந்து விடுகிறது.இந்த சீசனில் கூட்டம் இருக்காது என்று ஒரு இடத்துக்கு போனால் அப்படியே எல்லாரும் நினைத்து அங்கே வந்து விட்டிருப்பதால் கூட்டம் நிரம்பி வழிகிறது. reverse effect !

தாமஸ் என்ற சிந்தனையாளர், 'If men define situations as real, they are real in their consequences" என்கிறார். புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தமிழில் சொல்வதானால் சந்தர்ப்பங்கள் உண்மை என்று கொண்டோம் என்றால் அவைகளின் விளைவுகள் உண்மையாகவே இருக்கும். இன்னும் புரியவில்லை என்று சொன்னால் சின்ன வயதில் கேட்ட புலி வருது கதையை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்.

நம்பிக்கை அதானே எல்லாம் என்று பிரபு சொல்வது கொஞ்சம் உண்மை தான். குழந்தை ஒன்று எல்லா விஷயங்களையும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே கற்றுக் கொள்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் பகுத்தறிந்து சோதனை செய்து ஏற்றுக் கொள்ளும் அளவு அதனிடம் அறிவோ பக்குவமோ இருப்பதில்லை.அந்த ரூமில் பூச்சாண்டி இருக்கான் என்றால் அப்படியே நம்பி விடுகிறது. வளர்ந்த பிறகும் கூட மனிதன் பூச்சாண்டி போல பல விஷயங்களை 'நிறைய பேர் நம்புகிறார்கள்; அதனால் அது உண்மை தான்' என்று ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விடுகிறான்.கார்ப்பரேட் சாமியார்கள் நாட்பட்ட வியாதிகளை குணப்படுத்துவதும் இதே சமாசாரம் தான்.

இதைத்தான் புத்தர் 'சரியான புரிந்துணர்வு (சம்ம சதி) என்று அழைக்கிறார்.
மற்றவன் சொல்கிறான், வேதம் சொல்கிறது , விஷ்ணு சஹஸ்ர  நாமம்

பரமம் யோ மஹத்தேஜஃ பரமம் யோ மஹத்தபஃ |
பரமம் யோ மஹத்-ப்ரஹ்ம பரமம் யஃ பராயணம்

என்று சொல்கிறது. எனவே விஷ்ணு தான் தெய்வம்.

குரான்  பிஸ்மில்ல இர் ரஹீம் ம நிர் ரஹீம் என்று சொல்கிறது . அல்லா தான் கருணையுள்ளவன் இதையெல்லாம் நம்பாதே என்கிறார் புத்தர் . சம்ம சதி, உனக்குள் தேடலை மேற்க்கொள் ; கடவுள் என்று ஏதேனும் தென்படுகிறதா  பார் ; objective ரியாலிட்டி இருக்கிறதா பார் என்கிறார் புத்தர்.


சரி. தத்துவம் போதும். கொஞ்சம் கணக்கு பேசலாம்.

2+2= 5 :)
ஒரு பையன்  sin 2X = 2 sin X cos X என்று நிரூபி என்ற question க்கு

LHS x 0 = RHS x0

LHS = RHS என்று விடை எழுதினானாம்.

இந்த நிரூபணத்தில் உள்ள ஆதாரமான பிழை என்ன என்று கண்டுபிடியுங்கள். பூஜ்ஜியத்தால் வகுப்பது! இதன் படி நாம் 6-5 =2 என்றும் நிரூபிக்கலாம் :)

இதை Mathematical Fallacy என்கிறார்கள்.இப்படி 1=2, 1=0 என்பதற்கெல்லாம் நிரூபணங்கள் கிடைக்கின்றன. சிம்பிள். ஒரு நேர் முழு எண்ணுக்கு (positive integer ) இரண்டு வர்க்க மூலங்கள் இருக்கும் என்பதால் இந்த அபத்தங்கள் வருகின்றன.இதன் மூலம் எல்லா எண்களும் சமம் தான் என்று நிரூபிக்கலாம்.

1=1
√1 = √1
-1 = 1
2=0
4=2  (add 2)
4= 0 (since 2=0)


சரி... 1+1 =2 என்பது LKG பாப்பாவுக்கு கூடத் தெரிகிறது. ஆனால் 1+1=2 என்பதற்கு நிரூபணம் ஏதாவது இருக்கிறதா என்றால் surprisingly இல்லை!!
இதை கணிதம் axioms என்கிறது.axiom என்றால் மேலும் பகுக்க முடியாத மேலும் பகுதிகளாக விளக்க முடியாத அனைவரும் அறிந்த உண்மை. இந்த இடத்தில் தான் கொஞ்சம் இடிக்கிறது. ஒட்டு மொத்த கணிதமும் இயற்பியலும் இந்த axiom களின் மேல் நிற்கிறது. சில common sense களின் மேல் இது இப்படித்தான் இதை நிரூபிக்க முடியாது மேலும் உள்ளே டைவ் செய்ய முடியாது என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. உதாரணம் a + b = b + a. இதை நம்மால்  மறுக்க முடியாது. நிரூபிக்கவும் முடியாது. 2+3 = 3+2 என்று சொல்லியெல்லாம் நிரூபிக்க முடியாது. இரண்டு ஆடுகளுடன் மூன்று ஆடுகளை சேர்த்தாலும் மூன்று ஆடுகளுடன் இரண்டை சேர்த்தாலும் ஒரே மாதிரி எண்ணிக்கை தான் கிடைக்கும் என்கிற common sense ஐ மட்டுமே நம்பி இது உண்மை என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது.மேலும் a=b, b=c என்றால் a =c என்று சொல்வது. குவாண்டம் இயற்பியல் இந்த axiom களை அடிமட்டம் வரை சென்று ஓரளவு விளக்குகிறது அல்லது விளக்க முயல்கிறது. நாக்கில் சர்க்கரை வைத்தால் இனிக்கிறது. ஏன் என்று இன்று ஒரு சயின்டிஸ்ட்-இற்கும் தெரியாது!

கடவுளும் இந்த மாதிரி ஒரு axiom தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
வாழ்க்கையின் ஒரு funny விதி என்ன என்றால் complex things cannot be proved ; Simple ones too ! தாயுமானவர் சொல்வது போல கடவுள் என்பது  மன வாக்கு எட்டா சித்துரு ! 


நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய்
      நிறைவாய் நீங்காச்                                                    
சுத்தமுமாய் தூரமுமாய்ச் சமீபமுமாய்த் துரியநிறை
      சுடராய் எல்லாம்
வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயமாகி
     மனவாக் கெட்டாச்
சித்துருவாய் நின்றவொன்றைச் சுகாரம்பப் பெருவெளியைச்
     சிந்தை செய்வாம்

பல சமயங்களில் இந்த assumption உண்மையாய் இருந்து விடுகிறது. ஆனால் சில சமயம் தவறாக ஆகி விடுகிறது. உதாரணமாக இரண்டு புள்ளிகளை குறைந்த தூரத்தில் இணைக்கும் ஒரு வடிவம் நேர்க்கோடாக இருக்கும் என்று ஜியோமெட்ரி சொல்கிறது. ஆனால் நவீன இயற்பியல் இரண்டு புள்ளிகளை குறைந்த தூரத்தில் இணைக்கும் வடிவம் நேர்க்கோடாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது.எனவே முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகி விடுகிறது!



சரி. chemistry பற்றியும் கொஞ்சம் பேசி விடலாம். நமீதா மாஸ்டர் சொல்லும் கெமிஸ்ட்ரி அல்ல! ஸ்கூலில் கெமிஸ்ட்ரி மட்டும் பயங்கர அலர்ஜியாக இருந்தது. அதுவும் மத்தியான சாப்பாட்டுக்குப் பிறகு முதலில் வரும் பீரியட் கெமிஸ்ட்ரி என்றால் கேட்கவே வேண்டாம்.கெமிஸ்ட்ரியில் இரண்டு ஆதார சங்கடங்கள் இருந்தன. ஒன்று சமன்பாடுகளை balance செய்வது. இன்னொன்று சேர்மங்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வது. மெக்னீசியம் சல்பைட் மோனோ ஹைட்ரேட் , சில்வர் டெட்ரா ப்ளுரோ போரேட் என்றெல்லாம்! இன்னும் இரண்டு practical சங்கடங்கள் chemistry lab இல் இருந்தன. ஒன்று , கொடுக்கப்பட்ட உப்பை நுகர்ந்து, சுவைத்து, தொட்டுப் பார்த்து,தடவி, சூடாக்கி, அதில் கலந்து, இதில் முக்கி கிட்டத்தட்ட அதனுடன் குடும்பமே நடத்தி கடைசியில் அது என்ன பொட்டாசியம் பெர்மாங்கனேட்டா சோடியம் குரோமேட்டா என்று யுரேகா என்று கத்தாத சொல்வது. அடுத்து solution  எப்போது நிறம் மாறுகிறது என்று கண்களில் பினால்ப்தலின் சாரி எண்ணெய் விட்டுக் கொண்டு கரெக்ட்டாக பியூரெட் ரீடிங் பார்ப்பது! நான் ரெண்டையும் தப்பாகவே செய்தேன். !!!

இப்போதெல்லாம் ஸ்கூலில் இதேதான் இருக்கிறதா இல்லை advanced ஆகி விட்டதா தெரியவில்லை. +2 படிப்பவர்கள் தான் சொல்ல வேண்டும்.பழச் சாறுகளில் pH கண்டுபிடிப்பது, டீ யின் அசிடிடி கண்டுபிடிப்பது, தண்ணீரில் பாக்டீரியா content கண்டறிவது என்றெல்லாம் வந்து விட்டதாக அறிகிறேன். சரி.

நானோ புடின் (Nanoputian )என்று ஒரு ஆர்கானிக் மூலக்கூறு இருக்கிறது. இதன் specialty என்ன என்றால் இதன் வடிவம் ஒரு மனிதன் நடனமாடுவதைப் போல இருக்கிறது.சும்மா FYI ...




டை ஹைட்ரஜன் ஆக்ஸைடு என்று இன்னொரு சேர்மம் இருக்கிறது. ரொம்ப nasty .நிறம் அற்றது. எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் வேதியியல் பண்புகளைக் கொண்டது. அமைதியாக இருந்து கொண்டே சில சமயம் பேராபத்து தரக் கூடியது. மனிதனுக்கு பெரும்பாலான நோய்கள் வரக் காரணமானது.சில சமயம் மரணத்தைக் கூட உண்டு பண்ணுகிறது.  பொதுவாக ஒருவரை எரித்து விடவும் உறைய வைக்கவும் வல்லமை கொண்டது.சில ஆர்கானிக் மூலக்கூறுகளுடன் இணைந்து கார்போனிக் அமிலங்களை உருவாக்கி மரங்களையும், சிற்பங்களையும் , நம் பொக்கிஷங்களையும் அரித்து அழிக்க வல்லது.கொஞ்சம் ஆற்றல் கொடுத்து உசுப்பி விட்டால் ஒரு நகரத்தையே துவம்சம் செய்யக் கூடியது.

அது பொதுவாக 'தண்ணீர்' (என்று அழைக்கப் படுகிறது!!! :)

*****
சில கவிதைகள்!

சந்தோஷ் என்பவரின் ப்ளாக்கில் (tumblr )இருந்து .கற்பனைகள் வித்தியாசமாய் இருக்கின்றன.



நிலாவுக்கு 
branches உண்டு 


எனக்காக என்று எண்ணிக்கொண்டிருந்தேன் !
அவளுக்காகவும் என்னை பார்க்க வந்திருக்கிறாள் !
நிழல் - தெரியாத உண்மை …வெளிச்சம் - தெரியும் பொய் …
எங்கோ எவளோ என் கண்களால் ரசிக்கப்படாமலேயே ஒவ்வொரு நொடியையும் கழித்துக் கொண்டிருக்கிறாள் !
நான் ஒன்னு சொல்லுவேன் ஆனா நீ நம்பக்கூடாது !
கண்ணனின் female versionனடி நீ ! 
இன்றை இன்றே கொன்றுவிடுங்கள் நாளை வரை காத்திருப்பதாக இல்லை !
கண்ணில் படவேண்டும் என்பதற்காகவே மறைந்திருக்கிறாள் …
அவள் உடல் மிருகம் … கண்கள் பேய் …
என் விழிகளில் அவள் மட்டும் 24 frames/sec ல் கடப்பதில்லை …
அவளை ரசிக்க இன்னும் இரு கண்கள் வேண்டும் … அவள் கவனிக்காதபடி …
நான் எதை பார்க்க வேண்டும் என்பதை வெளிச்சம் நிர்ணயக்கின்றது …
அவள் விழி கடிகாரத்தில் இரண்டே நொடிகள் … இரவு மற்றும் பகல் …
வளர வளர நம்ம கிட்ட இருக்கிற குழந்தைத்தனம் மறைவது மட்டுமில்லாம … எப்படி குழந்தைகள் கிட்ட நடந்துகனும் என்பதையும் மறந்துவிடுகிறோம் 
ஒவியனின் கைஎழுத்து அழகா இருக்கனும்னு அவசியம் இல்ல …

ஓஷோ ஜோக் 

முல்லா நசுருதீன் எப்போதும் வள வள என்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.

ஒருநாள் முல்லாவின் நண்பர் ஒருவர் ' முல்லா நீங்கள் ரொம்பப் பேசுகிறீர்கள்' என்று குற்றம் சாட்டினார்.

முல்லா, "இயற்கையாகவே அது வந்து விட்டது, ஏனென்றால் என் அப்பா ஒரு அரசியல் வாதி; மேலும் என் அம்மா ஒரு பெண்" என்றார்.



log -off 


சமுத்ரா